Saturday, August 27, 2011

Looks like democracy has prevailed after 12 days and I am happy to see that. Good sense prevailed on both the Government and the Team Anna to step forward a bit from their original respective adament stands and a middle path was found. But the whole episode throws up lots of questions. Along with the links that mark the great day of Victory of democracy, some more links here to think and reflect:

www.thehindu.com/todays-paper/article2405059.ece
www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true
However, for all of Arundhathi's scepticism, Arvind Kejariwal's response here comes across as someone who talks the Truth and talks genuinely. - www.thehindu.com/todays-paper/tp-opinion/article2413220.ece

http://kafila.org/2011/08/20/we-should-be-there-the-left-and-the-anna-moment/










Saturday, August 20, 2011

சில கேள்விகள்.....

அன்னா ஹசாரேயின் ஜன லோக்பால் மசோதா பார்லிமென்ட்டில் விவாதத்துக்கு எடுத்துக்க்கொள்ளப்ப்ட வேண்டும். பலவித அலசல்கள், விவாதங்களுக்குப் பிறகு, ஒரு அழுத்தமான , வலுவுள்ள, சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், இப்போ சில கேள்விகள் எழுகின்றன.

இந்த ஜன லோக்பால் மசோதாவை அப்படியே மாற்றங்கள் இல்லாமல் எடுத்துக்கொள்ளும்படி முரண்டு பிடிப்பது எப்படி நியாயம் ஆகும்?. உதாரணமாக, தொண்டு நிறுவனக்கள் அனைத்தும் இந்த ஜன லோக்பால் எல்லையில் வரவில்லை. அர்விந்த் கேஜரிவால், அவை தனியாக வேறு வரம்பில் வரலாமே என்று கேட்கிறார். இதெப்படி நியாயம்? நீதித்துறை, பிரதம மந்திரி என்று எல்லாமே லோக்பால் வரம்பில் வர வேண்டும் என்கிறபோது தொண்டு நிறுவனங்களும் இதில் வருவதுதானே நியாயம்?

இரண்டாவது நெருடல் - இன்று டிவி சானல் ஒன்றில் பழைய அன்னா ஹசாரே சொற்பொழிவு ஒன்று பார்த்தேன். அவருடைய கிராமத்தில் முப்பத்தைந்து வருஷமாக தேர்தல் நடக்கவில்லையாம் - " ஒரே ஒரு முறை - அதுவும் வலுக்கட்டாயமாக நடத்தினார்கள்" என்றார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலையே அவசியம் இல்லை என்று ஒருவர் சொல்வது எனக்கு ஜீரணிக்க முடியவில்லை......... இது என்ன மாதிரி பாலிசி???

அன்னா ஹசாரேவை நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன் என்று சொன்னது உண்மை. ஜன நாயக நாட்டில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்து தன வேண்டுகோளை முன்வைப்பவரை அரசு நடத்தியவிதம் சரியில்லை; அவர் வேண்டுகோளில் நியாயம் இருக்கிறது என்பது என் கருத்து. ஆனால் மேலே சொன்ன கேள்விகள் நெருடுகின்றன என்பதும் உண்மை.

Wednesday, August 17, 2011

அன்னா ஹசாரே



நான் அண்ணா ஹசாரேயை ஆதரிக்கிறேன் - எந்த நிபந்தனையுமின்றி !!!

இதுவரையில் யாருக்கும் எங்கும் லஞ்சம் கொடுக்காமல் - தொலைபேசி, ரேஷன் கார்டு, தண்ணீர், கார்பரேஷன் என்று எந்த வேலையாக இருந்தாலும் பொறுமையாக காத்திருந்து நேர்வழியிலேயே , நியதிகளைப் பின்பற்றி, லஞ்சம் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்துள்ளேன் என்று சொல்லிக்கொள்ளுவதிலும் பெருமிதம் அடைகிறேன்.

ஊழல் திமிலங்கள் நசுக்கப்படவேண்டும். அதேசமயம், தனிப்பட்ட முறையில் என்னைப் போன்ற சாதாரணர்கள் - உலகெங்கும் இன்று அன்னாவை ஆதரிக்கும், அலைமோதும் இந்தியர்கள் பலரும் இன்று லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதத்துடன், பெருமிதத்துடன் சொல்ல முடிந்தால், இந்தியாவைப்பற்றி என்றும் என்னுள் சுடர் விட்டு எரியும் நம்பிக்கை மேலும் வலுப்படும் !!!!

மாற்றங்கள் நிகழ்வது ஒரு புள்ளியிலிருந்து ........ நான் என்ற புள்ளி.......