Tuesday, May 18, 2004

Some how this post gets deleted mysteriously several times. this is the fourth time I am posting this. What's happening on the blogger ? :-(

எங்கள் பெற்றோர் எங்களுடையவர்கள் என்று நினைத்ததேயில்லையே ?

கிட்டதட்ட நான் எதிர்பார்த்தேன். சோனியா இப்படிதான் முடிவு எடுப்பார் என்று. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம்
தாமதமாகதான் அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே அறிவிப்பார் என்று நினைத்தேன். காங்கிரஸ் இனி அவ்வளவுதான் என்றெல்லாம் கூறப்பட்டதை மீறி, கஷ்டப்பட்டு ஆறு வருஷமாக கட்சியை ஒழுங்குபடுத்தி நிலைக்க செய்து, இன்று தேர்தலிலும் வெற்றி பெற செய்த ஒருவரை, நன்றி; நீங்கள் இனி போகலாம்; என்று கூறுவதுபோல் இருக்கிறது வேறு ஒருவரை பிரதமாராக்குவது. இருந்தாலும் சோனியாவைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு அவர் விவேகமான முடிவுதான் எடுத்துள்ளார். இல்லாவிட்டால் அவரையோ நாட்டையோ நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். பொதுவாக மனித நேயம் உள்ளவர்; பெருந்தன்மையானவர் என்று நான் அவரைப் பற்றி நினைத்திருந்தது சரியாகதான் இருக்கிறது. ஆனால் முன்பு காங்கிரஸ் தலைவர் பதவியின் போதும் இப்படிதானே வேண்டாம் என்று ஒதுங்கியவரை அழுது அமர்க்களம் பண்னி ஏற்றுகொள்ள வைத்தார்கள்? எனவே இப்போவும் அவர் தன் முடிவை மாற்றிகொள்ளலாம் என்றும் சொல்லபப்டுகிறது. பிரியாங்காவும் இறுதியில் ஒரு கேள்விக்கு தன் தாய் "ஒரு வேளை மறுபரிசீலனை செய்யலாம்" என்று சொன்னதையும் கொஞ்சம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் என் ஊகம் சோனியா முடிவை மாற்றிகொள்ள மாட்டார் என்பதுதான். அவர் முகத்தில் தெரிந்த தீவிரம் அப்படியிருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் சோனியாவின் குடியுரிமை பற்றி என்றுமே சந்தேகம் இருந்ததில்லை. எந்த ஒரு விஷ்யத்திலும் - கல்வி மற்றும் சமூக அமைப்புகள் எதிலும் - ஒருவரின் பிறப்பின் காரணமாக அவர் discriminate செய்யப்படுவதை நான் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. Same holds for top posts of the country. நாட்டின் ரகசியங்களையோ அல்லது முக்கிய ராணுவ ரகசியங்களையோ மந்திரிகளோ அல்லது சேவைத் தளபதிகளோ தயக்கமில்லாமல் "பிரதமர்" சோனியாவுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று சில கேள்விகள் எழுகின்றன. இதற்கு என் பதில் at http://arunas.blogspot.com

சரி. சோனியாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

இந்த குழப்பம் நிறைந்த சம்யத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் பல சேனல்களில் பேட்டி காணப்பட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் கூறுவதாக சொல்லப்பட்டது என்னவென்றால், ராகுலும் பிரியாங்காவும் தங்கள் தாயின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுவதால் அவர் பிரதமராக இருப்பதை விரும்பவில்லை என்று. இந்த குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒரு காங்கிரஸ் தலைவர் இப்படி அர்த்தமில்லாமல் கூறுகிறாரே என்று தோன்றிற்று. கூட்டம் முடிந்ததும் வெளியே தாழ்வாரத்தில் பிரியாங்காவையும் ராகுலையும் கேள்விக்கணைகள் தாக்கின. அதில் பிரியாங்கா கூறியது குறிப்பிடத்தக்கது:

கேள்வி: குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் சொல்வதை உங்கள் அம்மா கேட்பாரா? ( கிட்டதட்ட இந்த அர்த்தத்தில்).

பிரியாங்கா - ( சட்டென்று அடிபட்டாற்போன்ற முகத்துடன்) " நாங்கள் என்றுமே எங்கள் பெற்றோர் எங்களுடையவர்கள் என்று நினைத்ததே இல்லையே? We do not feel our parents belonged to us. Even when our father was killed and when he went without any security he didn't listen to us.

இந்தக் குழந்தைகளா அம்மா உயிருக்கு ஆபத்து என்று பயந்து பிரதமராவதைத் தடுப்பார்கள்? அப்படி நினைத்திருந்தால் அரசியலுக்கே வராமல் எங்கேயோ பாதுகாப்பாக வாழ்க்கை நடத்தியிருப்பார்களே?


No comments: