Tuesday, December 09, 2003

விகடனில் மதன் பதிலில் தஞ்சை கோவில் நிழல் விழாது என்கிற சமாசாரம் கட்டுக்கதை என்று குறிப்பிட்டிருந்தார். பரிமேலழகர் வலைப்பூவில் இதைக் குறிப்பிட்டு இன்னும் எத்தனை தகவல்கள் இதுமாதிரி பொய்க்கப்போகின்றனவோ என்று எழுதியிருந்தார்.

ஆனால் இந்த நிழல் சமாசாரத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படியும் இருக்கலாமோ..?

தஞ்சாவூர் கோவிலின் நிழல் கூட விழாது என்று எங்கள் காலத்தில் - அறுபதுகளில் - கூறப்பட்டபோது, பள்ளியில் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்கள். தஞ்சை பெரிய கோவில் மிகப் பெரியது - பெரிய பிராகாரம். கோபுரமும் மிகப் பெரியது. ஆனால் அவ்வலவு பெரிய கோபுரத்தின் நிழல் கோவிலைவிட்டு வெளியே விழாத அளவு பெரிய பிராகாரம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது கோபுர நிழல் பிராகரத்துக்குள்ளேயேதான் விழுமாம். பிராகாரத்தைத் தாண்டி கோபுர நிழல் வெளியே வந்து விழுகிறதா என்று நேரில் பார்த்தவர்கள் சொன்னால் புண்னியமாகும்.

தஞ்சையிலிருந்து வலைப்பூக்கள் தொடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?

No comments: