Wednesday, May 19, 2004

" இனி தேசம் டாக்டர் மன்மோஹன் சிங் கையில் பாதுகாப்பாக இருக்கும்". ஜனாதிபதியிடம் ஆதரவு கடிதங்களைக் கொடுத்துவிட்டு வந்ததும் சோனியா காந்தி கூறிய வார்த்தைகள்.

இன்றுதான் அவர் நிம்மதியாக தூங்குவார் என்று நினைக்கிறேன். முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. பத்த்ரிகையாளர்களிடம் அவர் முகம் மலர்ந்து தெளிவாக சிரித்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தால் அவர் எடுத்த முடிவு அவரைப் பொறுத்தவரை மிகச் சரிதான் என்று தோன்றுகிறது.

ராகுலும் டிட்டோ ! மிக நிம்மதியாக - சொல்லப்போனால் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். " ராகுல், உங்கள் திருமணம் எப்போ?" யாரோ நிருபர் சீண்டலான கேள்வி. " அதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. செய்தபின் உங்களுக்குக் கட்டாயம் தெரிவிக்கிறேன்" என்று அதே சீண்டல் தொனியில் பதில். இவரும் மந்திரிசபையில் அங்கம் வகிக்கப் போகிறதில்லையாம். ஆனால் 5 வருடம் குறித்து ஏற்பாராம். பிரதமராவதை யோசித்திருக்கிறீர்களா? சற்று தன்யங்கி, " இல்லை. ஆனால் பிரதமர் ஆக வேண்டும் என்று தினம் ஸ்பரணை செய்து கொண்டிருக்க முடியுமா என்ன? காலப் போக்கில் பிரதமராக வேண்டும் என்ற நிலை வந்தால் ஏற்றுகொள்வேன்." இந்த ரீதியில் இருந்தது அவரது பதில்.

ஏதோ இப்போதைக்கு அவர்களுடன் நாமும் சேர்ந்து சற்று நிம்மதி பெருமூச்சு விடுவோமே?

No comments: