Sunday, February 19, 2006

அன்பே சிவம்

நேற்று இந்தப் படம் பார்த்தவுடன் மனசில் நிறைய சிந்தனைகள் ஓடிற்று. பதிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் படம் முடிந்து மனசு சற்றுக் கனமாக இருக்கும்போது ஒன்றுமே எழுதத்தோன்றாமல் தூங்கிப்போய்விட்டேன். இன்று இந்தப் படம் பற்றி இரண்டுபேர் - பிரகாஷ், தருமி - ( பிறகு சேர்த்தது, டோண்டுவும் - கொஞ்சம் தாமதமாகதான் டோண்டுவின் பதிவைப் பார்த்தேன்.) என்னைப்போலவே அனுபவித்து பார்த்தவர்கள் எழுதியுள்ளார்கள். எனக்கும் இரண்டு வரியாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. இதோ என் கருத்து. மூன்று வாக்கியங்களில் :

அன்பே சிவம் படம் பார்த்தேன். இதுவரைப் பார்க்காதவர்கள் கட்டாயம் டிவிடி வாங்கிப் பாருங்கள்; ஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான அன்பே - அன்புதான் - அன்புமட்டுமேதான் - சிவம், விஷ்ணு, பிள்ளையார், ஜீஸஸ், அல்லா, ............ ..... ..... .... என்று புரிவதற்காகவாவது ! ( பாக்கிக் கடவுளர்கள் பெயர்களை அவரவர் நிரப்பிக்கொள்ள இடம் விட்டிருக்கேன்.) :-)