Thursday, May 13, 2004

தூவானம் !

மழை ஓய்ந்தாலும் தூவானம் இருக்கணுமே ? சில அசை போடல்கள்:

வெற்றி வந்து குவிந்தபோதும் சோனியா காந்தி வெகு நேரம் பத்திரிகையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த போதும் பிடி கொடுக்காமல்தான் பேசினார்.

ஏன்?

என் மனதில் ஒரு "deja vu". காட்சி: 1998 ல் ராஷ்ட்டிரபதி பவன் முன் திறந்த வெளியில் தன்னிடம் தேவையான எம்.பிக்கள் இருப்ப்தாக 'letter of support' என்று படு நம்பிக்கையாக அறிவிப்பு செய்யும் காட்சி மனக்கண் முன் வந்து போனது.

இந்த முறை ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறாரோ?

***

1999 தேர்தலின்போது எழுதிய ஒரு குட்டி சமாசாரம்: இப்போதும் சரியாகவே இருக்கும் :-)

பங்கு சந்தையில் பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கணிக்கும் அளவுக்கு " Sensitive Index" என்று ஒரு குறியீடு
இருப்பதுபோல், இந்த தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைக்
கணிக்க ஒரு விசேஷ குறியீடு பயன்படுத்தப்பட்டது. அதுதான், "லட்டுகள் காட்டும் நம்பிக்கை சங்கேதம்"
(Laddoo Index of Confidence).....!! ஜெயித்தால் இனிப்பு வழங்க வேண்டாமா? அதற்காக கட்சிகள்
அனைத்தும் முன்ஜாக்கிரதையாக தங்கள் தங்கள் பங்குக்கு இனிப்பு கடைகளில் லட்டுகளுக்கு ஆர்டர்கள்
கொடுத்துவிட்டனர். எத்தனைக்கெத்தனை ஆர்டர்களின் மதிப்பு அதிகமோ அதற்கேற்றாற்போல் அவர்களின்
நம்பிக்கையின் அளவும் என்று குத்து மதிப்பாக பத்திரிகையாளர்களுக்குள் ஒரு கணிப்பு...!

****

ஒரு பேட்டியில் பிரமோத் மஹாஜனிடம் கேள்வி கேட்கபடுகிறது: " இந்த லோக் சபாவில் எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருப்பாரா?"

மஹாஜன்: " சொல்ல முடியாது. அவர் வயது, அவர் உடல் சக்தியைப் பொறுத்தது. அவரால் இந்த பளுவைத் தாங்க முடியுமா என்பது கேள்விதான்."

என் உள்ளே அசரீரி: " நன்றாயிருக்கிறதே? கட்சி வெற்றி பெற, அவர் வேணும் - வாஜ்பாய் factor - இப்போ அது நடக்கவில்லையென்றதும் அவரை ஓரம் கட்டிவிட வேண்டியதுதானா?"

***

NDTV யில் வாஜ்பாய் ராஜினாமா கடிதம் கொடுக்கப் போவதைக் காண்பித்தார்கள்: அம்பாசடர் காரை மட்டுமே பார்க்க முடிந்தது.யானால் அலசல்கள் நடுவில் நேற்று அவருடன் எடுத்த பேட்டி வந்தது. ஒரு கவிதை பாடச்சொன்னால் என்ன பாடுவீர்கள் என்ற கேள்விக்கு, " நிச்சயம் தோற்க மாட்டேன்; அப்படியே தோற்றாலும் யாருடைய எதிரியாகவும் இருக்க மாட்டேன்; எனக்கென்று தனியாக ஒரு புதிய பாதை வகுத்துக்கொள்வேன்" என்கிற ரீதியில் இருந்தது கவிதை. அதை அவர் சொல்லும்போது அந்த அமைதியான சிரிப்பும் கண்களில் ஒளியும்... !! மனதில் ஓர் ஓரத்தில் இரக்கம் கவ்விக்கொண்டது.

real gentleman;

So, let's give him a standing ovation. He desrves - for being the gentleman he is, if not for the blunders of his party.

No comments: