Wednesday, October 29, 2003

திருமதி சுனந்தாவின்(வேதாந்த இன்ஸ்டிடூடின் ஸ்தாபகரும் கீதை லெக்சர்களில் பெயர் பெற்றவருமான - குறிப்பாக corporate வட்டாரங்களில்- ஸ்வாமி A. பார்த்தசாரதியின் மகள்) ஆன்மீக உரை நான்கு நாட்களுக்கு சென்னை, "இமேஜ்" ஆடிட்டோரியத்தில் இருந்தது. அவரை சமீபத்தில் பேட்டி எடுத்தபோது அவர் அழுத்தமாகவும், தெளிவாகவும் பேசிய விதம் பிடித்திருந்தது. டிவியிலும், சானல் உலா வரும்போது சில சமயம் அகப்பட்டிருக்கிறார். தவிர, வீட்டுப்பக்கத்தில்தானே, போய்க் கேட்டுவிட்டு வரலாம் என்று போனேன். பேச ஆரம்பித்த சில வினாடிகளிலேயே ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.

Are You Happy?

எத்தனை எளிதான கேள்வி? ஆனால் இதற்கு பதில் அளிக்கும் விதத்தில்தான் நம் வாழ்க்கையின் குழப்பங்களும், தெளிவுகளும், அர்த்தமும் அனர்த்தமும் எல்லாமே அடங்கியுள்ளது என்று எனக்குத் தோன்றிற்று.

என் எண்ணம் இருக்கட்டும். அவர் என்ன சொல்கிறாரென்றால் - (அடைப்பில் இருப்பவை என் கமெண்ட்ஸ் :-)

"நாம் சந்தோஷமாக இல்லையென்றால், அதன் காரணம் என்னவென்று அலசிப்பார்த்தால் அதன் அடிவேர் நம் எண்ணங்களில்தாம் இருக்கிறது என்று புரியும். மனதில் நிறைவு இல்லாதற்கு காரணம் நம் அபிலாஷைகள் நிறைவேறாமல் இருப்பதேயாகும். சரி ஒன்று ஒன்றாக அபிலாஷைகள் நிறைவேற ஆரம்பித்தால் ( - ஐஸ்கிரீம் சாப்பிடுவதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதியாகும் வரை - ஆமாம், நான் ஏன் இந்திய ஜனாதிபதியாகும் வரை என்று குறிப்பிடவில்லை? - இந்தக் கேள்வியை அப்புறம் கவனிப்போம்!! ) பின்னர் நாம் சந்தோஷமாக இருப்பதாக சொல்வோமா?

"சரி. நான் சந்தோஷமாகதான் இருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் விரும்பியதெல்லாம் கிடைத்துள்ளது, (அல்லது கிடைக்கும்படி வாழ்க்கையை அமைத்துள்ளேன் - இது சிலர் பதிலாக இருக்கலாம்) என்கிறீர்களா? நல்லது. ஆனால் உங்கள் சந்தோஷத்துக்கு காரணமான ஏதாவது ஒன்றில் குழப்பம் / ஏமாற்றம் இருந்தாலும் உங்கள் சந்தோஷத்தில் குறை இருக்குமே? அமைதியாக ஏற்றுக்கொள்வீர்களா? ( அப்படி இருந்தால் இப்படி லெக்சர் கேட்க வந்தே இருக்கமாட்டேனே - இதுவும் சிலர் பதிலாக இருக்கலாம்)

".....மனதில் குறையிருக்கும் இல்லையா?... இதற்குத் தீர்வு - 'இது வேண்டும்' 'அது வேண்டும்' என்ற ஏக்கங்கள் இல்லாமல் வாழக் கற்றுகொள்ளவேண்டும். ( அட கடவுளே, இங்கேயும் ஒரு 'வேண்டும்' வந்துவிட்டதே.) ஆனால் வாழ்வில் அபிலாஷைகள் இல்லாமல் இருக்க முடியாது; ஆசை என்ற உந்துதல்களும், முன்னேற்றங்களும் வாழ்க்கையில் இருக்க வேண்டியதுதான். ஆனால் நம் அபிலாஷைகளினால் வரும் மன உளைச்சல்களையும், தற்காலிகமான சந்தோஷங்களையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையில் தாமரை இலைத் தண்ணீராக இருக்கப் பழக வேண்டும்."

ம்..ம்.. சுனந்தாஜி என்னவோ நான்கு நாள் பேசி முடித்துவிட்டார். எத்தனை முறை எவ்வளவு பேர் திருப்பித் திருப்பி இந்த 'தாமரை இலைத் தண்ணீர் ' பக்குவம் பற்றி பேசினாலும் அதெப்படி நம் மனதில் மட்டும் பிடிபட மாட்டேங்கிறதே! அதுசரி, அந்த ஆடிட்டோரியத்தில் 1000 பேர் இருந்திருக்கலாம் - பெரிய பெரிய நிறுவனங்களின் CEO க்கள் வேறு நிறைய தென்பட்டனர். Are you happy என்ற சுனந்தாவின் ஆரம்ப கேள்விக்கு எவ்வளவு பேர் "YES" என்று அழுத்தமாக பதிலளித்திருப்பார்கள்?!!!




Tuesday, October 21, 2003

தீபாவளி !!!!! தீபாவளி! தீபாவளி ??????

வாசலில் பெல் அடித்தது. கதவைத் திறந்தவுடனேயே டக்கென்று ஒரு கனமான புத்தகத்தை முகத்தின் முன் நீட்டினார் பேப்பர்காரர். நானும் கையில் வாங்கிப் பார்த்தேன். ஒரு பத்திரிகையின் தீபாவளி மலர். நல்ல கனமாக அழகாக இருந்தது. என் கையில் கொடுத்தவுடனே பேப்பர்காரர் நகர ஆரம்பித்தார். மலரைக் கையில் வாங்கியவுடனேயே என் எண்ணம் பல வருடங்கள் பின்னால் போய்விட்டதால் அவர் நகர்ந்ததை உணராமல் அப்படியே ஒரு கணம் அந்த மலரைப் பார்த்தபடி நின்றுவிட்டேன். ஆனால் ஒரு நொடியில் என் நினைவுகளை ஓரம் கட்டிவிட்டு அவரைக் கூப்பிட்டுப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். " இப்போ வேண்டாங்க.. படிக்க எங்கே நேரம் இருக்கிறது".

அவர் சென்றபின் மறுபடி மனம் கடந்த காலத்துக்குத் தாவியது. ஒரு காலத்தில் தீபாவளி மலர் இல்லாமல் தீபாவளி இருந்ததே கிடையாது. அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். வாங்கி வைத்துக்கொண்டு மாதக் கணக்கில் புரட்டிக்கொண்டிருப்பார்.

சிறு வயதில் தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை. புது வருடக் காலண்டர் வாங்கிய உடனேயே தீபாவளி என்றைக்கு என்றுதான் பார்ப்பது வழக்கம். தீபாவளிக்கு ஆடம்பரமாக துணிகள் வாங்கும் வழக்கம் கிடையாது. ஆனால் அது எதுவாக இருந்தாலும் புதுசு போட்டுக் கொள்வது ஒரு சுவாரசியமான எதிர்பார்ப்புதான். அதோடு கூட கண்ணாடி வளை, மருதாணி, என்று எல்லாமே சுவாரசியம்தான். தீபாவளியில் எல்லாமே ஒரு வித்தியாசம்தான். அக்கம்பக்கத்தில் போட்டி. யார் வீட்டில் முதலில் எழுந்தது என்று. "ஓ.... நான் மூன்றரை மணிக்கே எழுந்தாச்சு. 4 மணிக்கு குளிச்சு பட்டாசு வெடிச்சாச்சே.." ஏதோ பெரிதாக சாதித்துவிட்ட சந்தோஷம் தொனிக்கும் குரலில்:-)

சூரியன் உதிக்கும் முன்னால் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று அம்மா எழுப்பும்போதே அறிவித்துவிடுவார். ரொம்பச் சிறிய வயதில் எனக்கும் அண்ணாவிற்கும் உட்கார்த்தி வைத்து நலங்கு இடுவார். அப்போது அவர் சுருட்டித் தரும் வெத்தலைப் பாக்கை மென்றுகொண்டே தலைக்குக் குளிப்பது ஒரு அனுபவம். ( சாதாரண நாட்களில் வெற்றிலை தர மாட்டார்களே? "நாக்கு தடித்துப் படிப்பே வராது!!!!!)

அப்புறம் சுவாமியை, அம்மா அப்பாவை நமஸ்கரித்துவிட்டுப் புது "டிரெஸ்". உடனேயே வாசலில் நானும் அண்ணாவும் போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவோம். ஹைஸ்கூல் ஆரம்பிக்கும்போதுதான் நான் கம்பி மத்தாப்பு, கேப் வெடியிலிருந்து பட்டாசுக்கு promote ஆனேன். அதுவும் ஊசிப் பட்டாசுதான். எனக்கு என்று ஸ்பெஷலாக கம்பி மத்தாப்பு நீளமாக :-)

பட்டாசு ஒரு கோர்ஸ் ஆனவுடன் வீட்டுக்குள் வந்து இனிப்புகள் வினியோகம் - துணி போட்டு அழகாக அம்மா மூடி தரும் தட்டுகளைப் பக்கத்து வீடுகளுக்கு எடுத்துச் செல்வது என் வேலை. புது டிரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு நண்பர்களிடம் காண்பிக்க வேண்டாமா? போதாதற்கு மறு நாள் ஸ்கூலுக்கும் எல்லோரும் இதே தீபாவளி உடைதான். அப்பாடா, ஒரு நாள் யூனிபார்ம் கிடையாது.

பின்னர் காலையில் இட்லி ( ஆமாம் அதென்ன வழக்கம்? தீபாவளி அன்று காலையில் இட்லி என்று? ) பாக்கி பட்டாசுகள் - இந்த சமயத்துக்குதான் பாம்பு பட்டாசு, கேப் போன்றவை. யாரிடம் எவ்வளவு பாக்கி இருக்கிறது என்று ஒரு குட்டி சர்வே. 'கார்த்திகைக்குக் கொஞ்சம் எடுத்து வையுங்கோ' இது அம்மா.

அப்புறம் கல்லூரி செல்லும் வயதில் தீபாவளிக்கு என் கையால் தயாரிக்கும் வாழ்த்து அட்டைகள் என் நேரத்தை / எண்ணத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. என்ன புது விதமாக டிசைன் செய்யலாம்..யாருக்கு எந்த மாதிரி தயாரிக்கலாம் என்பது போன்றவை முக்கியமாகப் போனது. பக்கத்தில் பெரிய லிஸ்ட் வைத்துக் கொண்டு நாட்கணக்கில் வேலை நடக்கும் :-)

பிறகு நான் குடும்பம் நடத்த ஆரம்பித்தபின், சில மாற்றங்கள். தீபாவளிக்கு என்ன புது உடை என்பதைவிட, என்ன பட்சணம் செய்யலாம் என்பதே முக்கியமாகப் போனது. பெரும்பாலும் பாம்பே, டில்லி அல்லது வெளி நாடு என்று இருந்துவிட்டதால் தீபாவளி சற்று சத்தமில்லாமல்தான் இருக்கும்! தவிர பட்சணம் செய்வதும் என் பொறுப்பாகிவிட்டதே. அதனால், பட்டாசு, புது டிரெஸ் உற்சாகம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இரண்டு நாள் முன்பே நண்பிகளுடன் பேசிக் கொண்டு ஒவ்வொருவரும் வித்தியாசமாக செய்வது வழக்கம். ஒரு முறை, சமையலறையில் எல்லா வேலையயும் முடித்துவிட்டு, மறு நாள் கங்கா ஸ்நானத்துக்குப் பின் அணிய வேண்டிய உடைகளை ஸ்வாமி முன்பு அடுக்கி வைத்துவிட்டு, அப்பாடா என்று வெளியில் வேடிக்கை பார்க்க சென்றுவிட்டு அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தால் அடுப்பில் வைத்திருந்த ஈயச் சொம்பைக் காணவில்லை! ரசம் கொதித்து சுண்டி ஈயம் உருகி ஸ்டவ் அடியிலே ஒரு பந்தாக இருந்தது !!


ஆனால் தீபாவளி இப்போது எவ்வளவு மாறிவிட்டது! டில்லியில் வசிக்கும்போது, அங்கே காலையில் 4 மணிக்கு பட்டாசு சத்தம் கேட்டால் அந்தப் பகுதியில் யாரோ தமிழர் இருக்கிறார் என்று அர்த்தம். சும்மா பேருக்கு கொஞ்சம் வெடித்துவிட்டு, பாக்கி எல்லாம் மற்றவர்களுடன் சேர்ந்து ராத்திரி வெடிக்கலம் என்று என் மகன்கள் நிறுத்திவிடுவார்கள். அதாவது அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது. அதுவும் சற்று பெரியவர்களானவுடன் நின்றுவிட்டது. அப்புறம் ஒரு திடீர் அறிவிப்பு - "அம்மா நான் இந்த வருடத்திலிருந்து பட்டாசு வாங்கமாட்டேன். குழந்தைத் தொழிலாளர்களை வைத்து செய்யும் பட்டாசுத் தொழிலை நான் எதிர்க்கிறேன்".

" சும்மா. ஒரு சாஸ்திரத்துக்கு ஒரேயரு பட்டாசு கொளுத்துடா..."

"நோ. இதென்னம்மா வழக்கம்? நான் நிச்சயமாக வாங்க மாட்டேன்." பிறகு அவன் சொல்வதை நானும் ஏற்றுக்கொண்டேன். பட்டாசு விற்பனையாகாமல் தேங்கிவிட்டால், பல ஏழைக் குழந்தைகள் உணவில்லாமல் இருக்க நேரிடும் என்றாலும், இந்த குழந்தைத் தொழிலாளர் பிரச்ச்னைக்கு இப்படி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்பதை நானும் உணர்ந்தேன்.

இப்படி ஒன்று ஒன்றாக தீபாவளியின் அடையாளங்கள் காணாமற் போயின. இன்று தீபாவளிக்கு என்ன பட்சணம் செய்யலாம் என்பதுபோய், என்ன வாங்கலாம் என்றாகிவிட்டது. புதுசு - அவசியமா என்ன? இப்படி ஒரு கேள்வி. இதில் தீபாவளி மலர்? ஹ்ம்ம். படிக்க நேரம் இல்லை என்பது ஒரு காரணம் - (அந்த நேரத்தில் எழுத வேண்டிய வேலையைக் கவனிக்கலாமே.) ரசனைகளும் மாறிப் போய்விட்டன.

பேப்பர்காரருக்கு வேறு ஒரு வாசகர், வேறு ஒரு குடும்பம் காத்திருப்பார்கள் - கங்கா ஸ்நானம் ஆனவுடன் புதுப் புத்தகத்தை முகர்ந்து பார்த்துவிட்டு படிக்க உட்காருவார்கள்.


Friday, October 17, 2003

சில வருடங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்க பெண் எழுத்தாளர் கணவனுக்கு மனைவி அடங்கிப்போவதுதான்
குடும்ப நல்லுறவுக்கும் அமைதிக்கும் வழி வகுக்கும் என்ற ரீதியில் எழுதிய ஒரு புத்தகம் அமெரிக்கா முழுவதும்
பெருமளவில் விற்பனையாகியதுடன் இல்லாமல் பத்திரிகைகளில் பரபரப்புடன் அலசப்பட்டது. பெண்கள் சமத்துவ விஷயத்தில் மற்ற நாடுகளை விட எப்போதுமே இந்தியா எவ்வளவோ தேவலை என்று எனக்கு தோன்றும்.

அமெரிக்க சமுதாயத்தில் சிந்தனைகள் எப்படியோ என்னவோ... அதை விடுங்கள். ஆனால் ஒரு குடும்பத்தை
உருவாக்குவதில் பெண்களின் பங்கு எவ்வளவுதூரம் மதிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சமீபத்தில்
படித்தேன். இந்தியக் குடும்பம்தான். ஒரு உயரிய பதவி வகிக்கும் பெண் அதிகாரி ஓய்வு எடுக்கும் சமயத்தில் எதேச்சையாக அவரது
மகளே அந்த நிறுவனத்தில் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். தாய்க்கு பெருமிதம் என்றால் மகளுக்கு
சந்தோஷம் - தாய்க்குபின் மதிப்பு வாய்ந்த அந்த நாற்காலியில் தான் அமர நேர்கிறதே என்று.

பதவியேற்கும் நாளில் மகள் தாய் தன்னையும் தன் சகோதரிகளையும் வளர்த்த நாட்களை நினைவு கூறுகிறார்.
" நாங்கள் வளரும் நாட்களில் அம்மாவுடன் எங்களுக்கு நிறைய கருத்து வித்தியாசங்கள் இருக்கும். ஆனால்
அம்மா என்றுமே எங்களைக் கடிந்து கொண்டதில்லை. எங்கள் கருத்தில் அவருக்கு உடன்பாடு இல்லையென்றாலும்
எங்கள் வழியே போக விட்டுவிடுவார். எங்கள் முடிவுகளின் நிறை குறைகளை நாங்களே அனுபவித்து உணர
வேண்டும் என்பது அவர் கருத்து.எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்படி அப்படி என்று கட்டுபாடுகளோ அல்லது நீண்ட
போதனைகளோ செய்ய மாட்டார். நாங்கள் சொல்வதைக் கேட்டு எங்களைப் புரிந்து கொள்வதில்
ஒரு ஆர்வம் காட்டுவார். அவசரமாக முடிவெடுக்காமல் எந்த சூழ்நிலையையும் அதன் போக்கிலேயே
அமைதியாக சமாளிப்பார். எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் அவரது ஊக்கமும் ஆதரவும் நிச்சயம் இருக்கும்.

உயரிய பதவியில் இருந்ததால் அவருக்கு எப்போதும் நேரப்பஞ்சம். ஆனால் எங்களுடன் தினம் சில மணி நேரமாவது
செலவிடுவார். குறிப்பாக எங்களுக்கு தேர்வு அல்லது ஏதேனும் மனக்குழப்பம் என்று இருக்கும்போது தன்
வேலைகளை ஒதுக்கிவிட்டு கட்டாயம் எங்களுடன் இருந்து உற்சாகப்படுத்துவார். நாங்கள் அவரவரது தினசரி
வேலைகளில் - நீச்சல், பாட்டு, என்று எங்கள் 24 மணி நேரமும் வரிசையாக நிர்ணயிகப்பட்டிருக்கும் - தவறாமல்
ஈடுபடுகிறோமா என்று மென்மையாக கண்காணித்தபடி இருப்பார். பள்ளி விழாக்களில் எங்களை ஊக்குவிக்க
அவர் என்றுமே முதல் வரிசைதான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் ரசிக்கும் எதிலும் எங்களுக்கும்
ஒரு ஈடுபாட்டை உண்டாக்கிவிடுவார். இரவு எழுந்து நட்சத்திரங்களைத் தான் ரசிக்கும்போது எங்களுடன்
அதைப் பகிர்ந்து கொள்வார். தண்�ரில் வெள்ளித் தாம்பாளமாக ஜொலிக்கும் சந்திரனைத் தான் ரசிக்கும்போது
எங்களுக்கும் அந்த ரசனையில் பங்கு இருக்கும்.

இத்தனைக்கும் முகத்தில் ஒரு சுணக்கமோ அல்லது " நான் எவ்வளவு ஒரு நல்ல தாய் பார்.." என்ற
தோரணையோ இல்லாமல்... வெகு நேர்த்தியாக, ஒரு ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் எங்கள் வாழ்க்கையை
அவர் செலுத்தியிருக்கிறார். இன்றும் அவரது பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டுமென்றால், எங்களுடன்
சற்று நேரம் செலவழிக்க வேண்டும்.... அதுதான் பிறந்த நாள் பரிசு என்கிறார்...." என்று மகள் கூறுகிறார்.
அந்தத் தாயோ ஒரே வரியில் "என்று என் மகள்கள் 16 வயதானர்களோ அன்றே அவர்கள் என் சினேகிதிகளாகிவிட்டனர்"
என்று கூறுகிறார்.

ஒரு சமுதாயம் உருவாவதில் பெண்களின் பங்கு சாமான்யமானதல்ல. பாரதி நெட்டுக்காக, பாரதியாரின் வாழ்க்கை சரிதம் ஒன்றை உள்ளிடும்போது அவருக்கு பெண் கல்வி, பெண்கள் சமத்துவம் இவற்றில் இருந்த ஆழமான நம்பிக்கையைப் பற்றி படித்தபோது இது நினைவுக்கு வந்தது.

Friday, October 10, 2003

தீபாவளி !!!!! தீபாவளி! தீபாவளி ??????

வாசலில் பெல் அடித்தது. கதவைத் திறந்தவுடனேயே டக்கென்று ஒரு கனமான புத்தகத்தை முகத்தின் முன் நீட்டினார் பேப்பர்காரர். நானும் கையில் வாங்கிப் பார்த்தேன். ஒரு பத்திரிகையின் தீபாவளி மலர். நல்ல கனமாக அழகாக இருந்தது. என் கையில் கொடுத்தவுடனே பேப்பர்காரர் நகர ஆரம்பித்தார். மலரைக் கையில் வாங்கியவுடனேயே என் எண்ணம் பல வருடங்கள் பின்னால் போய்விட்டதால் அவர் நகர்ந்ததை உணராமல் அப்படியே ஒரு கணம் அந்த மலரைப் பார்த்தபடி நின்றுவிட்டேன். ஆனால் ஒரு நொடியில் என் நினைவுகளை ஓரம் கட்டிவிட்டு அவரைக் கூப்பிட்டுப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். " இப்போ வேண்டாங்க.. படிக்க எங்கே நேரம் இருக்கிறது".

அவர் சென்றபின் மறுபடி மனம் கடந்த காலத்துக்குத் தாவியது. ஒரு காலத்தில் தீபாவளி மலர் இல்லாமல் தீபாவளி இருந்ததே கிடையாது. அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். வாங்கி வைத்துக்கொண்டு மாதக் கணக்கில் புரட்டிக்கொண்டிருப்பார்.

சிறு வயதில் தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை. புது வருடக் காலண்டர் வாங்கிய உடனேயே தீபாவளி என்றைக்கு என்றுதான் பார்ப்பது வழக்கம். தீபாவளிக்கு ஆடம்பரமாக துணிகள் வாங்கும் வழக்கம் கிடையாது. ஆனால் அது எதுவாக இருந்தாலும் புதுசு போட்டுக் கொள்வது ஒரு சுவாரசியமான எதிர்பார்ப்புதான். அதோடு கூட கண்ணாடி வளை, மருதாணி, என்று எல்லாமே சுவாரசியம்தான். தீபாவளியில் எல்லாமே ஒரு வித்தியாசம்தான். அக்கம்பக்கத்தில் போட்டி. யார் வீட்டில் முதலில் எழுந்தது என்று. "ஓ.... நான் மூன்றரை மணிக்கே எழுந்தாச்சு. 4 மணிக்கு குளிச்சு பட்டாசு வெடிச்சாச்சே.." ஏதோ பெரிதாக சாதித்துவிட்ட சந்தோஷம் தொனிக்கும் குரலில்:-)

சூரியன் உதிக்கும் முன்னால் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று அம்மா எழுப்பும்போதே அறிவித்துவிடுவார். ரொம்பச் சிறிய வயதில் எனக்கும் அண்ணாவிற்கும் உட்கார்த்தி வைத்து நலங்கு இடுவார். அப்போது அவர் சுருட்டித் தரும் வெத்தலைப் பாக்கை மென்றுகொண்டே தலைக்குக் குளிப்பது ஒரு அனுபவம். ( சாதாரண நாட்களில் வெற்றிலை தர மாட்டார்களே? "நாக்கு தடித்துப் படிப்பே வராது!!!!!)

அப்புறம் சுவாமியை, அம்மா அப்பாவை நமஸ்கரித்துவிட்டுப் புது "டிரெஸ்". உடனேயே வாசலில் நானும் அண்ணாவும் போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவோம். ஹைஸ்கூல் ஆரம்பிக்கும்போதுதான் நான் கம்பி மத்தாப்பு, கேப் வெடியிலிருந்து பட்டாசுக்கு promote ஆனேன். அதுவும் ஊசிப் பட்டாசுதான். எனக்கு என்று ஸ்பெஷலாக கம்பி மத்தாப்பு நீளமாக :-)

பட்டாசு ஒரு கோர்ஸ் ஆனவுடன் வீட்டுக்குள் வந்து இனிப்புகள் வினியோகம் - துணி போட்டு அழகாக அம்மா மூடி தரும் தட்டுகளைப் பக்கத்து வீடுகளுக்கு எடுத்துச் செல்வது என் வேலை. புது டிரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு நண்பர்களிடம் காண்பிக்க வேண்டாமா? போதாதற்கு மறு நாள் ஸ்கூலுக்கும் எல்லோரும் இதே தீபாவளி உடைதான். அப்பாடா, ஒரு நாள் யூனிபார்ம் கிடையாது.

பின்னர் காலையில் இட்லி ( ஆமாம் அதென்ன வழக்கம்? தீபாவளி அன்று காலையில் இட்லி என்று? ) பாக்கி பட்டாசுகள் - இந்த சமயத்துக்குதான் பாம்பு பட்டாசு, கேப் போன்றவை. யாரிடம் எவ்வளவு பாக்கி இருக்கிறது என்று ஒரு குட்டி சர்வே. 'கார்த்திகைக்குக் கொஞ்சம் எடுத்து வையுங்கோ' இது அம்மா.

அப்புறம் கல்லூரி செல்லும் வயதில் தீபாவளிக்கு என் கையால் தயாரிக்கும் வாழ்த்து அட்டைகள் என் நேரத்தை / எண்ணத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. என்ன புது விதமாக டிசைன் செய்யலாம்..யாருக்கு எந்த மாதிரி தயாரிக்கலாம் என்பது போன்றவை முக்கியமாகப் போனது. பக்கத்தில் பெரிய லிஸ்ட் வைத்துக் கொண்டு நாட்கணக்கில் வேலை நடக்கும் :-)

பிறகு நான் குடும்பம் நடத்த ஆரம்பித்தபின், சில மாற்றங்கள். தீபாவளிக்கு என்ன புது உடை என்பதைவிட, என்ன பட்சணம் செய்யலாம் என்பதே முக்கியமாகப் போனது. பெரும்பாலும் பாம்பே, டில்லி அல்லது வெளி நாடு என்று இருந்துவிட்டதால் தீபாவளி சற்று சத்தமில்லாமல்தான் இருக்கும்! தவிர பட்சணம் செய்வதும் என் பொறுப்பாகிவிட்டதே. அதனால், பட்டாசு, புது டிரெஸ் உற்சாகம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இரண்டு நாள் முன்பே நண்பிகளுடன் பேசிக் கொண்டு ஒவ்வொருவரும் வித்தியாசமாக செய்வது வழக்கம். ஒரு முறை, சமையலறையில் எல்லா வேலையயும் முடித்துவிட்டு, மறு நாள் கங்கா ஸ்நானத்துக்குப் பின் அணிய வேண்டிய உடைகளை ஸ்வாமி முன்பு அடுக்கி வைத்துவிட்டு, அப்பாடா என்று வெளியில் வேடிக்கை பார்க்க சென்றுவிட்டு அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தால் அடுப்பில் வைத்திருந்த ஈயச் சொம்பைக் காணவில்லை! ரசம் கொதித்து சுண்டி ஈயம் உருகி ஸ்டவ் அடியிலே ஒரு பந்தாக இருந்தது !!


ஆனால் தீபாவளி இப்போது எவ்வளவு மாறிவிட்டது! டில்லியில் வசிக்கும்போது, அங்கே காலையில் 4 மணிக்கு பட்டாசு சத்தம் கேட்டால் அந்தப் பகுதியில் யாரோ தமிழர் இருக்கிறார் என்று அர்த்தம். சும்மா பேருக்கு கொஞ்சம் வெடித்துவிட்டு, பாக்கி எல்லாம் மற்றவர்களுடன் சேர்ந்து ராத்திரி வெடிக்கலம் என்று என் மகன்கள் நிறுத்திவிடுவார்கள். அதாவது அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது. அதுவும் சற்று பெரியவர்களானவுடன் நின்றுவிட்டது. அப்புறம் ஒரு திடீர் அறிவிப்பு - "அம்மா நான் இந்த வருடத்திலிருந்து பட்டாசு வாங்கமாட்டேன். குழந்தைத் தொழிலாளர்களை வைத்து செய்யும் பட்டாசுத் தொழிலை நான் எதிர்க்கிறேன்".

" சும்மா. ஒரு சாஸ்திரத்துக்கு ஒரேயரு பட்டாசு கொளுத்துடா..."

"நோ. இதென்னம்மா வழக்கம்? நான் நிச்சயமாக வாங்க மாட்டேன்." பிறகு அவன் சொல்வதை நானும் ஏற்றுக்கொண்டேன். பட்டாசு விற்பனையாகாமல் தேங்கிவிட்டால், பல ஏழைக் குழந்தைகள் உணவில்லாமல் இருக்க நேரிடும் என்றாலும், இந்த குழந்தைத் தொழிலாளர் பிரச்ச்னைக்கு இப்படி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்பதை நானும் உணர்ந்தேன்.

இப்படி ஒன்று ஒன்றாக தீபாவளியின் அடையாளங்கள் காணாமற் போயின. இன்று தீபாவளிக்கு என்ன பட்சணம் செய்யலாம் என்பதுபோய், என்ன வாங்கலாம் என்றாகிவிட்டது. புதுசு - அவசியமா என்ன? இப்படி ஒரு கேள்வி. இதில் தீபாவளி மலர்? ஹ்ம்ம். படிக்க நேரம் இல்லை என்பது ஒரு காரணம் - (அந்த நேரத்தில் எழுத வேண்டிய வேலையைக் கவனிக்கலாமே.) ரசனைகளும் மாறிப் போய்விட்டன.

பேப்பர்காரருக்கு வேறு ஒரு வாசகர், வேறு ஒரு குடும்பம் காத்திருப்பார்கள் - கங்கா ஸ்நானம் ஆனவுடன் புதுப் புத்தகத்தை முகர்ந்து பார்த்துவிட்டு படிக்க உட்காருவார்கள்.


Friday, October 03, 2003

உலக வர்த்தக ஸ்தாபனம் ஏன் அவசியம்?


என் பார்வையில் சில விளக்கங்கள்.
தெரிந்த ஒருவருக்கு ஒரு டார்ச் லைட் வாங்க வேண்டியிருந்தது. ஒரு கடையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மலிவாக இருந்தன. மலிவாக கிடைத்ததே என்று வாங்கி கொண்டு வந்தாயிற்று. னால் எண்ணி இரண்டே மாதம். ஒரு நாள் சார்ஜ் செய்ய பிளக்கில் பொருத்தியபோது பட்டென்று அணைந்து உயிரை விட்டது.

சூப்பர் மார்க்கெட்டிலிருந்து இறக்குமதி லேபிள் ஒட்டிய ப்பிள் வாங்கி வந்தேன். னால் உள்ளே ஒரே அழுகல். சுவை வேறு இல்லை. அடுத்த முறையிலிருந்து தேடிப்பிடித்து வழக்கமாக வாங்கும் பழைய பழங்களையே வாங்க ரம்பித்தேன்.
இது போல் “மலிவு” இறக்குமதி சாமான்களின் தரம் பற்றி அவ்வபோது காதில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. இறக்குமதி சமாசாரங்களால் நம் தொழில்கள் நசிந்து விடுகின்றன என்று அவசரப்பட்டு முடிவுக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு பொருளிலும் தரம், விலை இரண்டும் முக்கிய விஷயங்கள். இவைதான் வர்த்தகத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.
தரம் குறைந்த சாமானை மலிவு விலையில் வாங்குவதைவிட கொஞ்சம் அதிகம் கொடுத்தாலும் நல்ல தரமான உழைக்கும் சாமான்களை மக்கள் தேடி செல்லும்போது இந்த “மலிவு” சாமான்கள் - உள்ளூரோ, வெளியூரோ - தன்னால் சந்தையிலிருந்து மறைந்துவிடாதா?

உலகமயமாக்குதல், மற்றும் உலக வர்த்தக ஸ்தாபனம் இவற்றில் கொள்கை ரீதியில் எனக்கு நம்பிக்கை உண்டு.

இரண்டு காரணங்கள்.

ஒன்று, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போன்ற அடிப்படை நல் நெறிகளில் எனக்கிருக்கும் நம்பிக்கை. ஒரு குடியிருப்பில் இருக்கும்போது அங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து நிறுவும் அமைப்பில் பங்கு கொள்ளாமல் விலகி தனித்து நிற்பதில் எனக்கு எப்படி உடன்பாடு இல்லையோ அதுபோல்தான் இதுவும். தவிர டு மேய்கிறதே என்று ரோஜா தோட்டத்தை இரும்பு சுவர்களுக்குள் வளர்க்க முடியுமா? கட்டுபாட்டுடன் பொத்தி வைத்த எதுவும் சரியான வளர்ச்சிய்டையாது என்பது வாழ்வின் நிதர்சனம். தனி மனித சுதந்திரம் போல் வர்த்தகத்திலும் சுதந்திரம் - அதாவது Free Trade – இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அனைவருக்கும் பயன்படும் வண்ணம் தோட்டமும் திறந்து இருக்க வேண்டும். அதே சமயம், டு மேயாமல் இருக்க வேலியைப் போட்டு ஒரு காவலாளியையும் போட வேண்டும். காவலாளி எந்த மாதிரி பாதுகாக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைக்குதான் free trade பற்றி இவ்வளவு விவாதிக்கிறோம். னால் முன் காலத்தில் உலகளவில் இந்தியாவிற்கு பல வர்த்தக தொடர்புகள் இரூந்ததற்கு சரித்திர சான்றுகள் பல உள்ளன. டில்லி பல்கலைகழகத்தில் மூன்று வருடங்கள் முன்பு மாதவி தம்பி என்கிற சரித்திர ராய்ய்சியாளர் ஒருவர், 16ம் நூற்றாண்டிலிருந்து பல காலம் தொடர்ந்து வந்த சீன –இந்திய வர்த்தக தொடர்பைப் பற்றி தன் ராய்ச்சியில் விரிவாக விவரித்துள்ளார். இந்த ராய்ச்சியின்படி, சீனாவுடன் மட்டுமல்ல, இந்தியாவிற்கு ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் அந்த காலத்தில் வர்த்தக தொடர்பு இருந்தது. சிய நாடுகளுக்குள்ளே இப்படி இருந்து வந்த வர்த்தக தொடர்பில்தான் பின்னர் ஐரோப்பிய வியாபாரிகளும் - போர்சுகீசியர்கள், மற்றும் கிழக்கிந்திய கம்பெனி உள்பட -கலந்து கொண்டனர்.
னால் இப்படி வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியின் சரித்திரம் திரும்பக்கூடாதே என்பதுதான் இந்தியாவில் இன்று உலகமயமாக்குதலை எதிர்க்கும் பலரின் கவலை.

அப்போதைய நிலைமைக்கும் இப்போதுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இப்போது போல் அப்போது மக்களாட்சி கிடையாது. மக்கள் விழிப்புணர்வும் கிடையாது. அன்று இருந்ததெல்லம் மன்னராட்சிகள். குட்டி நாடுகளாக சிதறியிருந்த பெரும்பாலான ட்சிகளில், ங்கிலேயருக்கு உதவி செய்து, தங்கள் தோலைப் பாதுகாத்துக்கொள்ளும் எண்ணம்தான் அன்றைய ட்சியாள்பவர்களிடமிருந்தது. அதனால் பிளவை உண்டாக்கி ட்சியைப் பிடிப்பது ங்கிலேயருக்கு சுலபமாகிற்று. மக்களுக்கு பதில் சொல்லவோ, மக்கள் எண்ணம் அறியவோ வழியில்லாத சமயம் அது.

னால் இன்று?

சமீபத்தில் நடந்து முடிந்த கன்கூன் மாநாடே ஒரு உதாரணம். வளர்ந்த நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஏழை நாடுகள் சம்மதிக்காததால்தானே பேச்சு வார்த்தை நிறைவு பெறாமல் போய்விட்டது? மற்றொரு உலக அமைப்பான ஐ. நா சபையிலாவது அமெரிக்கா தன் வீட்டோ ஓட்டை உபயோகிக்கலாம். னால் WTOல் எல்லா உறுப்பினர்களும் ஒன்றுதான். ஒப்பந்தமாகும் வர்த்தக நியதிகளுக்கு அனைவரும் கட்டுபட வேண்டும். உறுப்பினர் நாடுகள் ஏதேனும் வரம்புகளை மீறினால் அல்லது ஒப்பந்தப்படி நடந்து கொள்ளவில்லையென்றால் இதற்கென்று உள்ள Dispute Settlement Body என்று இந்த உலக ஸ்தாபனத்தில் உள்ள அமைப்பில் முறையிடலாம். இதில் அமெரிக்காவிற்கு எதிராக முறையிட்டு இந்தியா பல கேஸ்கள் வென்றுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்: அந்த காலத்தில், ஐரோப்பிய வியாபாரிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக ட்சியை பறி கொடுத்தது இந்திய மன்னர்கள்தாம். அதே ஐரோப்பியர்கள் சீனாவில் இந்த அளவு க்கிரமிக்க முடியவில்லையே? – சீனாவுடன் ங்கிலேயர்களின் ஓபியம் போரும் அதன் விளைவாக அவர்கள் பிடித்துக்கொண்ட ஹாங்காங் தவிர, ஐரோப்பியர் சீனாவில் நுழைய முடியாதத்ற்கு சீனர்களின் ஜாக்கிரதை உணர்வு, ஒற்றுமை, அல்லது சாமர்த்தியம் போன்றவை முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.
கவே, திரை கடலோடியும் திரவியம் தேடுவது நமக்கு புதிதல்ல. னால், வர்த்தக பரிமாற்றங்களில் அரசியல் நுழைந்து ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு குந்தகம் வராமல் அதே சமயம் லாபமாக வர்த்தகம் செய்வதும் இன்றைய மக்களாட்சியில் சாத்தியமான ஒன்றுதான். வர்த்தக பரி மாற்றங்கள் நடக்கும்போது அறிவு சார்ந்த பரிமாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு எழுகிறது. பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது நமது சிந்தனைகளும் விசாலப்படும். நாம் கற்றுகொள்ளவும் நாம் அறிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும் மனிதனின் இயற்கையான பரிணாம வளர்ச்சி.

உலகமயமாகுதலில் என் நம்பிக்கைக்கு இரண்டாவது காரணம், வியாபாரம் விருத்தியாகும் வாய்ப்பு. சுதந்திரமடைந்ததிலிருந்து நாம் செய்த பொருட்களை நமக்குள்ளேயேதான் விற்பனை செய்து வந்துள்ளோம். தயாரித்த அத்தனைப் பொருட்களையும் வாங்கக்கூடிய மக்கள் தொகை பெருகிய சந்தை நமது என்பது வேறு விஷயம். ஏற்றுமதி இறக்குமதி கட்டுபாடுகளினாலும், தாங்கள் செய்வதையெல்லாம் வாங்குவதைத் தவிர இந்திய சந்தைக்கு வேறு வழியில்லை என்ற மனோபாவம் உற்பத்தியாளர்களுக்கு இருந்ததாலும் சாமான்களின் தரம் உயர வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதோடில்லை. பல்வேறு காரணங்களினால் தேவையைவிட உற்பத்தி குறையும்போது தட்டுபாடும் இருக்கும். பல வருடங்கள் முன்பு எங்களுக்கு ஒரு ஸ்கூட்டர் “அலாட்மெண்ட்” கிடைத்தபோது எங்களுக்கு தேவையில்லாததால் அந்த அலாட்மெண்டிற்கு எக்கச்சக்க டிமாண்ட் இரூந்தது இன்னும் நினைவிருக்கிறது. இன்றைய தலைமுறையினரிடம், இப்படி கார், ஸ்கூட்டர், தொலைபேசி மற்றும் எந்த ஒரு சாமானுக்காவது “அலாட்மெண்ட்” என்று சொல்லிப்பாருங்கள். புரியாமல் விழிப்பார்கள். இன்று சந்தையில் கிடைக்கும் சாமான்களின் தரமும், தினுசுகளும் நம் வாழ்முறையையே மாற்றுகின்றன.
வெளிநாட்டு சாமான்கள் இங்கே வந்து நம் தொழில்களை நசித்து விடுகிறது என்று பார்க்காமல் நமது உற்பத்திகளுக்கு வெளியில் சந்தை கிடைக்கிறதே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு புள்ளிவிவரப்படி, இந்தியாவிற்கு சீனா ஏற்றுமதியைவிட, இந்தியா சீனாவிற்கு செய்த ஏற்றுமதி அதிகம். இங்கே வந்து கடை விரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. னால் அதேபோல் வெளி நாட்டில் முதலீடு செய்து அங்கே தொழில் செய்யும் இந்திய “பன்னாட்டு” நிறுவனங்களும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இந்தியாவின் ரம்பகால வர்த்தக தூண்களான டாடா, பிர்லா நிறுவனங்கள் தவிர நவீன நிறுவனங்களான NIIT, Wipro, Infosys போன்றவையும் வெளி நாடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். பல திசைகளில் உற்பத்தி பெருகும்போது வேலை வாய்ப்பும் பெருகும் அல்லவா?
வெளி நாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் நம் இந்திய லேபிள்களைப் பார்க்கும்போது பெருமையாகதான் இருக்கிறது. இப்படி நம் சாமான்களுக்கு வெளி நாட்டில் இருக்கும் சந்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நம் பொருட்களை வெளியே விற்கலாம் என்றால் வெளி பொருட்கள் இங்கே வருவதைத் தடுப்பது முறையில்லையே.

ஆனால், எது, என்ன, எங்கே, எவ்வளவு, எப்படி – மற்றும் சமூக, சரித்திரப் பின்னணி இவற்றை ராய்ந்து முடிவெடுப்பது மிக முக்கியம். 1996ல் முதல் அமைச்சர்கள் மாநாடு சிங்கப்பூரில் தொடங்கியபிறகு இந்த 7 வருடங்களில் இந்தியா எவ்வள்வோ கற்றுகொண்டுள்ளது. அதிகாரிகள் ஒவ்வொரு நியதியையும் ஒப்பந்தத்தையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு அலசுகிறார்கள். நமக்கு பாதகமாகவோ ஒருதலைபட்சமாகவோ இல்லாமல் இருப்பதற்காக நிறைய லோசனைகள் நடக்கின்றன.

உலக வர்த்தக ஸ்தாபனத்தில் பங்கு கொள்வதால் வளர்ந்த நாடுகள் திணிக்கும் சட்டங்கள் எல்லாவற்றிற்கும் வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் உட்பட வேண்டும் என்ற ஒர் தவறான கருத்தும் நிலவுகிறது. தவிர, உலக வர்த்தக ஸ்தாபனத்தில் வளர்ந்த நாடுகளின் மேம்போக்கான அணுகுமுறையினால் ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பது இன்னொரு கருத்து.
உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் வேளாண்மை சலுகைகளினால் அங்கே மலிவாக உற்பத்தி செய்த வேளாண்மைப் பொருட்கள் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்டுகின்றன என்பதும், இதனால் இந்த நாடுகளில் உள்ள விவசாயிகளின் உற்பத்திக்கு சந்தையில்லாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்ய நேருகிறது என்பதும் ஒரு முக்கிய குற்றச்சாட்டு.

எளியவர்கள் அடிபடுவது நிச்சயம் கவலைக்கிடமான, மனதை உலுக்கும் விஷயம்தான். சந்தேகமேயில்லை. இந்த கன்கூன் மாநாட்டின்போது கூட கொரியாவைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் தற்கொலை மாநாட்டின் கவனத்தை ஈர்த்தது. அடிப்படையில் அனைவருக்கும் லாபமாக இருக்க வழி செய்யும் கொள்கையின் செயல்பாடுகளில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து இப்படி ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க என்ன செய்ய வேண்டும் என்று க்கப்பூர்வமாகதான் சிந்திக்க வேண்டுமே தவிர, கொள்கையே தவறு என்று என்ணுவது சரியல்ல. ஒரு நாட்டில் ஜனநாயக முறைகளை சரியாக உபயோகிக்கவில்லை என்பதற்காக ஜனநாயக முறையே சரியில்லை என்று சொல்ல முடியுமா?

இந்த வர்த்தக அமைப்பு அடிப்படையில் ஜனநாயக கொள்கை ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய அவதாரமான GATT 1947ல் ரம்பித்தபோது இந்தியா இதன் ரம்ப கால உறுப்பினர். உலகளவில் நட்புறவோடு செய்யப்படும் வர்த்தகத்தின் பரஸ்பர தாயங்களை மனதில் கொண்டுதான் நேருவின் அரசு இதன் ரம்ப உறுப்பினராக சேர முடிவு செய்தது. இன்று GATT ன் மறு உருவான WTO ல் 146 உறுப்பினர்கள். அனைவரும் கையெழுத்திடாமல் எந்த ஒரு ஒப்பந்தமும் நிறைவேற முடியாது. னால் ஒரு பிரச்சனை – 146 நாடுகளும் இந்த பேச்சு வார்த்தையில் நேரடியாக கலந்து கொள்வதில்லை. சுமார் 30 நாடுகள் – இந்தியா உள்பட - ஒரு green room கூட்டத்தில் கலந்து பேசி பின்னர் வரும் முடிவை மற்ற நாடுகளுக்கு ஒப்புதலுக்கு தெரிவிப்பார்கள். னால் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டால்தான் முடிவுகள் / லோசனைகள் ஏற்றுகொள்ளப்படும். 146 நாடுகளும் ஒவ்வொருவராக தங்கள் விவாதங்களை அவையில் சமர்ப்பிக்கத் தொடங்கினால் 5 நாள் போதாது என்பதால் இந்த ஏற்பாடு. னால் அதிகாரிகள் அளவில் ஜெனிவாவில் இருக்கும் இந்த அமைப்பின் தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களின் பிரதி நிதிகளுடன் நடந்து கொண்டுதான் இருக்கும்.
மொத்தத்தில் எல்லா நாடுகளுக்குமே, இந்த உலக ஸ்தாபனத்தில் சேர்ந்து, தங்கள் உற்பத்திகளுக்கு / சேவைகளுக்கு உலக சந்தையில் இடம் பிடிப்பதுதான் ஒரே குறிக்கோள். மாறி வரும் உலக சமூக, அரசியல் மற்றும் வர்த்தக பின்னணியில் இன்று தனித்தீவாக செயல்படுவதில் லாபமில்லை. இது புரிந்துதான் இத்தனை நாளும் ஒதுங்கியிருந்த சீனாவும் இந்த அமைப்பில் இரண்டு வருடம் முன்பு சேர்ந்துவிட்டது.

இந்த அமைப்பில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கருதப்ப்ட்ட விஷயங்கள் பல. வேளாண்மை, டெக்ஸ்டைல், வெளி நாட்டு முதலீடுகள், Intellectual property rights என்று பல சமாசாரங்கள். இதில் யார் யாருக்கு என்னென்ன கோரிக்கைகள் மற்றும் ட்சேபங்கள் என்று சுருக்கமாக பார்க்கலாம். ஒரு சௌகரியத்திற்காக, அவர்கள் ( வளர்ந்த நாடுகள்) - நாம் ( வளரும் மற்றும் ஏழை நாடுகள்) என்று குறிப்பிடலாம். இவற்றை விளக்கமாக சொல்வதானால் பல நூறு பக்கங்கள் வேண்டும். கீழே சின்னதாக கோடி காட்டியுள்ளேன். அவ்வளவுதான்.

1. அவர்கள் கேட்பது என்ன?
வளரும் மற்றும் ஏழை நாடுகளில் நிலவும் இறக்குமதி வரிகள் மற்றும் தீர்வுகள் அல்லாத வேறு சில தடைகள் படிப்படியாக நீக்கப்பட்டு அவர்கள் பொருட்களுக்கு அந்த சந்தைகள் வேண்டும். நம் நாடுகளில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்வதால் குறைந்த விலையில் நாம் தயாரித்து அவர்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றும் அவர்களுக்கு முறையீடு உள்ளது.

2. நாம் கேட்பது என்ன?

வளர்ந்த நாடுகளில் கொடுக்கப்படும் வேளாண்மை சலுகைகள் போன்றவை நீங்கி அவர்கள் நம் நாடுகளில் அடிமாட்டு விலைக்கு விற்பதைத் தடுக்க வேண்டும். நம் சாமான்களை அவர்களிடம் விற்கும்போது தீர்வு இல்லா மற்ற காரணங்களினால்(Non-Tariff) தடைகள் போடுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் நம்மை நம் விதிமுறைகளைத் தளர்த்த சொல்லி வற்புறுத்தாமல் அரசியல் மற்றும் சமூக/பொருளாதார பின்னணிகளின் அடிப்படையில் நாம் அவர்களுக்கு சரிநிகர் இல்லையென்பதால் நமக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிறோம்.

3. எவ்வளவு விட்டுகொடுக்கப்பட்டுள்ளது?

மருந்து பொருட்கள் மற்றும் காப்புரிமை (patent) விஷயத்தில் அவர்கள் நமக்கு சலுகைகள் அளித்துள்ளார்கள். பதிலாக டெக்ஸ்டைல் விஷ்யத்தில் வளர்ந்த நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்ய இன்ன நாட்டிலிருந்து இவ்வளவுதான் என்று சில quaotas வைத்துள்ளார்கள். அவற்றை அவர்கள் இன்னும் சில காலம் தொடர நாம் ஒத்துகொண்டுள்ளோம். இதில், இந்தியாவிற்குரிய quota அளவிற்கு கீழேயே நம் ஏற்றுமதி அளவு இருப்பதால், இந்த “விட்டுகொடுத்தலில்” இந்தியாவிற்கு குறிப்பாக நஷ்டம் ஏதும் இல்லை.

4. ஆதாயங்கள் என்ன?

உலகளவில் வர்த்தகம் பெருகும்போது பொருளாதாரம் பரவலாக மேம்படும். ஏழை நாடுகள் தங்கள் ஏழ்மையிலிருந்து விடுபட வாய்ப்பு பெருகும்.

5. நஷ்டங்கள் என்ன?

உண்மையான கொள்கை ரீதியில் சரியாக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்கள் அவற்றை மதித்து நடந்தால் நஷ்டம் ஏதுமில்லை. னால் ஒருவரையொருவர் சுரண்டும் அல்லது வலியோர் எளியோரை ஏய்க்கும் மனோபாவம் நுழைய நேருமானால் எல்லாப் பக்கங்களிலும் ஏமாற்றமே மிஞ்சும்.

கான்கூனில் வளர்ந்த நாடுகள் பெருந்தன்மையாக நடந்து கொள்ளாததை நியூயார்க் டைம்ஸ் வன்மையாக கண்டித்து தலையங்கம் எழுதியுள்ளது. அவர்கள் தங்கள் வேளாண்மை சலுகைகளைக் குறைத்திருந்தால் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் தங்கள் நியாயமான கோரிக்கைக்கு வெற்றி என்று கொண்டாடலாம். அப்படி நடக்கவில்லையே? tug of war ல் இருபுறமும் இல்லாமல் கயிறு பிய்ந்து தொங்குவதுபோன்று கிவிட்டது. னால் அந்த கயிறு ஏழை நாடுகளின் கழுத்தில் வேறு அல்லவா இறுக்குகிறது?
உலக வர்த்தகத்தில் தங்கள் உற்பத்திக்கு வெளியே சந்தை கிடைப்பதாலும் உற்பத்தி பெருகி வேலை வாய்ப்புகள் பெருகுவதாலும் ஏழை நாடுகளுக்கு இது அடிப்படையில் லாபம்தான். னால் இது காயத்தில் சரிசமமான பேலன்ஸ¤டன் காற்றில் பறப்பது போன்ற சமாசாரம். பேலன்ஸ் சரியாக இருந்துவிட்டால் கவலையில்லை. இல்லாமல் போனாலோ. . . . ?

வர்த்தக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 1996 சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் கோ சோக் டாங் குறிப்பிட்டார். “ Like a cyclist on an upward slope, if we stop peddling steadily, we will eventually lose our momentum and fall back down.”

அடிப்படையில் இதுதான் முக்கியம். ஏட்டிக்கு போட்டி என்றில்லாமல் உறுப்பினர் நாடுகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். வளர்ந்த நாடுகள், ஏழை மற்றும் வளரும் நாடுகளின் நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்டால்தான் இந்த வர்த்தக ஸ்தாபனத்தின் செயல்பாடுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும். இல்லாவிட்டால் பற்கள் இல்லாத பலவித உலக மையங்கள் வரிசையில் இதுவும் சேர்ந்துவிடும்.