Saturday, May 15, 2004

டெமாகிரெடிக், கம்யூனிஸ்ட் இந்தியா?

தேர்தலுக்குப் பிறகு வரும் செய்திகளைப் பார்த்தால் அப்படி ஒரு பிரமை உண்டாகிறது. மாற்றி மாற்றி இடது சாரிகளின் anti reform ( No; we are not against reforms என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே) குரல்கள்தாம் ஒலிக்கின்றனவே தவிர காங்கிரஸின் அல்லது மற்ற கட்சி தலைவர்களின் குரல் காணோம். மன்மோஹன் சிங், மற்றும் சிதம்பரம் எல்லாம் எங்கே? பிரதமர் யார் என்று முடிவு செய்வதில் காங்கிரஸ் மூழ்கிக் கிடக்கும்போது அவசரம் அவசரமாக முதல் காரியமாக " disinvestment" பற்றி பேசி பங்குச் சந்தையை இப்படி தடாலென்று கீழே தள்ளியிருக்க வேண்டாம். பங்குச் சந்தை விழுவதும் எழுவதும் பெரிய விஷயமில்லை. இன்னொருமுறை தும்மினால் மேலே வந்துவிடும். இருந்தாலும் தொடர்ந்து முதலீட்டார்கள் நம்பிக்கை இழந்து வேகமாக முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொள்ளும் trend தான் கவலை தருகிறது. ஒரே நாளில் 605 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் காணாமல் போயிருக்கின்றன.

தேர்தல் முடிந்து மகக்ள் நம்பிக்கையை சம்பாதித்தாயிற்று. நல்ல காரியம். அடுத்தது, இப்போதைய அவசியம், முதலீட்டார்களின் நம்பிக்கையை நிலை நாட்டுவது. குறைந்த பட்சம் அவர்களை பயமுறுத்தாமல் இருக்கலாம். ஆரம்பித்தவுடன் பானையைப் போட்டு உடைப்பதுபோல் வணிக உலகில் எதிர்மறை விளைவிக்கும் எண்ணங்களைதான் எடுத்த எடுப்பில் அறிவிப்பு செய்ய வேண்டுமா?

பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடருவோம் என்று பேசுகிறவர்கள், முதலில் எல்லோருக்கும் நம்பிக்கைத் தரும் கொள்கைகளை அறிவித்து பின் தங்கிய வர்கத்தினர் மற்றும் வணிக உலகம் இரண்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்க ஆரம்பிக்கலாமே? விவசாயம் மற்றும் நெசவு என்று நலிந்த துறைகளில் அரசு முதலீடு அதிகரித்து வேலை வாய்ப்பு அதிகரிக்க வகை செய்யும் என்று ஏதாவது ஆக்க பூர்வமான அறிவிப்பாக தொடங்கியிருக்கலாமே?

உலகளாவிய வர்த்த்கம் நிலவும் இந்த நாளில் உலக அரங்கில் இந்தியாவைப் பற்றி ஒரு நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம். அதனால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்ட அறிவிப்புகள் வர வேண்டும்.

மன்மோஹன் சிங், சிதம்பரம் & Co - விரைவில் ஆஜர் ஆகும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் :-)

No comments: