Thursday, May 27, 2004

நேரு

இப்போதெல்லாம், சமீப காலமாக நேரு என்ற சொல்லே ஏதோ சொல்லக்கூடாத சொல் என்பது போல் இருக்கிறது. நாட்டில் எந்தப் பிரச்சனையானாலும் அவர் மேல், அவரது சோஷலிஸ கொள்கையின் மேல் பழி போடப்பட்டு வந்தது. ஆங்காங்கே தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் " எல்லாம் இந்த நேரு செய்த தவறு" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்லத் தெரியாத ஒரு கோபம் வரும். இதென்ன இப்படி கூசாமல் பேசுகிறார்களே என்று. இன்று இந்தர் மல்ஹோத்ரா நேருவைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாகவும் யதார்த்தமாகவும் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தபோது அப்பாடா என்றிருந்தது.
இந்தக் கட்டுரையில் என்னை சிந்திக்க வைத்த விஷயங்கள்: மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் எளிதாக இருக்கவில்லை. குறைகள் இருக்கதான் செய்தன. ஆனாலும் இந்தக் கொள்கையைக் கைவிடுவதாக இல்லை. ஈந்த சமயத்தில்தான் Andre Malraux அன்றைய பிரான்ஸின் கலாசார அமைச்சர் நேருவிடம் கேட்டாராம்; " சுதந்திரம் அடைந்ததிலிருந்து அவருடைய மிகக் கடினமான வேலை எது என்று?" அதற்கு உடனே நேரு சொன்னாராம்: " நியாயமான தேசத்தை, நியாயமான முறையில் உருவாக்குவது" என்று சொல்லிவிட்டு, தொடர்ந்தாராம், " அதேபோல், மதங்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள ஒரு நாட்டை மத சார்பற்ற நாடாக மாற்றுவதும் கடினம்தான். அதுவும் அந்த மதங்கள் எந்த ஒரு தத்துவ நூல் அடிப்படையிலும் உருவாகாதபோது." என்றாராம்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடதுபோல், நேருவின் சில கொள்கைகளோ அல்லது அவற்றை பின்பற்றிய முறைகளிலோ தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தைக் கட்டி காத்ததில், நாட்டின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு வித்திட்டதில் என்று எத்தனையோ நன்மைகள் அவர் அரசாங்கத்தில் இருந்தன. இன்று இந்தியா ஒரு software Power " என்று புகழப்படுகின்றதென்ரால், அன்று அவர் IIT, Indian Institute of Science, Baba Atomic Research என்று விஞ்ஞான, தொழில் நுட்ப கல்விகளிலும், இதர தொழில் வளம் பெருக வழிகளிலும் முதலீடு செய்ததால்தான் இன்று நம் இந்தியர்களின் திறமை வெகுவாக உலகில் சிலாகிக்கப்படுகிறது.

ஒரு சமயம் Dean Achson என்கிற அமெரிக்க Secretary of State சொன்னாராம்: " உலகுக்கு இந்தியா மிக முக்கியம். இந்தியாவுக்கு நேரு மிக முக்கியம். ஒரு வேளை நேரு என்றொருவர் இருந்திருக்கவில்லையென்றால், அவரை எப்படியாவது உருவாக்கியிருக்க வேண்டும்" என்றாம். If he did not exist, then - as Voltaire said of God - he would have had to be invented".

பி.கு: இன்று நேருவின் 40 வது மறைவு தினம்.

No comments: