Wednesday, January 11, 2006

பதிக்க ஒரு விஷயம்

எதிரில் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிறுப்பு ஒன்றிலிருந்து யாரோ சற்று உரக்க பேசுவது கேட்டது. இன்னொரு குரல் கேட்கவில்லை. சரி யாரோ தொலைபேசியில் பேசுகிறார்கள் என்று எண்ணினேன். என் வேலையெல்லாம் முடிந்து சுமார் இரண்டு மணி நேரம் பொறுத்து அறை பக்கம் வந்தபோது இன்னும் அந்த குரல் அதேபோல் கேட்ட வண்ணம் இருந்தது. இத்தனை நேரம் தொலைபேசியில் பேச்சா என்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது எதிர் மாடியில் உள்ளவர் ஒரு கண்னி முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. ஓ.. .., இணையத்தில் வெளி நாட்டில் இருகும் உறவினருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்து போனது.
சென்னை விரைவில் ஒரு வயதானவர்கள் வசிக்கும் நகரமாகிவிடும் என்று ஒரு நண்பர் ஜோக்கடித்தார். அவர் அப்படி சொல்வதற்கு காரணம் வெளி நாடுகளில் குடியேறும் இளைஞர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே இங்கேதான் அதிகம்.

பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்க இங்கே பெற்றோர் இப்படி தினம் ஈ மெயில் இணையத் தொலைபேசி என்று நாளை ஓட்டுவது சகஜமாகிப் போன ஒன்று. று மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் பிள்ளைகளிடம் று மாதம் இருந்துவிட்டு வருவார்கள். நடுவில் பிள்ளைப் பேறு செய்ய என்று அம்மாக்கள் வேறு மாற்றி மாற்றி பெறு கால பணியில் செல்வதுமுண்டு. ( அமெரிக்க தூதரகத்தில் இதற்கு “பேறு கால விஸா” என்றே வேடிக்கையாக சொல்வதுண்டாம்.)

ஆனால் வெளி நாட்டில் வெகு காலம் இருக்க பலருக்குப் பிடிக்கவில்லை. “அங்கே ஏதோ தங்ககூண்டில் இருப்பஹ்டு போல் உள்ளது. எல்லோரும் வேலைகு போன பின் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் அங்கே ஒரு fossil அதாவது உறைந்த உயிரினம் மாதிரி. ஏதோ அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக உட்கார்ந்திருகும் உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பேச நிறைய மனிதர்கள் வேண்டும். அதான் இங்கே வந்தால்தான் எனக்கு சரியாகிறது”. என்று சொல்பவர்கள் பலர்.
இதில் இன்னொரு கோணம் என்னவென்றால் வெளி நாட்டிலேயே பல வருடம் இருப்பவர்களுக்கு இங்கிருந்து போகும் பெற்றோர் அல்லது உரவினருடன் அதிகம் பகிர்ந்து கொள்ள ஒன்றுமிருப்பதில்லை. அவரவர் தங்கள் வாழ்க்கை முறையில் இருந்து விடுவதால் என்றோ சேரும்போது சிந்திக்கும் சிந்தனையில் வாழ்முறையில் என்று நிறைய இடைவெளி வந்து விடுகிறது. இதைத் தவிர்க்க ஒரு முக்கிய வழி தொடர்ந்து ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருக்க வேண்டும். தொலைபேசியில் இன்று பேசுவது சுலபமாகிவிட்டது. அடிக்கடி எண்ணங்களையும், தங்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், புகைப்படங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும்போது உறவுகளில் ஒரு சங்கடமான இடைவெளி விழாமல் இருக்கும்.

பின் குறிப்பு:

எப்போதோ எழுதிய ரொம்பப் பழைய பதிவு. ஆனால் புதிதாக வேறொன்று எழுத நேரமில்லை. புதுக் கருவிப்பட்டை, நிரல் துண்டு போன்ற சமாசாரங்களையெல்லாம் நிதானமாகப் படித்துவிட்டு, என் பக்கத்திலும் பொறுத்திய பின் ஒரு சோதனைப் பதிவு பதிக்க விஷயம் தேடினபோது அகப்பட்டது இது :-)

இப்பவும் சரியாகத் தெரியவில்லையென்றால் உதவித் தேட வேண்டியதுதான்.

No comments: