<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5317770</id><updated>2012-02-17T08:12:35.522+05:30</updated><category term='மின்சார செலவு'/><category term='அன்னா ஹசாரே'/><category term='மின்சார விளக்கு'/><category term='ரயில் ஜன்னல்'/><category term='மின்சாரம்'/><category term='பூமி'/><category term='ஆஸ்கார் விருது'/><category term='லஞ்சம் மறுப்பு'/><category term='நன்கொடை'/><category term='ஏ ஆர் ரெஹ்மான்'/><category term='Earth Hour'/><title type='text'>அலைகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>212</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-7710721477503911374</id><published>2011-10-06T15:59:00.004+05:30</published><updated>2011-10-09T07:16:21.775+05:30</updated><title type='text'>ஸ்டீவ் ஜாப்ஸ்......</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;விஞ்ஞான ரீதியாகவோ அல்லது சமூகத்தில் பெரிய சாதனைகள் புரிந்தோ, பெரிதளவில் மனித வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்தும் மேதைகளும் ஒரு விதத்தில் கடவுள் தன்மை கொண்டவர்களோ என்று சில சமயம் எனக்குத்தோன்றும்..... தங்கள் மனதில் தோன்றும் ஒரு ஒளியை நோக்கி அசராமல், தளராமல் தொடர்ந்து தங்களுக்கு சரியென்று தோன்றும் திசையில் பயணிக்கும் இவர்கள் தங்கள் உள்ளுணர்வின்படி செயல் புரிந்து சாதனைகள் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;அப்படி என்னை மிகவும் அசத்தியவர்களில் ஒருவர் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ்.&amp;nbsp; பலவிதங்களில் அவர் வாழ்க்கையில் அசத்தியிருந்தாலும்,&amp;nbsp;&amp;nbsp;அதில் மகுடம் வைக்கத்தகுந்தது - ஞான ஒளி&amp;nbsp;தேடி இந்தியா வந்துவிட்டு, &amp;nbsp;பின்னர் இங்குள்ள நிலையைப் பார்த்து ஏமாற்றம் அடைந்து - நீம் கரோலி பாபாவும், (இவரைத் தேடித்தான் இந்தியா வந்தார் -&amp;nbsp; 70 களில்) கார்ல்மார்க்சும் சேர்ந்து சாதித்ததைவிட தாமஸ் எடிசன் அதிகம் சாதித்தார் என்று தெளிந்து தன் ஊருக்கு&amp;nbsp; திரும்பிப் போய், தொழில்நுட்பத்தில் முழு மூச்சாக இறங்கி, ஆப்பிளை ஆக்கினார் பாருங்க....... அங்க நிக்கிறார்..... &lt;/div&gt;&lt;br /&gt;இவரின் மறைவு, கணினி பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவிதத்தில் நிச்சயம் தொடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;2005 ல் ஸ்டான்போர்ட் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்டபின் நான் அன்று&amp;nbsp;&amp;nbsp;&lt;a href="http://aruna52.blogspot.com/2005/06/blog-post.html"&gt;பதிந்த&amp;nbsp;பதிவிலிருந்து&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;சில வரிகள். &lt;/div&gt;&lt;br /&gt;///ஆப்பிள்காரர் பேச்சு உண்மையில் ரொம்ப சுவாரசியமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. சில பொன் துளிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;நான் எந்தப் பட்டமும் பெற்றதில்லை. நான் ஒரு drop out. உண்மையில், பட்டமளிப்பு என்று நான் பங்கு கொள்ளும் விழா இதுவாகதான் இருக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;உங்களுக்கு எதுப் பிடிக்கிறதோ அதில் நம்பிக்கை வைத்து செய்யுங்கள். பிடித்தது எது என்று இன்னும் பிடிபடவில்லையென்றால் அது என்ன என்று தேடுங்கள். எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை என்று கிடைத்ததை வைத்துக் கொண்டு செட்டில் ஆகிவிடாதீர்கள். உள் மனசு சொல்வதைக் கேட்கப் பழகுங்கள். அதன்படி நடக்க முயலுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;சென்ற வருடம் எனக்கு கான்ஸர் என்று முடிவானபின் என் வாழ்நாள் சில மாதங்களே என்றனர். அப்போதுதான் என் மனசில் நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி நிறைய இருப்பது புரிந்தது. வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் பொதுவான, நிச்சயமான ஒன்று இறப்பு. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று புரிந்து கொண்டால் நம்மில் இருக்கும் பாதி குழப்பங்கள் தீர்ந்துவிடும். நாளை இறந்துபோய்விட்டால் என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துக் கொண்டால் பல சாதனைகளை உங்களையறியாமலேயே செய்துவிடுவீர்கள். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;உங்களுக்கு என்று பாதை வகுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்று வாழ்க்கை குறிப்பிட்ட அளவுதான். அதையும் பிறர் சொல்படி வாழ்ந்து வீணாக்காதீர்கள். புள்ளிகள் வைப்பது முக்கியம். அவற்றை எப்படி இணைப்பது என்று குழம்பாதீர்கள். புள்ளிகள் வைத்துவிட்டால் கோடுகள் தானே வந்து சேரும். ///////////&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;ஹ்ம்ம்..... என்ன ஒரு பிரமாதமான மனிதர் !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-7710721477503911374?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/7710721477503911374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=7710721477503911374&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/7710721477503911374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/7710721477503911374'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2011/10/blog-post.html' title='ஸ்டீவ் ஜாப்ஸ்......'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-4515833091368309721</id><published>2011-08-27T21:02:00.006+05:30</published><updated>2011-09-01T23:00:39.238+05:30</updated><title type='text'></title><content type='html'>Looks like democracy has prevailed after 12 days and I am happy to see that. Good sense prevailed on both the Government and the Team Anna to step forward a bit from their original respective adament stands and a middle path was found. But the whole episode throws up lots of questions. Along with the links that mark the great day of Victory of democracy, some more links here to think and reflect:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thehindu.com/todays-paper/article2405059.ece"&gt;www.thehindu.com/todays-paper/article2405059.ece&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true"&gt;www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true&lt;/a&gt;&lt;br /&gt;However, for all of Arundhathi's scepticism, Arvind Kejariwal's response here comes across as someone who talks the Truth and talks genuinely. - &lt;a href="http://www.thehindu.com/todays-paper/tp-opinion/article2413220.ece"&gt;www.thehindu.com/todays-paper/tp-opinion/article2413220.ece&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kafila.org/2011/08/20/we-should-be-there-the-left-and-the-anna-moment/"&gt;http://kafila.org/2011/08/20/we-should-be-there-the-left-and-the-anna-moment/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-4515833091368309721?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/4515833091368309721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=4515833091368309721&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4515833091368309721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4515833091368309721'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2011/08/looks-like-democracy-has-prevailed.html' title=''/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-6842000713604382207</id><published>2011-08-20T08:37:00.003+05:30</published><updated>2011-08-20T18:03:19.223+05:30</updated><title type='text'>சில கேள்விகள்.....</title><content type='html'>அன்னா ஹசாரேயின் ஜன லோக்பால் மசோதா பார்லிமென்ட்டில் விவாதத்துக்கு எடுத்துக்க்கொள்ளப்ப்ட வேண்டும். பலவித அலசல்கள், விவாதங்களுக்குப் பிறகு, ஒரு அழுத்தமான , வலுவுள்ள, சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், இப்போ சில கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஜன லோக்பால் மசோதாவை அப்படியே மாற்றங்கள் இல்லாமல் எடுத்துக்கொள்ளும்படி முரண்டு பிடிப்பது எப்படி நியாயம் ஆகும்?. உதாரணமாக, தொண்டு நிறுவனக்கள் அனைத்தும் இந்த ஜன லோக்பால் எல்லையில் வரவில்லை. அர்விந்த் கேஜரிவால், அவை தனியாக வேறு வரம்பில் வரலாமே என்று கேட்கிறார். இதெப்படி நியாயம்? நீதித்துறை, பிரதம மந்திரி என்று எல்லாமே லோக்பால் வரம்பில் வர வேண்டும் என்கிறபோது தொண்டு நிறுவனங்களும் இதில் வருவதுதானே நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது நெருடல் - இன்று டிவி சானல் ஒன்றில் பழைய அன்னா ஹசாரே சொற்பொழிவு ஒன்று பார்த்தேன். அவருடைய கிராமத்தில் முப்பத்தைந்து வருஷமாக தேர்தல் நடக்கவில்லையாம் - " ஒரே ஒரு முறை - அதுவும் வலுக்கட்டாயமாக நடத்தினார்கள்" என்றார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலையே அவசியம் இல்லை என்று ஒருவர் சொல்வது எனக்கு ஜீரணிக்க முடியவில்லை......... இது என்ன மாதிரி பாலிசி???&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா ஹசாரேவை நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன் என்று சொன்னது உண்மை. ஜன நாயக நாட்டில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்து தன வேண்டுகோளை முன்வைப்பவரை அரசு நடத்தியவிதம் சரியில்லை; அவர் வேண்டுகோளில் நியாயம் இருக்கிறது என்பது என் கருத்து. ஆனால் மேலே சொன்ன கேள்விகள் நெருடுகின்றன என்பதும் உண்மை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-6842000713604382207?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/6842000713604382207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=6842000713604382207&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/6842000713604382207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/6842000713604382207'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2011/08/blog-post_20.html' title='சில கேள்விகள்.....'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-1407614118748791807</id><published>2011-08-17T09:37:00.004+05:30</published><updated>2011-08-17T10:10:51.273+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்னா ஹசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லஞ்சம் மறுப்பு'/><title type='text'>அன்னா ஹசாரே</title><content type='html'>&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#993399;"&gt;நான் அண்ணா ஹசாரேயை ஆதரிக்கிறேன் - எந்த நிபந்தனையுமின்றி !!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதுவரையில் யாருக்கும் எங்கும் லஞ்சம் கொடுக்காமல் - தொலைபேசி, ரேஷன் கார்டு, தண்ணீர், கார்பரேஷன் &lt;span&gt;என்று &lt;/span&gt;எந்த வேலையாக இருந்தாலும் பொறுமையாக காத்திருந்து நேர்வழியிலேயே , நியதிகளைப் பின்பற்றி, லஞ்சம் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்துள்ளேன் என்று &lt;span&gt;சொல்லிக்கொள்ளுவதிலும்&lt;/span&gt; பெருமிதம் அடைகிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஊழல் திமிலங்கள் நசுக்கப்படவேண்டும். அதேசமயம், தனிப்பட்ட முறையில் என்னைப் போன்ற சாதாரணர்கள் - உலகெங்கும் இன்று அன்னாவை ஆதரிக்கும், அலைமோதும் இந்தியர்கள் பலரும் இன்று லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதத்துடன், பெருமிதத்துடன் சொல்ல முடிந்தால், இந்தியாவைப்பற்றி என்றும் என்னுள் சுடர் விட்டு எரியும் நம்பிக்கை மேலும் வலுப்படும் !!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மாற்றங்கள் நிகழ்வது ஒரு புள்ளியிலிருந்து ........ நான் என்ற புள்ளி.......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-1407614118748791807?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/1407614118748791807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=1407614118748791807&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/1407614118748791807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/1407614118748791807'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2011/08/blog-post.html' title='அன்னா ஹசாரே'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-9099003704612089497</id><published>2009-03-29T16:06:00.004+05:30</published><updated>2009-03-29T16:15:17.737+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்சார விளக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Earth Hour'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரயில் ஜன்னல்'/><title type='text'>ஒரு மணி நேரம்; 60 நிமிடங்கள்; 360 வினாடிகள்</title><content type='html'>மணிக்கணக்கில் மின்சாரத் தடை இருந்து பழக்கப்பட்டவர்கள்தாம் நாம். அதனால்&lt;br /&gt;ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாம இருக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமான விஷயம் இல்லேதான். ஆனாலும் ஒவ்வொரு வினாடியும் எப்படி போகிறது, கடிகார முள் எப்படி நகருகிறது என்று நன்றாக கவனிக்க முடிந்தது - இந்த பூமிக்கான சில மணித்துளிகளில் :-)&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, மின்சாரம் தடையின்றி கிடைக்க Inverter, ஜெனெரேடர் என்று வசதிகளுடன் பழகிவிட்ட இந்த நாளில் நாம்பளாகவே மின்சாரத்தை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கிறப்போ, அது கொஞ்சம் வித்தியாசம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்யூடரிலிருந்து எல்லாத்தையும் அணைச்சிட்டு, இரண்டு மெழுகுவர்த்தியும் பனை ஓலை விசிறியுமா சோபாவில் உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தேன்... சே... இதென்ன பைத்தியக்காரத்தனம்/ இப்பதானே அணைச்சிட்டு வந்து உட்கார்ந்தோம்? டேபிளின் மேல் கையில் கிடைச்ச பத்திரிகையை எடுத்து புரட்ட ஆரம்பிச்சேன். ஹு..ஹும். மங்கலான வெளிச்சத்தில் படிக்க சுவாரசியமாகவே இல்லை. பத்திரிகையை மூடி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, ஒண்ணுமே செய்யாம ஒரு மணி நேரம் சும்மாவே எப்படி உட்கார்ந்து இருப்பது? அப்பதான் 24 மணி நேரமும், உபயோகமோ இல்லையோ ஏதோவொரு 'செய்கையில்' நாட்கள் ஓடிவிடுவது புரிந்தது. அந்த காலத்தில் முனுவர்களின் தவத்துக்கு கடவுள்கள் கேட்ட வரம் கொடுத்தாராம் என்றால், ஏன் மாட்டாராம்? ஒன்றும் செய்யாமல் ஒரு மணி நேரம் இருப்பதே பிரம்ம பிரயத்தனம் என்றால், நாட் கணக்கில் இருப்பது சூப்பர் சாதனை அல்லவா? இன்னிக்கு அப்படி யாராவது நாட்கணக்கில் "சும்மா" இருந்தால் ஒலிம்பிக் தங்க மெடலே கொடுத்தாலும் தகும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;பனை ஓலை விசிறியை விசிறிக்கொண்டு என்ன செய்யலாம் என்று நோட்டம் விட்டபோது, போன் கண்ணில் பட்டது. ஆஹா.... போன் பேச வெளிச்சம் வேண்டாம் - யாரையாவது அரட்டைக்கு இழுக்கலாம் என்று எழுந்த போது, உள்ளே ஒரு அசரீரி. அதென்ன அப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாம? ஒன்றுமே செய்யாமல், யாருடனும் பேசாமல் ஆத்மார்த்தமாக சிந்தித்துக்கொண்டு ஒரு மணி நேரம் உன்னால் இருக்க முடியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஹ்ம்ம்... உள்ளே எழுந்த சவாலை ஏற்றுக் கொண்டு பேசாமல் அமர்ந்தேன். ஆனால், உட்கார முடியவில்லை. எழுந்து நடந்தபோது ஜன்னல் வழியே சிறிது நேரம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆஹா... இது சுவாரசியம் என்று தோன்றியதில் பனை ஓலை விசிறி சகிதம் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். வீட்டருகில் இருந்த மரம் சமீபத்தில்தான் விழுந்திருந்தது. ( மற்றொரு இழப்பு பூமிக்கு) இப்போ கூடத்து ஜன்னல் வெளியே பெட்ரோல் பங்கும், சாலை சந்திப்பும் நன்றாகவே தெரிந்தது. சரி; எத்தனை வாகனங்கள் சிவப்பு விளக்கை தாண்டுகின்றன என்று பார்க்கலாம். ஆஹா...அதிசயம்; எல்லா வாகனங்களும் கனக்கச்சிதமாக சிவப்பில் நின்று, பச்சையில் ஒழுங்கா போய்கிட்டு இருந்தது. சே... இப்படி சுவாரசியமில்லாம ஓட்டறாங்களே' னு நகரும் வாகனங்களையும் பெட்ரோல் போட இறங்கும் ஓட்டுனர்களையும் பார்த்தபடி மனம் எங்கோ மேய்ந்தபடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை விதமான வண்டிகள்? மனிதர்கள்? - அவர்கள் ஓட்டும் / பயணிக்கும் வண்டிகள், அவர்கள் எண்ணங்களையும், கவலைகளையும், சந்தோஷங்களையும் சுமந்து போகின்றனவோ?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைத் தாண்டி வெளி உலகை கவனிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உணரும் அதே உணர்ச்சி மீண்டும் எழுந்தது; நானும் என் கவலைகள்/ மகிழ்ச்சிகள்/ என்று இருக்கும் "நான்' எவ்வளவு மிகச் சிறியது - insignificant - ஒரு விதமான முக்கியத்துவமும் இல்லாத - பிரமாண்டமான மக்கள் சமுத்திரத்தில் எத்தனை சிறிய ஒரு நீர்த் துளி... என்ற உணர்வு......&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் பயணம் ஞாபகம் வந்தது. டில்லிக்கும் சென்னைக்கும் அடிக்கடி பயணம் செய்யும்போது இப்படி ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வெளியே "ஓடும்" உலகை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம். நீண்ட இரண்டு நாள் பயண அலுப்பே இதில் மறைந்துவிடும் என்பது மட்டுமல்ல. அந்த ரயில் ஜன்னல் நேரங்கள் என்னுடையவை - சிந்திக்க, அசை போட, திட்டம் இட, என்னைச் சுற்றி 'ஓடும்" உலகை கவனிக்க என்று... பல விதங்களில் அந்த ரயில் பயண தனிமையை ஆவலுடன் ஓரளவு எதிர்பார்ப்பதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 'பூமிக்கான மணித்துளிகள்" மீண்டும் என் ரயில் ஜன்னல் கணங்களை கொண்டு வந்து கொடுத்தாற்போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஒரு மணி நேரம் முடிந்து, ஸ்விட்சை தட்டி விளக்கு போட்டு, மெழுகுவர்த்தியை எனக்கு நானே ஹாப்பி பர்த்டே சொல்லி அணைத்து ( இவற்றை செஞ்ச வரிசையை கவனிக்கவும் - முதல்லே மின்சார விளக்கு போட்டுட்டு, அப்புறம்தான் மெழுகுவர்த்தியை நிறுத்தணும்....!!!) உடனேயே, "நான்" "என்" உலகிற்கு திரும்பின போது "அப்பாடா...." என்று சந்தோஷமாகதான் இருந்தது :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-9099003704612089497?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/9099003704612089497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=9099003704612089497&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/9099003704612089497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/9099003704612089497'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2009/03/60-360.html' title='ஒரு மணி நேரம்; 60 நிமிடங்கள்; 360 வினாடிகள்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-6157776243220215444</id><published>2009-03-28T13:36:00.004+05:30</published><updated>2009-03-28T13:49:54.610+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்சார செலவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்கொடை'/><title type='text'>பூமிக்கு ஒரு நன்கொடை</title><content type='html'>நன்கொடை 'னு செஞ்சோம் என்றால் நம்ம கையை விட்டு பணம் கொடுக்கணுமில்லையா? ஆனா இந்த நன்கொடை செஞ்சா நமக்கு பணம் வரும்படி....!! அதனாலே &lt;a href="http://www.voteearth2009.org/home/"&gt;இந்த நன்கொடை&lt;/a&gt; இன்னிக்கு இரவு 8.30 லேர்ந்து 9.30 வரை செய்யப்போறேன். நீங்களும் செய்யலாமே...!!! பூமியை "காப்பாற்றிய" மாதிரியும் ஆச்சு - ஒரு மணி நேரம் மின்சார செலவும் மிச்சம்.... Money saved is money earned இல்லையா?!!! :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-6157776243220215444?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/6157776243220215444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=6157776243220215444&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/6157776243220215444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/6157776243220215444'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2009/03/blog-post_28.html' title='பூமிக்கு ஒரு நன்கொடை'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-4870425332549251431</id><published>2009-03-01T00:58:00.004+05:30</published><updated>2009-03-01T01:11:21.753+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏ ஆர் ரெஹ்மான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆஸ்கார் விருது'/><title type='text'>ஆஸ்கார் விருதும், பலன் எதிர்பாரா உழைப்பும்</title><content type='html'>ஏ ஆர் ரஹ்மானின் ஆஸ்கார் விருது பாராட்டு மழையின் நடுவே நிறைய விமரிசனங்களும் பொழிந்து கொண்டுள்ளன - அமிதாப் பச்சனின் விமரிசனம் உள்பட. இந்தியா is the flavour of the day என்ற நிலையில், இந்திய களம் ஒன்று அமைத்து செய்தால் வெற்றி பெறும் என்று எழுதப்படாத விதி உருவாகியிருக்கிறது. அதுவும் இந்தியாவின் வறுமை / ஊழல் மற்றும் இதர நலிந்த பக்கங்கள் என்ற ரீதியில் படம் எடுத்தாலோ / புத்தகம் எழுதினாலோ ( புக்கர் விருதைப் பெற்ற அரவிந்த் அடிகாவின் White Tiger - ) நிச்சயம் வெற்றி என்று ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், விமரிசங்களுக்கப்பால், இந்தியர் ஒருவரின் திறமை உலகளவில் அங்கீகரிக்கப்ப்ட்டதில் நிச்சயம் நான் பெருமை கொள்கிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் முழுதும் மின்சாரம் பாய்ந்தாற்போல் ஒரு விறுவிறுப்பும், அடிப்படை மனித சுபாவங்களையும் படம் பிடித்து காட்டுகிறது என்று கேள்விபட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது ஒரு படைப்பு ஜாதி, நாடு, மொழி என்று விளிம்புகளைத் தாண்டி பலதரப்ப்ட்ட மக்களை சென்று அடைகிறதோ, அந்தப் படைப்பு நிச்சயம் உலக தரம் வாய்ந்தது. ரெஹ்மானின் இசை அதை சாதித்து இருக்கிறது என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெஹ்மானின் ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பகிர்ந்து கொள்பவர், பாடலாசிரியர் குல்சார். ரெஹ்மான் மழையில் இவரை அனேகம் பேர் மறந்து போனார்கள்!! டைம் ஆப் இந்தியாவில் அவரது பேட்டி குறிப்பிடத் தகுந்ததாக இருந்தது. ஸ்லம் டாக் என்ற பெயர், under dog என்று சொல்வது போலதான் என்கிறார். இந்தியாவின் வறுமையை படம் பிடித்து காண்பிப்பது சரியா என்ற கேள்விக்கு, அதிலென்ன தவறு என்று கேட்பவர், சத்யஜித் ரே பற்றியும் இப்படித்தானே சொன்னார்கள்' வறுமை என்பது வாழ்க்கையில் ஒரு அம்சம். இந்தப்படம், வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுகிறது; அவ்வளவுதான் என்கிறார். "These critics are missing the point that Slumdog, just like Pather Panchali, isn’t about poverty. It’s a slice of life. The best of cinema, like the best of literature worldwide, including Dickens, has portrayed poverty, because it’s a part of life. If you fail to see that, it’s your limitation. " என்பது இவரது கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தமுள்ள வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்கும் அப்பால் ரெஹ்மான் சொல்லிய இரண்டு கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஆஸ்கார் விருதை பெற்றுக் கொண்டு அவர் கூறிய, " அன்பு, வெறுப்பு என்ற இரு பாதையில் நான் எப்போதும் அன்பைத் தேர்வு செய்தேன்...." என்ற வாக்கியம் இன்று பட்டி தொட்டிகளிலெல்லலம் முழங்குகிறது. வெறும் கவர்ச்சியான வாக்கியமாக இல்லாமல், அவர் அனுபவித்து, உணர்வு பூர்வமாக சொன்ன அந்த வார்த்தைகளின் புரிதல், பத்தில் ஒரு பங்கு பேரிடம் போய்ச் சேர்ந்தால் கூட போதும் - நம் சமூக வாழ்க்கையில் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக அவர் சொல்லியது வெற்றியைத் தேடி உழைக்கும் பல இளைஞர்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;விருது கிடைக்க வேண்டும் என்ற எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இயல்பான தன்னுடைய ஆர்வத்திலும், உழைப்பின் மேலும் நம்பிக்கை வைத்து, கடமையே கண்ணாக உழைப்பது அவரது சுபாவம். "I’ve realised when you work without thinking about awards and money, it pays off” என்ற அவர் கருத்தில் வெற்றிகரமான வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் அடங்கியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-4870425332549251431?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/4870425332549251431/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=4870425332549251431&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4870425332549251431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4870425332549251431'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2009/03/blog-post.html' title='ஆஸ்கார் விருதும், பலன் எதிர்பாரா உழைப்பும்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-1570793013876325517</id><published>2007-10-02T20:29:00.000+05:30</published><updated>2007-10-02T20:43:04.699+05:30</updated><title type='text'>காந்திஜி &amp; கஸ்தூரி பா</title><content type='html'>வளரும் காலத்தில் நமக்கு கிடைக்கும் சில வாசிப்புகள், சில சந்திப்புகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி பல விதங்களில் நம் எண்ணங்களையும் கொள்கைகளையும் உருவாக்குகிறது அல்லவா? அந்த வகையில் காந்திஜியின் "சத்திய சோதனை" பள்ளியில் படிக்கும் காலத்தில் படித்தது. பின்னர், அப்பா 1963ல் சேவாகிராமம் போயிருந்தபோது வாங்கி வந்த "எமது பா" என்கிற கஸ்தூரி பா பற்றிய இரண்டு புத்தகங்கள் - (சுசீலா நய்யார் எழுதியது - தமிழாக்கம், கோ. கிருஷ்ணமூர்த்தி - சர்வோதயப் பிரசுரம் ) இன்றும் என் சிந்தனைகளின் வேரில் இவர்களின் தாக்கம் ஆழமாக இருக்கிறது. குறிப்பாக, கஸ்தூரி பா. காந்திஜியின் அதே அளவு பிடிவாதமும் கருணையும் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுய சரிதத்தில், பா விடம் தான் நடந்து கொண்ட கடுமையான தருணங்களை காந்திஜி எழுதியிருப்பதைப் படிக்கும்போது,  " எப்படி காந்திஜி இந்த மாதிரி இருந்தார்!!" என்று எண்ணத் தோன்றியதுண்டு.  ஆனால்,  தன் தவறுகளை அவர் வெளிப்படையாக சொல்லக் காரணம் - தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒரு பக்கம்; மறு பக்கம் தன் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் என்றவர் தன் வாழ்க்கையில் தன் தவறுகள் மூலம் தான் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்கள் பிறருக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்ற சிந்தனையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜியின் கொள்கைகளில் பா வும் சளைத்தவரில்லை. ஆனால் இன்று நினைக்கும்போது கஸ்தூரி பாவின் மற்ற குணங்களும் சுவாரசியமாக இருக்கின்றன. காந்திஜி போன்ற பிடிவாத, கோபக்காரராக இருந்த கணவருக்கு ஈடு கொடுத்து வாழ்க்கையை லாவகமாக வாழ்ந்தவர். அதே சமயம் தன் உரிமையை நிலை நாட்டுவதில் அசர மாட்டார். "எமது பா" என்ற புத்தகத்தில் பாவின் இந்த சுதந்திரத் தன்மையையும், தனக்குச் சரியென்று மனசில் பட்டதை கணவரிடம் அவ்வப்போது அழுத்தமாக எடுத்துச்சொல்வதும் வழக்கம் என்று சுசீலா நய்யார் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"... அதிகம் எழுத்தறிவில்லாதிருந்தபோதும், அவர் (கஸ்தூரி பா) தன் சுதந்திரத்தின் மதிப்பை உணராதிருந்தவரல்ல என்பது தெளிவு... யாருக்கும் அஞ்சி தன் மனம்போல் நடவாமல் இருந்தவர் அல்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆன புதிதில் காந்திஜி தன் மனைவி அனுமதியின்றி எங்கும் வெளியில் போகக்கூடாது என்று கட்டுப்படுத்தியிருந்தார். "மனைவியின் தூய்மையை சந்தேகிக்க காரணம் எதுவும் இல்லை. ஆனால் பொறாமை காரணத்தை எங்கே தேடப்போகிறது?என் மனைவி எங்கே போகிறாள் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்...." என்ற ரீதியில் தன் பொறாமைக் குணத்தை சுயசரிதையில் விவரித்துள்ளார். ஆனால் கஸ்தூரி பா தான் போக விரும்பும் இடங்களுக்கு அவர் இஷ்ட்டப்படி போய்க்கொண்டுதான் இருந்தார். " நான் அடக்க அடக்க அவள் அதிகம் மீறிக்கொண்டு கிளம்பவே நான் அதிகம் ஆத்திரம் கொண்டேன்." காந்திஜி விவரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் இஷ்ட்டப்படி பா வெளியே போய் வந்தாலும் கணவரின் ஆத்திரத்தையும் கோபத்தையும் பொறுமையாக சமாளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தன் பொறாமைக் குணத்தால் இப்படி மனைவியை அடக்கினாலும், பின்னர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் காலமும் வந்தது என்று விவரிக்கும் காந்திஜி, தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ".... கஸ்தூரிபாய் தன் இஷ்டம்போல் நடந்து கொண்டதில் குற்றம் ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன். மனதில் கல்மிஷம் ஏதும் இல்லாத பெண் சுவாமி தரிசனத்திற்கோ, யாரையேனும் பார்க்கவோ போகும் விஷயத்தில் எதற்காகப் பிறருடைய உத்தரவுக்குப் பணிய வேண்டும்? நான் அவளுக்கு உத்தரவு இடலாமென்றால் அவள் மட்டும் ஏன் எனக்கு இடக்கூடாது? ஆனால் இந்த விஷயம் இப்போதுதான் புரிகிறது...."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் சின்ன சின்னதாக அவர்கள் இருவரின் வாழ்க்கைகளில் நிறைய பாடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் காந்திஜியின் அஹிம்சை வழி தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்தது என்பது சரித்திரம். உலகெங்கும் இன்று அஹிம்சை வழி பிரபலமாகிவிட்டது. அக்டோபர் 2 ந் தேதி, உலக அஹிம்சை தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐ. நா. சபை அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரது சுயசரிதையை ஆழமாகப் படித்தால் ஆரம்ப நாட்களிலேயே சில சம்பவங்களில் - குறிப்பாக இங்கிலாந்து போன விஷயத்தில் - இதற்கான மனோபக்குவம் அவருக்கு வந்துவிட்டது என்று புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாப்பிரிக்காவுக்கு முன்னரே அஹிம்சை தத்துவத்தின் அறிகுறிகள் அவர் வாழ்க்கையில் ஏற்பட்டது எங்கே என்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வெளி நாட்டுப் பிரயாணம் செய்ததைக் குறித்து, அவர் சாதியினரிடையே பலத்த புயல் எழுந்தது. ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் காலத்தில் கடல் கடந்து பயணம் செய்வது கூடாது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி அப்படி யாராவது போனால் அவர்களை சாதியிலிருந்து வெளியேற்றுவதும் அவர்கள் உறவை மற்றவர்கள் துண்டிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. காந்திஜிக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதை அவர் எதிர்கொண்ட விதமே தனி.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம் - சுய சரிதையிலிருந்து :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;".... நான் வெளி நாட்டுப்பயணம் செய்ததைக் குறித்து என் சாதியாரிடையே எழுந்த புயல், இன்னும் இருந்து கொண்டே இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில் ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக்கொண்டு விட்டனர். மற்றக் கட்சியினரோ, எனக்கு விதித்திருந்த சாதிக்கடுப்பாட்டை நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர். முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக்குக்கு அழைத்துச் சென்றார். அங்கே புண்ணிய நதியில் நீராடச் செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும், சாதியாருக்கு ஒரு விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனல் என்னிடம் சகோதருக்கு இருந்த அன்போ எல்லையற்றது. அதேபோல் எனக்கும் அவரிடம் எனக்கு பக்தி உண்டு. ஆகையால் அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து அவர் விரும்பியபடியெல்லாம் யந்திரம்போல் செய்தேன். இவ்விதம் என்னை சாதியில் சேர்த்துக்கொள்ளும் பிரச்சனை ஒருவாறு தீர்ந்தது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;என்னைச் சாதியில் சேர்த்துக்கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நான் முயலவே இல்லை. அக்கட்சியின் தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத்தோன்றவும் இல்லை.அவர்களில் சிலர் என்ன வெறுத்தனர். ஆனாலும் அவர்கள் மனம் புண்படும் காரியம் எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். சாதிக்கட்டுபாடு சம்பந்தமான விதிமுறைகளையெல்லாம் மதித்து நடந்து கொண்டேன். அந்தக் கட்டுப்பாடுகளின்படி, என் மாமனார், மாமியார், தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாரும் எனக்குச் சாப்பாடு போடக்கூடாது. ஆகையால் அவர்களில் யார் வீட்டிலும் நான் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இந்தக் கட்டுப்பாட்டை ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர்.&lt;br /&gt;பகிரங்கமாக செய்யாததை ரகசியமாக செய்வது என் இயல்புக்கே நேர் விரோதமானது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;இவ்விதம் என் மீது குறை கூறுவதற்கே கொஞ்சமும் இடம் கொடாமல் நான் நடந்து கொண்டதன் பலனாக எனக்குச் சாதித்தொல்லை ஏற்படுவதற்கே சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. அது மாத்திரம் அல்ல. என்னைச் சாதியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவனாக இன்னும் கருதிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து கொண்டார்கள். சாதிக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பாராமலேயே என் தொழிலிலும் அவர்கள் உதவி செய்தனர். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;இந்த நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திட நம்பிக்கை. சாதியில் என்னைச் சேர்த்துக்கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி செய்திருந்தால், சாதியை இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட முயன்றிருந்தால், சாதியாருக்கு நான் ஆத்திரத்தை மூட்டியிருப்பின், அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்கு பதில் செய்திருப்பார்கள். இங்கிலாந்திலிருந்து நான் திரும்பியதும் புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்கு பதிலாக, நான் கிளர்ச்சிச் சூழலில் சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்கொள்வதற்கு உடந்தையாகவும் இருந்திருப்பேன்..........."&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் முன்பு புத்தக அலமாரியை ஒழுங்கு படுத்தும்போது இந்தப் புத்தகங்கள் கண்ணில் பட்டன. பக்கங்கள் மங்கிப் போயிருந்தாலும் தொட்டவுடன் பழைய ஞாபகங்களும் கூடவே எட்டிப் பார்த்தன. "சத்திய சோதனை" புத்தகத்தின் உள்பக்கம் என் அண்ணன் தன் பெயரை விதம் விதமாக எழுதிப்பழகியிருப்பான்.  கடந்து போன நாட்கள் மனதில் நிழலாட, புத்தகங்களைப் படிக்கலானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அலமாரியில் வைக்கும்போது,  அவ்வப்போது இப்படிப் பழையப் புத்தகங்களைப் புரட்டுவது அவசியமென்று தோன்றியது.  &lt;br /&gt;&lt;br /&gt;நம் வாழ்க்கையையே நின்று திரும்பிப்பார்ப்பது போல....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-1570793013876325517?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/1570793013876325517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=1570793013876325517&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/1570793013876325517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/1570793013876325517'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/10/blog-post_02.html' title='காந்திஜி &amp; கஸ்தூரி பா'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-5937643173097772374</id><published>2007-08-17T17:19:00.000+05:30</published><updated>2007-08-17T17:31:43.539+05:30</updated><title type='text'>ஒரு தூரதிருஷ்டி பார்வையில்</title><content type='html'>மன்மோஹன் சிங் தளர்வதாக இல்லை; இடதுசாரியும் விடுவதாயில்லை. அரசைக் கவிழ்ப்பது நோக்கமில்லை என்று சொல்லும் இடதுசாரி, ஒரு வேளை "விட்டுகொடுத்து" விட்டாலும், அணு ஒப்பந்தம் அமுலுக்கு வந்தாலும் ஒப்பந்தக் காலமான 40 வருடம் ( கொசுறு 10 வருடக்காலமாம்) சொச்சத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நமது நாட்டில் அல்லது உலகளவில் வரும் என்று தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகரமாக - மன்மோஹன் சிங்க் நம்பிக்கை வைப்பது போல் -இந்தியாவுக்கு ஆதாயமாகவும் இருக்கலாம். அல்லது இடதுசாரி கவலைப்படுவது போல் நாம் அணு சோதனை செய்ய நேர்ந்தால், அதன் காரணமாக ஒப்பந்த முறிவும் ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Hyde Act காரணம் காட்டி அமெரிக்காவும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம்; இந்தியாவும் தன் காரணங்களைச் சொல்லி எப்போது வேண்டுமானாலும் விடுபடலாம். ஒப்பந்த முறிவுக்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால், இதனால் விளைவுகள் என்ன? இரு நாடுகளுக்கும் பாதகங்கள் என்ன? முறிக்கும் நிலை வரை இரு நாடுகளுமே போகுமா? அப்படி நேர்ந்தால், அமெரிக்கா திருப்பித் தரச் சொன்னாலும் இந்தியா, தான் பெற்றுக்கொண்டவற்றை திருப்ப வேண்டிய அவசியமில்லா சூழ்நிலை என்ன, என்று பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் சொல்கிறார். "...Under a worst-case scenario where the U.S. ignores its obligation to ensure the continuous operation of Indian reactors, presumably citing the Hyde Act, India would be under no obligation to entertain an American request for the return of nuclear items...."&lt;br /&gt;&lt;br /&gt;ஏன், எப்படி என்று இவர் &lt;a href="http://svaradarajan.blogspot.com/2007/08/insulating-indias-reactors-from-fuel.html"&gt;இங்கே விவரிக்கிறார்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பக்கம், இப்படி வெளியிலிருந்து பெறப்படும் உதவிகள் மூலம் - அமைக்க இருக்கும் நான்கு புதிய அணு சக்தி ஆலைகள், இந்தியாவுக்கு மேலும் 30,000 MW சக்தி உற்பத்தி செய்யும் என்று நேற்று வந்த செய்தி கூறுகிறது. என் பார்வையில் இதுவும் ஒரு முக்கிய கோணம். 16 வது Electric Power Survey கொடுத்த அறிக்கையின்படி, 2000 -01 ல் மொத்தம் 1,01630 MW சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நிலக்கரி மூலம் ( Thermal ) - 72,359 MW;&lt;br /&gt;தண்ணீர் சக்தி மூலம் ( Hydel) - 25,142 MW;&lt;br /&gt;அணு சக்தி மூலம் - 2,860 MW;&lt;br /&gt;காற்று மூலம் (Wind power) - 1,269 MW.&lt;br /&gt;( சூரிய சக்தி பெருமளவில் உற்பத்தி செய்யப்படவில்லை - அல்லது குறிப்பிடப்படவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, உற்பத்தி முழுவதுமான கணக்கில் அணு சக்தி மூலம் கிடைத்தது வெறும் 3 சதவிகிதத்திற்கும் கீழ். இப்போது வெளியுதவிகள் மூலம் இந்த உற்பத்தி அதிகரிக்கலாம் - நேற்றைய செய்தியின்படி 30000 MW. இருந்தாலும் மொத்த உற்பத்தியில் அணு சக்தியின் பங்கு மிகக் குறைந்த சதவிகிதம்தான் தேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இத்தணூண்டு அளவு கிடைக்கும் சக்திக்காகவா ஒரு அரசாங்கமே ஊசலாடும் அளவு விவாதம் இடம் பெறுகிறது என்று தோன்றுகிறது. இதுக்காக ஏன் நம் அரசு உயிரைப் பிடித்துக்கொண்டு போராடுகிறது என்ற கேள்வி எழுகிறது. ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த விடைகளும், என் கேள்விகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் என்றல்ல; உலகம் முழுவதிலும் அணு மூலம் கிடைக்கும் சக்தி 3 சதவிகிதம் மட்டுமே. இயற்கையை மூலதனமாக வைத்து உருவாக்கப்படும் சக்திதான் பெரும்பாலும் இதுவரை உலகை இயக்குகிறது. நாளுக்கு நாள் சக்தியின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. சக்தியின் தேவை நமக்கு அதிகரிக்கும் அளவு இயற்கையும் வேகமாக வற்றாத ஊற்றாக நமக்கு சக்தியை அள்ளி அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நிஜம் அப்படி இல்லை. இந்தியா உள்பட உலகெங்கிலும் இயற்கை மூலம் கிடைக்கும் சக்தி வறண்டு விடும் அபாயம் இருக்கிறது.&lt;br /&gt;பெருமளவு தண்ணீர் மின்சாரம் உற்பத்தி செய்ய, பெரும் அணைகள் கட்ட வேண்டும் - பல மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களை இடம் பெயர்த்து செய்ய வேண்டிய அவசியம் - இது நடைமுறையில் கடினமான ஒன்று. மாற்று வழி - சிறு அணைகள் - அப்போதும் மக்கள் இடப்பெயற்சி அவசியம் - தவிர இப்படிபட்ட சிறு அணைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கடுகளவே. நம் ராட்சச தேவைகளுக்கு பற்றாது. பெரும் வாளியை நிரப்ப, ஸ்பூனால் மொண்டுவிட்டு நிரப்பும் கதை. கடைசி பட்ச அபாயம், எதிர்காலத்தில் நீர் வறட்சியும் ஏற்படலாம். காற்றின் மூலம் கிடைக்கும் சக்தியும் மிகக் குறைச்சலே - ஆனால் இந்தக் கோணத்தில் அதிக பட்ச உற்பத்தி செய்யும் வழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உற்பத்தியில் ஒரு முக்கிய குறை - அவை சீசன் பொருத்தது எப்போதும் ஒரே சீராக இராது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை வழியாக சக்தி உற்பத்தி செய்யப்படும் மற்றொரு வழி - நிலக்கரி - அதாவது Thermal Power. இன்று இதன் மூலம்தான் அதிக பட்சம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் நிலக்கரி அட்சயப் பாத்திரம் இல்லை. ஒரு நாள் முழுக்க சுரண்டிவிடுவோம். அப்புறம்??&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நாளடைவில் இயற்கையும் வறண்டு, மனிதன் வேறு மாற்று வழிகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாற்று வழிகளில் ஒன்றுதான் அணு சக்தி. இப்போதிலிருந்தே இதையும் பலப்படுத்தி, இயற்கை மூலம் உற்பத்தி செய்வதை - இயற்கையைச் சுரண்டும் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி உபயோகித்தால், இயற்கை வழிகளை / வளங்களை இன்னும் சில காலம் இழுக்கலாம். அல்லது, இயற்கையும் கொஞ்சம் இளைப்பாறி, தன்னைப் புதுப்பித்துக்கொண்டு நமக்கு வளம் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நம் தேசீய / வெளியுறவு கொள்கைகளை பாதிக்காத ( பாதிக்கவில்லை என்று பிரதமர் உறுதியாகச் சொல்கிறார் ) வகையிலும், இதர சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கவனம் எடுத்துக்கொண்டும் அணு சக்தி உற்பத்தியை பெருக்க முடிந்தால் ஒரு தூரதிருஷ்டி பார்வையில் நமக்கு அது ஆதாயமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-5937643173097772374?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/5937643173097772374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=5937643173097772374&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/5937643173097772374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/5937643173097772374'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/08/blog-post_17.html' title='ஒரு தூரதிருஷ்டி பார்வையில்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-7353403572836039596</id><published>2007-08-15T09:58:00.000+05:30</published><updated>2007-08-15T10:11:31.710+05:30</updated><title type='text'>சுதந்திர தின வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_Go8UdVxTTbY/RsKBFSOBhxI/AAAAAAAAAAc/FQ909Qr3Ieo/s1600-h/india-flag.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5098779655926810386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_Go8UdVxTTbY/RsKBFSOBhxI/AAAAAAAAAAc/FQ909Qr3Ieo/s320/india-flag.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;60 வயது நிறைந்துவிட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;60 வருட நிறை குறைகளை அலசும் பலவித செய்திகளைப் படித்துவிட்டு, நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதினாலும், காலையில் செங்கோட்டையில் பூக்களை சிந்தியபடி, அந்தக் கொடி கம்பீரமாகப் பறக்கத் தொடங்கிய அந்த ஒரு கணத்தில், மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி. அந்த முகம் தெரியாத "இந்தியா" என்ற உணர்வு - வெறும் அடையாளம் என்பதையும் மீறி மனதில் தாக்கும் அந்த உணர்வு தழைக்க, செழிக்க அமைதியாகப் பிரார்த்தனை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். மற்றொரு வருடம் உருண்டோடுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;என்ன சாதித்துவிட்டோம் என்று குறைகளைப் பற்றி மட்டுமே நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி அகற்றி இன்னும் மேன் மேலும் எப்படி நாமும் வளர்ந்து பிறருக்கும் நல் உதாரணமாக இருக்கலாம் என்ற எண்ணங்களில் செயல்படுவோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;60 வருடங்களாக ஜனநாயகமாக வெற்றிகரமாக செயல்படுகிற அதே வேகத்துடன், நலிந்தோர் தழைக்கவும், பெருகி வரும் மக்கள் எண்ணிக்கை ஒரு பெரும் ஆக்கப்பூர்வமான சக்தியாக பரிமளிக்கவும் வழிகள் தேடுவோம்.&lt;br /&gt;கிளைகளாக, விழுதுகளாக, உலகம் முழுக்கப் பரவியிருந்தாலும் இந்தியர் என்ற வேரில், உணர்வில் பெருமிதம் கொள்வோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-7353403572836039596?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/7353403572836039596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=7353403572836039596&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/7353403572836039596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/7353403572836039596'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/08/blog-post_14.html' title='சுதந்திர தின வாழ்த்துக்கள்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_Go8UdVxTTbY/RsKBFSOBhxI/AAAAAAAAAAc/FQ909Qr3Ieo/s72-c/india-flag.gif' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-2011907671416419653</id><published>2007-08-10T20:39:00.000+05:30</published><updated>2007-08-11T14:10:55.798+05:30</updated><title type='text'>அணு ஒப்பந்தம்</title><content type='html'>அணு ஒப்பந்தம் - சில சந்தேகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் 15.8.2007 இதழில் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ( ஆயுத??!! - "அணு ஆயுத" என்று இந்தப் பத்தியில் உபயோகித்த வார்த்தையைப் பார்க்க நேர்ந்தால் அமெரிக்க காங்கிரஸ் முதலில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மறு வேலை பார்ப்பார்கள் :-) ) தொடர்பாக ஒரு பத்தியாளர் தன் வருத்தங்களை விவரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியுறவு அமைச்சின் வலைப் பக்கத்தில் வைத்துள்ள இந்த&lt;br /&gt;&lt;a href="http://meaindia.nic.in/pressrelease/2007/08/03pr01.pdf"&gt;அணு ஒப்பந்தம் மொத்தம் 22 பக்கம்.&lt;/a&gt; விஞ்ஞானம் அதிகம் தெரியாத எனக்கு பாதிக்கு மேல் சுத்தமாகப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் ஆங்காங்கே "மேய்ந்துவிட்டு" என்னதான் சொல்கிறார்கள்; இந்தியாவுக்கு என்ன ஆதாயம் / நஷ்டம் என்று ஏதாவது புரிகிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் புரிந்தவரையில் பெரும்பாலும் இதில் இந்தியாவுக்கு அனு(ணு!)கூலம் போல்தான் படுகிறது. இந்த ஒப்பந்தம் பற்றி முன்னாள் அணு சக்தி கமிஷனின் தலைவர், &lt;a href="http://www.hindu.com/2006/12/14/stories/2006121404141000.htm"&gt;எம்.ஆர். சீனிவாசன் &lt;/a&gt;போன்ற விவரம் அறிந்தவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்தபோது மன்மோஹன் சிங் என்ன செய்யப்போகிறார் என்று நானும் என் பங்குக்கு இங்கே கவலையைப் &lt;a href="http://arunas.blogspot.com/2006/12/two-historic-things.html"&gt;பதிவு &lt;/a&gt;செய்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது பிரதமர் காதில் விழுந்துவிட்டது :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பலர் அப்படி நினைக்கவில்லை. பா.ஜ.க நாட்டை அடகு வைத்துவிட்டார் என்று சொல்வதை குமுதம் பத்தியாளர் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பகுதி அப்படி எண்ண வைக்கிறது என்று புரியவில்லை. குறிப்பாக, " இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விஷயங்களில் உலகளாவிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கும்போது இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.." என்று ஒரு அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக குமுதம் பத்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் புரிந்தவரையில் மேலே சுட்டியில் உள்ள அணு ஒப்பந்தத்தில் இப்படி ஒரு அம்சம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று வெளியான ஒரு விரிவான பேட்டியில் தற்போதைய அரசின் Principal Scientific Advisor திரு ஆர். சிதம்பரம் "&lt;a href="http://www.hindu.com/2007/08/10/stories/2007081056171100.htm"&gt;எல்லாம் சரியாகதான் இருக்கு"&lt;/a&gt; என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லாமல் குழப்பிக்கொண்டு எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமாக பயன் இருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மக்களிடையே பீதியும் அவநம்பிக்கையையும் விழும் சூழ்நிலை உருவாகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது உண்மையிலேயே எங்கேயோ "பொடி" இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;சரியான விளக்கங்கள், புரிதல்கள், இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். வரும் திங்கள் கிழமை இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும் என்கிறார்கள். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்........&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சேர்த்தது: - 11. 08. 07.  ஒரு வாசகருக்காக நான் எழுதிய பதில் இங்கே முன் பக்கமும் இருந்தால் விளக்கங்கள் முழுமையாக இருக்கும் என்று தோன்றியதால் அதை இங்கே சேர்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;// நான் சொன்னதுபோல் விளக்கங்கள் /புரிதல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு சடுதியான பதில்: "ஆயுத" - கேள்விக்குறிக்கு காரணம் - இது அணு ஆயுத ஒப்பந்தம் அல்ல. Not Nuclear Weapons Deal - மாறாக ஒப்பந்தத்தின் தலைப்பே சொல்வதுபோல் - "Agreement for Cooperation Between the Government of India and the Government of the United States of America concerning peaceful uses of Nuclear Energy" - Nuclear Deal. அதாவது அணு சக்தியை அமைதியான வழியில் உபயோகிப்பதற்கான வழிமுறைகளில் ஒப்பந்தம். - அணு ஒப்பந்தம். "ஆயுதம்" இல்லை. நீங்கள் கவலை தெரிவித்திருக்கும் பல விஷயங்கள் இதில் சம்பந்தமேயில்லை என்று ஒப்பந்தத்தைப் படித்தால் புரியும். அமைச்சகம் முழுமையாக வெளியுட்டள்ளதா... "நுனிப்புலா" - அப்படி சரியான விவரங்கள் இல்லையென்றால் மக்கள் எங்கு போய் வழக்காடுவார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உலகின் ஒரு முக்கிய ஜனநாயக அரசின் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தம், முழுமையானதாக / அக்மார்க் அசலாகதான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கிடையேயான எல்லாவித அணு சம்பந்தமான ஒத்துழைப்புகளும் அமைதியான உபயோகங்களுக்கே - அதே சமயம் அவரவர் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு - ( இங்கேதான் சற்று விளக்கம் தேவைப்படுகிறது எனக்கு) பயன்படுத்தப்படும் என்று அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. Article 2 - Scope of Cooperation என்ற பகுதியைப் படியுங்கள். இதில் 4th clause: The Parties affirm that the purpose of this agreement is to provide for peaceful Nuclear cooperation and not to affect the unsafeguarded nuclear activities of either Party. Accordingly, nothing in this agreement shall be interpreted as affecting the rights of the Parties to use for their own purposes nuclear material, non - nuclear material, equipment, components, information or technology transferred to them pursuant to this Agreement. This Agreement shall be implemented in a manner so as not to hinder or otherwise interfere with any other activities involving the use of nuclear material, non - nuclear material, equipment, components, information or technology and military nuclear facilities produced, acquired or developed by them independent of this Agreement for their own purposes.என் புரிதல்: இந்த ஒப்பந்தப்படி நாம் அமெரிக்க உதவிகளைப் பெற்றுக்கொண்டோமானால், அவை வெறும் அமைதியான பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிப்பட வேண்டும். ஆனால் அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற உதவிகளின் / பொருட்களை / டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல், நாம் இத்தனை நாளும் செய்து வந்த அணு ஆயுத ஆராய்ச்சிகளின் மூலம் நாம் சொந்தமாக ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் /ஆராய்ச்சிகள் /டெக்னாலஜி மூலம் நம் "இஷ்டப்படி" நம் சொந்த உபயோகத்துக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாச் சொன்னா - நான் கொடுத்த சாமானை வைச்சு நீ ஆயுதம் செய்யாதே; நீயாகவே ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கிறதை வைச்சு நீ என்ன வேணா செஞ்சுக்கோ.... நான் குறுக்கிடலே. இப்படி எல்லா ஷ்ரத்துகளும் இரு நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் இருக்கிறது.//&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பந்தத்தில் உள்ள Article சிலவற்றை மேலே கோடிக்காட்டியுள்ளேன். இன்று, இன்னும் சில Articles,  Anil Kakodkar, Chairman of the Atomic Energy Commission அளித்த &lt;a href="http://www.hindu.com/2007/08/11/stories/2007081156181300.htm"&gt;இந்த பேட்டியில்&lt;/a&gt; இன்னும் விரிவாக அலசப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-2011907671416419653?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/2011907671416419653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=2011907671416419653&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/2011907671416419653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/2011907671416419653'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/08/blog-post.html' title='அணு ஒப்பந்தம்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-4998587713418289822</id><published>2007-07-18T16:04:00.000+05:30</published><updated>2007-07-18T16:35:35.534+05:30</updated><title type='text'>மலையும், காடும், நீரும், மரமும்</title><content type='html'>ஒரு போட்டோ எடுக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் / ஒரு நினைவில் நிற்கும் காட்சி என்று மனதில் ஒரு ஆர்வம் துளிர்க்கும். என்னைப் பொறுத்தவரையில் இயற்கைக் காட்சிகளில் என் காமிரா லென்ஸ் குறிவைப்பது பெரும்பாலும் - இது போன்ற ஒரு composition.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_17.html"&gt;புகைப்படப் போட்டிக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஏற்காடு - ஜூன் 2007&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_Go8UdVxTTbY/Rp3td6gwDvI/AAAAAAAAAAM/HboIKGt4DO0/s1600-h/Yercaud+2007.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5088484252177141490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_Go8UdVxTTbY/Rp3td6gwDvI/AAAAAAAAAAM/HboIKGt4DO0/s320/Yercaud+2007.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2. லேக் டாஹோ ( Lake Tahoe - US) - ஜூலை 2006&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_Go8UdVxTTbY/Rp3teagwDwI/AAAAAAAAAAU/CrXIYIpKXuY/s1600-h/Lake+Tahoe+2006.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5088484260767076098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_Go8UdVxTTbY/Rp3teagwDwI/AAAAAAAAAAU/CrXIYIpKXuY/s320/Lake+Tahoe+2006.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஊர் எதுவானாலும் மலையும், காடும், நீரும், மரமும் ஒரே கலவையில் உருவானதுதானே !! ஆனால் இரண்டாவது போட்டோவில் வானத்தின் நீலம் இன்னும் அழுத்தமாக விழுந்ததன் காரணம் என்னவாக இருக்கும்? &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-4998587713418289822?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/4998587713418289822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=4998587713418289822&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4998587713418289822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4998587713418289822'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/07/blog-post_18.html' title='மலையும், காடும், நீரும், மரமும்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_Go8UdVxTTbY/Rp3td6gwDvI/AAAAAAAAAAM/HboIKGt4DO0/s72-c/Yercaud+2007.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-9079586439946872257</id><published>2007-07-12T19:01:00.000+05:30</published><updated>2007-07-12T19:15:24.840+05:30</updated><title type='text'></title><content type='html'>பெயரிலி என்கிற ரமணீதரனுக்கு //முழுமையாகப் பத்து வசனங்கள் கோவிந்தசாமி   பற்றியும் இணையத்தமிழ் வரலாற்றினையும் பற்றி அருணா அவர்களைச் சுடச் சுட முன்னாலே போய்த் திடீரென நின்று //  கேட்க ஆசையாம்.  அவருக்காக இந்தப் பதிவு.  அவர் பதிவிலும் போட்டுவிட்டேன். இது என் வசதிக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" ரமணீதரன், அப்படியெல்லாம் ரொம்பக் கஷ்டப்படாதீர்கள். தமிழ் கணினி, மற்றும் தமிழ் இணைய அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை. ஆனால், நா. கோவிந்தசாமி எப்படி முதன் முதலில் தட்டச்சு செய்த தமிழை வலையேற்றினார் என்பதற்கும், இணையத் தமிழின் பிதா என்று நான் கூறியதற்கும் ஆதாரம்,  &lt;a href="http://arunasarchive.blogspot.com/2007_07_01_archive.html"&gt;இங்கே &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மற்றொரு வலைப்பதிவில் பதிந்துள்ளேன். ஏழு கடல் தாண்டி அருணா ஸ்ரீனிவாசனைக் கேள்வி கேட்கும் சிரமம் உங்களுக்கு வேண்டாமே என்று எனக்கு நேரடியாக தெரிந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். எள்ளல், நக்கல் இவற்றுக்கு செலவழித்தது போக நேரம் பாக்கி இருந்தால், சிரமம் பார்க்காமல் இங்கேயும் எட்டிப் பாருங்கள். அதிலிருந்து ஒரு பகுதி:&lt;br /&gt;&lt;br /&gt;"Today if you want to read Tamil messages on the Internet, they are transported in graphic mode. The Tamil letters are converted into graphic mode, called Graphic Interchange Format and you get the graphic images or the letters. But to communicate in the long run, this would be too troublesome and time consuming. The images take a lot of time in the conversion process. Text mode is the only solution"&lt;br /&gt;&lt;br /&gt;என்று எகனாமிக் டைம்ஸிற்காக என் பேட்டியில் அவர் சொல்லியபோது, உலகின் இதர பகுதிகளிலும் இவ்வாறு தமிழ் எழுத்தை வலையேற்றும் முயற்சிகள் நடந்துவருவதையும் கூறினார். அதுவரையில் இணையத்தில் ஏற்றப்பட்ட தமிழ் எழுத்துக்கள் அப்படி GIF முறையில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தட்டச்சு செய்து நேரடியாக ஏற்ற பல முயற்சிகள் ஒரே சமயத்தில் நடந்து வந்தாலும் 1995ல் முதன் முதலில் "தட்டச்சு செய்து" நேரடியாக ஏற்றப்பட்ட தமிழ் கோவிந்தசாமியுடையது என்ற வகையில் அவர் தமிழ் இணையத்தின் பிதா என்று நான் குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனமிரூந்தால் &lt;a href="http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm"&gt;இதையும் &lt;/a&gt;படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்ட பதிவில் அவருடைய நினைவுகளைப் பற்றி நாமறிந்த சிறு குறிப்பைப் பகிர்ந்து கொள்வது மனித இயல்பு. ஒரு வேளை நான் இணையத் தமிழ் ஆர்வலர்கள் என்று கட்டுரை எழுத நேர்ந்தால் நிச்சயம் பலரின் பங்காற்றல்கள் பற்றியக் குறிப்புகள் அதில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், இன்று நீங்கள். நாளை இன்னும் வேறு யாருக்காவது இணையத் தமிழ் வரலாறு பற்றியோ அதில் பங்காற்றியவர்களைப் பற்றியோ சந்தேகம் எழலாம். அவர்களைப் போன்றவர்களுக்காக திரு கல்யாணசுந்தரம், மற்றும் முரசு நெடுமாறன், போன்ற நான் சந்தித்த ஆர்வலர்களின் அனுபவங்களையும், செய்திக் கட்டுரைகளையும் - என் கையில் கிடைத்தவரையிலும் - மேலே ஆரம்பத்தில் கொடுத்த சுட்டியில் கொடுத்துள்ளேன். மற்றவர்களைப் பற்றி அறிந்ததுண்டு - சிலருடன் கருத்து பரிமாற்றமும் உண்டு - ஆனால் சந்தித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-9079586439946872257?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/9079586439946872257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=9079586439946872257&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/9079586439946872257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/9079586439946872257'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/07/blog-post_12.html' title=''/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-581442536756127747</id><published>2007-07-06T16:53:00.000+05:30</published><updated>2007-07-08T23:14:57.446+05:30</updated><title type='text'>மொழிபெயர்ப்பு</title><content type='html'>கூகுள் தேடல்களில் அடிக்கடி " translate this page " என்ற குறிப்பு தென்படும். - ஜப்பானிய, சீன மொழிகளில் உள்ள கோப்புகளின் சுட்டிகள் வரும் இடங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் தமிழ் கோப்புகளும் தானாகவே மாற்றப்படுகின்றனவா? இல்லையென்றால் ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இது போல் தானாகவே மொழிபெயர்ப்பு செய்யும் தொழில் நுட்பம் தமிழுக்கு இருக்க வேண்டும். இருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையென்றால், உலகம் முழுக்க பரவி, விரிந்து இருக்கும் தமிழ் மென் பொருளாளர்களே, இந்த வசதியை விரைவில் கொண்டுவர வழி செய்ய முடியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-581442536756127747?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/581442536756127747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=581442536756127747&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/581442536756127747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/581442536756127747'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/07/blog-post.html' title='மொழிபெயர்ப்பு'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-8676028956316736974</id><published>2007-07-01T21:26:00.000+05:30</published><updated>2007-07-02T10:41:45.447+05:30</updated><title type='text'>8</title><content type='html'>ஹ்ம்ம்... நானும் களத்தில் இறங்கியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு போட &lt;a href="http://reallogic.org/thenthuli/?p=233"&gt;உங்களையும் அழைத்து&lt;/a&gt; இருக்கிறேன் என்று "கூகிள் சாட்டில்" பத்மா தெரிவித்தவுடனேயே மனதில் தோன்றிய எண்ணம் அடக்கடவுளே !! மாட்டிக்கிட்டேனா என்றுதான் :-) சாதனை ஒன்றுமேயில்லையே என்று ஓடிவிடலாம் என்பதுதான் reflex reaction :-) ( எட்டை எழுதி முடிக்கும்போது - &lt;a href="http://radhasriram.blogspot.com/2007/06/super-8_28.html"&gt;ராதா ஸ்ரீராமும் &lt;/a&gt;கூப்பிட்டுட்டாங்க)&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருமுறையும் யாராவது இப்படி அழைக்கும்போதும் நழுவறது நல்லதில்லேன்னு உள்ளே ஒரு குரல். ( துளசி... வேறு ஒரு வரிசை விளையாட்டில் உங்கள் அழைப்பும், அன்று சில காரணங்களால் என் இயலாமையைச் சொன்னதும் நினைவு வருகிறது - மீண்டும் மன்னிக்கவும்.) சரி. மாட்டுனதுதான் மாட்டுனோம்.... ஒழுங்கா கொடுத்த வேலையைச் செய்து, நான் பெற்ற இந்த இன்பம் (!!) இன்னும் எட்டு பேரையும் அடையட்டும் என்ற எண்ணத்தில் சுய தம்பட்டத்தில் துணிந்து இறங்கிவிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எவ்வளவுதான் சாதாரணமானவர்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் மனம் நிறைந்த அனுபவங்கள் இல்லாமல் இருக்காது. அதனால் சாதனை என்று இல்லாவிட்டாலும் இதம் தரும் அனுபவங்கள் என்ற வகையில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுவதால் - இதோ என் வரிசை.&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிறகு ஐரோப்பிய தொண்டூழிய நிறுவனங்களின் ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவராக வேலைப் பார்த்த தந்தையுடன் கிராமங்களில் ஜீப்பில் சென்று அவருடைய மொபைல் கிளினிக்கில் என் சகோதரனுடன் சேர்ந்து உதவுவது, தீபாவளிப் பண்டிகை - மத்தாப்பு ( பட்டாசு பயம் தெளிய ரொம்ப வருஷம் ஆச்சு) புது உடை/மருதாணி /வளையல் சமாசாரங்கள், பனாரஸில் ( இன்று வாரணாசி) இருந்த என் அக்காவும் அவள் குழந்தைகளின் வருடாந்திர வருகை போன்றவை என் சிறு வயது உற்சாகங்கள் என்றால், வளர்ந்தபின் கல்லூரி நாட்களில் சின்னச் சின்ன சந்தோஷங்கள் - முதன் முதலில் மேடையில் பேசிய அனுபவம் (முழுசாக 5 நிமிடம்!!); சராசரி மாணவி என்ற விதத்தில் பரிட்சைகள் பாஸ் செய்ததே ஆனந்தம்தான் ( முதல் ரேங்க் வாங்கவேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லாத "எளிமையான" சுபாவம் :-) சின்னச் சின்ன விளையாட்டுப் போட்டிகள் - சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட்டாக சேர்ந்து ஏதேதோ வேலைகள்.... எல்லாமே உற்சாகம் தரும் அனுபவங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;2. பின்னர் கல்லூரி படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த சில நாட்களில் ஹிந்து பேப்பரில் யதேச்சையாகக் கண்களில் பட்ட ஒரு விளம்பரம் - பம்பாயில் ( அப்போது அது பம்பாய்தான்) இருந்த பிரிட்டிஷ் இன்ஸ்டிட்யூட் என்ற கல்வி நிறுவனத்தின் ஜர்னலிஸம் கோர்ஸ் - தபால் மூலம். உடனே மனதுள் ஒரு ஆர்வம் துளிர்விட்டது. பெற்றோரிடம் கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னேன். உடனேயே அம்மா ஏன் இவ்வளவு யோசிக்கிறாய். உனக்கு ஆர்வம் இருந்தால் படியேன்; செலவைப் பற்றி கவலைப்படாதே, என்றார்கள். அன்று ஒரு சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஒரு குடும்பத்தலைவியின் வாழ்க்கையில் குடும்பம் - குழந்தைகள் - வீடு - ஒரு முக்கியப் பகுதி. கணவர் மட்டும் சம்பாதிக்கும் பல குடும்பங்களைப் போல வீட்டு நிர்வாகம் / குழந்தைகள் / இதர வெளி வேலைகள் என்று இரூந்த அன்றைய என் சுழற்சியில் சாதனை ஏதும் இல்லை என்று பிறருக்கு தோன்றலாம். ஆனால், வீட்டு வேலைகளிலும் சுணக்கம் அலுப்பு ஏதுமில்லாமல் சுவாரசியமாக, ஒவ்வொரு வேலையையும் ரசித்து, இயல்பாக செய்யும் அளவு ஒரு ஈடுபாடு இருந்தது ஒரு சாதனை என்று எனக்கு இந்த "வயதான" (??) காலத்தில், இப்போது தோன்றுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;4. என் மற்றொரு பகுதி எழுத்து. அன்று திக்கித்திணறி பத்திரிகையாளர் தொழிலுக்குப் படித்துவிட்டாலும் பிள்ளையார் சுழி போட பதிமூன்று வருடங்கள் கழித்துதான் நேரம் கிடைத்தது. 1987ல் டில்லியிலிருந்து பூடானுக்கு மாறிய சமயம் தில்லியில் உள்ள NCERT அமைப்பின் Women's Studiesதுறையிலிருந்து பதின்ம வயதினருக்காக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுத அழைப்பு வந்தது. இந்தியமொழிகளில் நவீனங்களில் பெண்களின் வளர்ச்சி / முன்னேற்றம் / மாற்றம் படிப்படியாக எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆராய்ச்சித் தொகுப்பிற்காக "தமிழ் நவீனங்களில்பெண்கள்" பற்றி ஆங்கிலத்தில் எழுத ஒரு வாய்ப்பு. அந்த வேலையை எடுத்துக்கொண்டு பூடான் போய்விட்டேன். தட்டச்சு சுத்தமாகத் தெரியாமல் கையால் எழுதி பின்னர் புதிதாக ஒரு டைப்ரைட்டர் வாங்கித் தடவித் தடவி கணவர் உதவியுடன் கற்றுக்கொண்டு மூன்று வருடத்தில் புத்தகத்தை ( Portrayal of Women in Tamil Fiction - NCERT - 1993) முடித்தது என் எழுத்தின் முதல் சந்தோஷம். சின்னப் புத்தமென்றாலும், அந்த சந்தோஷத்தின் பின்னால் தூணாக நின்றவர்கள், அதன் ஆராய்ச்சிகளில் உதவிய இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் ஆசிரியர் என்.எஸ் ஜகன்நாதனும், அன்றைய இந்தியா டுடே ஆசிரியர் மாலனும், என் எழுத்தில் நம்பிக்கை வைத்து வேலையை என்னிடம் கொடுத்த அன்றைய NCERT - Women's Studies முனைவர் இந்திரா குல்ஷ்ரேஷ்டாவும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. பின்னர், "இதயம் பேசுகிறது" பத்திரிகைப் போட்டி ஒன்றில் முதல் பரிசாக வெளிவந்த கதையும் அந்த ஒருப் பக்கக் கதைக்கு நாலு பக்க அளவில் வந்த வாசகர்கள் கடிதக்குவியலும் (!!!), மற்றும் எதிர்வீட்டில் இருந்த நேபாளியப் பெண்ணின் அனுபவம் என் பேனாவில் வெளிப்பட்டு குமுதத்தில் இன்னொரு சிறுகதையாக வெளிவந்த அனுபவம், பின்னர் புத்த மதமும் இந்து மதமும் என்று பெங்களூர் டெக்கான் ஹெரால்டில் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை என்று ஏற்பட்ட சின்னச் சின்ன எழுத்து சந்தோஷங்கள் டில்லி திரும்பியபின் அடங்காத வேட்கையாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;6. உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ரிப்போர்டர் வேலைக் கிடைத்தபோது... ம்.. ஜென்ம சாபல்யம் என்று தோன்றியது. ஆனால் கொஞ்ச நாள்தாம். சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் வலுத்தது. செய்திக் கட்டுரை எழுதும் யோசனைகளை எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகங்களின் மேல் படையெடுப்பு தொடங்கியது. ஒவ்வொரு முயற்சி வெற்றியடையும்போதும், வாராவாரம் - சில சமயம் தொடர்ந்து சில நாட்கள் எங்காவது என் செய்திக் கட்டுரைகள் வந்துகொண்டேயிருக்க, அது ஒரு மாதிரி சந்தோஷம். தினம் தினம் கெடுவிற்குள் கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகரிக்க, ஆர்வமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்கள், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் நுணுக்கங்கள் என்று வாழ்க்கையையே பிரமிப்பாக உணர்ந்த நேரங்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத பல்வேறு துறைகளைப்பற்றி அறிந்து கொள்ளும்போதும், அவற்றில் இருக்கும் நிபுணர்களை சந்திக்கும்போதும் ஒவ்வொரு முறையும் "கற்றது கைமண் அளவு...." வாக்கியம் உள்ளே ஒலிக்க, கைமண் என்ன...சுண்டுவிரல் நகக்கணு அளவுகூட நம்மிடம் இல்லையென்ற நிஜம் தாக்க, மனசில் ஒரு பிரமிப்பும், பணிவும் குடியேறிய அற்புதமான அனுபவங்கள் அவை! ஒவ்வொருக் கட்டுரையும் ஒரு அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;7. கொடுக்கப்பட்ட வேலைகளைக் குறித்த நேரத்தில் கொடுத்து, 'நட்சத்திர சுயேச்சைப் பத்திரிகையாளர் என்று பத்திரிகையாசிரியர்களால் அன்பாக அழைக்கப்பட்டதும் இதம் தரும் அனுபவம் - ஒவ்வொரு முறையும் என் கட்டுரைகளை யாராவது பாராட்டும்போதும் மனம் நிறைந்து, முகம் மலர்ந்த பெற்றோர்; ஆரம்ப நாட்களில் ஒரு முறை ஹிந்துவில் வெளிவந்த என் கட்டுரையை எடுத்துக்கொண்டு என் உறவினர் ஒருவர் 'நம்ம குழந்தை எழுதியிருக்காடா' என்று பேப்பரை உறவினர்களிடம் காண்பித்த பாசம்; பின்னர் சில வருடங்கள் கழித்து, சிங்கப்பூரில் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் முதல், "அமைச்சர்கள் மாநாடு" ( First Ministerial Conference of WTO) போன்ற பல முக்கிய நிகழ்வுகளில் எகனாமிக் டைம்ஸின் சுயேச்சை நிருபராக செயல்பட்ட அனுபவம்; சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதியப் பத்திகள் தங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்துவதாக நேரிலும் போனிலும் சொல்லிய இளைஞர்கள்; மற்றொரு சமயம் ஒரு மாநாட்டில் அடையாளம் கண்டுகொண்டு என்னிடம் பேச வந்த வாசகர் ஒருவர் சட்டென்று கையிலிருந்த பேனாவை எடுத்துக்கொடுத்து ' உங்களுக்கு ஏதேனும் கொடுக்க விரும்புகிறேன் - இப்போது இதுதான் இருக்கிறது' என்று கொடுத்த அன்பு; மனதுக்கு இதமான சினேகிதங்கள் /ஊறவுகள்/குடும்பம்/ விசாலமாக, சுயமாக சிந்திப்பவர்களாக வளர்ந்துள்ள மகன்கள் என்று இப்படி சின்னச் சின்னதாக நிறைவுகள்........&lt;br /&gt;&lt;br /&gt;8. கூட்டிக் கழித்து பார்க்கும்போது முடிந்தவரையில் வெறும் கொள்கையாக இல்லாமல் நேர்மையை யதார்த்தமான வாழ்க்கைமுறையாக வாழ முடிகிற வாழ்க்கையும், எந்தவித நெருடல் இல்லாத மனமும், எழுத ஆரம்பித்துள்ள புத்தக வேலைகளும் மனதை நிறைக்க, தனிப்பட்ட முறையில் "குறையொன்றும் இல்லை....." என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உபரியாக மறக்க முடியாத அனுபவங்களில் - சிறுவயதில் பள்ளியிலிருந்து மழையில் நனைந்தபடி வீட்டுக்குச் செல்வதற்குள் மூச்சுத் திணறியது; பின்னர் அதேபோல் ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும்போது மழையில் நனைய நேரிட்டால் அதேபோல் மூச்சுத் திணறலும் சிறு வயது ஞாபகமும் விடாமல் வருவது; ( ஒரு முறை பஸ்சிலிருந்து இறங்கி டில்லி டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்துக்குள் போவதற்குள் காற்றும் மழையும் வலுத்து, காற்றில் குடை பறக்க, உடல் தொப்பமாக நனைந்து, கட்டிடத்துள்ளே நனைந்தபடியே சென்ற என்னை எல்லோரும் பார்க்கும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க முடியாமல், உடை சிறிது காயும் வரையில் ரிசப்ஷனிலேயேக் காத்திருந்துவிட்டு, பின்னர் சந்திக்கச் சென்ற எடிட்டரைப் பார்த்து ( "சே... என்ன மழை..." என்று தர்மசங்கடமாக அசடு வழிந்து...) ஹ்ம்ம்.... இன்றும் மழை வந்தால் ஒரே உதறல்தான் - முடிந்தவரையில் வெளியில் மாட்டிக்காம பார்த்துக்கொள்வேன்! தூரத்தில் வானத்தில் ஒரு துளி மேகம் என்றால் அம்மா குடையில்லாமல் வெளியே நகரமாட்டேனே!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு அனுபவம் - சென்னைக்கு வந்த புதிதில், சமையலறையில் கிரைண்டரைப் போட்டுவிட்டு மும்முரமாக எகனாமிக் டைம்ஸ¤க்கு அன்றைக்கு கொடுக்க வேண்டிய கட்டுரையில் மூழ்கி, கிரைண்டர் போட்டதையே மறந்து, அது சூடாகி, பற்றி எரிந்து குபுகுபுவென்று எரிந்து புகை வீடெல்லாம் நிரப்ப, மெள்ள நான் வேலை செய்து கொண்டிருந்த அறையில் "வாசனை" வரும்போது, 'என்ன இது பக்கத்து வீட்டில் என்ன செய்கிறார்கள்... ஏதோ எரியற வாசனை வருதே என்று "யோசித்து" இன்னும் சில நிமிடங்கள் கழிந்து வாடைத் தாங்காமல் வெளியே வந்தால் - அய்யோ கடவுளே இதென்ன... எங்கேயிருந்து இப்படி நெருப்பு என்று தவித்து - ஓடிப்போய் பார்த்து - உடனே பயந்து சமையலறையைவிட்டு வெளியே வந்து நின்று - ஒரு கணம் என்ன செய்வது ஸ்தம்பித்து போய் ( அதன் அர்த்தம் அன்றுதான் முழுமையாகப் புரிந்தது) உடனே சுதாரித்துக்கொண்டு - தீவிரமாக மனக்கணக்கு போட்டேன் - ஆபத்து என்றால் முதலில் பாதுகாக்கப்படவேண்டியது உயிர் - அய்யோ - உள்ளே என் ஒன்றுவிட்ட பெரிய மாமனார் ( 80 சொச்சம் வயது) தூங்குகிறாரே... ஓடி அவரை எழுப்பி - வெளியே நிக்கவைத்துவிட்டுவிட்டு பக்கத்துவீடுகளில் காலிங் பெல் அடித்து "நெருப்பு நெருப்பு" என்று சப்தம்போட்டுவிட்டு - மீண்டும் சமையலறை ஓடி வந்து கிரைண்டர் ஸ்விட்சை அணைக்கச் சென்றவள் - என்றைக்கோ செய்திருந்த புண்ணியத்தில் அதைத் தொடாமல், நகர்ந்து வாசலில் மெயினை முதலில் அணைத்துவிட்டு - அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவர் ஒருவராக வந்து வாளி வாளியாகத் தண்ணீர் பிடித்து அணைத்து - தடுமாற்றத்தில் தீயணைப்புக்கு போன் செய்வதாக நினைத்துக்கொண்டு 100ம் நம்பருக்கு ( அது அவசரப் போலீஸ் இல்லையோ) போன் செய்து - தீயணைப்பு நம்பர் சமயத்தில் வேலை செய்யவில்லை என்று திட்டிக்கொண்டு நடுவில் கணவர் ஆபீஸ், நண்பர்கள் என்று கூப்பிட்டு அவர்களை தீயணைப்பு அலுவலகத்துக்குப் போன் போடச்சொல்லி ( நெருப்பு அணைந்த பின் வந்தனர்) - ஹ்ம்ம்.. நிகர லாப, நஷ்டம் - கணவரும், துபாயிலிருந்து வந்திருந்த என் கணவரின் ஒன்று விட்ட சகோதரனுமாக சேர்ந்து கன்னங்கரேலென்று புகை படிந்த அறைகளைக் கழுவியது; என் முழங்கால் வலி அதிகமானது; நெருப்பு பற்றிய கிரைண்டர் இருந்த மேடைக்குக் கீழே காஸ் சிலிண்டர் வெடிக்காமல் பேராபத்திலிருந்து தப்பியது நிச்சயம் கடவுளின் குறுக்கீடு என்று என் நம்பிக்கை இன்னும் ஆழமானது; கிரைண்டரின் முழு உருவமும் மறைந்து இரண்டு கற்கள் மட்டும் நின்றது; கொசுறாக, அருகில் இருந்த மர ஸ்டேண்ட் கருப்பு பொடியாக நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலையில் மூழ்கும் சாதனையில், குழம்பு வைக்கும் கல்சட்டியை, குழம்பு வற்றிக் கல் இரண்டாக உடையச் செய்ததும் ( அடுப்பில் வைத்துவிட்டு, டில்லி லஜ்பத் நகர் மார்கெட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வரும் வரைக்கும் குழம்புடன் சேர்ந்து கல்லும் கொதித்துக்கொண்டிருந்தது) ரசம் வைக்கும் ஈயச்சொம்பை, ஒரு மணி நேரம் கழித்து வந்து அடுப்பின் அடியிலிருந்து 10 கிராம் அளவு ஈயமாக எடுத்த அனுபவமும் உண்டு. ( அய்யோ, ரசச் சொம்பைக் காணோமே.. என்ற தேடல் வேறு...)என் அடுப்பில் பாலை வைத்துவிட்டு - யார் வீட்டிலோ பாலைத் தீய விடுகிறார்கள்; வாசனை வருகிறது என்று வேறு வேலையில் மூழ்கியிருந்த இருந்த 'சாதனை'யும் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;இனி, நான் அழைக்க விரும்பும் எட்டு பேர்..... மன்னிக்கவும் ஒன்பது பேர்..... யாராவது முன்னாலேயே எட்டு போட்டிருப்பாங்களோ அல்லது யாராவது தன்னடக்கமா மறுத்துவிடுவார்களோ என்ற நினைப்பில் ஒரு நம்பர் அதிகமா கூப்பிட்டு விட்டேன்!! இன்னும் எட்டு பேர் அழைக்க ஒரு லிஸ்ட் இருக்கு - வேறு யார்கிட்டவாவது அவங்க மாட்டறாங்களான்னு பார்க்கலாம் :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jannal.blogspot.com/"&gt;மாலன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://paari.weblogs.us/"&gt;பாலாஜி பாரி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://siragugal.blogspot.com/"&gt;தாரா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://urpudathathu.blogspot.com/"&gt;நாராயண்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://dharumi.weblogs.us/"&gt;தருமி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://blog.tamilsasi.com/"&gt;தமிழ் சசி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://selvaraj.weblogs.us/"&gt;செல்வராஜ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilmarketing.blogspot.com/"&gt;மீனாக்ஸ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://forusdear.blogspot.com/"&gt;தாணு&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விளையாட்டின் விதிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-8676028956316736974?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/8676028956316736974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=8676028956316736974&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/8676028956316736974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/8676028956316736974'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/07/8.html' title='8'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-2397007448548821578</id><published>2007-06-03T22:45:00.000+05:30</published><updated>2007-06-03T22:52:49.305+05:30</updated><title type='text'>மீண்டும் தாப்பர்</title><content type='html'>கரண் தாப்பர் விடுவதாக இல்லை. மணிசங்கர் அய்யர், சென்ற வாரம் அம்பிகா சோனி, இந்த வாரம் மோன்டேக் சிங் அலுவாலியா என்று வரிசையாக தன் Devil's Advocate நிகழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் / பிரதமரின் CII உரை இவற்றைப் பற்றி &lt;a href="http://www.ibnlive.com/news/business/06_2007/devils-advocate-montek-s-ahluwalia-42060.html"&gt;கேள்விக்கணைகளைத் தொடர்கிறார்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிகழ்ச்சியில் சாராம்சம்:&lt;br /&gt;&lt;br /&gt;தாப்பர்: சில வருடங்களுக்கு முன் மன்மோஹன் சிங் ஒரு அமெரிக்க கூட்டத்தில் தன் வெற்றிகளில் ஒன்றாக குறிப்பிட்ட விஷயம்: ' இந்தியாவில் அரசாங்கம் தொழில் முனைவர்களின் பின்னால் நின்று உபத்திரவமாக இருக்கும் நிலை மாறிவிட்டது" என்று சொன்னாராம். இன்று நிறுவனங்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அளவுக்கு மீறி எக்கசக்கமாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அப்படியே 'பல்டி' அடிக்கிறாரே? அரசாங்கம் மீண்டும் தொழிலதிபர்கள் என்ன செய்ய வேண்டும் / வேண்டாம் என்று தீர்மானிக்கும் காலம் திரும்பும் அறிகுறியா இது?"&lt;br /&gt;&lt;br /&gt;அலுவாலியா: "நிச்சயமாக பிரதமர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. ( டிவிக்கு வெளியே என் குரல்: தாப்பர் சார், கொஞ்சம் குறைச்சுக் கொடுங்க என்று பிரதமர் சும்மா ஒரு அறிவுரைதான் சொன்னார். உடனே கழுத்துமேல் கத்தி போடுவதுபோல் சொல்வது கொஞ்சம் அதிகப்படியா தோணலை?! :-) )&lt;br /&gt;&lt;br /&gt;"தொழில்முறை வல்லுனர்கள் தொழில் நுட்பம் மற்றும் உயர் அதிகாரிகளின் சம்பளம் பற்றி அவர் குறிப்பிடவில்லை. இன்று பல தொழில்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே முக்கியத் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள். பல உதாரணங்களில் நன்றாக லாபத்தில் இருக்கும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைவிட, நஷ்டத்தில் அல்லது குறைந்த லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பல நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் எக்கச்சக்கமாக சம்பளம் - ஒரு ஆண்டுக்கு ரூ. 12 - 15 கோடிகள் என்ற ரீதியில் வாங்குகிறார்கள். ஒரு நிறுவனத்தில் வெளியிலிருந்து நியமிக்கப்பட்ட தொழில்முறை வல்லுனர்கள் இப்படி வாங்கினாலும் அவர்கள் திறமைக்கு விலை என்று கொள்ளலாம். ஆனால் இப்படி சம்பளம் பெறும் அதிகாரிகள் அந்தந்தக் குடும்ப நபர்களே. இதைத் தவிர்க்கலாம் என்பதுதான் பிரதமர் சொன்னதின் அர்த்தம்...."&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "அதிகப்படி சம்பளம்" பிரச்சனைக்கு அலுவாலியாவின் யோசனை: ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் போர்டில் "சம்பள ஆய்வுக் கமிட்டி (Remuneration Committee) ஒன்றை நியமித்துக்கொண்டால் ஒரு வரையறை / வரம்பு  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன் இந்திய நிறுவனங்கள் பல, நிர்வாகத்தைத் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்வதிலிருந்து மாறுபட்டு, நிர்வாகத்தின் திறமையை அதிகரிக்கவும், குடும்பத்துக்கு வெளியேயிருந்து புதியக் கருத்துக்கள் நிர்வாகத்தில் இடம்பெற்று தொழில் செழுமை பெறும் என்ற எண்ணத்தினாலும், திறமையுள்ள தொழில்முறை வெளியார்களுக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தன. இந்த மாறுதலைப் பற்றி ஒரு சிங்கப்பூர் பத்திரிகைக்கு அப்போது ஒரு &lt;a href="http://arunasarchive.blogspot.com/2003_12_01_archive.html"&gt;செய்தித்தொகுப்பு எழுதினேன்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சூரியோதயத்தில் (Sunrise Industries) இருக்கும் சிலச் செய்தித் தொடர்பு தொழில் நுட்ப நிறுவனங்கள் தவிர்த்து இதர தொழில்துறைகளில் - குறிப்பாக உற்பத்தித் துறையில் இந்த வழக்கம் தற்போது நின்று போய்விட்டதோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-2397007448548821578?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/2397007448548821578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=2397007448548821578&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/2397007448548821578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/2397007448548821578'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/06/blog-post.html' title='மீண்டும் தாப்பர்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-6582504858951713265</id><published>2007-05-28T16:42:00.000+05:30</published><updated>2007-05-28T16:47:31.382+05:30</updated><title type='text'>"ஹிட்ச் ஹைக்கர்" - புத்தகம்</title><content type='html'>பல ஆங்கில வார்த்தைகளுக்கு பொருத்தமாக தமிழ் வார்த்தை கிடைக்காது திண்டாடுவோம். அப்படித்தான் ஹிட்ச் ஹைக்கர் - என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன என்று சில சமயம் யோசித்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழிப்போக்கன்? பாதசாரி? மனம் போனபடி பயணிக்கும் பயணி? ஓசி சவாரி??&lt;br /&gt;எந்த வார்த்தையைப் போட்டால் சரியாக இருக்கும் என்று புரிந்ததேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் லண்டனில் வழக்கறிஞராக இருக்கும் தமிழர் வினோத் ஜியார்ஜ் ஜோசப் எழுதிய "ஹிட்ச் ஹைக்கர்" ( Hitchhiker - by, Vinod George Joseph) என்ற நாவலைப் படித்தவுடன் ஒரு புது வார்த்தை தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"கிடைத்த வாகனத்தில் சவாரிக்கும் பயணி!" &lt;br /&gt;&lt;br /&gt;கச்சிதமாக ஒரு வார்த்தை கிடைக்காவிட்டாலும் இந்தக் கதையின் நாயகனைப் போல் பல மதங்களின் ஆக்கிரமிப்பில் மாட்டிக்கொண்டு தமக்கென்று ஒரு பாதையில்லாமல் வாழ நேருபவர்களை இப்படிக் குறிப்பிடலாம் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் களம் தமிழகம் - ஜாதிகள் என்னும் நதிகள் சங்கமம் ஆகாமல் தனித்தனியே பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலை. இந்துவாக இருந்து கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பெற்றோர்கள் - தந்தை ஒரு சர்ச்சில் வாட்ச்மேன். சர்ச்சின் உதவியால் மகன் எபனேசர் பொறியியல் கல்லூரியில் படித்து மென்பொருள் வல்லுனராக உயருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியால் வாழ்க்கை நிலை உயர்ந்தாலும் சமூகத்தில் அவன் ஜாதியின் கண்களாலேயேப் பார்க்கப்படுகிறான். உயர்ஜாதி இந்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காயத்ரிக்கு அவன் மேல் சுரக்கும் பரிதாபமும், அவளுடைய தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளும் அவளுள் அவன் மேல் காதல் எனும் பிரமையைத் தோற்றுவிக்கின்றன. ஜாதியின் காரணமாக அவனை எதிர்க்கும் தன் குடும்பத்தை மீறி அவனைத் திருமணம் கொள்வதன் மூலம் தன் கொள்கைப்பிடிப்பை நிலை நாட்டலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அவளைக் கைப்பிடிக்கவென்றே மீண்டும் இந்துமதத்திற்கு மாறும் எபெனேசர் அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;புகழேந்தியாக மாறிய எபனேசரைத் தான் காதலிக்கவில்லை; எனவே அவனைத் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறாள். ஆனால் சர்ச் புகழேந்தியை மீண்டும்  எபனேசராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எபனேசர் என்கிற புகழேந்தி இப்போது மதங்களுக்கப்பாற்பட்ட ஒரு சாதாராண மனிதனாக வாழ முடிவு செய்து மதங்களின் பிடியிலிருந்து வெகு தூரம் ஓடிவிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரப்படைப்பு மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப பகுதிகளில் எபனேசரின் பள்ளி மற்றும் வளரும் பருவங்களை விவரிக்கும் விதமாகட்டும் பின்னால் காயத்திரி அவள் குடும்பம், கொள்கைகள் என்று ஆழமான சிந்தனைகளை விவாதிக்கும் இடங்களாகட்டும் மெல்லியதாக நிலவும் ஒரு யதார்த்தம் நம்மைக் கதையுடன் ஒன்ற வைக்கிறது. இந்தக் கதையைப் படிக்கும் தமிழகத்தில் வளர்ந்த தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் ஆங்காங்கே தங்கள் பழைய நினைவுகளை நினைவுகூருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாவனைகள், செயற்கையம்சங்கள் எதுவும் கலக்காத தெளிந்த நீரோடைபோல் செல்லும் எளிய நடை, நம் அடுத்தவீட்டில் நடப்பவற்றை பார்ப்பதுபோல் சுவாரசியமாகவும், யதார்த்தமாகவும் கொண்டுவந்து நிறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப கால - பள்ளி பருவ நிகழ்ச்சிகளை சற்று குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி ஆழமான கருத்தைச் சொல்லும் எளிமையான கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர்:&lt;br /&gt;&lt;br /&gt;Books for ChangePrice - Rs.350  -  US$ 22.&lt;br /&gt;&lt;a href="http://www.booksforchange.net/"&gt;www.booksforchange.net&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-6582504858951713265?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/6582504858951713265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=6582504858951713265&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/6582504858951713265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/6582504858951713265'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/05/blog-post_28.html' title='&quot;ஹிட்ச் ஹைக்கர்&quot; - புத்தகம்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-5656685043141358762</id><published>2007-05-20T22:48:00.000+05:30</published><updated>2007-05-20T23:11:24.022+05:30</updated><title type='text'>மணியான பேட்டி.</title><content type='html'>&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;".....எப்படி&lt;/strong&gt; வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் போக்கு மாக்காக கேள்விகள் கேட்டாலும், என் வாயில் சொற்களைத் திணித்தாலும், எனக்குச் சரியென்று தோன்றுவதைத்தான் நான் சொல்லுகிறேன். நான் சொல்வதிலும் புதிதாக ஒன்றுமில்லை. எப்போதுமே நான் எங்கள் கட்சிக்குள், மற்றும் மந்திரிசபையின் ஆலோசனைக் கூட்டங்கள் என்று எல்லா இடத்திலும் பேசுவதைத்தான் சொல்கிறேன். - வெறும் பொருளாதார வளர்ச்சி என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு வரும் திட்டங்களினால் சாதாரண மனிதர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கும் வர்க்கத்தினர் மேலும் பணம் சேர்க்கதான் வழி வகுக்கின்றன. இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. பாதி வழியில் நாம் பாதையை மாற்றி நமக்கு / நம் தேசத்தின் சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நம் வழிகளை மாற்றிக்கொள்ளலாம். We must take a Midterm review and  make Course Corrections....."&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியளித்தாலும் இந்தியாவில் வளர்ச்சியின் பலன் சரியாக அனைவரையும் - அனைத்துதரப்பட்ட மக்களையும் சரியாகச் சென்றடைவில்லையோ என்ற கவலை நம்மில் பலருக்கு இருக்கலாம். சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் சரிவர கவனிக்கப்படவில்லை; கல்வி, சுகாதாரம், குடி நீர் வசதி போன்றக் குறியீடுகள் இன்னும் அதள பாதாளத்தில்தான் இருக்கின்றன' இந்த நிலை எப்போது மாறும்.... என்று நம்மில் பலர் கவலைப் படுகிறோம். ஏன் இவற்றை சரி செய்ய இன்னும் ஒரு குவியத்தோடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வியெழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தில் சி.என்.என். ஐ.பி.என் நிகழ்ச்சியான சாத்தானின் வக்காலத்து - Devil's Advocate - நிகழ்ச்சியில் இன்று மணிசங்கர் ஐயரின் &lt;a href="http://www.ibnlive.com/videos/40954/devils-advocate-mani-s-aiyar.html"&gt;மணியான பேட்டி. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் முன்பு &lt;a href="http://www.indianexpress.com/story/29112._.html"&gt;CII நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது &lt;/a&gt;மேலே கூறியக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். உடனே மணி சங்கர் தன் அரசு / யு.பி.ஏ அரசை விமர்சிக்கிறார் என்று காது மூக்கு, மசாலா வைத்து அவரை மாட்டிவிடும் தொனியில் நம்ம கரண் தாப்பர் கேள்விகள் கேட்டாலும், மணி சங்கர் கொஞ்சம் கூட அசராமல் தன் நிலையை மிகப் பொறுமையாக வெளிப்படுத்தினார். கச்சிதமாகவும், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல் கரணின் கொக்கிகளையும், எலிப் பொறிகளையும் கையாண்ட விதம் சுவாரசியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மணி சங்கரின் கவலை மன்மோஹன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் இல்லாமல் இருக்காது. "Economic policies with a human face" என்று மன்மோஹன்ஜி சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே திருப்பிச் சுருட்டத் தேவையில்லை. வளர்ச்சி கட்டாயம் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். ஆனால் கூடவே பலன்கள் அனைவரையும் போய் அடையுமாறு பார்த்துக்கொள்ள வழிகள் கண்டுபிடிக்கும் திறமையும் அவர்களுக்கு உண்டு என்றல்லவா நம்புகிறோம்? எங்கே முக்கியத்துவம் - Priorities - கொடுக்க வேண்டும் என்பதில்தான் கவனம் சிதறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிவழித் திருத்தங்கள் - course correction - அவசியம் என்று தோன்றுமிடங்களில் தயங்காமல் செய்வார்களா? அல்லது ஊதற சங்கைப் போட்டு உடைப்பார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-5656685043141358762?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/5656685043141358762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=5656685043141358762&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/5656685043141358762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/5656685043141358762'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/05/blog-post.html' title='மணியான பேட்டி.'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-7986436198011297941</id><published>2007-04-13T13:57:00.000+05:30</published><updated>2007-04-13T14:10:22.377+05:30</updated><title type='text'>கேள்விகள் ஆயிரம்</title><content type='html'>இந்த வார விகடனில் மதன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; ரவீந்திரநாத் தாகூரைவிட வீறுகொண்ட தேசப்பற்றுடன் எழுச்சி மிக்க பாடல்களை எழுதிய பாரதியார், தாகூரைப்போல இந்திய முழுவதிலும் புகழ் பெற முடியாமைக்குக் காரணம் என்ன?&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; தயவுசெய்து மன்னியுங்கள்...புகழைப் பொறுத்தவரையில் தாகூரோடு ஒப்பிட்டால், 'பாவம், பாரதி' என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இறந்தபிறகு புகழ் அடைந்தவர் பாரதி. இருந்தபோதே புகழ் பெற்றவர் தாகூர். காந்திஜி, நேரு மட்டுமல்ல... உலகளாவிய இலக்கிய மேதைகள் எஸ்ரா பவுண்ட், யீட்ஸ், ரோமேய்ன் ரோலண்ட், ரஷ்ய இலக்கிய மேதை பாஸ்டர்நாக் ( நோபல் பரிசு வாங்கியவர்) போன்றவர்களெல்லாம் தாகூருக்கு நெருக்கமானவர்கள். ...............ரஷ்ய மொழியில் தாகூரின் எழுத்துக்களை மொழி பெயர்த்தவர் பாஸ்டர் நாக்! நம்முடைய 'ஜன கண மன...' மட்டுமல்ல, 'அமர் ஸோனார் வங்காள..' என்று துவங்கும் அவருடைய கவிதையை தேசீய கீதமாக பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டது. ஆக இரண்டு நாடுகளுக்கு தேசீய கீதம் எழுதியவர் தாகூர் மட்டுமே! 1930 ல் ஐன்ஸ்டீனும் தாகூரும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள். புகழ் பெற்ற அந்த உரையாடலை 'நியூயார்க் டைம்ஸ்' முழுப்பக்கம் வெளியிட்டது. ஏழு முறை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் செய்தார் தாகூர் அந்நாட்டுத் தலைவர்களெல்லாம் அவருக்கென்று நேரம் ஒதுக்கினார்கள்..................... தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உச்சக்கட்டம்! தமிழ் மண்ணில் பிறந்து வாடிய பாரதி எங்கே? இதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையில் உள்ள பதில் முழுக்க இங்கே பதியவில்லை. நடு நடுவே புள்ளிகளுடன் இடைவெளிவிட்டுப் பதிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் இருந்தவரையில் அனேக சிரமங்கள் அனுபவித்தார் என்பதும்; ஏழ்மையில் இறந்தார் என்பதும்; என்பது மதன் சொல்வதுபோல் நாம் வெட்கப்படும் - கசக்கும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் நம்மில் பலர் பல திறமைகளோடு குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார்கள். ஒரு சிறிய வட்டத்தை மீறி அவர்கள் திறமை வெளியுலகுக்குத் தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல நாட்களாக என்னுள் ஓடும் கேள்விகள் மீண்டும் இன்று தலைதூக்கின.&lt;br /&gt;தமிழர்கள் ஆகிய நாம், நம்முள் இருக்கும் திறமையானவர்களைப் பாராட்டி வெளி உலகுக்கு அறியச் செய்வதில் தவறுகிறோமா? வெளியுலகுக்கு இருக்கட்டும்; திறமையானவர்களை விசாலமான மனதுடன் நமக்குள்ளேயே கூட அங்கீகரிக்கவும் தயங்குகிறோமோ? அல்லது, நமக்கு நம்மைப் பற்றி / நம் திறமைகளைப் பற்றி 'மார்கெடிங்' செய்யும் திறமை அவ்வளவாக போறாதோ? நமக்கு மக்கள் தொடர்புத் திறமை ( Public Relations) குறைச்சலோ? அல்லது நாம் அவ்வளவு தன்னடக்கம் உள்ளவர்களா? நம் திறமைகள் பரந்த அளவில் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று முனையாமல் இருக்கிறோமோ? என்றுமே குடத்திலிட்ட விளக்காக இருப்பதில் நமக்கு திருப்தியோ?&lt;br /&gt;&lt;br /&gt;மதனின் பதில் மட்டுமல்ல, சில நாட்கள் முன்பு மற்றொரு செய்தியும் இந்தக் கேள்விகளைக் கொண்டு வந்து என் முன் நிறுத்தியது. சமீபத்தில் கூகுள், ஹிந்தி &lt;a href="http://www.blonnet.com/2007/03/16/stories/2007031603850400.htm"&gt;Transliteration வசதியை&lt;/a&gt; டூல் பாரில் கொடுத்துள்ளது. அட, நாம்தான் முரசு அஞ்சல், கலப்பை, சுரதா என்று சளைக்காமல் பதிந்து கொண்டு இருக்கோமே என்கிறீர்களா? ஆனாலும் பிளாக்கரில் தமிழை ஏன் காணோம்?!! இரண்டு வருடம் முன்பு இந்திய மொழிகளில் தமிழில்தான் அனேக வலைப்பதிவுகள் இருந்ததாக ஞாபகம். இன்றைய நிலை தெரியாது. ஆனாலும் பன்மொழி வலைப்பதிவுகளில் கவனம் செலுத்தும் கூகிள் தமிழை மறக்கலாமோ? அல்லது தினம் ஒரு புது ஐடியாவோடு நம் முன் நிற்கும் கூகிளில் ஒரு தமிழர் கூட இல்லையா? - அல்லது..... சரி; முந்தைய பாராவை மறுபடி படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Disclaimer 1:&lt;/strong&gt; தாகூரின் பெருமையை / திறமையைப் பற்றி இங்கே மாற்றுக்கருத்து இல்லை. நம்மை நாமே குறைவாக மதிப்பிடும் தாழ்வு மனப்பான்மையும் இல்லை. இது ஒரு சுய அலசல் முயற்சி மட்டுமே.&lt;br /&gt;&lt;strong&gt;Disclaimer 2:&lt;/strong&gt; ஒரு வேளை பிளாக்கரில் தமிழ் transliteration வசதி இருந்து எனக்கு அது தெரிந்திராவிட்டால், கடைசி பாராவை மன்னிக்கவும். இங்கே அதைக் குறிப்பிட்டால் நானும் தெரிந்துகொள்வேன். பிறருக்கும் உபயோகமாக இருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-7986436198011297941?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/7986436198011297941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=7986436198011297941&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/7986436198011297941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/7986436198011297941'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/04/blog-post.html' title='கேள்விகள் ஆயிரம்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-1787324670807215432</id><published>2007-04-04T18:46:00.000+05:30</published><updated>2007-04-04T18:55:53.936+05:30</updated><title type='text'>ஏப்ரல் 1</title><content type='html'>எங்கே நிஜத்தைச் சொல்லுங்க... யாரெல்லாம் &lt;a href="http://mail.google.com/mail/help/paper/index.html"&gt;இதைப் படிச்சுட்டு &lt;/a&gt;வீட்டுக்கு அட்டைப் பெட்டி தினம் தினம் வரும்'னு நம்புனீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடக் கடவுளே..... நான் நம்பிட்டேங்க :-) ஹ்ம்ம்... போட்டிப் போட்டுக்கொண்டு இந்த இணைய ஜாம்பவான்களெல்லாம் வியாபாரம் செய்ய புதுசு புதூசா உத்தியைக் கொண்டு வராங்களா... நானும் ஒரு பொட்டியை வரவழைக்கலாமா'ன்னு உண்மையிலுமே யோசனை செய்ய ஆரம்பித்து விட்டேன் !&lt;br /&gt;&lt;br /&gt;யார் கண்டா? இதுவும் கூடிய சீக்கிரம் உண்மையானாலும் ஆகலாம்....! போற போக்கிலே ஏப்ரல் 1 ந் தேதி விளையாட்டுக்கு விஷயமே இல்லாமல் எல்லாமே சாத்தியம்'ங்கற நிலை வந்துடும் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-1787324670807215432?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/1787324670807215432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=1787324670807215432&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/1787324670807215432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/1787324670807215432'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/04/1.html' title='ஏப்ரல் 1'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-4022023584623235176</id><published>2007-02-26T19:32:00.000+05:30</published><updated>2007-02-27T10:07:56.579+05:30</updated><title type='text'>லாலுஜி, மிக்க நன்றிஜி :-)</title><content type='html'>ஒரு காலத்துலே ஏகமா நஷ்ட்டத்துலே இருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் ரூபாய் 20,000 கோடி லாபமாம். போன வருடத்தை விட இந்த வருடம் நிறைய விலைக்குறைப்பு வேறு. எப்படிங்க இப்படி லாபம் காட்டுறீங்க? ஆனாலும், நம்பள மாதிரி சாதாரணவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். இதெல்லாம் விட எனக்கு என்ன ரொம்ப சந்தோஷ்ம்னா.... 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 தட்டு வண்டியிலே கீழ் இருக்கை /படுக்கை வசதி ஒதுக்கப்படுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு விஷயத்துக்காக,&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் மந்திரி லாலுஜி, மிக்க நன்றிஜி :-) ஒவ்வொருதடவை ரயில் பயணம் ரிசர்வேஷன் செய்யும்போதும் மேல்தட்டுதான் கிடைத்தது என்று செய்துவிட்டு, அங்கே போய் - சின்ன பசங்ககிட்ட அய்யா, அம்மான்னு கெஞ்சி கீழ் இருக்கையை கேட்டு வாங்கி - ஹ்ம்ம் இனி இந்த தர்ம சங்கடம் இல்லே... ஒரு வேளை லாலுஜி குடும்பத்துலேயும் யாருக்காவது முழங்கால் மூட்டு வலி இருக்குமோ??? :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்னால் சேர்த்தது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு அளித்த கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்த விஷயம் இன்னும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று தோன்றியதால்டைங்கே மீண்டும் கொஞ்சம் சேர்த்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்டிரல் ரயில்வே ஸ்டேஷன் சமீபத்துலே போயிருக்கீங்களா? ஓரளவு சுத்தமாகவே இருக்கு - பிளாட்பாரங்கள் மட்டும். ஆனா வெளியே இன்னும் சகிக்க முடியாமல்தான் இருக்கு. அதுவும் அந்த கூவம் பாலம் அருகில். வாலாஜா சாலை பக்க நுழைவாயில் போன்ற இடங்கள். ரயில் பாதைகள் - ஹ்ம்ம்.. கேட்கவே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செய்பவர்கள்தாம் ஆகட்டும், பிளாஸ்டிக் கவர்கள், மிஞ்சிய காப்பி, இன்னும் வகையறா, வகையறா - நின்ற இடத்திலேயே கொட்டுவதைப் பார்க்கும்போது.... நற..நற... ( என் பற்கள் உடையும் சப்தம் கேட்டதா?)&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் இபப்டித்தான் பெங்களூரில் என் அருகில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன் தான் குடித்துக்கொண்டிருந்த பிளாஸ்டிக் காபி கப்பை நடந்து போய் ரயில் பாதை இடுக்கில் போட்டுவிட்டு வந்தான். என் அருகில் மீண்டும் அமர்ந்து செல் போனில் பேசியவனை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தேன். பெங்களூரில்லேதோ IT நிறுவனத்தில் வேலை செய்பவராக இருக்கும் என்று தோன்றியது. பல நாடுகள் பயணம் செய்திருப்பார். அங்கேயெல்லாம் இப்படி போட்டு இருப்பாரா என்று தோன்றியது. அடுத்த வினாடி அவரிடம் பேச ஆரம்பித்து விட்டேன். " உங்களுக்கு ஒரு வேண்டுகோள்." என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங். சொல்லுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;" நீங்க இப்ப காபி கப்பை ரயில் பாதை இடுக்கிலே போட்டதை பார்த்தேன். வெளி நாட்டுலே இப்படி செய்து இருப்பீங்களா? தயவு செய்து இனிமே இதுபோல் செய்யாதீங்க. இதுபோல் யாராவது செய்வதை நீங்கள் பார்த்தாலும் இனிமேல் நீங்கள் தடுக்க ஆரம்பியுங்கள்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு ஒரு வினாடி துணுக்கென்று இருந்தாலும் அடுத்த கணம் மென்மையாக சிரித்து மன்னிப்பு கோரினார். இனி எப்படியிருப்பாரோ தெரியாது. குறைந்த பட்சம் அடுத்த முறை காபி குடித்தவுடன் அவர் கை கொஞ்சம் தயங்கும். குப்பைத்தொட்டி இல்லாத இடங்களில் ஒரு பிளாஸ்டிக் பையை நம் கைப்பையில் வைத்திருந்தால் உள்ளே போட்டுக்கொண்டு, பின்னர் குப்பைத்தொட்டி கண்களில் பட்டதும் போடலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்களில் ( பல சம்யங்களில் விமான நிலையங்களிலும் கூட) கழிவறைகளிலிருந்து வரும் துர்நாற்றம் நம் மனசை நோகச்செய்து விடும். நிர்வாகங்கள்தாம் இந்த இடங்கள் பராமரிப்பிற்கு காரணம் என்றாலும் ஓரளவு நம் ஜனங்களும் காரணமே. ஆரம்பக் கல்விக்கூடங்களில் எதைக் கற்றுக்கொடுக்கிறார்களோ இல்லையோ, அடிப்படை சுத்த/பத்த விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். கழிவறைகளே இல்லாமல் இருக்கும் நம் சிற்றூர்களிலும் மற்றும் நகர்ப் புறங்களில் வசதி குறைவானவர்கள் இருக்கும் இடங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுத்தத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சுலப் மற்றும் எக்ஸ்னோரா போன்ற தொண்டூழிய அமைப்புகள் செய்யும் சேவைகள் பிரபலப்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு நகர / கிராம வட்டத்திலும் இவை போன்ற அமைப்புகள் ஏற்பட வேண்டும். பொது இடங்களில், குறிப்பாக உணவுப் பண்டங்கள் விற்கப்படும் இடங்களின் அருகாமையில், பொது வாகனங்களில் நிறைய குப்பைத்தொட்டி இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய "டும்" போட்டுக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு விஷயம் - நம் ஊர் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நம் சாமான்களை நாமே தள்ளிக்கொண்டு போக வசதியாக ஓரளவு நல்ல தரை. ஆனால் வெளியே வந்ததும் வாகனங்கள் நிற்கும் இடத்துக்கு போக ரொம்ப தூரம் போக வேண்டும் - அதுவும் வழியெல்லாம் குண்டும் குழியும். இதை தவிர்க்க ஆரம்பத்திலேயே உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நம்மூரில் பொது இடங்களில் வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களுக்காக தனி வசதி - ramp - இருப்பதேயில்லை. பிளாட்பாரங்களுக்கு போக படியேறிதான் போக வேண்டும். சறுக்கு பாதை இல்லாமல் சாமானை தூக்கிக்கொண்டு போவது வேதனை. ஆங்காங்கே " Disabled" என்று பெயர் பலகை மட்டும் இருக்கும் - கழிவுக்கூடம், சில ரயில் பெட்டிகள் என்று. ஆனால் அந்த ரயில் பெட்டியில் ஏறுவதற்கு ஏற்றாற்போல் ramp இருக்காது. இப்போதெல்லாம் புதுக் கட்டிடங்களில் ramp வைக்கிறார்கள். ஆனால் இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களின் சௌகரியத்திற்காக நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப தூரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட பல "வேண்டும்"கள் லாலுஜியின் கண்களில் பட வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், எங்கேயோ இன்னும் இப்படி குறைகள் இருந்தாலும், உலகிலேயே அதிகம் பேர் பயணம் செய்யும் ஒரு ரயில் நிர்வாகம் இத்தனை தூரம் சமாளிப்பதே பெரிய விஷயம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-4022023584623235176?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/4022023584623235176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=4022023584623235176&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4022023584623235176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/4022023584623235176'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2007/02/blog-post.html' title='லாலுஜி, மிக்க நன்றிஜி :-)'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-116643502950917580</id><published>2006-12-18T15:01:00.000+05:30</published><updated>2007-01-20T21:03:55.480+05:30</updated><title type='text'>இமாலயத்தில் ஒரு சிம்மாசனம்</title><content type='html'>என் பழைய - 1986 - 89 - ஆல்பத்திலிருந்து சில படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/806971/Main%20Road.jpg" border="0" /&gt;&lt;br /&gt;பூடானின் தலைநகரம் திம்புவின் ஒரே பிரதான வீதி. ( உலகிலேயே டிராபிக் சிக்னல் இல்லாத ஒரே தலைநகரம்). கடல் மட்டத்திலிருந்து 7656 அடி உயரத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;                                           ________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/6388/174/1600/312172/Bhutan%20Post%20office.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/673561/Bhutan%20Post%20office.jpg" border="0" /&gt;&lt;/a&gt;திம்புவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான டிசைனில் - பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு இருக்க இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அழகான பூக்களும் - புத்த மத அடையாளங்களும் பல நிறங்களில் வரையப் பட்டிருக்கும். இங்கே பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் ஒரு சிறப்பு - அவை யாவும் ஆணிகள் இல்லாமலேயே எழுப்பப்பட்டுள்ளன.&lt;br /&gt;                                      ____________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/425658/Thimpu%20CBD.jpg" border="0" /&gt; திம்புவின் Central Business District&lt;br /&gt;                                           ________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/6388/174/1600/676927/Chalaila%202.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/973406/Chalaila%202.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு பனிப்படர்ந்த மலையின் மேலே.....  நின்று கொண்டிருப்பது? சாட்சாத் நானேதான் :-)&lt;br /&gt;                                            ________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/6388/174/1600/959103/Thimpu%20Chu.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/388474/Thimpu%20Chu.jpg" border="0" /&gt;&lt;/a&gt; குறுக்கும் நெடுக்கும் சள சளவென்று குளுமையாக ஓடிக்கொண்டிருக்கும் "திம்பு சூ". சூ என்றால் ஜோங்கா (Dzonka) மொழியில் நதி.&lt;br /&gt;                                           _________________________________&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/6388/174/1600/852427/A%20Parade.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/455690/A%20Parade.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ஒரு தேசீய அணி வகுப்பு. தேசீய மற்றும் மத சம்பந்தமான விழாக்களில் இபடி பொது இடங்களில் அணிவகுப்பு அல்லது பாரம்பரிய நடனங்களில் மக்கள் பங்கு கொள்வது சகஜம். பெண்களுக்கு இங்கே முன்னுரிமை. பெண் வழி வாரிசு முறை. ஆணும் பெண்ணும் ஒன்றுக்கும் மேற்பட்டோரை மணப்பது இயல்பான வழக்கம் இந்த சமூகத்தில். குழந்தைகள் பிறந்த பின்பு திருமணம் செய்துகொள்வதும் உண்டு. இங்கே இவை இயல்பான சமூக வழக்கம். இன்று ஓரளவு மாறி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.&lt;br /&gt;                                   ______________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/6388/174/1600/574617/VIP%20Visitor.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/690149/VIP%20Visitor.jpg" border="0" /&gt;&lt;/a&gt; மோரீஷியஸ் அதிபர் 1986ல் பூடானுக்கு வருகை தந்தபோது. &lt;/p&gt;&lt;p&gt;                              _________________________________________&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/6388/174/1600/2726/Bhutan%20Archery.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/624366/Bhutan%20Archery.jpg" border="0" /&gt;&lt;/a&gt; வில், அம்பு விளையாட்டு முக்கிய தேசீய விளையாட்டு. ஞாயிற்றுக் கிழமையானால் அவரவர் வில், அம்பு சகிதம் மைதானம் பக்கம் கிளம்பிவிடுவார்கள். பாரம்பரிய உடை அவசியம். ( கனமாக, நடுக்கும் குளிருக்கு இதமாக நன்றாகதான் இருக்கும்). உல்லாசப்பயணிகள் வருகை கட்டுப்படுத்தபட்டு உள்ளது. இதர நாடுகளில் பாரம்பரியம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை கவனித்து, மன்னர் தீர்மானமாக தன் நாட்டின் இயற்கையும் பாரம்பரியமும் அழிந்து விடாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது. &lt;/p&gt;&lt;p&gt;                                        _________________________________&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/6388/174/1600/166982/Sunday%20Market.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/6388/174/320/308639/Sunday%20Market.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஞாயிறு தோறும் கூடும் சந்தை - காய்கறிகளிலிருந்து, குளிர் உடைகள், மற்றும் வீட்டுக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் சந்தையில் பேரம் பேசி வாங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அதுசரி, ஏன் திடீரென்று பூடான் படங்கள் இங்கே? &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நேற்றைய செய்தி: பூடானின் அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக் தன் மகனுக்கு அரியணையை கொடுத்துவிட்டார். &lt;/p&gt;&lt;p&gt;"முக்கியமான" கொசுறு செய்தி: புதிய அரசர் நாம்கேல் வாங்சுக், திம்புவில் லுங்டன்ஜாம்பா (Lungtenzampa Junior High School ) பள்ளியில் என் இளைய மகனின் வகுப்புத்தோழன்(ர்). :-) &lt;/p&gt;&lt;p&gt;மனம் பின்னோக்கி அசைபோட...... விளைவு - இந்த படங்கள். இந்த டிஜிடல் காலத்திலும், 1970களில் வாங்கிய யாஷிகா காமிராவிற்கு இணை இல்லை - என்னைப் பொறுத்தவரையில் :-)&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-116643502950917580?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/116643502950917580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=116643502950917580&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/116643502950917580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/116643502950917580'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/12/blog-post_18.html' title='இமாலயத்தில் ஒரு சிம்மாசனம்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-116602307059201686</id><published>2006-12-13T20:30:00.000+05:30</published><updated>2006-12-13T20:58:02.570+05:30</updated><title type='text'>பந்தா இல்லாத சிந்தனையாளர்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#666600;"&gt;"&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;எனக்கு பதினைந்து வயதாக இருக்கும்போது என் அம்மாவிடம் சொன்னேன். " நான் பெரியவனாக ஆனதும் என்னவாக ஆகப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டேன். ஒரு எழுத்தாளாராகதான் ஆகப்போகிறேன்."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என் அம்மாவுக்கு உடனே கவலை வந்துவிட்டது. " என் செல்லமே... உன் அப்பா ஒரு இஞ்சினீயர். ரொம்ப யதார்த்தமானவர். வாழ்க்கையைப் பற்றியும் உலகைப் பற்றியும் தீர்க்கமான பார்வை கொண்டவர். அதுசரி. ஒரு எழுத்தாளர் ஆவது என்றால் என்ன அர்த்தம் என்றாவது உனக்கு புரியுமா?"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;" இதில் புரிய என்ன இருக்கு? எழுத்தாளர் என்றால் புத்தகங்கள் எழுதுபவர்."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;" உன் மாமா ஒரு டாக்டர். அவர் கூட புத்தகங்கள் எழுதுவார். நீ கூட உருப்படியா ஒரு இஞ்சினீயருக்கு படி. அதன் பின் நீ எப்போ வேணுமானாலும் புத்தகம் எழுதலாம்."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;" இல்லேம்மா... நான் ஒரு எழுத்தாளனாக வேண்டும். புத்தகங்கள் எழுதும் இஞ்சினீயராக இல்லை."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;" சரி. நீ எப்போவாவது ஒரு எழுத்தாளரை சந்தித்து இருக்கிறாயா?"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"இல்லயே... வெறும் போட்டோக்களில்தாம் பார்த்து இருக்கிறேன்."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"சரிதான். எழுத்தாளர் என்றால் என்னன்னு கூட தெரியாம எழுத்தாளன் ஆகணும்னு ஆசைப்பட்டாயானால் அதெப்படி?" என்று சொல்லிவிட்டார்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அம்மா கேட்ட கேள்விகளுக்கு விடை தேடி நான் ஒரு எழுத்தாளன் ஆக என்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். 1960களின் ஆரம்பத்தில் என் ஆராய்ச்சிகளின் முடிவில் எனக்கு தெரிய வந்த தகுதிகள்:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;ஒரு எழுத்தாளனின் முதல் தகுதி அவர் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். தலை வாராமல் எப்போதுமே கலைந்து இருக்க வேண்டும். சீப்பையே பார்த்து இருக்கக்கூடாது. முகத்தில் எப்போதும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு சிடு சிடுவென்று எதைப் பற்றியாவது குறை சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். பாதி நேரம் முகத்தில் சோகம் அப்பி இருக்க வேண்டும். வாழ் நாளில் பெரும்பகுதி ஏதாவது ஒரு மதுபான கிளப்பில் இவரைப் போலவே தலை கலைந்த சிடு சிடுவென்ற சக எழுத்தாளர்களுடன் எதைப் பற்றியாவது விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டும். ரொம்ப "ஆழமான" சமாசாரங்கள் பேசுவார். எப்போதுமே அவரிடம் தன்னுடைய அடுத்த புத்த்தகத்துக்கான பிரமாதமான ஐடியா இருக்கும் ஆனால் சமீபத்தில் வெளி வந்த தன் புத்தகம் அவருக்கு பிடிக்காது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;அவரது சம காலத்து தலைமுறையினரால் புரிந்து கொள்ள முடியாதவராக இருப்பது ஒரு எழுத்தாளனின் தலையாய கடமையாகும். பெரிய விஷயங்களை புரிந்து கொள்ளாத ஒரு தலைமுறையில் தான் பிறந்து விட்டோம் என்பதில் அவருக்கு கடுகளவும் சந்தேகமில்லை. தப்பித்தவறி தான் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டோமானால் தான் ஒரு "மேதை" என்று தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவருக்கு தெரியும். எழுதியதை திருத்தி பலமுறை மாற்றி எழுதுவார். நம்மைப்போல் சாதாரண மனிதர்கள் அகராதியில் 3000 வார்த்தைகள் உபயோகித்தோமானால் நம்ப எழுத்தாளர் இதில் ஒன்றைக் கூட உபயோகிக்க மாட்டார்; ஏனென்றால் நம்ம ஆள் சாதாரணமானவர் இல்லையே? அகராதியில் இன்னும் பாக்கி 189,000 வார்த்தைகள் இருக்கின்றனவே... அவற்றையெல்லாம் பிரயோக்கிக்காமல் என்ன எழுத்தாளன் அப்புறம்?&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;ஒரு எழுத்தாளர்தான் மற்றொரு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கூட அவருக்கு சக எழுத்தாளர்கள் மேல் ஒரு கடுப்பு இருக்கதான் செய்யும். சரித்திரத்தில் இடம் பிடிக்க தன்னுடன் போட்டியிடுகிறார்களே? ஆக மொத்தம் நம்ம எழுத்தாளரும் அவரது சகாக்களும் உலகிலேயே ரொம்ப குழப்பமான புத்தகம் எழுதுவதில் முனைந்துள்ளார்கள். யார் ஜெயிக்கிறார்களோ அவர் " யாருமே புரிந்து கொள்ளவே முடியாத" புத்தகம் எழுதிய பெருமையை வென்றவர்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதற்கு நம் எழுத்தாளர் சில வார்த்தைகளை எடுத்து விடுவார் - semiotics, epistemology. neoconcretism ... என்று வாயில் கூழாங்கல்லைப் போட்டு பயிற்சி செய்து உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். மற்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்க வேண்டுமென்றே, திடீரென்று "ஐன்ஸ்டின் ஒரு முட்டாள்" என்பார். அல்லது " டால்ஸ்டாய் பூர்ஷ்வாக்களின் கோமாளி" என்று விமரிசிப்பார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சியாக இருக்கும். இருந்தாலும் இந்த "செய்தி" சூடு பிடிக்க தொடங்கும். Relativity என்ற சித்தாந்தம் சுத்த உளறல் ; டால்டாய் ரஷ்யாவின் மேட்டுகுடியினரின் ஆதரவாளர் என்ற ரீதியில் எல்லோரும் பேசத் தொடங்குவார்கள்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;யாராவது பெண்ண்ணின் கவனம் தன் பக்கம் திரும்ப, அறிமுகத்தின் போது தான் ஒரு எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வார். மேஜையில் கைதுடைக்கும் நாப்கின் மீது ஏதாவது "கவிதை" கிறுக்குவார். நம்புங்கள். இந்த யுக்தி பிரமாதமாக வேலை செய்யும்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;இவருடைய பின்புலம் காரணமாக பத்திரிகைகளில் இலக்கிய விமர்சகர் வேலை இவருக்கு எளிதாக வந்து சேரும். உடனே சக எழுத்தாள நண்பர்களின் புத்தகங்களை தாராளமாக பாராட்டி எழுதுவார்..... &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற யாராவது கேட்டுவிட்டால் போதும்; யாருமே கேள்விப்பட்டிராத புத்தகத்தின் பெயரைக் கூறுவார்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;பொதுவாக நம்ம எழுத்தாளருக்கும் அவரது சகாக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரே புத்தகம், ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய " Ulysses" இந்த புத்தகத்தை பற்றி மட்டும் எந்த எழுத்தாளரும் தப்பித்தவறி கூட குறை சொல்லி விமர்சித்துவிட மாட்டார்கள். ஆனால் எவராவது இதில் என்னதான் இருக்கிறது என்று கேட்டுவிடக் கூடாது. ஏனென்றால் இந்த புத்தகத்தை இவர் படித்துள்ளாரா என்று சந்தேகிக்கும் அளவு பதில் சொல்ல திணறிப் போய் விடுவார்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;இப்படியெல்லாம் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை என் அம்மாவிடம் போய் சொன்னேன். கேட்டுவிட்டு - " நீ இஞ்சினீயர் ஆவதே சுலபம் போலிருக்கு. தவிர, முக்கியமாக நீ மூக்குக் கண்ணாடி அணிவதில்லை. அதனால் இந்த வேலை உனக்கு சரிவராது." என்றார். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;ஆனாலும், கலைந்த தலையும், சட்டை பாக்கெட்டில் Gauloise சிகரெட்டும் தவிர என் கையில் ஒரு நாடகக் கதை இருந்தது - ( " நான் பார்த்த மேடை நாடகங்களிலேயே இதுவரை இத்தனை அபத்தமானதை பார்த்ததேயில்லை" என்று ஒரு விமர்சகர் " நல்ல வார்த்தை" அருளியிருந்தார். ) - மேதாவிப் புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன்; அந்த "Ulysses" புத்தகத்தையும் படித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;இந்த சமயத்தில்தான் ஒரு மேடைப் பாடகர் தன் பாடல்களுக்கு ஏற்ற மாதிரி கவிதைகள் எழுதித்தரச் சொன்னார். வருவாய் வரும் வழி புரிந்ததும் எழுத்தாளனாக சரித்திரத்தில் இடம் பெறும் ஆராய்ச்சி, ஆசையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு நானும் இதர சாதாரண மக்களைப் போல் பிழைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;இப்படி நான் தேர்ந்தெடுத்த வழியால், சட்டை மாற்றுவதைவிட வேகமாக வேலைகள் மாறி பல ஊர்கள் நாடுகள் மாறினேன். அப்படி ஆற்று நீரோட்டமாக பலவிதங்களில் ஓடிய என் வாழ்க்கையில் நான் கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபங்கள்தாம், இதோ அடுத்து வரும் பக்கங்களில்....."&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;பாலோ கோல்ஹோ ( Paulo Coelho)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவராக கருதப்படும் Paulo Coelho எழுதிய " Alchemist " என்ற புத்தகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை படித்ததில்லை. அவர் "Ulysses" பற்றி சொல்வதுபோல் ஒரு பாலோ கோல்ஹோ படிக்காமல் நாமெல்லாம் எப்படி எழுத்து துறையில் இருக்க முடியும் என்று தோன்றியதுண்டு. ஒரு முறை புத்தகக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும்போது அந்த புத்தகத்தை வாங்க எடுத்துவிட்டு திரும்பும்போது அவரது புதிய புத்தகமான " Like the Flowing River " கண்ணில் பட்டது. உடனே அதை வாங்கிவிட்டேன். அதில் இருந்த முன்னுரைதான் மேலே உள்ள பகுதி. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;எழுத்தாளர்களை இவ்வளவு சதாய்க்கும் ( இது தமிழ் வார்த்தைதானே!! மூலம் அறிய ஆவல்!) பாலோ கோல்ஹோ இன்று பெரிய எழுத்தாளர். உள் பக்க அட்டையில் உள்ள அவரது படத்தில், முகத்தில் மூக்குக் கண்ணாடியில்லை; தலை கலைந்து இருக்கவில்லை ( முடி இருந்தால்தானே? முக்கால் வழுக்கை :-) ) மற்றபடி அவரது எழுத்து நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு நன்றாகவே புரிகிறது. ஒரு நண்பருடன் நம் வீட்டு கூடத்தில் உட்கார்ந்து பேசுவது போல் எளிய, இயல்பான, ஒரு அந்நியோன்னமான நடை.. படிக்கும்போது அகராதியைத் தேட வேண்டாம். சொல்லும் விஷயங்களில் பளீரென்று அனுபவம் பேசுகிறது; தத்துவங்கள் - வாழ்க்கையின் பல நிதர்சனங்கள் அனாயாசமாக, அதே சமயம் "காவியுடை" அணியாமல் வந்து விழுகின்றன. பந்தா இல்லாத சிந்தனையாளர். சிந்திக்க வைக்கும் - இதம் அளிக்கும் சிந்தனைகள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மற்றபடி எழுத்தாளர்களுக்கான "தகுதிகள்" அவரது ஆராய்ச்சியின்படி அவருக்கு இருக்கிறதோ இல்லையோ, முன்னுரையில் உள்ள அவரது கையெழுத்துக்கு நிறையவே இருக்கிறது. வாங்கிப் படித்துதான் பாருங்களேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-116602307059201686?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/116602307059201686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=116602307059201686&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/116602307059201686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/116602307059201686'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/12/blog-post.html' title='பந்தா இல்லாத சிந்தனையாளர்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-116214833316466555</id><published>2006-10-29T23:50:00.000+05:30</published><updated>2007-01-23T09:18:45.890+05:30</updated><title type='text'>நிதர்சனம்</title><content type='html'>&lt;span&gt;வருடம் 1995 - மே மாதத்தில் ஒரு நாள். சிங்கப்பூர் போன புதிது. மகன் பள்ளி அட்மிஷன், புது ஊரில் வாழ்க்கை என்று ஆரம்ப கால தடுமாற்றங்கள் இருந்த சமயத்தில் இந்திய தூதுவர் வீட்டில் ஒரு விருந்து. எல்லோருமே புது முகமாக தெரிந்த இடத்தில் புன்முறுவலை முகத்தில் படரவிட்டபடி ஜூஸ் கிளாசை வைத்துக் கொண்டு பேச்சுத் துணைக்கு ஆள் தேடியபோது என்னைப் போலவே ஆள் தேடிய முகம் கண்ணில் பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;பட்டுப்புடவையுடன் என்னைப்போலவே ஒரு தமிழ்ப் பெண். இருவரும் உடனேயே குப்பென்று ஆர்வத்துடன் பேச ஆரம்பித்துவிட்டோம். எங்கள் இருவரின் மகன்கள் ஒரே பள்ளி; ஒரே வகுப்பு - ஆனால் வேறு பிரிவுகள். டில்லியிலிருந்து நாங்கள் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்து இறங்கிய அதே நாளில்தான் அவர்களும் வந்துள்ளார்கள் - சென்னையிலிருந்து. எங்களுக்கு ஒரே சந்தோஷம் - புதிய ஊரில் ஒத்த அலைவரிசையில் நண்பர் கிடைத்த சந்தோஷம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;அன்று ஆரம்பித்தது எங்கள் நட்பு. அங்கே இருந்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் வரை தினமும் இரண்டு தடவையாவது பேசாவிட்டால் எங்கள் நாள் முடியாது. அதன்பின் நான் டில்லிக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மாற்றி மாற்றி இருந்தபோதும் முடியும்போதெல்லாம் சந்திப்போம் - குறைந்த பட்சம் போன் அரட்டை நிச்சயம். பிறகு நான் டில்லியிலும் அவர் சென்னையிலும் இருக்கத் தொடங்கியபிறகு அவ்வப்போது போனில் - முடிந்தபோது நேரில் என்று நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்கள் அவரவர் வேலையில் /குடும்பப்பொறுப்புகளில் மூழ்கி இருந்தாலும் எப்போதாவது போன் போடும்போது, எப்போதும் இருக்கும் அதே உற்சாகமும் அன்பும் துளிக்கூட குறைந்ததேயில்லை. 2001ல் நான் சென்னை வந்தபின்னரும் இந்த அன்பும் பிணைப்பும் தொடர்ந்தது. சில மாதங்களுக்கு ஒரு முறையாவது யாராவது ஒருவர் நினத்துக்கொண்டு திடீரென்று போன் போட்டு அரை மணி நேரம் பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த பல மாதங்களாக ஏனோ நான் அவருக்கு போன் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு முறை போன் போட்டபோது அடித்துக்கொண்டே இருந்தது. சரி எங்கேயோ வெளியே போயிருக்கிறார் என்று விட்டு விட்டேன். அவ்வப்போது நினவு வரும் - சரி நிதானமாக அப்புறம் பேசலாம் என்று நினைத்து காலம் போனது. ஏதோ அவரவர் வேலை குடும்பம் என்று இருக்கிறோம் என்ற அசட்டையாக இருந்துவிட்டேன். ஆங்கிலத்தில் taken for granted மனோபாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஷோபா, இன்று காலையில் நீ குக்கர் வைத்துவிட்டு என்ன சமையல் செய்யலாம் என்று காபி குடித்தவாறே யோசிக்கும் அந்த ஒரு சில நிமிடங்களில் ஹார்ட் அட்டாக் வரும் என்று யாருக்கு தெரியும் ஷோபா? வாழ்க்கை இவ்வளவு அநித்தியமா? நிதர்சனம் முகத்தில் அறைந்தாற்போல் வலிக்கிறதே......&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்புள்ள ஷோபனா ஜெயந்த் - என் மனது உனக்கு தெரியும். உன் பிரிவு மிகவும் வலிக்கிறது. ஆனால் உன் அருமையான தோழமை கிடைத்தது என் மனதுக்கு ஒரு நிறைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-116214833316466555?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/116214833316466555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=116214833316466555&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/116214833316466555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/116214833316466555'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/10/blog-post.html' title='நிதர்சனம்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-115709635873177538</id><published>2006-09-01T13:01:00.000+05:30</published><updated>2006-10-04T19:49:45.956+05:30</updated><title type='text'>What is missing?</title><content type='html'>"...ரொம்ப வயலண்ட் படம்... யோசிச்சு சொல்லுங்க, வரணுமா என்று..." என்று குடும்பத்தில் இருக்கும் இளைய தலைமுறைகள் பெரிசுகளை கொஞ்சம் எச்சரித்தார்கள். அதனால் என்ன.. இந்த காலத்துலே எந்த படத்துலேதான் டிஷ்யூம்..டிஷ்யூம் இல்லேன்னு? கேள்வி கேட்டு கிளம்பியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே ஒரு விரலைப் பாத்தப்போ " சரி.. இதோட போச்சு.. " 'பயங்கரக் காட்ச்சிகள்' என்று நினைத்தேன். ... ஒரு அரை மணி பொறுத்து புரிந்து போச்சு... பாக்கி 2 மணி நேர சொச்சம் எந்த ரேஞ்சுலே இருக்கப்போகிறதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஒரு நம்பிக்கை... கமல் படமாச்சே... கொஞ்சமாவது Fun அல்லது ஒரு ஆழம் இருக்குமே என்று.....ஹ¥ம். எந்தப் படத்துலேயும் சரி.... கடைசியிலே என்ன ஆகும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஏதோ ஒரு பயங்கர சஸ்பென்ஸ்... யார் இப்படி திட்டம் போட்டாங்க... ஏன்... என்ற கேள்விகளுக்கு விடையைத் தேடி காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இடைவேளைக்கு முன்னேயே சஸ்பென்ஸ் சுத்தமா போச்சு. குற்றவாளி தெரிந்து போனதும் சுவாரசியம் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;த்ரில்லர் என்றால், கதையில் ஒரு plot... அழுத்தம், ஆழம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். தவிர, திரில்லர் என்றாலும் ஒவ்வொரு கொலையையும் graphic ஆக காண்பிக்காமல் ஆங்காங்கே ஒரு subtlity இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்வதைவிட, சொல்லாமல் விடுவது கலை.&lt;br /&gt;&lt;br /&gt;'பயங்கர' காட்சிகளைத் தவிர்த்து பார்த்தாலும் ஆழமாக ஒரு Plot, இருந்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. Flat ஆக இருந்த மாதிரி பட்டது எனக்கு. " Motive, Mr. Watson...?" என்று கேட்க வேண்டும் போல ஒரு உணர்வு. ஒரு psycho படம் is not my cup of tea. ( கதையை கேட்டுவிட்டு சினிமாவுக்கு போவது என் வழக்கமில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆங்காங்கே சில காட்சிகளில் தெரியும் சமூக அக்கறை - எ.கா: ஜெயிலில் அந்த இரு கைதிகள் நடத்தப்பட்ட முறை குறித்து காவல் துறை அதிகாரிகளை டிசிபி ராகவன் கண்டித்து கேட்கும் இடம் - அவசியம் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் என்று தோன்றியது. Psychos எப்படி உருவாகிறார்கள் என்ற முறையில் இது ஒரு அலசப்பட வேண்டிய சப்ஜெக்ட். ஆனாலும் something is still missing.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் என்ன....? "வேட்டையாடு, விளையாடு" பெரிய வெற்றிப் படம்; வசூல் பிய்த்துக்கொண்டு போகிறது என்று சொல்கிறார்கள். வாழ்த்துக்கள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: மதுமிதாவின் "சுபாஷிதம்" புத்தகத்திற்கு முக்கிய ரோல் :-)  வாழ்த்துக்கள் மதுமிதா !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-115709635873177538?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/115709635873177538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=115709635873177538&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/115709635873177538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/115709635873177538'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/09/what-is-missing.html' title='What is missing?'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-115301501007280264</id><published>2006-07-16T07:23:00.000+05:30</published><updated>2006-08-24T16:54:22.806+05:30</updated><title type='text'>ஜிவி</title><content type='html'>" மேக் டொனால்டில் வரிசை வரிசையாக பீட்ஸா செய்வதைப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும் ? எவ்வளவு விலை? எவ்வளவு ருசி ..... இந்த ரீதியில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவருக்கு என்ன தோன்றிற்று? நம் ஆஸ்பத்திரியில் இந்த முறையைப் பயன்படுத்தி கண் ஆபரேஷன் செய்து ஏழைகளுக்கு இலவசமாக கண் பார்வை பெற உதவலாமே என்று. விளைவு. மதுரையில் தான் சிறிய அளவில் உருவாக்கிய அந்த கண் ஆஸ்பத்திரியில் இப்படி வேகமாக பெருமளவில் செய்யும் உத்தியைப் பயன்படுத்தி பல ஏழைகளுக்கு இலவசமாக காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தார்.&lt;br /&gt;இத்தனைக்கும் அவர் கண் வைத்தியம் படிக்க ஆரம்பித்தபோது ஆர்திரிடீஸ் நோயால் விரல்கள் பாதிகக்ப்பட்டிருந்தன. ஆனாலும் ஒரு தீர்மானத்தோடு மென்மையான இந்த அறுவை சிகிச்சை செய்ய விரைவிலேயே பழக்கிக் கொண்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் ஆங்கில இதழ் ஒன்றிற்காக அவரை 6 வருடம் முன்பு மதுரையில் அவரை நான் பேட்டி காண சென்றபோது அவரது வயது 82. காலை 8 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். அவரது அறையில் காத்துக்கொண்டிருக்கும்போது கதவைத் திறந்து கொண்டு அவர் உள்ளே வரும்போது மணி சரியாக எட்டு. அரை மணி நேரம் என்று சொல்லியிருந்த பேட்டி ஒன்றரை மணி நேரம் நீண்டது. பொறுமையாக லாஸிக் அறுவை சிகிச்சை பற்றி விளக்கியதோடல்லாமல், மேல் விவரங்களுக்கு தான் இணையத்திலிருந்து தினமும் சேகரிக்கும் தகவல்களை உதவியாளரை விட்டு நகலெடுத்து கொடுக்கச் சொன்னார். "காலையில் என் முதல் வேலை இணையத்தைக் குடைந்து சமீபத்தில் என்ன என்ன முன்னேற்றங்கள் இந்த துறையில் இருக்கின்றன என்று பார்ப்பதுதான்." என்று சிரித்தவாறே கூறினார். பேட்டி சம்பந்தமாக முன்னும் பின்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டபோதும் நேரடியாக தானே பதிலளித்த அருமையான மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;சில விமர்சகர்கள் அந்த நிறுவனத்தின் அருமையான நிர்வாக முறைகளை கெட்டிக்கார வியாபார உத்தி என்று சொல்வதுண்டு. ஆனால், தன் சகோதரி டாக்டர் நாச்சியார் மற்றும் அவரது கணவர் நம்பெருமாள்சாமி அவர்களுடன் இணைந்து ஆரம்பித்த அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இன்று பல ஏழைகளுக்கு கோவில் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பலரைப்போல எனக்கும் தாமதமாகதான் அவரது மறைவு தெரிய வந்தது. அன்பான டாக்டர் ஜிவி என்கிற ஜி. வெங்கிடசாமி  அவர்களை நினைவு கூற இந்த பதிவு. அவரது முழு பேட்டியையும் &lt;a href="http://arunasarchive.blogspot.com/2004_05_01_arunasarchive_archive.html"&gt;இங்கே படிக்கலாம்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: ஏதோ ஞாபகத்தில்  ஜி. வெங்கிடசாமி  என்பதற்கு பதிலாக - கோவிந்தசாமி என்று பிழையாக எழுதியிருந்தேன். பிழைக்கு மன்னிக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-115301501007280264?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/115301501007280264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=115301501007280264&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/115301501007280264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/115301501007280264'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/07/blog-post.html' title='ஜிவி'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-114711121649888571</id><published>2006-05-08T23:26:00.000+05:30</published><updated>2006-05-09T23:47:37.773+05:30</updated><title type='text'>Exit Poll</title><content type='html'>Exit Poll கணிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணிக்கு :&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டார் நியூஸ் - 175&lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் நௌ - ஹன்ஸா - 150&lt;br /&gt;&lt;br /&gt;சிஎன்.என் - ஹிந்து - 157 -167&lt;br /&gt;&lt;br /&gt;அனேகமாக அனைவருமே சில வாரங்கள் முன் வெளியிட்டக் கருத்துக்கணிப்பில் வெவ்வேறு விதமாக சொல்லியிருந்தார்கள். நடுவில் என்னவாகியிருக்கும்? எப்படி மாற்றம் நிகழ்ந்திருக்கும்? கணிப்புகளும் ஜோசியம் போல்தான் என்பது என் கருத்து. விஞ்ஞானபூர்வமாக என்று இவற்றின் ஆதரவாளர்கள் சொன்னாலும் முடிவு / கணிப்பு தவறாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் கணிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழக மக்கள் மனதில் தேர்தல் ஆரம்பிக்கும் சமயம் இருந்த எண்ணங்களுக்கும் முடிவில் ஓட்டுச்சாவடிக்குப் போகும்போது இருந்த சிந்தனைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்திருக்கும் என்பது மட்டும் புரிகிறது. இலவச அறிவிப்புகளில் - அறிவித்தவை, அறிவித்த விதம், அறிவித்தவர்களின் மனோபாவம், அறிந்திருக்கும் அணுகுமுறைகள், இவற்றில் இதற்கான விடை இருக்கிறதோ? அல்லது வழக்கம்போல் மாற்றம் வேண்டி போடப்பட்ட வாக்குகளா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பிலிருந்து எல்லோருடைய கூவல்களும் - சப்தங்களும் மறைந்து, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து மக்கள் மனசுக்குள் யோசித்து, போடும் கணக்குதான் கடைசியில் மோட்சம் என்பது நிரூபிக்கப்படுகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;11 ந் தேதி காலை 11 மணிக்கு இன்னும் எவ்வளவு மணி நேரம் இருக்கிறது ? :-)&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: தமிழ்மணத்தின் exit poll கிட்டதட்ட இதே முடிவைக் காண்பிப்பதால்  தமிழ் வலைப்பதிவாளர்கள் தமிழக மக்களின் சரியான பிரதிபலிப்பு ( representative?) என்று எடுத்துக்கொள்ளலாமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-114711121649888571?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/114711121649888571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=114711121649888571&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114711121649888571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114711121649888571'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/05/exit-poll.html' title='Exit Poll'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-114520605386201287</id><published>2006-04-16T22:10:00.000+05:30</published><updated>2006-08-30T12:11:10.496+05:30</updated><title type='text'>லோக் பரித்ரன்</title><content type='html'>இது... இது... இதைத்தான் எதிர்பார்த்தேன் ரொம்ப காலமாக......&lt;br /&gt;&lt;br /&gt;"அனுபவம் பத்தாது. இவர்களால் என்ன செய்துவிட முடியும்? சிறு பிள்ளைகள்.... சுதந்திரப் போராட்டம் பற்றி / தியாகிகள் பற்றி தெரியுமா? தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? நம் மக்களைப் பற்றி என்ன தெரியும்? Green horns... அரசியலைப் பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?" என்றெல்லாம் பெரிய அரசியல்வாதிகளிடமிருந்து விமரிசனங்கள் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்களின் இந்த ஆர்வம் என்னை பிரமிக்க செய்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி உள்ளது. இன்னும் சிலர் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு பார்ப்பார்கள். ஆனால் யாருக்குப் போட்டு என்ன பிரயோசனம் நாம மாறவே போறதில்லே.... தேர்தலே ஒரு வேஸ்ட் என்ற ரீதியில் ஈசிச் சேரில் சாய்ந்து கொண்டு அல்லது டிவி பார்த்துக்கொண்டு ஓட்டுச் சாவடி பக்கமே போகாமல் வீட்டிலிருக்கும் ஒரு வர்க்கம் உண்டு. அது கணிசமான சதவிகிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;" இந்த சதவிகிதம்தான் எங்களின் குறி" &lt;a href="http://www.hindu.com/thehindu/mp/2006/04/15/chenindx.htm"&gt;என்கிறார்கள் இவர்கள். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் போடு !&lt;br /&gt;&lt;br /&gt;படித்தவர்கள், திறமையுள்ளவர்கள், நண்பர்கள் சேர்ந்து ஆங்காங்கே வெற்றிகரமாக பலதுறைகளில் இறங்கும்போது ஏன் அரசியலில் / ஆட்சியில் குதிக்க தயங்குகிறார்கள் என்று தோன்றும். ஆக்கப் பூர்வமான சிந்தனையுள்ள பல இளைஞர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆர்வமாக உழைப்பதைப் பார்க்கும்போது இவர்கள் சக்தி பொது வாழ்வில் இன்னும் பரவலாக உபயோகப்படலாமே என்று தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ &lt;a href="http://www.lokparitran.org/"&gt;குதித்துவிட்டார்கள்&lt;/a&gt; இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் நிறைய வாழ்த்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;பின்னர் சேர்த்தது:&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லோக் பரித்ரன் பற்றி நான் எழுதியிருந்தது அப்படி ஒன்றும் அது சிலாகிக்க வேண்டிய நிகழ்வு அல்ல என்று சில விமரிசனங்களும் வந்தன. விமரிசகர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டம் என்கிற ஒரு பொதுத் தாகம் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு இழுத்தது. சுதந்திரம் பெற்றோம்; உன்னதமான அரசியல் தலைவர்களைப் பெற்றோம். பின்னர் சுதந்திர இந்தியாவில் எமர்ஜென்ஸி, மொழிப் பிரச்சனை, என்று பல விதங்களில் பொதுத் தாகங்கள் இளைஞர்களை பொது வாழ்விற்கு இழுத்தன. இன்று அப்படிப்பட்ட நாடு தழுவிய இன்னல் / crisis - குறிப்பாக சொல்லும்படி இல்லாவிட்டாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், மத/ஜாதி வேறுபாடுகள், என்று கண்ணுக்குத் தெரிந்தும் / தெரியாத ஆயிரமாயிரம் பிரச்சனைகள் ஊடுருவி நிற்கும் சமயத்தில் வருங்காலத் தலைவர்கள் என்ற கேள்வி நிரப்படாமலேயே வெற்றிடமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் குடும்பம் மற்றும் இதர பின்வாசல்கள் வழியே தலைவர்களாக உருவாவதை நாம் எதிர்க்கிறோம். சினிமா போன்ற அடித்தள மக்களிடம் சென்றடையும் "தலைவர்களை" நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இன மற்றும் ஜாதியின் பேரால் தலைவர்கள் உருவாகும் கலாசாரத்தை, இன்னும் ஜாதி பாகுபாடுகள் அதிகரிக்க காரணம் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்க்க நினைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, தலைவர்கள் உருவாக இன்று பெரிதான / வலுவான ஒரு தூண்டுகோல் - சுதந்திரப்போராட்டம் அல்லது எமர்ஜென்ஸி போன்று - தூண்டுகோல் என்ன? குவியமாக ஒன்று இல்லை. ஆனால் பன்முனைத் தாக்குதல் நடத்த ஆயிரம் காரணங்கள் உள்ளன. பசி, ஏழ்மை, என்று ஒரு பக்கமும் அதீத செல்வம் என்று இன்னொரு புறமும் சமூக இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. ஊழல் நிர்வாகச் சீர்கேடுகளினால் இன்னொரு பக்கம் நாம் தினசரி வாழ்க்கையில் அல்லல்கள் பல சந்திக்க நேருகிறது. மக்களின் நடைமுறை வாழ்விற்கான அடிப்படை பிரச்சனைகளான நீர், சுகாதாரம், கல்வி என்று ஓட்டைகள் பல நிரப்பட வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் எந்த வாசலையாவது திறந்துவிட வேண்டாமா? ஆரோக்கியமான இளம் சக்திகள் பொது வாழ்வில் நுழைய?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எதிர்பார்ப்புதான் நான் இவர்களை ஆதரிப்பதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீண்டும் பின்னர் சேர்த்தது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;லோக் பரித்ரன் கட்சி உடைந்து விட்டது. முளைக்கும் முன்பே அழுகிய செடியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமில்லை; இந்திய அரசியலின் தாக்கம் இங்கும் உள்ளது என்பது இப்போது புரிகிறது. மற்றபடி இளைஞர்களின் வரவை அரசியலில் ஆதரிக்கும் என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண் என்பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-114520605386201287?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/114520605386201287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=114520605386201287&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114520605386201287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114520605386201287'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/04/blog-post.html' title='லோக் பரித்ரன்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-114416384901669489</id><published>2006-04-04T20:41:00.000+05:30</published><updated>2006-04-05T12:46:12.490+05:30</updated><title type='text'>Elements - குறும்படம்.</title><content type='html'>காட்சி - ஏதோ ஒரு அறையில்... உலகில் எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய பின் தலை முதலில் தெரிகிறது. நெருங்கிப் போகப் போக அவன் முன்னே இருக்கும் கணினி தெரிகிறது. வேகமாய், பட படவென்று கீ போர்டை அவன் தட்டும் ஒலி... சொல்லப்போனால் அந்த ஒலியைத் தவிர வேறு சப்தம் இல்லை. கணினி திரையில் விதம் விதமாக செய்திகள்/ எண்ணங்கள்/ விவரங்கள். அவன் கண்கள் கூர்ந்து மேய்ந்து கொண்டுள்ளன. கூடவே கைகள் பட படவென்று தட்டிக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று திரையில் ஒரு அறிவிப்பு. கணினி மின்சாரத் தடையினால் வேலை செய்வது நிற்கப்போகிறது என்று. அவன் முகம் பேயறைந்ததுபோல் ஆகிறது. சட்டென்று ஒன்றும் புரியாமல் மறுபடியும் அங்கும் இங்கும் கீ போர்டைத்தட்டுகிறான் - பதட்டத்துடன். பட்டென்று கணினி செயலிழந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே அவனும்.&lt;br /&gt;&lt;br /&gt;போதைப் பழக்கம் உள்ளவன் அது இல்லாமல் தவிப்பதுபோல் அவன் கைகள் நடுங்குகின்றன; முகம் வியர்த்து காலை நீட்டி கூரையைப் பார்த்துக் கொண்டு படுத்துவிடுகிறான். ஆனாலும் புரண்டு புரண்டு படுப்பவனுக்கு பிரமை தீரவில்லை. மறுபடி தூக்கிவாரிப்போட்டு எழுந்து உட்கார்கிறான். அறையைச் சுற்றிலும் பார்க்கிரான். கொத்துக் கொத்தாக செய்திதாள்கள். அனைத்திலும் ஒரே விதமான செய்தி -&lt;br /&gt;&lt;br /&gt;technology world;&lt;br /&gt;Terrorism of technology -&lt;br /&gt;Technology swallows your life.&lt;br /&gt;Man isolated.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரீதியில் நிறைய செய்திகள். எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெறுமையாக அவற்றைப் பார்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல அவன் முகத்தில் ஏதோ தீவிரம். அவன் விரல்கள் மெல்ல நகர்கின்றன. மறுபடி கீபோர்டில் வேகமாகத் தட்ட ஆரம்பிக்கிறான். எதிரே திரையில் ஒன்றுமில்லை - வெறும் இருட்டைத் தவிர. சற்று நேரம் கனமான அமைதி.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி ஒலிக்கிறது. எடுத்துக் காதில் வைக்கிறான். " ஹலோ.... என்ன ஆளையே காணோ? சந்தித்து ரொம்ப நாள் போல ஆகிவிட்டது?" அந்த முனையில் நண்பன் யாரோ... இவன் பதில் பேசவில்லை. பேச முடியவில்லை. முயல்கிறான் ... ஹ்ஹ¤ம்.. முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தை / குரல் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சியடைந்து ஒரு காகிதத்தை எடுத்து I am...." என்று ஏதோ எழுத பார்க்கிறான். எழுத்தே மறந்துவிட்டாற்போல் இருக்கிறது. கோபத்துடனும் பதட்டத்துடனும் வேகமாக வெற்றுக் காகிதத்தில் கிறுக்குகிறான்.&lt;br /&gt;தூக்கிப் போட்டுவிட்டு தலையில் கைவைத்தபடி அமர்ந்து விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட அமைதிக்கு பின் சட்டென்று எங்கோ ஒரு குருவி கத்தும் ஓசை. தலை நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து அறைக் கதவைத் திறந்து பால்கனியில் நிற்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று வண்ணங்கள் தெரிகின்றன. நீல வானம்; கருத்த நீலத்தில் சுற்றிலும் மலைகள். கண்ணுக்கு எட்டியவரையில் பசுமை. காற்றில் செடி கொடிகள் ஆடும் ஓசை. தூரத்தில் எங்கோ சலசலக்கும் நீரின் சப்தம். கைகளைத் தலையில் அண்டக்கொடுத்து கட்டியபடி மூச்சை இழுத்துவிட்டு, புதிய காற்றை இழுத்து சுவாசித்து ரசிக்கிறான். முகத்தில் மெல்லிய கீற்றுப் புன்னகை.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையை மாட்டியபடி வெளியே நடக்க ஆரம்பிக்கிறான். தூரத்தில் சூரிய கிரணங்கள்; மலைகள் வானம் என்று ஒவ்வொன்றாக அவன் கண்களுக்குத் தெரிகின்றன. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாக ரசிக்கிறான். நடக்க நடக்க எதிரே ஒரு புது உலகம் விரிவதை உணர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடி ஓடி ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு ரசிக்கிறான். சலசலவென்று ஓடும் ஆற்றில் கால் நனைய நிற்கிறான் படுக்கிறான். முகத்தில் பளீரென்று நீரை வாரியடிக்கிறான். நீரைத் தொடும் விரல்களில் ஓடும் புத்துணர்ச்சியை ரசிக்கிறான். விரல்களை நீட்டி னீட்டி, ஆட்டி அசைத்து ரசிக்கிறான். தரையில் ஈர மண்ணைப் பிசைந்து மலை கட்டுகிறான். மண்ணில் படம் வரைய முற்படுகிறான். ஒரு சதுரம். கீழே ஸ்டாண்ட் போல. சே. மறுபடி கணினியின் படமல்லவா வரைகிறோம்? அழித்துவிட்டு வட்டம் வட்டமாக மலரின் படம் வரைகிறான். தன்னுடைய பூ படத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து வாய்விட்டு சிரிக்கிறான். தொண்டையிலிருந்து குரல் "எஸ்".......... என்று அழுத்தமாக வருகிறது. மீண்டும் "எஸ்....." தன் குரலைத் தானே ரசிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணங்கள் குலுங்கும் இயற்கையின் அழகை ரசிக்கும் அவனது பலவித பாவனைகள் freeze frame ல் காண்பிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 6 நிமிடங்கள் - அல்லது அதிக பட்சம் 10 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் Elements. துஷார் பராஞ்ச்பாய் ( Thushar Paranjepe`) என்ற மென் பொருள் தொழில்முறையாளர் எடுத்தது. என்டிடிவியின் NDTV Profit சானலில் சினிமா கிளப் என்ற நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்றது. படம் முழுக்க ஒருவரி கூட இல்லை - நடுவில் வரும் தொலைபேசி நண்பனின் குரல் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை வரியில் என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அருமை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-114416384901669489?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/114416384901669489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=114416384901669489&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114416384901669489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114416384901669489'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/04/elements.html' title='Elements - குறும்படம்.'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-114033590745529343</id><published>2006-02-19T13:21:00.000+05:30</published><updated>2006-04-05T18:32:51.176+05:30</updated><title type='text'>அன்பே சிவம்</title><content type='html'>நேற்று இந்தப் படம் பார்த்தவுடன் மனசில் நிறைய சிந்தனைகள் ஓடிற்று. பதிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் படம் முடிந்து மனசு சற்றுக் கனமாக இருக்கும்போது ஒன்றுமே எழுதத்தோன்றாமல் தூங்கிப்போய்விட்டேன். இன்று இந்தப் படம் பற்றி இரண்டுபேர் - &lt;a href="http://icarus1972us.blogspot.com/2006/02/blog-post_19.html"&gt;பிரகாஷ்,&lt;/a&gt; &lt;a href="http://dharumi.weblogs.us/2006/02/18/189"&gt;தருமி&lt;/a&gt; - ( பிறகு சேர்த்தது, &lt;a href="http://dondu.blogspot.com/2006/02/blog-post_19.html"&gt;டோண்டுவும் &lt;/a&gt;- கொஞ்சம் தாமதமாகதான் டோண்டுவின் பதிவைப் பார்த்தேன்.)  என்னைப்போலவே அனுபவித்து பார்த்தவர்கள் எழுதியுள்ளார்கள். எனக்கும் இரண்டு வரியாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. இதோ என் கருத்து. மூன்று வாக்கியங்களில் :&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே சிவம் படம் பார்த்தேன். இதுவரைப் பார்க்காதவர்கள் கட்டாயம் டிவிடி வாங்கிப் பாருங்கள்; ஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான அன்பே - அன்புதான் - அன்புமட்டுமேதான் - சிவம், விஷ்ணு, பிள்ளையார், ஜீஸஸ், அல்லா, ............ ..... ..... .... என்று புரிவதற்காகவாவது ! ( பாக்கிக் கடவுளர்கள் பெயர்களை அவரவர் நிரப்பிக்கொள்ள இடம் விட்டிருக்கேன்.) :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-114033590745529343?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/114033590745529343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=114033590745529343&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114033590745529343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/114033590745529343'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/02/blog-post.html' title='அன்பே சிவம்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113864065708928099</id><published>2006-01-30T22:30:00.000+05:30</published><updated>2006-02-11T06:26:42.516+05:30</updated><title type='text'>கவனித்தது, பாதித்தது, ரசித்தது.</title><content type='html'>கவனித்தது&lt;br /&gt;&lt;br /&gt;மகாத்மா காந்தியின் நினைவு நாள். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான காந்தி சமாதியில் அஞ்சலி. நாற்காலிகளின் முன் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி மன்மோஹன் சிங் வைஷ்ணவ ஜனதோ மற்றும் ரகுபதி ராகவ ராஜாராம், பாட்டுகளுக்குக் கூடவே பாடியது, வாயசைப்பில் தெரிந்தது. கூடவே, அவர் அருகே இருந்த மூதாட்டி நன்றாகவேத் தூங்கிக்கொண்டிருந்ததையும் காமிராப் பார்த்துவிட்டது. இந்த மாதிரி பொது நிகழ்ச்சிகளில் வருபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அல்லது காமிராக்காரர்கள் தங்கள் லென்ஸைக் கொஞ்சம் அதட்டி வைக்க வேண்டும். கன்னா பின்னாவென்று சுற்றக்கூடாதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியில் அதிகம் கூட்டம் காணோம். அதுவும் விவிஐபிகள் உட்காரும் இடத்தில் தரையில் வெண் மெத்தைப் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இல்லாதிருத்தல் மூலம் சிறப்பு கவனத்தை ஈர்த்தவர் சோனியா காந்தி. ( Conspicuous by absence). இந்தக் காந்தி அந்தக் காந்தியை எப்படி மறந்தார்? காந்திஜி காங்கிரஸ் அமைப்பின் தூணாக, மக்களிடையேத் தூண்டுகோலாக / தேசத்தின் தந்தையாக இருந்தாரே தவிர எந்தப் பதவியிலும் கடைசிவரை இருக்கவில்லை. காங்கிரசில் அவர் சாதாரண உறுப்பினராகக் கூட பதிந்திருக்கவில்லை என்கிறது சரித்திரம். அதனால் protocol எதுவும் இல்லை என்பதால் இன்றைய காங்கிரஸ் தலைவர் அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லையோ?&lt;br /&gt;&lt;br /&gt;ம்ஹ¤ம். எங்கேயோ இடிக்கிறது. தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்கிற ஒருவர் தேசத்தின் தந்தையாகக் கருதப்படுபவரின் நினைவு அஞ்சலியில் பங்கு பெற வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;பாதித்தது&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் பெண்கள் நிறைய முன்னேறியுள்ளார்கள் என்று சென்ற வாரம் சசி தாரூர் பத்தியில் எழுதியதை ஆட்சேபித்துப் பலர் அவரைக் கேள்விக்கணைகளில் மாட்டுகிறார்கள். பெண்கள் தனியாக நடமாடமுடியாத அளவு பெண்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகிறது இங்கே. என்ன முன்னேற்றம் வாழ்ந்தது?" என்கிற ரீதியில் &lt;a href="http://www.hindu.com/mag/2006/01/29/stories/2006012900090300.htm"&gt;மனதை உருக்கும் விவரங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசித்தது&lt;br /&gt;&lt;br /&gt;என்டிடிவியில் இருந்து வெளியேறி ராஜ்தீப் சர்தேசாய் CNN - IBN ல் சேர்ந்தபின் " சபாஷ், சரியான போட்டி.." என்று கைத்தட்டுகிறார் ஊடகங்கள் பற்றி &lt;a href="http://www.hindu.com/mag/2006/01/29/stories/2006012900120300.htm"&gt;பத்தி எழுதும் செவந்தி நைனான். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"...போட்டிப் போட்டுக்கொண்டு சுவாரசியமான நிகழ்ச்சிகளை வாரி வழங்குகிறார்கள். இவ்வளவு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை ( Constructive programmes) ஒரே சமயம் பார்த்து அலுத்துப்போய், எங்காவது Zoom சேனலுக்குப் போய் பூஜா பேடி, குட்டை ஆடை அணிந்து கொண்டு அரசியல்வாதிகளையும் போலீஸ்காரர்களையும் பேட்டி காணுவதைத் தேடிப்போய்விடுவோம் போலிருக்கு - ஒரு மாறுதலுக்கு" என்று சதாய்க்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113864065708928099?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113864065708928099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113864065708928099&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113864065708928099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113864065708928099'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/01/blog-post_30.html' title='கவனித்தது, பாதித்தது, ரசித்தது.'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113846243770311227</id><published>2006-01-28T20:58:00.000+05:30</published><updated>2006-05-10T00:02:43.123+05:30</updated><title type='text'>2020 பார்வை</title><content type='html'>இன்று CNN IBN ல் ஒரு நிகழ்ச்சிப் பார்க்க நேர்ந்தது. All the President's Children.&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசு தினத்தை ஒட்டி, ஜனாதிபதி அப்துல்கலாமுடன் நிறைய பள்ளி மாணவர்களை அழைத்துப் பேச வைத்துள்ளார்கள். ஸ்ரீநகர், கௌஹாத்தி, போபால் என்று பல இடங்களிலும் வீடியோ தொடர்பு ஏற்படுத்திப் பேச வைத்துள்ளார்கள். சுவாரசியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களோடு உரையாடுவது எப்போதுமே ஜனாதிபதிக்குப் பிடித்த விஷயம் என்பதை அவரே பல முறை கூறுவது வழக்கம். தில்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள பரந்த இடத்தில் மேடைப் போட்டு இந்த இளையத் தலைமுறைக் கூட்டம். நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. மாணவர்கள் சரமாரியாகக் கேட்டதில் சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் கூறிய ஒரு பதில்: (கேள்வி என்ன என்பது சரியாக நினைவில்லை) " அரசியல் என்பது கொஞ்சம் அரசியல் - நிறைய நாட்டுக்கான வளர்ச்சி வேலைகள் என்று இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் 30 சதவிகிதம் அரசியலிலும், பாக்கி 70 சதவிகிதம் வளர்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் என்றவர் அதோடு நிறுத்தாமல், தொடர்ந்து "ஆனால் நிறைய அரசியலும் வளர்ச்சி வேலைகள் குறைச்சல் சதவிகிதம் என்று இருந்தார்களென்றால்...." என்று சிரித்தபடியே, கண்களில் குறும்பும் மிளிர, இழுத்தார். Tongue in Cheek Observation? :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவர் கேட்டார். ஜனாதிபதியான பின் நீங்கள் நினைத்தவற்றை நிறைவேற்றியுள்ளீர்களா? அப்துல்கலாம்: " இரண்டு விஷயங்கள் திருப்தியாக நிறைவேறியுள்ளன. ஒன்று என் 2020 திட்டப்படி இந்தியா வளர்ந்த நாடாக ஆக வேண்டும் என்ற என் கனவை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இரண்டாவது, நிறைய இளஞர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். இளைஞர்களிடம் நான் நம்பிக்கை வைப்பதற்கு மூன்று காரணங்கள். ஒன்று, அவர்களுக்கு பொதுவாகவே நம்பிக்கை அதிகம். செய்ய முடியும் என்ற நம்பிக்கை. இரண்டாவது, அவர்கள் மனதில் இன்னும்  நிறைய பாதிப்புகள் ஏற்படாமல், மனதில் அதிகம் பாரபட்சம் ( Bias) இல்லாமல் இருக்கிறார்கள். மூன்றாவது அவர்களின் உற்சாகம். முன்னேற்றத்திற்கு உற்சாகம் மிக அவசியம். அது இளைஞர்களிடம் இருக்கிறது."   கேட்க நிறைவாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கியமான கேள்வியும் பதிலும். ஒரு மாணவிக் கேட்டார். "பலவிதக் கலாசாரங்கள் வெளியிலிருந்து எங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்போது எப்படி இந்தியா தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு உலக அரங்கில் முன்னேறவும் முடியும்?" ஜனாதிபதியின் பதில் சற்று ஆழமாக, வித்தியாசமான அவதானிப்பாக இருந்தது. " நீங்கள் எப்படிபட்டக் கலாசாரத்தில் சூழ்ந்திருந்தாலும் நம் மரபணுவிலேயே ஒரு நெறி இருக்கிறது.  There is a genetic value in our system. வெளியில் - நடை உடைகளில் எவ்வளவுதான் மாறினாலும், இந்தியர்களுக்கு என்று இருக்கும் இந்த மரபணு  நெறிகள் நமக்கு சரியான / வெற்றிகரமானப் பாதையை வகுக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;Genetic value system ?  சிந்திக்கத் தூண்டிய ஒரு கோணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலை ஒழிக்க அவர் சொல்லும் வழி: " 50 மில்லியன் வீடுகள் / குடும்பங்கள் இருக்கின்றன என்று வையுங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உங்களைப் போன்ற குழந்தைகள் தங்கள் அப்பா /அம்மாவிடம் " லஞ்சமே வாங்காதீர்கள்" ஊழல் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தால் பெரியவர்கள் மனம் திருந்த மாட்டார்களா? என்ன குழந்தைகளா, வேண்டுகோள் விடுப்பீர்கள்தானே?" என்று கேட்டவுடன், வழக்கம்போல் மாணவர்கள் கோரஸாக ஆமாம் போட்டார்கள். குழந்தைகள் என்றில்லை. சில சம்யம் பெரியவர்கள் கூட்டத்திலும் இப்படி கேள்வி கேட்டு கோரஸாக பதில் வாங்கும் அவரது ஸ்டைல் நமக்கு இன்று நன்றாகவே பழகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பர இடைவேளையில் அப்துல்கலாம் Quotes காண்பித்தார்கள். என்னைக் கவர்ந்த ஒன்று: "சிந்தித்தல் என்பது உங்களுடைய முதன்மையான முதலீடாக / சொத்தாக இருக்க வேண்டும். சிந்திக்காமல் செயல்படும் எந்தத் தனிமனிதரும், எந்த நிர்வாகமும் முன்னேறவே முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களிடையேயும் அப்துல்கலாம் என்றால் ஒரு அபிமானம் இருக்கவே செய்கிறது. அவரது வார்த்தைகள் மட்டும் இளையத்தலைமுறையினரிடம் முழுமையாக சென்றடையுமானால் 2020 வருடத்திற்குள், 2020 பார்வை சாத்தியமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113846243770311227?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113846243770311227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113846243770311227&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113846243770311227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113846243770311227'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/01/2020.html' title='2020 பார்வை'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113836323643339634</id><published>2006-01-27T17:22:00.000+05:30</published><updated>2006-01-29T12:43:17.600+05:30</updated><title type='text'>அன்றும் இன்றும்</title><content type='html'>இதைத்தான் - அல்லது இது போன்று ஏதாவது ஒரு கட்டுப்பாட்டைத்தான் - &lt;a href="http://aruna52.blogspot.com/2005/07/blog-post_11.html#comments"&gt;அன்றே எதிர்பார்த்தேன். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நிர்வாகிகள் என்ன செய்ய முடியும் என்று அன்று பலர் வாதிட்டனர். ஒரு சிலர் புரியாமல் பேசுகிறேன் என்ற தொனியில் கூட கருத்து வெளியிட்டனர். இந்தக் குறைகளைத் &lt;a href="http://aruna52.blogspot.com/2005/07/blog-post_112106599276750352.html#comments"&gt;தமிழ்மணத்திடம் முறையிடுவதில் அர்த்தமில்லை என்றார்கள். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று I stand vindicated.&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டிகளில் உள்ள முழு விவாதங்களையும் படியுங்கள். அன்றைய நிலை விளங்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113836323643339634?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113836323643339634/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113836323643339634&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113836323643339634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113836323643339634'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/01/blog-post_27.html' title='அன்றும் இன்றும்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113740433981217386</id><published>2006-01-16T15:01:00.000+05:30</published><updated>2006-01-16T15:08:59.840+05:30</updated><title type='text'>வடிகால்கள்......??</title><content type='html'>&lt;a href="http://nunippul.blogspot.com/2006/01/14-1-2006.html"&gt;உஷாவின் பதிவில் &lt;/a&gt;இருந்த கொசுவத்திச் சுருள், எனக்குள்ளும் நிறையப் பழைய ஞாபகங்களைக் கிளப்பிவிட்டது. பூடானின் உறைபனியில் வராந்தாவில் கைகள் உறைய உறையக் கனு வைத்துவிட்டு மறு நாள் எடுக்கப் போகும்போது பனிக்கட்டியாக உறைந்த இலைகளை எடுக்க முடியாமல் போனது... ஆப்பிரிக்காவில் பத்திரிகைக் கட் அவுட் பொம்மைகள் வைத்துக் கொலு வைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஸ்காட்லாந்த் "மாமிக்கு" தாம்பூலம் கொடுத்தது, என்று வரிசையாக ஏதேதோ நினைவுகள். ஆனால் இவற்றின் ஊடே மனசில் உஷாவைப் போல் கேள்வி. எப்பாடுபட்டாவது, பழக்கத்தை விடாமல், சம்பிரதாயமாகவேனும் நம் மனதில் பண்டிகைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறதே, ஏன்? பண்டிகைகள் கொண்டாடவில்லையென்றால் நம் சம்பிரதாயங்களிலிருந்து வழுவுகிறோம் என்று ஒரு உறுத்தலா? பழக்கங்களை விட்டுவிட்டால், நாம் பிறந்த வேரின் Identity யை இழந்து விடுவோம் என்ற பயமா?&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்தவர்களின் அடுத்தத் தலைமுறையினரின் பண்டிகைக் கொண்டாடும் மனோபாவம் எப்படியிருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.... பண்டிகைகள் கொண்டாடுவது ஒரு வாழ்க்கை முறை. ஒரே மாதிரியாக இல்லாமல், ஒரு சின்ன எதிர்பார்ப்பு, புத்தாடை, - உணவு, சுத்தம் செய்தல், அலங்கரித்தல் என்று சின்ன சின்ன வேலைகள் வாழ்க்கையில் கொஞ்சம் மாறுதலைக் கொடுக்கின்றன. ஒரு விதத்தில் இது ஒருப் புத்துணர்வையும் கொடுக்கலாம். இந்த மாதிரி சின்ன சந்தோஷங்களை இந்தத் தலைமுறையினர் இழக்கிறார்களா - அல்லது இன்றையக் கால ஓட்டத்தில் - மாறுதலுக்கு பல வடிகால்கள் இருக்கும்போது, பண்டிகைகளின் மூலம் புத்துணர்வும், மாறுதலும் தேவையில்லை என்று தோன்றுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களை வரவேற்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113740433981217386?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113740433981217386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113740433981217386&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113740433981217386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113740433981217386'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/01/blog-post_16.html' title='வடிகால்கள்......??'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113699609597407038</id><published>2006-01-11T21:24:00.000+05:30</published><updated>2006-01-11T21:44:55.990+05:30</updated><title type='text'>பதிக்க ஒரு விஷயம்</title><content type='html'>எதிரில் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிறுப்பு ஒன்றிலிருந்து யாரோ சற்று உரக்க பேசுவது கேட்டது. இன்னொரு குரல் கேட்கவில்லை. சரி யாரோ தொலைபேசியில் பேசுகிறார்கள் என்று எண்ணினேன். என் வேலையெல்லாம் முடிந்து சுமார் இரண்டு மணி நேரம் பொறுத்து அறை பக்கம் வந்தபோது இன்னும் அந்த குரல் அதேபோல் கேட்ட வண்ணம் இருந்தது. இத்தனை நேரம் தொலைபேசியில் பேச்சா என்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது எதிர் மாடியில் உள்ளவர் ஒரு கண்னி முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. ஓ.. .., இணையத்தில் வெளி நாட்டில் இருகும் உறவினருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்து போனது.&lt;br /&gt;சென்னை விரைவில் ஒரு வயதானவர்கள் வசிக்கும் நகரமாகிவிடும் என்று ஒரு நண்பர் ஜோக்கடித்தார். அவர் அப்படி சொல்வதற்கு காரணம் வெளி நாடுகளில் குடியேறும் இளைஞர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே இங்கேதான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்க இங்கே பெற்றோர் இப்படி தினம் ஈ மெயில் இணையத் தொலைபேசி என்று நாளை ஓட்டுவது சகஜமாகிப் போன ஒன்று. று மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் பிள்ளைகளிடம் று மாதம் இருந்துவிட்டு வருவார்கள். நடுவில் பிள்ளைப் பேறு செய்ய என்று அம்மாக்கள் வேறு மாற்றி மாற்றி பெறு கால பணியில் செல்வதுமுண்டு. ( அமெரிக்க தூதரகத்தில் இதற்கு “பேறு கால விஸா” என்றே வேடிக்கையாக சொல்வதுண்டாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  வெளி நாட்டில் வெகு காலம் இருக்க பலருக்குப் பிடிக்கவில்லை. “அங்கே ஏதோ தங்ககூண்டில் இருப்பஹ்டு போல் உள்ளது. எல்லோரும் வேலைகு போன பின் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் அங்கே ஒரு fossil அதாவது உறைந்த உயிரினம் மாதிரி. ஏதோ அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக உட்கார்ந்திருகும் உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பேச நிறைய மனிதர்கள் வேண்டும். அதான் இங்கே வந்தால்தான் எனக்கு சரியாகிறது”. என்று சொல்பவர்கள் பலர்.&lt;br /&gt;இதில் இன்னொரு கோணம் என்னவென்றால் வெளி நாட்டிலேயே பல வருடம் இருப்பவர்களுக்கு இங்கிருந்து போகும் பெற்றோர் அல்லது உரவினருடன் அதிகம் பகிர்ந்து கொள்ள ஒன்றுமிருப்பதில்லை. அவரவர் தங்கள் வாழ்க்கை முறையில் இருந்து விடுவதால் என்றோ சேரும்போது சிந்திக்கும் சிந்தனையில் வாழ்முறையில் என்று நிறைய இடைவெளி வந்து விடுகிறது. இதைத் தவிர்க்க ஒரு முக்கிய வழி தொடர்ந்து ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருக்க வேண்டும். தொலைபேசியில் இன்று பேசுவது சுலபமாகிவிட்டது. அடிக்கடி எண்ணங்களையும், தங்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், புகைப்படங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும்போது உறவுகளில் ஒரு சங்கடமான இடைவெளி விழாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதோ எழுதிய ரொம்பப் பழைய பதிவு. ஆனால் புதிதாக வேறொன்று எழுத நேரமில்லை. புதுக் கருவிப்பட்டை, நிரல் துண்டு போன்ற சமாசாரங்களையெல்லாம் நிதானமாகப் படித்துவிட்டு, என் பக்கத்திலும் பொறுத்திய பின் ஒரு சோதனைப் பதிவு பதிக்க விஷயம் தேடினபோது அகப்பட்டது இது :-)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவும் சரியாகத் தெரியவில்லையென்றால் உதவித் தேட வேண்டியதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113699609597407038?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113699609597407038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113699609597407038&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113699609597407038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113699609597407038'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/01/blog-post_11.html' title='பதிக்க ஒரு விஷயம்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113653509421107588</id><published>2006-01-06T13:25:00.000+05:30</published><updated>2006-01-06T13:41:34.226+05:30</updated><title type='text'>"கஹானி...."</title><content type='html'>சில நாட்கள் முன்பு ஒரு கைவேலைகள் மற்றும் கலைப் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்றிருந்தேன். வீட்டிலேயே ஒரு பகுதியைக் கடையாக வைத்திருந்தார்கள். பொருட்களை வாங்கியப் பின் அந்தக் கடையின் சொந்தக்காரர் இன்னொரு பகுதியில் அவர்கள் பொம்மைகளாலும் இதர கைவேலைப் பொருட்களாலும் அமைத்திருந்த ஒரு ராமாயணக் காட்சிக்கு அழைத்துச் சென்று காட்டினார். குட்டிக் குட்டியாக பசுமையான வனமும், மலர்களும், ஆசிரமும் என்று அருமையாக இருந்தது. பெரிதாக ஒரு ஹனுமார் பொம்மை.  மிகத் தேஜஸ¤டன் விளங்கிய இருவர் அவரைச் சங்கிலியால் கட்டி இழுத்துக் கொண்டு காட்சியளித்தனர். பின்னால் ஒரு குடிசை வாசலில் இருந்தப் பெண்மணி சீதைப் போலிருந்தது. ராமாயணக் காட்சி என்று அவர் முன்பே சொல்லியிருந்ததால் அந்தப் பெண் பொம்மை, சீதை என்று யூகிப்பதில் சிரமமில்லை. உடனே சட்டென்று மற்ற இரு ஆண்களும் ராம லக்ஷ்மணன் என்று மனம் யோசிக்கும்போதே சற்று நெரடியது. ராமாயணத்தில் ஹனுமாரை ராம லக்ஷ்மணர்கள் கட்டிப் போட்டதே கிடையாதே? இதென்ன கதை என்று தோன்றியது. எங்கள் முகத்தில் இருந்த கேள்விக்கு சிரித்தவாறு அவர் விடையளித்தார். அதெப்படிங்க இவர்கள் ராம லக்ஷ்மணர்களாக இருக்க முடியும்? ஹனுமாரைவிட இந்த உருவங்கள் சிறியவர்களாக இருக்கிறார்கள் பாருங்கள்." என்ற பின் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ, இவர்கள் லவனும் குசனும் ! பிறகு கவனிக்கும்போது அவர்கள் பின்னால் ஒரு அலங்கரித்தக் குதிரையும் இருந்தது. அசுவமேதயாகக் குதிரை. சட்டென்று கதைப் புரிந்துவிட்டது. ஆனால் என் கூட வந்த மகனுக்குப் புரிய சற்று நேரம் ஆயிற்று. அவனுக்குத் தெரிந்த ராமாயணம் "அமர்சித்திரக் கதா" போன்ற சிறுவர் கதைப் புத்தகங்கள். ஆனால் பெரும்பாலானக் கதைப் புத்தகங்களில் இதிகாசங்கள் விரிவாக முழுவதும் இருப்பதில்லை.&lt;br /&gt;சிறுவர்களுக்கு ஏற்றப் புத்தகங்களுக்கு இன்றும் பஞ்சம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் இந்தப் பஞ்சம் தமிழில் மிக அதிகம் என்று தோன்றுகிறது. இதிகாசங்களை விட்டால், தற்காலச் சிறுவர்களின் கற்பனைக்கும், ஆற்றலுக்கும் தீனி போடும் வகையில் புத்தகங்கள் அதிகம் கிடையாது. சென்னையில் இப்போது புத்தக கண்காட்சி நடை பெறுகிறது. கடைகளை அலசினால், இந்த நிலையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்தச் சிந்தனையெல்லாம் இங்கே தோன்றக் காரணம், சென்ற வருடம் பாஸ்டனில் தொடங்கப்பட்ட ஒரு &lt;a href="http://www.kahani.com/about.php"&gt;சிறுவர் பத்திரிகைப் &lt;/a&gt;பற்றி படித்ததுதான். இது, சிறுவர்களுக்காக, சிறுவர்களால், சிறுவர்களைப் பற்றி மூன்று இந்தியத் தாய்மார்களால் தொடங்கப்பட்ட ஒருப் பத்திரிகை. இன்று ஊடகத்துறையில் பலரது ஆர்வத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kahani.com/current.php"&gt;" கஹானி" &lt;/a&gt;என்ற இந்திப் பெயரில் வரும் இந்தப் பத்திரிகையில் பெரும்பாலும் சிறுவர்கள் எழுதுகிறார்கள். பெரியவர்களும் சிறுவர்களுக்காக எழுதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி நாடுகளில் வாழும் /வளரும் பல குழந்தைகள் பல்வேறு கலாசாரங்களுக்கிடையே குழம்பாமலும், வெளி நாட்டு சூழலில் தங்கள் பின்னணியைக் கண்டு கலங்காமல் யதார்த்தமாக வளரவும் உதவும் எண்ணத்துடன் இந்தப் பத்திரிகைத் தொடங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பத்திரிகையை இணையத்தில் மேலாக ஒரு கண்ணோட்டம் விட்டேன். சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர் புத்தகங்கள் எழுதும் பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளார்கள். ஹாரிப்பாட்டர், எனிட் பிளைட்டன் போன்ற புத்தகங்கள் சிறுவர்கள் கவனத்தை ஆட்க்கொண்டிருக்கும்போது, இது போன்ற பத்திரிகைகள் நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளி நாட்டில் வாழும் தமிழ்ச் சிறுவர்களுக்காக, தமிழில் இது போல் என்று, யார் தொடங்கப்போகிறார்கள் !??&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, இங்கேயும்  - தமிழ்நாட்டிலும் - சிறுவர்கள் புத்தகங்கள் / பத்திரிகைகள் அதிகம் காணோம். எனக்குத் தெரிந்தது கல்கி குழுவினரின் கோகுலம் ஒன்றுதான் பத்திரிகை. அந்தக் காலத்து அம்புலிமாமா என்றோ காணாமல் போய்விட்டது. ஆங்கிலத்திலும் கூட அவ்வளவாகக் காணோம். இன்று விதம் விதமாக தொழில் ரீதியாக, niche - பத்திரிகைகள் - வாகனங்களுக்கு, ரியல் எஸ்டேட், வணிகம் என்று பலவித துறை சார்ந்தப் பத்திரிகைகள் வாளர்ந்து வருகின்றன. பெண்களுக்கு என்று இருக்கும் ரகங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் சிறுவர்களுக்கு என்று / இளைஞர்களுக்கு என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்கால சமுதாயத்தின் மீது நாம் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113653509421107588?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113653509421107588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113653509421107588&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113653509421107588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113653509421107588'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/01/blog-post_06.html' title='&quot;கஹானி....&quot;'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113612894699894463</id><published>2006-01-01T20:47:00.000+05:30</published><updated>2006-01-01T20:52:27.010+05:30</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6388/174/1600/IMG_2307.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/6388/174/400/IMG_2307.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவுக்குப் பின்னே விடியல் வராமலேயா போய்விடும்? இதோ இன்னொரு விடியல் :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;             அனைவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக்க நட்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113612894699894463?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113612894699894463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113612894699894463&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113612894699894463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113612894699894463'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2006/01/blog-post.html' title='புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113544807989178404</id><published>2005-12-24T23:07:00.000+05:30</published><updated>2005-12-24T23:44:39.906+05:30</updated><title type='text'>தும்பா ? வாலா?</title><content type='html'>"...ஒரு கல்லூரியை இடிக்கக்கூடாது என அதன் 100 வருஷப் பாரம்பரியத்தைச் சொல்லிப் போராடித் தடுத்த தமிழ்நாடு, ஆயிரம் வருஷப் பாரம்பரியம் கொண்ட நீர் நிலைகளை, நம் சொத்தாக உணரவில்லை என்பதுதான் பெரிய சோகம் !...."&lt;br /&gt;&lt;br /&gt;மண்டையில் அடித்தால்போல் ஆணித்திரமாக உறைக்கும் வரிகள். இந்த வார &lt;a href="http://www.anandavikatan.com/"&gt;விகடனில் &lt;/a&gt;  ஒரு  கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;" கடந்த நூறு வருடங்களில் ஆயிரம் மில்லி மீட்டருக்கு அதிகமான மழை தமிழகத்தில் ஏறக்குறைய 10 முறையாவது பெய்திருக்கிறது. 1903ம் ஆண்டு....60'ல் 1227 மி.மி; 69'ல் 1032 மி.மி; 85ல் 1275மி.மீ;" எனப் பட்டியலிட்டு, அப்போதெல்லாம் மழை இப்படி மக்கள் வசிக்கும் வீடுகளில் அத்துமீறி நுழையவில்லை; ஆறுகளின் கரைகள் காணாமல் போகவில்லை. ஏரிகள் உடையவில்லை. குளங்கள் வழியவில்லை. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பெரிய இழப்புகள்? என்று கட்டபொம்மன் கணக்கில் கேள்விகளை எடுத்துக்கொண்டு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான டாக்டர் ஜனகராஜனின் கதவைத் தட்டியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு, அருமையாக ecology ( தமிழில் என்ன என்று யாராவது கூறி உதவ முடியுமா?) ரீதியில் விளக்கம். ஜனகராஜன், எப்படி இயற்கை நமக்களித்திருக்கும் நீர் நிலைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என விளக்குகிறார். ஆனால் இந்தியா உணவுத் தேவையில் தன்னிறைவு அடையக் காரணமான பசுமைப் புரட்சியும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் என்று கூறுவதுதான் ஆச்சரியமாகவும் புரியாமலும் இருக்கிறது. கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உபயோகப்படுத்த முற்பட்டதால் விவசாயிகள் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது இவர் சொல்லும் ஒரு கோணம். நீர்ப் பாசனத்துக்கு இந்த இயற்கை நீர் நிலைகளை நம்பியிருந்தால் இவைத் தூர்ந்து போக விட்டிருக்க மாட்டார்கள் என்கிறார். என் மூளைக்கு எட்டியவரையில் இது எப்படி என்று புரியவில்லை. பாசனத்திற்கு, நீர் நிலைகளின் நீர் போதாமல்தானே நிலத்தடி நீருக்குத் தாவினார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மொத்தத்தில் கவனம் பெற வேண்டியக் கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் NDTV யில் 24 hours என்ற நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் தேநீர் கடை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தியபடி ஆதிவாசிகளின் குறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே ஒரு சுயேச்சைப் பத்திரிகையாளராக பணி செய்யும் தயாமணி பர்லாவுடன் 24 மணி நேரம் சுற்றுகிறார் என்டிடிவியின் ராதிகா போர்டியா. தயாமணி ஒரு ஆதிவாசி; குழந்தைப்பருவத்தில் கொத்தடிமை நிலையில் இருந்துவிட்டுப் பின்னர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கி, கிடைத்த நல்ல வேலையை உதறிவிட்டு ஆதிவாசிகளின் குரல்களுக்கு ஒரு பிரதிநிதியாக பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய தேநீர் கடையில் பல பத்திரிகையாளர்கள் கூடி செய்திகள் / நாட்டு நிலவரங்கள் அலசுவதும் வழக்கமாம். எண்டிடிவியின் இந்த நிகழ்ச்சிக்கான சுட்டி இல்லை. ஆனால் தயாமணியைப் பற்றி மேலும் அறிய &lt;a href="http://aidindia.dyndns.org/site/new/index.php?option=com_content&amp;task=category&amp;amp;sectionid=16&amp;id=93&amp;amp;Itemid=139"&gt;இங்கே பார்க்கலாம். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பெரும்பாலும் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக முக்கியமாக எந்த விஷயங்களில் அக்கறை காட்டி போராட்டம் நடத்த வேண்டுமோ, அதைச் செய்யாமல் மேம்போக்காக எதெதெற்கோப் போராடிக்கொண்டிருக்கிறோம். பாரம்பரிய மிக்க கட்டிடத்திற்கு நடத்திய ( குவீன் மேரீஸ் கல்லூரி) போராட்டம் தேவைதான். அதில் சந்தேகமில்லை - பழைய மாணவி என்ற முறையில் நானும் அதில் பங்கேற்றேனே! ) ஆனால் இன்னும் பல முக்கிய விஷயங்களை நாம் போராடிப் பெற தவறுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் நடந்தால் சுற்றுப்புற அசுத்தமும், சுகாதாரக்கேடுகளும், பசியும், பட்டினியும், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, என்று ஆரம்பித்து எத்தனையோ "எரியும்" விஷயங்கள் மனசை உலுக்குகின்றன; எப்போது விழித்துக்கொள்வோம் ? சினிமா நடிகர்கள் பேசுவதும், அரசியல் பேரங்களும், விளையாட்டு வீரர்களும் மகக்ள் கவனத்தையும் நியூஸ்பிரிண்ட் பக்கங்களையும் தொலைக்காட்சி நேரங்களையும் ஆக்கிரமிப்பு செய்யும் அதே அளவு நம் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சனைகள் நமக்கு உறைக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அசாத்திய சகிப்பு தன்மைதான் நமக்கு !! அல்லது "கண்டும் காணாமல்" போகும் அளவு நாம் ஊறி விட்டோமோ?&lt;br /&gt;&lt;br /&gt;தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் குணம் மட்டும் இருந்துகொண்டேதான் இருக்குமோ? ஊடகங்களும் பெரும்பாலும் இப்படி தும்பு - வால் ரீதியில்தானே இயங்குகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட இரண்டு ஊடகங்களிலும் அவ்வப்போது அபத்தமாக வரும் செய்திகள் /கட்டுரைகளுக்குப் பிராயச்சித்தமாக இது போன்ற செய்திகள் / நிகழ்ச்சிகள் ஈடுகட்டுகின்றன என்பது என் எண்ணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113544807989178404?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113544807989178404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113544807989178404&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113544807989178404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113544807989178404'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/12/blog-post_24.html' title='தும்பா ? வாலா?'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113376603774024374</id><published>2005-12-05T12:25:00.000+05:30</published><updated>2005-12-05T12:30:37.753+05:30</updated><title type='text'>தேசிய அக்கறை</title><content type='html'>ஒரு பார்வையில் குற்றம் கண்டுபிடிப்பது சரியல்லதான். ஆனாலும் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாப் பத்திரிகையைப் பிரித்துப் படித்தவுடன் ஏதோ உறுத்தியது. தற்போது ஒரு வாரமாக மும்பையில் இருப்பதால் சென்னையின் புயல், வெள்ளப் பாதிப்பைத் தூரத்தில் இருந்து பார்க்கும்படி உள்ளது. திரும்பிச் சென்றபின்தான் நிலவரத்தை நேரில் பார்க்க வேண்டும். இதன் நடுவில் தினம் தொலைக்காட்சி, இணையம் என்று சென்னை நிலவரத்தைத் தேடித்தேடிப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இருக்கும் இடத்தில் சென்னைச் செய்தித்தாள் கிடைக்காமல் எங்கேயோப் போய் வாங்கிக் கொடுத்தார்கள். இந்த நிலையில் தினசரி காலையில் கிடைக்கும் உள்ளூர் பேப்பரில் நம்மூர் செய்திகளைத் தேடத்தானே தோன்றும் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் செய்தித்தாளைப் பிரித்தால் - முதல் பக்கம் வேண்டாம் - எங்காவது உள்ளே கூடவா சென்னை வெள்ள நிலவரம் பற்றி செய்தி இருக்காது? இல்லையே...... உள்ளே ஒரு மூலையில், நிவாரண உதவிகள் அளிக்க அரசு உறுதி பற்றி முழுசாக ஒற்றை வாக்கியம்தாம் சென்னை மழை பற்றி மொத்த செய்தி. ஆனால் தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஆசிரியையிடம் கடும் தண்டனை வாங்கிய மாணவர்கள் என்று ஒருப் பெட்டிச் செய்தி - நாலு பத்திகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களை அநியாயமாகத் தண்டித்த இந்தச் செய்தி முக்கியம்தான். அதே சமயம், அதே மாநிலத்தில் - நாட்டில் ஒரு முக்கியமானப் பகுதியில் - வெள்ளம் மழை என்றால் தேசியச் செய்தித்தாள்களில் செய்திகள் வர வேண்டாமா? உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து Local வாசனையுடன் பத்திரிகைகள் வருவது இன்றைய Trend. ஆனால் இந்த அளவு மற்ற மாநிலங்களின் முக்கியச் செய்திகளைக் கூட இருட்டடிப்பு செய்வதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தில் மனதில் தோன்றும் ஒரு ஒப்பு நோக்கையும் தவிர்க்க முடியவில்லை. நியூ ஆர்லின்ஸின் வெள்ளச் செய்திகளை மேற்கு மூலையில் இருக்கும் சான் ஹோஸே மெர்குரி நியூஸில் பத்திப் பத்தியாக தலைப்புச் செய்திகள் / இதர விவரங்கள் படித்த நினைவு வருகிறது. ஏன் இந்த தேசிய அக்கறை, டைம்ஸ் ஆப் இந்தியாவில் காணவில்லை என்று தோன்றுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் சற்று பரவாயில்லை. உள்ளே மூன்று பத்தி இஞ்சுகளில் செய்தியும், பக்கத்தில் ஒரு படமும்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர் முக்கியத்துவம் இருக்க வேண்டியது பத்திரிகைகளுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் தேசீயப் பார்வை இல்லாமல் குறுகிப் போய்க்கொண்டிருக்கின்றன. இது சரியல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113376603774024374?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113376603774024374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113376603774024374&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113376603774024374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113376603774024374'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/12/blog-post.html' title='தேசிய அக்கறை'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113302422791168382</id><published>2005-11-26T22:20:00.000+05:30</published><updated>2005-11-26T22:27:07.926+05:30</updated><title type='text'>புளூக்கர் விருது !!</title><content type='html'>இல்லீங்க. எழுத்துப்பிழை அல்ல. புளூக்கர் என்றுதான் சொன்னேன் !!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாசமா சென்னை மழைப் போல ( ஹ்ம்ம்.. இப்படி சொல்லவும் ஒரு காலம் வந்ததே...) விடாமல் வலைப் பதிவில் எழுதுகிறீர்களா? எழுதி எழுதி புத்தகமேப் போடலாம் என்று ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறீர்களா? யார் கண்டார்கள்? நீங்கள் ஒரு வேளை புளூக்கர் விருது வாங்கிவிடுவீர்களோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;புக்கர் விருது தெரியும். அதென்ன புளூக்கர் விருது?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று என் தபால் பெட்டியில் வந்த ஒரு செய்தித் தொகுப்பிலிருந்து வந்த &lt;a href="http://www.lulublookerprize.com/"&gt;செய்தி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் / இரண்டாயிரம் / நாலாயிரம் டாலர்கள் என்றெல்லாம் கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.lulu.com/"&gt;இதை நடத்துபவர்களுக்கு&lt;/a&gt; ஜனவரி 30க்குள் போட்டிக்கான விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டுமாம். ஹ்ஹ்ம்ம்.. சீக்கிரம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய பி.கு: புளூக்கர் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;போச்சுடா - சப்பென்று ஆகிவிட்டதோ? :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113302422791168382?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113302422791168382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113302422791168382&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113302422791168382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113302422791168382'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/11/blog-post_26.html' title='புளூக்கர் விருது !!'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113233679833153679</id><published>2005-11-18T23:24:00.000+05:30</published><updated>2005-11-18T23:35:02.746+05:30</updated><title type='text'>தகவல் திருவிழா</title><content type='html'>திசைகள் நவம்பர் இதழில் எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;துனிசியாவில் தகவல் தொழில் நுட்பத்திருவிழா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் இரண்டு நாள் ஒரு தகவல் திருவிழா நடக்கப்போகிறது. அதென்ன தகவல் திருவிழா?&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில் நுட்பம் பெருகி வரும் இந்நாளில் அபரிதமானத் தகவல்கள் சில சமயம் நம்மைக் குழப்புகின்றன. அல்லது சில சமயம் சரியானத் தகவல்கள் சரியான முறையில் தேவையானவர்களுக்கு சென்றடைவதில்லை. உலகில் ஒரு பக்கம் சிலர் தகவல் வெள்ளத்தில் திக்குமுக்காடுகிறார்கள்; வேறு சிலரோ அடிப்படைத் தகவல் சாதனத்துக்கூட வசதி இல்லாமல் தகவல் வரட்சியில் இருக்கிறார்கள். இந்த இடைவெளிக்குப் பாலம் கட்டுவதுதான் இந்தத் திருவிழாவின் - ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( &lt;a href="http://www.itu.int/wsis/"&gt;World Summit on Information Society.) &lt;/a&gt;- WSIS.நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் இந்திய வலைப்பதிவுலகில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கல்வி நிறுவனம் பற்றி ஒரு இளைஞர் பத்திரிகையில் வந்தத் தகவல்களை வைத்து ஒரு ஆங்கில வலைப்பதிவாளர் தன் வலைப்பதிவில் அந்தக் கல்வி நிறுவனம் பற்றி கேள்விகளை எழுப்பினார். அந்த நிறுவனம் தன்னிடம் இருப்பதாக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் சிறப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று குற்றம் சாட்டி அடுத்தடுத்துக் கருத்துகள் வலையுலகில் வர ஆரம்பித்தன. அதே சமயம், இன்னொரு பக்கம் அந்த நிறுவனத்தை வேண்டுமென்றே அபாண்டமாகத் தாக்குவதாக பதில் வாதங்கள் அந்த நிறுவனத்தின் மாணவர்கள் / ஆதரவாளர்கள் சொல்வதாக வெளியாயின.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்; புகைப் பெரும் நெருப்பாகப் பற்றிக் கொண்டது. அவர் எழுதியதைக் கண்டித்தும் ஆதரித்தும் சரமாரியாக ஆங்கில வலைப் பதிவுலகில் விவாதங்கள் நடந்தன. பாதிக்கப்பட்ட நிறுவனம் அந்த வலைப்பதிவாளர் மீது அவதூறு வழக்குப் போட்டது. அவர் வேலை செய்துகொண்டிரூந்த நிறுவனத்தையும் அது விடவில்லை. அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படாவிட்டால் அந்த அலுவலகம் முன்பு மறியல் செய்யப்போவதாக சொன்னவுடன், அந்த வலைப்பதிவாளர், தன் நிறுவனத்தின் மீது பழி வராமல் இருக்கத் தன் வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களில் அந்த நிறுவனம், வணிக நிறுவனம்போல் பெருமளவு செலவழித்து விளம்பரம் செய்து தங்கள் நிறுவனத்திற்கு மாணவர்களைக் கவர முயற்சித்ததோ அல்லது அந்த நிறுவனத்தின் தரம் பற்றி சர்ச்சைகள் கிளம்பியதோ, அல்லது யார் தரப்பு வாதம் சரி என்பதோ இப்போது கேள்வியல்ல. கல்வியும் இன்று ஒரு லாபகரமான வணிகங்களில் ஒன்று என்பதைப் புற்றீசல் போல் பெருகி வரும் வணிக ரீதியிலான கல்வி நிறுவனங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக தொழில் கல்வி நிறுவனங்கள் இந்த வகையில் நிறையவே உள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பிடும் குறியீடுகளைக் கொண்டும், அந்த நிறுவனத்திற்குத் தொழிலுலகில் இருக்கும் மதிப்பையும் ஆராய்ந்துப் பார்த்து, தேர்ந்து எடுத்துச் சேருவது இன்று பயனீட்டாளர்களின் பொறுப்பாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பேச்சு /எழுத்து சுதந்திரம் பற்றி பல கேள்விகளை இந்தப் பிரச்சனை எழுப்புகிறது. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றியோ கருத்தைச் சொல்வதற்கு ஏதும் வரம்பு / வரைமுறை இருக்க வேண்டுமா? குற்றம் / குறை தென்படில், அதைச் சுட்டிக்காட்ட ஏதும் நியதிகள் உள்ளதா? பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தனி மனிதரையோ அல்லது நிறுவனத்தையோத் தாக்குவது சரியா? அப்படியே தாக்கிக் கருத்து வெளி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் பாதித்தவர்களைக் கடுமையாக தண்டிக்க விழைவது சரியா? மேலே கண்டப் பிரச்சனையில் அந்த நிறுவனம் விமரிசனம் வாழ்வில் ஒரு அம்சம் என்று பேசாமல் இருந்திருக்கலாம். ( ஒரு பத்திரிகைப் பேட்டியில் அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவர் கூறினார் - வலைப்பதிவுகளில் எழுதப்படுவதைத் தாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று. அப்படியானால், அந்த வலைப்பதிவாளர் மீது வழக்கேத் தொடர்ந்திருக்க வேண்டாமே என்ற கேள்வி எழுகிறது.) அல்லது தங்கள் நிலையை விளக்கி ஊடகங்களில் இன்னொரு முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்கலாம். இப்படி செய்யாமல், எழுதியவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்ததோ அல்லது கருத்துக் கூறியவர்களில் ஒருவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வைத்ததோ சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் சில மாதங்கள் முன்பு, ஒரு பெரிய இந்தியப் பத்திரிகை நிறுவனம் வேறொரு வலைப் பதிவாளர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இன்னும் உலகளவில் சொல்லப்போனால், கைதான அமெரிக்கப் பத்திரிகையாளர் நியூயார்க் டைம்ஸ் ஜூடித் மில்லர் மீதானக் குற்றச்சாட்டு, ( தனக்குத் தகவல் கொடுத்தவர் பெயர் சொல்ல மறுத்தக் குற்றம் - பின்னால் மனம் மாறி அல்லது குற்றச்சாட்டிலிருந்து விடுபட, மசிந்தார் என்பது வேறு விஷயம் ) மற்றும் சீனாவில் தினாமன் சதுக்க 15 வது ஆண்டு நிறைவு நினைவு கூர்தல் விஷயங்களை ஊடகங்கள் "கண்டுகொள்ள வேண்டாம்" என்று சீன அரசாங்கம் எச்சரித்ததைப் பற்றி வெளியிடவேண்டாம் என்ற ஆணை இருந்தும் மீறி, இந்தத் தகவலை மின் அஞ்சல் மூலம் வெளியுலகுக்குத் தெரியபப்டுத்தி, அதனால் கைதான சீன நிருபர் ஷி தவோ, என்று தகவல் பரிமாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சந்தித்தவர்கள் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மேலே உள்ளக் கேள்விகள் அவசியமாகின்றன. கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட வேண்டுமா? வலிமையுள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கினால் உண்மைகள் எப்படி வெளியே வரும்? ஆனால் தனி மனிதர் அவதூறாக மாறாமல் கருத்துச் சுதந்திரத்தின் கண்ணியம் கடைப்பிடிக்க முடியுமா? இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? யார் நிர்ணயிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகளும் பதில்களும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால் இப்படி பல விஷயங்களில் எது சரி எது சரியல்ல என்ற பாகுபாடு இன்று மங்கலாக உள்ளது. நிஜம் எங்கேயோ நடுவேப் பொதிந்துள்ளது. தகவல் வெள்ளத்தின் விளைவுகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம், தகவல் வெள்ளத்தினால் - தகவல் தொழில் நுட்ப மேன்மையால் கிடைக்கும் அனுகூலங்களும் ஏராளம். 2000 ம் ஆண்டு அகமாதாபத் பூகம்பத்தின் போது உடனுக்குடன் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும், காணாமல் போனவர்கள் உறவினர்கள், நண்பர்கள் சேரவும் காரணமாக இருந்தது தகவல் தொடர்பு சாதனங்கள். 2004 சுனாமியின் போதும் இதே நடந்தது. அதே சுனாமியின்போது இந்தோனேஷியாவில் பாதிப்பு வந்ததுமே ஒரு எச்சரிக்கைத் தகவல் உடனுக்குடனே இதர ஆசிய நாடுகளை வந்து சேர்ந்திருந்தால் ஓரளவேனும் பாதிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இப்படி ஆக்கலும் அழித்தலும் என்று பலவித பரிமாணங்கள் கொண்டுள்ளது இன்றையத் தகவல் பரிமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமுதாயத்தில் பலவித நல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்றம், ஒரு சமுதாயத்தின் பார்வையையும் மாற்றக்கூடிய சக்தி படைத்ததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினி, இணையம், செயற்கைக்கோள் தொலைக்காட்சித் தொடர்புகள் என்று பலவிதத் தகவல் மற்றும் தொடர்பு சாதனங்களின் தொழில் நுட்ப வளர்ச்சியால் பலவிதங்களிலும் பல திசைகளிலிருந்தும் வினாடிக்கு வினாடி செய்திகள் / தகவல்கள், அவை உருவாகும் நேரத்திலேயே, பூகோள ரீதியான தடங்கல் ஏதுமின்றி நம்மை வந்தடைகின்றன. இவை, நம் அன்றாட வாழ்க்கையில், நாம் செய்யும் வேலைகளில், நம் எண்ணங்களில் என்று பலவிதங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கணிசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், சுனாமி, சூறாவளி, பூகம்பம் அல்லது பஞ்சம், போர் என்று உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் உடனுக்குடன் உலக மக்கள் பலவித உதவிகளை வாரி வழங்க உதவுகின்றன. மருத்துவம், பொருளாதாரம், தொழில் நுட்பம், மற்றும் கலை வளர்ச்சி என்று பல விதங்களில் பரிமாறிக்கொள்ளப்டும் தகவல்கள் மனிதனின் வாழ்க்கை இன்னும் மேம்பட உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதே தகவல் பரிமாற்றங்கள், அனாவசிய வதந்திகளும் ஆதாரமில்லாத செய்திகளும், தனி நபர் தாக்குதல்களும் உருவாகவும் காரணமாகின்றன. இப்படி நல்லதும் பொல்லாததுமாகக் கலந்து தகவல் உலகம் இன்று உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;செய்தி அல்லது தகவல் என்பது இன்றைய வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத அம்சமாகிவிட்ட நிலையில் எவ்வளவு தூரம் நமக்கு வந்து சேரும் தகவல்கள் உண்மையானவை/ நம்பத்தகிந்தவை? யார் எந்த செய்திகளை வெளியிடுகிறார்கள்? ஒரு செய்தியின் பின்புலம் என்ன? எவ்வளவு தூரம் இந்தத் தகவல் பரிமாற்றங்கள் சாதரண மக்களைப் பாதிக்கின்றன? பொருளாதார லாபங்கள் எவ்வளவு தூரம் தகவல்கள் பரிமாற்றங்களை உருவாக்குகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆயிரம் கேள்விகள் இன்று தோன்றுகின்றன. பலவிதமான ஊடகங்களின் மூலம் ஏற்படும் பிரமாண்டமான தகவல் வெடிச்சிதறலின் ஒவ்வொரு துணுக்கும் நம்மை வந்து சேரும்போது அதனூடே பலவித பரிமானங்கள் அடங்கியுள்ளது. இதில் உண்மை எங்கே என்று தேடுவது சாமான்யமான காரியம் அல்ல. பல சமயங்களில் ஒன்றுமில்லாத சமாசாரங்கள் ஊடங்களிடையே பெரிதாக சித்திரம் தீட்டப்படும். சாதாரண மக்களின் வாழ்க்கையில் முக்கியமாக இருக்கும் பல விஷயங்கள் இந்த அதீதத் தகவல் வெள்ளத்தில் எங்கோ அடிபட்டுக் காணாமல் போய்விடும். வெள்ளமாகக் கொட்டும் தகவல் காட்டாற்றில், உண்மை என்பதை, பல சமயங்களில் வைக்கோல் போரில் ஊசித் தேடும் வேலையாகதான் ஆகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்தத் தகவல் வெள்ளம் சமாசாரங்களெல்லாம் உலகெங்கிலும் தொழில் நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகித சமுதாயத்தினரிடையேதான். கணிசமான அளவு உலக மக்கள் இன்னும் இந்தத் தகவல் மழையின் பயனை அடையாமல் இருக்கிறார்கள். இந்த தொழில் நுட்ப இடைவெளியைக் ( Digital Divide ) குறைக்கவும், தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களின் ஆதாயங்கள் உலகில் எல்லா மக்களையும் சென்றடையவும் உலக நாடுகள் உட்கார்ந்து திட்டமிடுவது அவசியம் என்று தொடங்கியதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( World Summit on Information Society.) - WSIS.&lt;br /&gt;1998 ல் நடைபெற்ற உலகத் தொலைத் தொடர்பு சங்கத்தின் ( International Telecommunication Union - ITU) மாநாடு ஒன்றில், வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாடு பரிந்துரைத்ததின் பேரில் இப்படி ஒரு உலகத் தகவல் சமுக உச்சி மாநாடு ஒன்றை நடத்த ஐ. நா சபையிடம் கோர வேண்டும் என்று ஆரம்ப வித்திடப்பட்டது. உலகத் தொலைத் தொடர்பு சங்கம் இந்த உச்சி மாநாட்டை இரண்டு பகுதிகளாக நடத்தத் தீர்மானித்தது. ஐ நா சபையின் ஜெனரல் அசெம்பளியின் ஒப்புதலும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகதானே கடந்த டிசம்பர், 2003ல் உச்சி மாநாட்டின் முதல் கட்டம் ஜெனிவாவில் நடந்தேறியது. இப்போது இரண்டாம் கட்டம், துனிசியாவில், இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை இரண்டு நாள் நடக்கப்போகிறது. " மற்ற உச்சி மாநாடுகளிலிருந்து இந்த மாநாடு சற்றே வேறுபடுகிறது - பொதுவாக உலகில் இருக்கும் பலவித அபாயங்கள் பற்றிதான் மாநாடுகளில் அலசுவார்கள். இங்கோ, தகவல் பரிமாற்றத்தை எப்படி உலகைற்கு ஆதாயமான வழிகளில் உபயோகித்துக்கொள்ளலாம் என்று திட்டமிடப்படுகிறது. " என்று ஐ நா சபையின் தலைவர் கோபி அனான் கூறியுள்ளார். ஐ நா சபையின் Millennium Development Goals என்ற திட்டம் நிறைவேறவும் இந்த உச்சி மாநாட்டில் தகவல் தொடர்புகள் மூலம் வழிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி மனிதர் வாழ்க்கை முன்னேற, அறிவு சார்ந்த வளர்ச்சி பெற, உலகில் ஜனநாயகம் தளர, பரஸ்பரம் நட்பு விரிய, என்று சுமார் 67 குறிக்கோள்கள் அடையாளம் காணப்பட்டு வரையரைக்கப்பட்டுள்ளது. இந்த குறிக்கோள்கள் ஜெனிவாவில் 2003 ல் நடந்த முதல் கட்ட மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. (&lt;a href="http://www.itu.int/wsis/docs/geneva/official/dop.html"&gt;Declaration of Principles&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எப்படி குறிக்கோள்களை அடையப்பபோகிறார்கள் என்பது Plan of Action அறிக்கையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;a href="http://www.itu.int/wsis/docs/geneva/official/poa.html"&gt;திட்ட அறிக்கையில்&lt;/a&gt; குறிப்பிடத்தகுந்த சில அம்சங்கள்: உலகில் அரசாங்கங்களுக்கு எத்தனை முக்கிய பங்கு உள்ளதோ அதே அளவு / சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே - உலக மக்களுக்குத் தகவல்கள் சரியான முறையில் சென்றடையச் செய்வதில் தனியார் நிறுவனங்களுக்குப் பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி தகவல்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில் பொது மக்களுக்கும் அதிக பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களை உபயோகித்து அறிவுசார் வளர்ச்சி, சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதும், எந்த ஒரு தகவலும் தங்குத் தடையில்லாமல் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வழி வகைகள் செய்வதும், இந்த திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒரு பகுதி. உறுப்பினர் நாடுகளில் மகளிருக்கு இந்தத் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் ஆதாயங்கள் முழுமையாகப் போய்ச்சேரவும் பிரத்தேயக வழி செய்யப்படும். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கும் பின் தங்கிய நாடுகளுக்கும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.ஆனால் பக்கம் பக்கமாக உள்ள குறிக்கோள்கள் பகுதியிலாகட்டும், செயல் திட்டம் வரையறுத்துள்ள பகுதியிலாகட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடினாலும் ஆரம்பத்தில் குறிப்பிட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில், சரியான தகவல்கள் பொதுமக்களைப் போய்ச் சேர திட்டவட்டமான வழிகள் ஏதும் அடையாளம் காணப்பட்டாற்போல் தெரியவில்லை. அதேபோல் சமுத்திரம் போல் தகவல்கள் வந்து விழுந்த வண்ணம் இருக்கும் இணையத்தை ஏதாவது ஒரு நெறி முறைக்குள் கொண்டுவரப்படுமா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.இன்று பெரும்பாலும் இணையத் தளங்களின் சேவை மையங்கள் ( Servers) அமெரிக்காவில் இருப்பதாலும், இணையம் முதன் முதலில் வேரூன்றியது அங்கேதான் என்பதாலும், இன்றும் இணையத் தள முகவரிகள் அளிக்கும் மையம் அமெரிக்காவில் இருப்பதாலும் இன்று அமெரிக்கா ஒரு மையக்கட்டுப்பாட்டகம் போல் இயங்குகிறது. இந்த நிலை மாறி, இணையத்தின் கட்டுபாடுகள் இதர உலக நாடுகளிடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய, ஆசிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்படி செய்தால், இணையத்தின் பாதுகாப்புக்குப் பங்கம் வந்துவிடும் என்று அமெரிக்கா சொல்கிறது. இப்படி பல விவாதங்கள் இருந்தாலும், இணைய ஆளுமைக்கு ( Internet Governance) ஒரு வரைபடம் தயாரிப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய அமசம்.சரி. இப்படி எல்லாம் பல திட்டங்கள் ஜெனிவாவில் முன் வைக்கப்பட்டது. இப்போது துனிசியாவில் என்ன செய்யப்போகிறார்கள்? அந்த செயல் திட்டங்களை ஒவ்வொரு நாட்டிலும், உறுப்பினர் நாடுகளின் மூலை முடுக்கெல்லாம், நடைமுறையில் செயலாக்க என்ன முறைகள் கையாளப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சுவாரசியமான விஷயம், ஐ நா தலைவர் கோபி அனான், இந்தத் தகவல் தொடர்பு உலகின் சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிரது என்று அறிவித்துள்ளது. காரணம் இணையத்தில், மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சென்ற தலைமுறையினரைவிடவும், அதிக அளவு ஆர்வமும், திறமையும் உடையவர்களாக இன்றைய இளையத் தலைமுறை இருப்பதுதான். அப்படியென்றல், வரும் நவம்பர் 16 - 18 தேதிகளில் துனிசியா மாநாட்டில் நடக்க இருக்கும் மாநாட்டில் இளம் காற்று நிறையவே வீச வாய்ப்புண்டோ? இருக்கலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.thisaigal.com"&gt;திசைகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின் குறிப்பு:&lt;/strong&gt; இந்த மாநாட்டில் அமெரிக்காதான் இணையத்தின் மகாராஜாவாக இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இணையத்தின் கட்டுப்பாடு பரவலாக உலக நாடுகளிடையே பகிரப்பட வேண்டும் என்றும், உலக நாடுகள் அனைத்தும் பங்கு பெறும் ஒரு சர்வதேச அமைப்பின் கீழ் இணைய மேற்பார்வை இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்த ஐரோப்பிய நாடுகள் இந்த மாநாட்டில் ஏன் தங்கள் குறிக்கோளை அழுத்தி நடைமுறைக்குக் கொண்டு வர முயலவில்லை என்று இணையத்தையும் இந்த மாநாட்டையும் கவனித்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். வரும் நாட்களில் ஊடகங்களில் இதுவும் ஆராயப்படலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113233679833153679?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113233679833153679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113233679833153679&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113233679833153679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113233679833153679'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/11/blog-post_113233679833153679.html' title='தகவல் திருவிழா'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113224666647138425</id><published>2005-11-17T22:23:00.000+05:30</published><updated>2005-11-17T23:25:39.660+05:30</updated><title type='text'>ஒரு காத்திருத்தல்</title><content type='html'>சில சமயம் சில செய்திகள் நம் கண்களில் பட்டாலும் படிக்காமல் போய்விட நேரும் அப்படி எத்தனையோ தவறவிட்டுள்ளேன். அப்படிப்பட்டக் கட்டுரை ஒன்று இன்று என் கண்களில் பட்டது. நல்ல வேளை, இதைப் படிக்காமல் விட்டுவிடவில்லை என்ற எண்ணம் இதைப் படித்து முடித்ததும் தோன்றியது. அதிலிருந்து முடிந்த அளவு தமிழாக்கம் செய்து இங்கே கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nytimes.com/2005/11/16/opinion/16wed4.html?th&amp;emc=th"&gt;நியூயார்க் டைம்ஸில் கருத்துப் பக்கத்தில் ஹெலன் கூப்பர் எழுதியது:&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண்கள் வாழ லாயக்கற்ற இடங்களில் உலகத்திலேயே மிக மோசமான இடத்தில் வாழும் பெண்களின் ஒரு காத்திருத்தல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் தாய் நாடான லைபீரியாவிலிருந்து காங்கோவில் உள்ள புகாவு என்ற இடத்திற்குப் போவது முடியாத காரியம். ஆப்பிரிக்காவில் எல்லா ஊர்களையும் போல, அடர்த்தியான காடுகளும், இடைவிடாத போர்களும் புழுதி மண்டிக்கிடக்கும் சாலைகளும் இந்த இரண்டு ஊர்களுக்குமிடையே போக்குவரத்தைக் கடினமாக்கிவிட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் இரண்டு ஊர்களும் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்தன. சொல்லப்போனால், விமானத்தளம் என்று சொல்லப்பட்ட அந்தச் சிறிய ஒத்தையடிப் பாதைக் கணக்கில் இருந்த விமானத் தளத்தில் என் கால் பதித்தவுடனே, " ஆஹா, கடைசியில் ஒரு வழியாக நம்ம ஊருக்கு வந்துட்டாற் போல் இருக்கே" என்றுதான் புகாவு விமான நிலையத்தில் இறங்கியதும் தோன்றியது. இது ஒரு ஆறு மாதத்திற்கு முன் நடந்த விஷயம். ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையையும் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறும் விதங்களையும் பற்றி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அக்ரா, கானா, எதியோப்பியா, மேக்லே, கிஸ்மு, கென்யா என்று எந்த நாட்டுக்குப் போனாலும் வறுமையையும் ஊழலையும் மீறி, அங்கே இருந்த வளர்ச்சியும் செழுமையும் என் தாய் நாடான லைபீரியாவை விட எவ்வளவோ மேல் என்றுதான் எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது நான் புகாவிற்கு வந்து சேரும்வரை. ஏறக்குறையப் பாலைவனமான எதியோப்பியாவையும், கென்யாவையும் பார்த்தப் பிறகு, லைபீரியாவில் என் ஊரான மோன்ரோவியாவில் உள்ளதுபோல் அடர்ந்த மழைக்காடுகளும் வாழைமரங்களும் நாசியில் வந்து சுகமாகப் படரும் மழையின் ஈர மண் வாசனையுமாக புகாவு எனக்கு ஒரே பசுமையாகக் காட்சியளித்தது. மோன்ரோவியோவில் உள்ளதுபோலவே தேயிலைக் காடுகளும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் அந்த ஊரைச் சுற்றி இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், தொடர்ந்துப் போர்களினால் சீரழியப்பட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் ஏற்படும் ஒருவித ஆயாச உணர்வும் கூடவே ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சாலைகளில் வேறு வேலையெதுவும் இல்லாமல் வெட்டியாகக் குப்பைகளைக் கிளறும் காட்சி. இந்தக் கண்டத்தில் அடிக்கடி ஏற்படும் போரினால் வியாபாரம் இல்லாமல்  குண்டுகளால் துளையிடப்பட்ட கட்டிடங்கள். எப்போதாவது கண்களில் தென்படும் வாகனக்கள் - 10 / 20 பேரை அடைத்துக்கொண்டு. அதுவும் பெரும்பாலும் ஐ நாவின் SUV வண்டிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவற்றையெல்லாம் மீறி என்ன கவனத்தைக் கவர்ந்தது புகாவுவின் பெண்கள். ஊருக்குள் வண்டியில் செல்லும்போதே கண்களில் பட்ட இந்தப் பெண்களை நான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்துள்ளேன். முதுமையானப் பெண்கள் - முதுமையென்றால் ஆப்பிரிக்காவில் 35 வயது - முதுகில் பெரிய மூங்கில் பார்னக்களைச் சுமந்து கொண்டு சந்தையில் விற்க செல்லும் பெண்கள். சுமையுடன் மலையேறி குச்சி சேகரிப்பவர்கள். சாலையோரங்களில் பழங்கள், கொட்டைகள், அவித்த முட்டைகள் விற்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாளித் தண்ணீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த இளம் பெண்களும் தென்பட்டார்கள். 10 வயதுப் பெண் ஒருத்தி தூக்க முடியாமல் வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தாள். தன் 4 வயது தங்கையைக் குளிப்பாட்ட.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊர் பெண்கள் என் ஊர்ப் பெண்களின் பிரதிபலிப்புதான். எங்கள் லைபீரியாவில் இபப்டிப் பெண்கள் நிறையக் கஷ்ட்டப்பட்டுள்ளார்கள் - எதிரிக் கட்சிகளின் சண்டையில் மகன்கள் கடத்தப்படுவதைப் பார்த்தப் பெண்கள்; இந்த உட்பூசலில்களில் / சண்டைகளில் சென்ற கணவர்கள் வீடு திரும்பி வந்ததனால் எய்ட்ஸ் நோய் வரப் பெற்றப் பெண்கள்; உட்பூசல்களில் சண்டையிடும் ஆண்களினால் வன்புணரப்பட்டப் பெண்கள்; இப்படிப் பிறந்த குழந்தைகளையும் தோளில் சுமந்து கொண்டு, தலையில் தண்ணீர் தூக்கிக்கொண்டு நடையாக நடக்கும் / வேலைகளை மௌனமாகச் செய்யும் பெண்கள்; இத்தனை துயரிலும் மீனும் முட்டையும் விற்கும் பெண்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண்கள்தாம் சென்ற வாரம் ஓட்டுப் போடச்சென்றார்கள். ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்ட கால்பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் வீ ( George Weah) ஜெயிக்காவிட்டால் நாட்டில் அமைதி கிடையாஹ்டு என்று சவால் விட்டு மார்தட்டிய கட்சிக்காரர்களின் கூவலை இந்தப் பெண்கள் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் மிரட்டலையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, இந்தப் பெண்கள், 67 வயதான எலென் ஜான்ஸன் (Ellen Johnson-Sirleaf ) என்றப் பெண்ணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவராகும் முதல் பெண்மணி. உடனேயே, அந்தக் கால் பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் கும்பல்  இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் இடம் பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டியது - சர்வதேசப் பார்வையாளர்கள் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லியபோதிலும் கூட - எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள ஆண்கள் இப்படியெல்லாம் ஒரு மாயையில் சிக்கியிருப்பது சகஜம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹார்வேடில் படித்த ஒரு வங்கி அதிகாரியான எலென் ஜான்ஸன் என்ன சாதிப்பார் என்று எனக்குத் தெரியாது. ஒரு வின்னி மண்டேலாவைப் போல் ஆப்பிரிக்கப் பெண்களுக்குக் களங்கமேற்படுத்தியப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் 25 வருடம் போர்களினால் இந்த நாட்டை சீரழித்த ஆண்களுக்கு ஒருப் பாடம் புகட்டுவார் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லைபீரியாவில் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளி வர ஆரம்பித்த சமயத்தில், இந்த புகாவு நகரத்தில் நான் காரில் நுழையும்போது என் கண்களில் பட்ட ஒரு பெண் மட்டும் என் முன் பசுமையாக நிற்கிறாள். அவள் தன் 30 களில் இருக்கும் ஒரு வயதானவள். நான் அவளைப் பார்த்தபோது சூரியன் மறையும் அந்திப் பொழுதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் முதுகில் பெரியக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு குந்து கொண்டு மலையின் ஏற்றத்தில் ஏறிக்கொண்டு இருந்தாள். பாரத்தில் அவளின் மார்பு கீழே விழுந்துவிடும் அளவு குனிந்து உச்சியில் இருந்த வீட்டை நோக்கி நடந்து கொண்டு இருந்தாள். அவள் பின்னே அவள் கணவன். இன்னும் அவளை வேகமாக நடக்க சொல்லி. அவன் கையில் ஏதுமில்லை. கையை வீசிக்கொண்டு முன்னே நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று திரும்பி புகாவுக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. சென்று அந்தப் பெண்ணிடம் லைபீரியாவில் நடந்ததைச் சொல்ல வேண்டும்; இந்தத் தேர்தலைப் பற்றி சொல்லிவிட்டு அவளிடம் நான் சொல்ல வேண்டும்; 'பெண்ணே.. உங்களுக்கும் இப்படி ஒரு காலம் வரும்'  என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113224666647138425?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113224666647138425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113224666647138425&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113224666647138425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113224666647138425'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/11/blog-post_17.html' title='ஒரு காத்திருத்தல்'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113170864387346647</id><published>2005-11-11T16:51:00.000+05:30</published><updated>2005-11-11T17:00:43.886+05:30</updated><title type='text'>எல்லாம் ஒரு காலம் !</title><content type='html'>சில சமயம் சில விஷயங்களைக் கேட்கும்போது வாயடைத்துப் போய்விட்டது என்போம் அல்லவா? அந்த அனுபவம் எனக்கு சமீபத்தில் ஏற்பட்டது. என் உறவினர் பெண் ஒருவர் - நன்குப் படித்து, அரசாங்கத்தில் ஒரு உயர் அதிகாரியாக இருப்பவர் - கூறிய ஒரு கருத்தைக் கேட்டபோது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பாஷணையின் ஒரு பகுதியை மட்டும் - எனக்கு அதிர்ச்சியைத் தந்தப் பகுதியை  - இங்கே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"  என் பெண் வெளி நாட்டில் சென்று  படிப்பதையோ /வாழ்வதையோ நான் நிச்சயம் விரும்பவில்லை. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்??!!"&lt;br /&gt;&lt;br /&gt;" அங்கேயெல்லாம் பெண்கள் தாங்களே வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு / வேலைக்கும் போய்க் கொண்டு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இங்கேயென்றால் நாம் சம்பாதிக்கும் பணத்தில், தாராளமாக, சமையலுக்கு, மேல் வேலைக்கு, வண்டி ஓட்ட, தோட்டக்காரன் என்று நாலு வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு சுகமாக இருக்கலாம். அங்கே போய் ஏன் என் பெண் கஷ்டப்பட வேண்டும் ? " !!!!&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி. இதே வாதம் உன் பிள்ளைக்குப் பொருந்தாதா?அவன் வெளி நாட்டில் சென்று வாழ்வதில் உனக்கு ஒன்றும் பிரச்சனையில்லையா? "&lt;br /&gt;&lt;br /&gt;" அவன் ஆண். அவன் வீட்டு வேலைகளை அவன் மனைவிப் பார்த்துக்கொள்வாள்." !!!!!!!!!!!!!!!!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அரை மணி நேரம் நடந்த மீதி சம்பாஷணை /விவாதம் இவற்றை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன் !!&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே, நேற்று இந்துப் பத்திரிகையின் சென்னை - மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்தக் கட்டுரை ஒன்றையும் தமிழ்படுத்தி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் சொல்கிறான்: " ஹ்ம்ம்...  இங்கே நாம ஆம்பிளங்கதான் எப்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கு. பெண்கள்பாடு தேவலை. ஒரு வேளை அதான் அவங்க இப்படி சோம்பேறித்தனமாக இருக்காங்களோ என்னவோ? இங்கே ஒரு "ப்ளீஸ்"; அங்கே ஒரு புன்சிரிப்பு; என்று இப்படியே அவங்க சாமர்த்தியமா சாதிச்சுக்குவாங்க. ஒரு "சாரி" என்ற வார்த்தை; கொஞ்சம் முறைப்பு காண்பிச்சாப் போதுமே; கொலைப்பழியிலிருந்து கூட தப்பிச்சுக்குவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்களுக்கென்ன? எப்ப வேணுமானாலும் கையை மடக்கினா ஓசி சவாரி கிடைச்சிடும். எப்பவும் உலகம் கண்களிலே அவங்கதான் படுவாங்க. ஆம்பிளைங்களும் அவங்களுக்கு "இல்லை"னு சொல்லத் தயங்குவாங்க.&lt;br /&gt;ஆனாலும் இது ரொம்ப பாரபட்சமான உலகம்டா சாமி; உலகமே ரொம்ப மோசமா தாறுமாறாப் போய்கிட்டு இருக்கு. எல்லாத்துலேயும் பெண்களுக்குதான் இப்ப காலம். ஆம்பிளைங்கபாடு திண்டாட்டம்தான். எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு? ராப்பகலா உழைச்சாலும், ஓவர் டைம் வேலை செய்தாலும் அது யாருக்குப் புரியுது? ஆனா அதே ஒரு பெண் ஒரு நாள் செஞ்சாக் கூட 'நான் செஞ்சேன்' என்று தான் வேலை செஞ்சது உலகத்துக்கே கேட்கிறார்ப்போல தண்டோராப் போட்டு அறிவிச்சுடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;......... இன்னும் கொஞ்சம் இந்த ரீதியிலே ஆண் புலம்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் பெண் சொல்கிறாள்: " ஆமாங்க. அதிர்ச்சியாதான் இருக்கு. ஐயோ பாவம் . ஆண்கள் எப்படி உழைக்கிறாங்க!! பெண்கள் என்ன கிழிச்சிட்டாங்க இன்னிக்கெல்லாம் இருந்தா, ஆபீஸ்லேர்ந்து வீட்டுகு வந்தப்புறம், என்னப் பெரிய வேலை? ராத்திரி சமையல் செஞ்சுட்டு, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு, நாய்க்குட்டிக்குச் சாப்பாடுபோட்டுட்டு, டேபிளைத் துடைத்து, பாத்திரம் ஒழிச்சுப்போட்டுத் தேய்த்து வைத்துவிட்டு, சமையல் அறையைத் துடைத்துச் சுத்தம் செஞ்சுட்டு, மறு நாளைக்கு சாமான் எல்லாம் இருக்கான்னு பாத்துட்டு, கணவன் துணியை இஸ்திரிப் போட்டு, ( ஐயோ பாவம், அவன் நாளைக்கு ஆபீஸ் போகணுமே) .... அவ்வளவுதான் செய்யணும். என்ன..? இரண்டு பேருக்கும் ஒரே சம்பளம்தானே என்கிறீங்களா? அட என்ன இருந்தாலும் அவுங்க ஆண்பிள்ளையாச்சே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண்களுக்கு நல்லா வேணும். அவங்கதானே பெண் சுதந்திரம்; சமத்துவம் என்றெல்லாம் கூவினாங்க? சரிதான்; சமமா ஆபீஸ¤லே வேலைப் பாருங்க. ஆண் மாதிரியே சம்பாதிங்க. நல்லது. ஆனா வீட்டு நிர்வாகம் பெண்களுது ஆச்சுங்களே? நீங்கதான் செய்யணும் - அடிப்புடிச்ச வாணலியைத் தேய்ச்சுக் கழுவுற "சுகமான" வேலை உள்பட.. இதெல்லாம் தவிர ஆபீஸ¤லே உங்கத் திறமையைக் கண்டுக்காம சேர வேண்டிய சம்பளமோ பதவியுயர்வோ தராம இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காதீங்க.&lt;br /&gt;அப்புறம் பாருங்க; ஒரு குழந்தைப் பிறந்துச்சுன்னு வையுங்க. அந்தப் பெண்ணுக்கு ஆயிரம் கவலை வந்து உட்கார்ந்துக்கும். குழந்தையை யார் பார்த்துப்பாங்க?எப்படி சமாளிக்கிறது? இப்படி யோசிச்சு யோசிச்சே வேலை மற்றும் குழந்தை இரண்டையும் ஜால வித்தை செஞ்சு சமாளிக்க ஆரம்பிப்பாள். அதே ஆண் என்ன செய்வாரு? குழந்தை பிறந்தவுடனே "பாட்டில்" உடைத்துக் கொண்டாட ஆரம்பிப்பாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் சரி. இப்பதான் புது யுக ஆண்; இந்தக் காலத்துலே ரொம்ப அனுசரணையாக இருக்கார்னு கேள்விப்படறோமே? ( ஆதர்ச ஆண் விளம்பரம்? மற்றும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பனித்த கண்களுடன் - எல்லா விளம்பரத்துலேயும் சிரிப்பாரே - அந்த ஆண்??) அதுக்கென்ன? ஏதோ வாஷிங் மெஷின்லே இரண்டு பட்டனை அமுக்கி வீட்டு துணிகளைத் தோய்க்க நம்மளுக்கு " உதவி" செய்யறாரு இல்லே... அதாலே, இப்படி எல்லா சீரியல் விளம்பரத்துலேயும் ஆதர்ச ஆண் என்று தலையைக் காண்பிச்சிட்டுப் போவாரு. அதோட இல்லே; இப்படி வீட்டு வேலையிலே " உதவி" செய்யறதக் காரணம் காட்டியே, நம்கிட்ட பேங்க் போறது, வரி கட்ட இன்கம்டாக்ஸ் ஆபீஸ் போறது, இல்லேனா கம்யூடர்லே வேலை என்று அவங்க செய்ய வேண்டிய வேலையெல்லாம் நம்ம பக்கம் தள்ளி விடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஆதர்ச ஆண்கள் இருக்கதான் செய்யறாங்க. காபி ஷாப்லே கொஞ்சம் புன்னகை செஞ்சா, நம்ம ஐஸ் காபிலே கூடக் கொஞ்சம் ஐஸ் போட்டுத் தரவாங்க; சினிமாத் தியேட்டர்லே கும்பல்லே அடிச்சுப் பிடிச்சு பாப்கார்ன் வாங்கத் திண்டாடும்போது இன்னும் பாக்கி இருக்கிற காலே அரைக்கால் ஆதர்ச ஆண்கள் நமக்காக கியூலே நின்னு வாங்கித் தருவாங்க - அவங்க சகாக்களாலே நாம் கும்பலிலே நசுங்கி அவதிப்பட வேண்டாமே என்ற கரிசனத்துலே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ இப்படி சில சௌகரியங்களும் இன்னும் நமக்கு பாக்கி இருக்கேன்னு சந்தோஷப்படுவோம். போற வரைக்கும் போகட்டும். அதுவரைக்கும் தயவு செஞ்சு சந்தோஷப்பட்டுக்குவமே? என்ன பெண்களே, புரியுதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/mp/2005/11/10/stories/2005111001120200.htm"&gt;இந்தக் கட்டுரையை&lt;/a&gt; அப்படியே சென்னைத் தமிழில் எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் :-) இந்தச் சுட்டியில் இருப்பதைப் படித்துவிட்டு, சென்னைத் தமிழில் இன்னும் இதற்கு மெருகேற்ற விரும்புவர்கள் தாராளமாக செய்யலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113170864387346647?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113170864387346647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113170864387346647&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113170864387346647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113170864387346647'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/11/blog-post_11.html' title='எல்லாம் ஒரு காலம் !'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113161501386150708</id><published>2005-11-10T14:35:00.000+05:30</published><updated>2005-11-10T15:27:05.183+05:30</updated><title type='text'></title><content type='html'>அரசியலில் /அரசாங்கத்தில் / தனிப்பட்ட முறையில் அவரது சாதனைகளை இன்று எல்லா ஊடகங்களிலும் காண்கிறோம். அவற்றுடன் கூட எனக்கு அவரிடம் இன்னும் மிகவும் பிடித்தது, அவருடைய Disarming smile. ஆனால் ஒரு படம் போடலாமென்று பார்த்தால், படம் ஏனோ இன்று இங்கே ஏற மாட்டேனென்கிறது. படம் இல்லாவிட்டால் என்ன? சொல் இருக்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஜனாதிபதி பதவிக்கு ஒரு அர்த்தம் கொடுத்த, அருமையான மனிதர், கொச்சேரி ராமன் நாராயணனுக்கு என் வணக்கமும் அஞ்சலியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113161501386150708?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113161501386150708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113161501386150708&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113161501386150708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113161501386150708'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/11/blog-post_10.html' title=''/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113103626419551041</id><published>2005-11-03T22:00:00.000+05:30</published><updated>2005-11-03T22:16:55.363+05:30</updated><title type='text'>தொடரும் கேள்விகள்.......</title><content type='html'>(தமிழோவியம் தீபாவளி மலருக்காக எழுதியது.)&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக ஒரு கேள்வி என் மனதில் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது. எனக்கு இன்னும் சரியான பதில் புலப்படவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா என்று பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்ப்பாசம் என்பது எப்படி வருகிறது? ஒரு இடத்தில் பிறந்ததால் வருகிறதா? வளர்ந்ததால்? குடிபெயர்ந்து ஓரிடத்தில் பழகிப்போனதால்? இல்லை, ஒரு ஊரின் - நமக்குப் பிடித்தமான பிரத்யேகமான சிறப்புகளால்?&lt;br /&gt;&lt;br /&gt;நியூ ஆர்லின்ஸில் காற்றீனா தாக்கியபோது நிறைய பேர் ஊர்ப்பாசத்தால் வெளியேறவில்லையாம். உயிருக்கும் மேலாக நேசிக்கும் அளவு தங்கள் ஊரின் மேல் பிடிமானம் இருப்பது எதனால்? அப்படியே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நியூஆர்லின்சைவிட்டு ஓடி வேற்று நகரத்துக்கு வந்த சிலரால் அங்கே ஒட்ட முடியவில்லை. தங்கள் ஊரின் அருமை பெருமைகளை நினைத்து மாய்ந்து போனார்கள். சான் ஹோசே மெர்குரி நியூஸ் பத்திரிகையின் பழைய நிருபர் ஒருவர் நியூ ஆர்லின்ஸைத் தன் ஊராகத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிட்டு இப்போது புயலிலிருந்து தப்பிக்க வேறு மாநிலத்துக்கு வந்தபின் தன் ஊரைவிட்டு வர வேண்டிய சோகத்தைப் &lt;a href="http://www.mercurynews.com/mld/mercurynews/2005/09/06/news/nation/12570286.htm"&gt;பற்றி எழுதினார்.&lt;/a&gt; அடைக்கலம் புகுந்த இடத்தில் யாரோ நியூ ஆர்லின்ஸ் மடி கிராஸ் மணிகளை இவருக்குக் கொடுத்தபோது, அது சரியான நியூ ஆர்லின்ஸ் மணிகளல்ல என்று வாங்க மறுத்துவிட்டு மனசுக்குள் பொருமுகிறார். " நம்ம ஊர் மணிகளின் பாரம்பரியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். பிப்ரவரி மாதம் வந்தவுடனே தெருவிலே குழந்தைக் குட்டிகளோட வரிசையாக நின்று கொண்டு நியூ ஆர்லின்ஸ் திருவிழா ஊர்வலம் வருவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நம்ம இங்க இப்படி கொண்டாட்டமா இருக்கிறப்போ மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்னதான் செய்யறாங்க என்று நம்ம ஊர்க்காரங்க ஒவ்வொத்தரும் தங்கள் மனசுக்குள் ஒரு நமுட்டு சிரிப்போட நினைச்சுப்போமே; அந்த நம்ம ஊர் ஆளுங்க இல்லையே இவங்க? இவங்களுக்கு நம்ம மணிகளின் அருமை எப்படி புரியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி ஒரு ஊர்ப்பாசம்? இத்தனைக்கும் இவர் பிறந்து வளர்ந்த ஊர் நியூ ஆர்லின்ஸ் அல்ல. இப்படி நமக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கலாம். பிறந்ததனால் மட்டுமே ஒரு ஊரின் மேல் பாசம் வருவதில்லை என்று நினைக்கிறேன். பிறந்த ஊர்ப்பாசம் போல பிறந்த நாட்டுப் பாசமும் வளர்ந்த / பழகிய சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து ஆழமில்லாமல் போகுமோ? அப்படி போனால் அது தவறென்று சொல்ல முடியுமா? இந்தியாவில் பிறந்திருந்தாலும் முழுக்க முழுக்க வெளி நாட்டில் வளரும் குழந்தைகளுக்கு எந்த நாட்டின் மேல் பாசம் இருக்கும்? தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் வெளி மாநிலங்களில் வளர்ந்தத் தமிழர்களுக்குத் தமிழ் நாட்டின் மேல் பாசம் இல்லாமல் போய்விடுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஊரிலிலுமே 3 அல்லது 4 அதிக பட்சம் ஏழு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திராத என் வாழ்க்கையை ஒரு நாடோடி வாழ்க்கை என்று நான் சொல்வதுண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் வகை.&lt;br /&gt;"உங்க சொந்த ஊர்?" - "Where do you come from?" "where do you belong?" போன்ற அறிமுகக் கேள்விகளுக்கு இப்போதும் நான் ஒரு கணம் யோசித்துவிட்டுதான் பதில் சொல்கிறேன். Where do I belong?&lt;br /&gt;பொதுவாக சென்னை என்று முன்பெல்லாம் குறிப்பிடும்போது என்ன சொல்கிறோம் என்று தோன்றும். சென்னையில் வாழ்ந்ததேயில்லை. எதை வைத்து சென்னை என் ஊர் என்று சொல்ல முடியும் என்று தோன்றும். பிறந்த ஊர் முசிறி என்று பெயர்தான் தெரியும். என் மூன்று வயதில் குடும்பம் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அங்கிருந்த வாழ்க்கை பற்றி என் சகோதரியும் பெற்றோர்களும் சொல்லிதான் கேள்வி. அப்பாவின் ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரு சிற்றூர் என்பதும் அம்மா ஊர் திருச்சி பக்கத்தில் இன்னொரு சிற்றூர் என்பது குடும்ப சரித்திரத்தில் ஒரு அடிக்குறிப்பு. ஆனால் இந்த ஊர்களைப் பற்றி கேள்வி ஞானம்தான். மற்றபடி பரிச்சயமில்லை. யாராவது வயதானவர்கள் அந்தக் கால வழக்கப்படி, "உங்களுக்கு எந்தப் பக்கம்" என்று கேட்டால், என் கணவர் சட்டென்று " என் மனைவி, தஞ்சாவூர் பக்கம்" என்று சொல்லும்போது எனக்கு தூக்கிவாரிப்போடும். தஞ்சாவூரா? நானா? அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாதே, என்று நினைப்பேன். என் சகோதரி பத்மினி சொல்லிதான் நிறைய என் பெற்றோர்களின் ஊர் விஷயங்கள் தெரிந்து கொண்டேன். என்னிடம் அவர் சொன்ன கதைகள் சுவாரசியமாக இருக்கவே அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் ஒரு வலைப்பதிவும் தொடங்கி அவரிடம் கட்டுரைகள் வாங்கிப் போட்டு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊர்களுக்கு எப்போதாவது சிறு வயதில் திருவிழா, கல்யாணம் என்று செல்வதோடு சரி. இந்த நிலையில் எந்த முகாந்திரத்தை வைத்துக்கொண்டு என் ஊர் என்று சொல்வேன்? பிறகு, நான் வளரும் காலத்தில் அப்பா அவ்வப்போது மாற்றலாகி சென்று கொண்டிருந்த தமிழ் நாட்டு ஊர்களையெல்லாம் சொன்னால் தமிழ் நாட்டுக்கு வெளியே இருப்பவர்களுக்குப் புரியுமோ என்று தோன்றும். பொத்தாம் பொதுவாக சென்னை என்று சொல்லிவிட்டால் நிம்மதி. ஆக மொத்தம் எனக்குப் பிறந்த / வளர்ந்த ஊர்ப்பாசம் என்று ஒன்று ஒட்டாமலேயே போயிற்று. ஆனால் பிறந்த பகுதி, வளர்ந்த நாடு என்று பொதுவாக தமிழ் நாட்டின் மீதும், இந்தியா மேலும் பாசம் இருக்கிறதே? இதுதான் ஒவ்வொரு முறையும் வெளி நாட்டு வாழ்க்கையிலிருந்து அவ்வப்போது பிடித்து இழுத்து வந்துள்ளது. இந்த சொல்லத் தெரியாத பற்றுதல்தான், தான்சானியா, பூடான் மற்றும் சிங்கப்பூர் என்று சுற்றிய நாடுகளிலிருந்து வேலை ஒப்பந்தத்தைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு - சொந்தக் காரணங்களால் - வரத் தூண்டியுள்ளது. எந்த ஊர் என்று இல்லை; இந்தியாவில் இருந்தால் போதும் என்ற நினைப்புதான் அப்போது. இதன் பெயர் ஊர்ப்பாசம் என்று சொல்வதா என்று புரியவில்லை. சிங்கப்பூரைவிட்டு வரும்போது, பல நண்பர்கள் மாய்ந்து போய்விட்டார்கள். இந்தியாவில் அப்படி என்ன இருக்கிறது என்று இப்படி ஓடி ஓடிப் போகிறர்£கள் என்று. அதுதானே எனக்கும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுபதுகளில் கிழக்காப்பிரிக்காவில் தன்சானியாவில் குடியிருந்தபோது இந்தியக் குடும்பங்களிடையே - இந்தியர்கள் என்ற ஒரு "ஊர்ப்பிணைப்பு" இருந்தது. தினம் சந்திப்பு, விழாக்கள், பண்டிகைகள் என்று கலகலவென்று இருக்கும் ( அதுவே இந்தியாவில் ஒரே ஊரில் இருந்தாலும் அப்படி இருந்திருப்போமா என்பது சந்தேகம் - வெளி நாட்டில் / வெளி மாநிலங்களில் இருக்கும் பலரும் இதை உணர்ந்திருப்பார்கள் ) அப்போது எங்களிடையே அடிக்கடி அடிபடும் ஒரு பேச்சு - "எப்போது இந்தியா திரும்பலாம்? வேலை செய்யும் ஒப்பந்தக் காலத்தை இந்த வருடத்தோடு முடித்துக்கொள்ளலாமா? அடுத்த வருடம் நிச்சயமாக இந்தியா போய்விடப்போகிறோம் " என்ற ரீதியிலேயே பேச்சு இருக்கும். இந்த "going for good" சம்பாஷணை இல்லாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. பத்து வருடம் கொட்டைப் போட்ட குப்தாஜி, அடுத்த வருடம் நிச்சயம் போகிறேன் என்பார். " டில்லி, கனாட் பிளேஸில் இன்னும் ஒரு இடம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்" அதை வாங்கிவிட்டால், நிச்சயம் என் லட்சியம் பூர்த்தியாகிவிடும். திரும்ப வேண்டியதுதான்" என்று ஒரு கமாவுடன் அவரது " going for good " பேச்சு முடியும். இப்படியே அவர் இன்னும் பதினைந்து வருடம் சொல்லிவிட்டு ஒரு வழியாக ரிடையர் ஆகிவிட்டுதான் இந்தியா வந்தார். இப்படி "Pushing the bars for ever" என்ற ஒரு மனோபாவத்துடனும் ஊர்ப் பாசமும் சேர்ந்து பலருக்கு வாழ்க்கையின் பெரும் பகுதி கேள்வியிலேயே நிற்கும். இன்னும் சிலர் இந்தக் கேள்விக்கணைகளை லட்சியம் செய்யாமல் அடுத்த தலைமுறைக்கு வேரூன்ற முயலுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வேரூன்றியத் தலைமுறைகள்தாம் சேர்ந்து இன்று அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் வளப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆமாம், அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் " குடியேறியவர்கள் நாடு" ( country of immigrants) என்று சொல்வதுண்டு இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் புலம் பெயர்ந்தோர் என்பது ஒரு நாட்டைவிட்டு நாடு சென்று குடியேறுபவர்களுக்கு மட்டுமல்ல. ஒரு நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து வேறு ஊரில் வாழ்பவர்களுக்கும் பொருந்தும். இன்று இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளில் குடியேறி வாழ்பவர்களின் பிரச்சனைகள் / குழப்பங்கள், பல வருடங்கள் முன்பு கிராமங்களிலிருந்து நகரத்திற்குப் பிழைப்புத் தேடி சென்றவர்களுக்கும் பொருந்தும். இன்று Indian Diaspora / Chinese Diaspora என்பதுபோல் திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி அல்லது இன்னும் பல குட்டிக் கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களும் ஒரு விதத்தில் அந்தந்தப் பகுதிகளின் Diaspora தான் - திருச்சிக்காரர்கள், தஞ்சாவூர்க்காரர்கள் என்று diaspora வட்டம் சுழலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கணக்கின்படி பார்த்தால் மாநகரங்களான - மும்பாய், டில்லி போன்றவைகளும் " புலம் பெயர்ந்தோர்" நகரங்கள்தாம். தமிழர்கள் அன்று கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடியேறினார்கள். பிறகு வெளி மாநிலங்களுக்கு; பிறகு அயல் நாடுகளுக்கு என்று "புலம் பெயர்" வட்டம் விரிந்து கொண்டு போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்கள் முன்பு என் அம்மா வழி தாத்தா தன் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் திருச்சி பக்கத்தில் தன் கிராமத்த்தில் வீடு கட்டிக்கொண்டு "செட்டில்" ஆனார். அவருடைய சகோதர்களும் அவ்வண்ணமே செய்தார்கள். ஊர்ப்பாசம் அவ்வளவு இருந்தது அவர்களுக்கு.&lt;br /&gt;அன்று ஊர்ப்பாசம் என்று ஊர் திரும்பிய அந்த சகோதரர்களின் நிலையை இன்று வெளி நாடுகள் / ஊர்களிலிருந்து தமிழ் நாட்டில் தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் இந்தியப் புலம் பெயர்ந்தோருடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ஊர்ப்பாசம் என்று ஒரு தலைமுறையினர் திரும்பி வந்தாலும் அவர்களின் அடுத்தத் தலைமுறையினருக்கு அந்த அளவு ஊர்ப்பாசம் இருப்பதில்லை. அதுவும் வளர்ந்தப் பிள்ளைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களால் பெற்றோரின் ஊர்ப்பாசத்தையும் புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் வளர்ந்த ஊருக்கும் பெற்றோரின் ஊருக்கும் இடையே உள்ள வாழ்க்கை முறை வித்தியாசங்களும் மற்றும் பல சந்தர்ப்பங்களில் மொழிப் பிரச்சனையும் அவர்களைத் தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன் குஞ்சுகளாகத் திணறச்செய்யும். இந்த வாழ்க்கை முறை சங்கடங்களுக்குப் பயந்து பலர் ஊர் திரும்ப யோசனை செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் என் மூதாதையர் - மூத்த தலைமுறையினர் - ஓய்வு பெற்று கிராமம் திரும்பியபோது என் மாமாக்கள் - தாத்தாக்களின் மகன்கள் - பம்பாய், சென்னை என்று நகரங்களில் நல்ல வேலைகளில் - குடும்பம் / வேலை என்று வாழ்க்கையின் பளு /அழுத்தம் நிரம்பிய Prime Time வயதுகளில் இருந்தார்கள். அவர்களால் எப்படி கிராமத்தில் வாழ முடியும்? கடைசியில், தாத்தாக்கள், பிள்ளைகள் வந்து இருக்கப்போகிறார்கள் என்று நினைத்து கிராமத்தில் கட்டியப் பெரிய வீடுகளில் தனியாக - தாத்தா/ பாட்டி - வாழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பிவிட்டு "வயோதிகர்கள் ஊராக" மாறிக்கொண்டிருக்கும் இன்றையச் சென்னையைப் போல அன்றைய கிராமம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் இந்த ஊருக்குத் திரும்பலமா கேள்வி பலப் புலம் பெயர்ந்தோரை - அது டில்லித் தமிழரோ அல்லது அமெரிக்கத் தமிழரோ - ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. திரும்பும் சிலரின் அடுத்த தலைமுறையினருக்கு பெற்றோரின் "ஊர்" ஒட்டாது. ஊர்ப்பக்கம் மீண்டும் குடியேறுவதற்கு முன்னோடியாகப் பலர் வருடாந்திர / அல்லது அவ்வப்போது, ஊருக்கு விஜயங்கள் பல செய்திருப்பார்கள் - அவர்கள் பெற்றோரையும் சுற்றோரையும் பார்க்க, குலதெய்வத்துக் கோவிலில் மொட்டையடித்து காதுகுத்த, பெரியப்பா / ம்மா/ மாமா /மி இவர்களுடைய பிள்ளைகள் கல்யாணம், என்று ஏதேதோ காரணம் சொல்லிக்கொண்டு ஊருக்கு ஒரு பத்து நாள் / இரண்டு வாரம் என்று பெட்டி நிறைய எல்லோருக்கும் ஏதேதோ வாங்கிக்கொண்டு சிரித்து, வம்பு பேசி என்று ஆடிவிட்டு மறுபடி தங்கள் தங்கள் பொந்துகளில் போய் அடைந்து கொண்டு, என்று வாழ்க்கை ஓடியிருக்கும். ஆரம்ப காலங்களில் குழந்தைகள் இவர்களைப் போலவே ஆசையுடன் ஊர்ப்பக்கம் வருவார்கள். எல்லோரும் நகரத்திலிருந்து / வெளி நாட்டிலிருந்து வந்திருக்காங்க என்று கொண்டாடுவது குழந்தைகளுக்குப் பிடித்துப்போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சற்று வளர்ந்து பள்ளி, காலேஜ், தங்கள் அலைவரிசைக்கு நண்பர்கள், மற்றும் நீச்சல், டென்னிஸ், பாட்டு நடனம், என்று சிறப்பு பயிற்சிகளில் கவனங்கள், நண்பர்கள் வட்டம், என்ற ரீதியில் அவர்கள் வாழ்க்கை முறை மாறிப்போவதில், ஊரில் இருக்கும் உறவினரோ, வாழ்க்கை முறையோ அத்தனைதூரம் ஈர்க்காது. இந்த இரண்டுகெட்டான் வயது சமயத்தில்தான் பெற்றோருடன் விடுமுறையில் ஊர்ப்பக்கம் போவதற்கு பிள்ளைகள் சங்கடப்படத்தொடங்குவார்கள். எண்ணையும் தண்ணீரும் போல பெற்றோரின் வேருடன் ஒட்ட முடியாமல் ஒரு தர்ம சங்கடம். "ஊருக்கா? நாங்க வந்து என்ன செய்யப்போகிறோம்? நீங்க போயிட்டு வாங்க. நாங்க இங்கே பாத்துக்குறோம்" என்பது போன்ற பதில்கள் வர ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு வந்து செட்டில் ஆக நினைப்பது மகாக் கடினமான வேலை. இதற்கெல்லாம் பயந்து பலர் இருக்கும் ஊரிலியே முடிந்த வரை இருந்து விடலாம் என்று பார்ப்பார்கள். அது இன்னும் புதைகுழி போல் ஆக ஆரம்பிக்கும். ஒரு பக்கம் தாங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பெற்றோர் தேட ஆரம்பிக்க, பிள்ளைகள் தாங்கள் வளர்ந்த/ வளரும் சூழ்நிலையைவிட்டு வெளியேறத் தயங்க, அது ஒரு தர்ம சங்கடமான நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்த வரையில் என் பெற்றோர் வளர்ந்த தஞ்சாவூர், அல்லது திருச்சி அருகே உள்ள கிராமங்கள் என் ஊர் அல்ல. எங்கேயும் அடர்ந்து பல வருடங்கள் இருந்திராக்காததால், வளர்ந்த எந்த ஊரிலும் ஆழமான ஊர்ப்பாசம் வரவில்லை. என் மகன்களின் கதையும் கிட்டதட்ட இதேதான் - நாங்களும் மாற்றலாகிச் சென்று கொண்டிருந்ததால். ஆனாலும் அவர்களின் பெரும்பாலான வருடங்கள் இந்தியாவில் டில்லியில் கழிந்ததால் அவர்களைப் பொறுத்தவரையில் டில்லிதான் சொந்த ஊர். தமிழ் நாடு அவர்களைப் பொறுத்த வரையில் பெற்றோர் ஊர் மட்டுமே. எனக்கு எப்படி என் பெற்றோரின் கிராமங்கள் ஆனவோ அதுபோல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் வெளி நாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பங்களில் அங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வளரும் ஊர்தான் அவர்களுக்கு சொந்த ஊர். இந்தியா / தமிழ் நாடு, அயல் நாடாக ஆவதில் ஆச்சரியம் இல்லை. யாராக இருந்தாலுமே பொதுவாக ஒரு மனிதனின் ஐந்து வயதிலிருந்து 20 வயது வரை வளரும் சூழ்நிலையும், ஊரும்தான் அவன் / அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கும். அந்த சூழ்நிலை மற்றும் ஊரும்தான் அவனைப் பொறுத்தவரையில் "சொந்த ஊர்" - Home. அதற்குப் பின் வாழும் இடங்களெல்லாம் வசதிக்காக, வேலைக்காக, மற்ற ஏதோ வாழ்க்கை சௌகரியங்களுக்காக என்ற ரீதியில்தான் இருக்கும். ஆனால் உள் மனதில் ஒரு பிணைப்பு என்பதும் " feeling at home" உணர்வும் எழுவது இந்த 5 -20 வயதுகளில் வளர்ந்த ஊர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான இரு நாட்டு - சில சமயம் பன்னாட்டு - சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு எந்த ஊரின் மீது தேச பக்தி இருக்கும் என்பது விடைத் தெரியாத கேள்விதான். அதுபோல் சௌகரியத்துக்காகவோ அல்லது பல நாள் வாழ்ந்த ஒட்டுதலாலோ வேற்று நாடுகளின் குடிமக்களாக மாறுபவர்களின் ஊர்ப்பாசமும் அடி மனதில் அந்த 5லிருந்து 20 வயது வரை வளர்ந்த ஊரில்தான் இருக்கும். ஆனால் இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியென்றால், " சொந்த ஊரை / நாட்டை" விட்டு வெளியே வாழ்ந்தாலும் சில குடும்பங்களில் வீட்டுக்குள்ளே தங்களின் ஊர்ப்பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையயும் துளிக்கூட மாற்றிக்கொள்ளாமல், புலம் பெயர்ந்த ஊரின் தாக்கங்கள் தங்கள் வீட்டுக்குள்ளே அண்டாமலும் சிலர் இருப்பார்கள். இந்தக் குடும்பங்களில் இளையத் தலைமுறையினருக்கு இரட்டை வாழ்க்கை முறை பழகிப்போயிருக்கும் - அல்லது இந்த தர்ம சங்கட நிலையை இயல்பாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். வீட்டுக்குள் வந்தால் இந்தியா/தமிழ்நாடு/ கிராமம் என்றும், வெளியே போனால் வேறு ஒரு நாடு / மாநிலம் / ஊர் என்றும் வாழக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆங்கில நாவலாசிரியை ஜும்பா லஹரியின் கதைகளில் இந்த Jekyll and Hyde மாதிரியான வாழ்க்கையைப் பற்றி நிறைய வரும். ஆங்கில சினிமா Bend it Like Beckham, ஹிந்தி சினிமா Dil Wallen Dhuniya Leh Jaayenge போன்றவற்றின் கதைக் களன்கள், இப்படிபட்ட இரட்டை வாழ்க்கை முறையில் தர்ம சங்கடமாக வாழும் தலைமுறையினரைச் சுற்றிதான் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மிகப்பெரிய பிரச்சனை ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருக்கும் "சாண்ட்விச்" பெற்றோர்கள் - ஒரு பக்கம் பெற்றோர், மறுபக்கம் பிள்ளைகள் - இருவரையுமே திருப்தி படுத்த வேண்டும். ஊரில் இருக்கும் அவர்களுடைய பெற்றோரைத் திருப்தி படுத்துவதற்காகவோ அல்லது இன்னும் தங்கள் ஊர்ப்பாசத்தையும் அங்குள்ள வாழ்க்கை முறையை விட முடியாமலும் இருக்கும் இவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அந்த வாழ்க்கை முறையைத் திணிக்கப்பார்ப்பார்கள். வேற்றூரின் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளுக்கோ இவர்களது பிடிவாதம் புரிவதில்லை. In Rome, live like Romans என்பது பெற்றோர்களுக்கு ஏன் புரிவதில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். ஆனால் வீட்டில் இருக்கும் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கும் வெளியில் மற்ற கலாசாரப் பழக்கங்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள சொல்லிகொடுத்து வளர்க்கும்போது இரண்டு விதமான - இன்னும் பலவிதமான வாழக்கை முறைகளையும் புரிந்துகொண்டு, அவற்றை மதித்து வளரும் மனப்பக்குவம் குழந்தைகளுக்கு வந்துவிடும். இது கொஞ்சம் கழைக்கூத்தாடி வேலை போன்றதேயானாலும், எங்கே இருந்தாலும் வாழ்க்கையை இயல்பாக வாழக்கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும் என்பதால் வளர்ப்பில் இந்த அளவு சிரமமும் சிரத்தையும் காட்டுவது நல்லதே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சிலர் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே " ஊர்ப்பக்கம்" திரும்பி விடுவார்கள்.&lt;br /&gt;என் தாத்தாக்கள் ஓய்வு பெற்று கிராமத்தில் மீண்டும் குடியேறியதைப் போல் நாங்களும் நான்கு வருடம் முன்பு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக "என் ஊரில்" கால் ஊன்றத் தொடங்கினேன். பல தலைமுறைகளாக அல்லது பல வருடங்களாக சென்னையை / தமிழ் நாட்டை விட்டு வெளியில் வட இந்தியாக்களில் வாழும் தமிழ் புலம் பெயர்ந்தோர் பலர் சென்னைக்கும் தமிழுக்கும் அந்நியப்பட்டுவிட்டது போல் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். வட இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்த பலர் சென்னைக்கு / தமிழ் நாட்டுக்குத் திரும்ப ஏனோ அஞ்சுவதையும் பார்த்துள்ளேன். சென்னைக்காப் போகிறீர்கள்? உங்களால் சென்னை வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்கள். அன்றும் சரி. இன்றும் சரி. என் வேருக்குத் திரும்புவது எனக்கு பெரிய விஷயமாகப் பட்டதில்லை. சென்னையில் வாழ்ந்திராவிட்டாலும் நான் அந்நியமாக மட்டும் உணர்ந்ததேயில்லை. மாறாக இது/ தமிழ் நாடு என் இடம் என்ற நினைப்பு என்றுமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் நினைப்பு என்னை ஏமாற்றவில்லை. இந்த நான்கு வருடங்களில் சென்னை நன்றாகவே பழகியும் பிடித்தும் விட்டது. நிறைய விஷயங்களில் என் வாழ்க்கை முறை சென்னை வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போவதால் இயல்பாக இருக்கிறது. வீட்டிலும் வெளியிலும் ஒரே மொழி என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 10 மணிக்குமேல் மரங்கள் அடர்ந்த ராஜா அண்ணாமலை வீதிகளில் செல்லும்போது அந்த அமைதியான நேரத்தில் சென்னையின் அமரிக்கையான அழகு புரிகிறது. பெற்றோரும் உற்றோரும் இருந்த, /இருக்கும் ஊர் என்று சென்னைக்கு வந்துவிட்டாலும், தமிழ் நாட்டில் எந்த ஊரிலும் இப்படி சௌகரியமாகவே உணர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் டில்லி வாழ்க்கைப் பழகிப்போனதில் டில்லியும் இன்னொரு "என் ஊர்" என்ற நினைப்பு மட்டும் மாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான் இருந்த எந்த வெளி நாட்டிலும் அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றியதேயில்லை - எத்தனைதான் வாழ்க்கை சௌகரியமாக இருந்தபோதும். இது தற்காலிக வீடு /ஊர் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. home is home. என்கிற உணர்வு "நம் வீட்டில்தான்" வரும் - எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும். பல வருடம் புழங்கியக் காரணத்தால் டில்லியும் " என் ஊர்" என்று ஆகிவிட்டிருந்தது.&lt;br /&gt;சமீபத்தில் எழுத்தாளர் C.S Lakshmi (அம்பை) தொகுத்த "The Unhurried City" என்ற புத்தகம் சில நாட்கள் முன்பு படித்துக்கொண்டிருந்தேன். அருமையான பழையப் படங்களுடன், சென்னையைப் பற்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், பல்துறையிலும் வித்தகர்கள் என்று பலர் அவரவர் கோணத்திலிருந்து எழுதியக் கட்டுரை, கதை, கவிதைகள் என்று இந்தத் தொகுப்பு இருந்தது. தொகுப்பில் இருந்த கருத்துகள் பல்வித பார்வையில் இருந்தன. ஆனால் இந்தப் புத்தகத்தை என்னைப் படிக்கத் தூண்டியது, லஷ்மி எழுதிய முன்னுரை. முன்னுரை எழுதுவதே ஒரு கலை. தான் எடுத்துக்கொண்ட வேலைக்கு ஒரு ஆர்வத்துடனும் அந்தப் பொருளில் ஒரு பிடிமானத்துடனும் ( involvement) சரியான முறையில் ஆராய்ச்சி செய்து எழுதப்படும் சில முன்னுரைகள், புத்தகத்தைவிட அருமையாக, ஜனரஞ்சகமாக அல்லது ஆழமாக அமைந்துவிடும். அம்பை எழுதிய " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" என்ற கதையில் ஒரு ராஜஸ்தான் குடும்பத்தில் வீட்டு மருமகள்கள் - நன்கு படித்த பெண்களும் கூட - எப்படி சமைப்பதும், வீட்டு வேலையுமே வாழ்வு என்று வாழ்கிறார்கள்; முடக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞைக் கூட இல்லாமல், என்று விவரித்திருப்பார். வீட்டில் இருக்கும் இந்தப் பெண்களுக்கு ஒரு மாறுதல் என்று குடும்பம் பிக்னிக் போவார்கள். அங்கும் இவர்கள் நேரம் சாப்பாட்டுக்கடையிலேயே கழியும். இந்தக் குடும்பத்து ஆண்கள் " மணமகள் தேவை" என்று விளம்பரம் கொடுக்கும்போது " நன்குப் படித்த, ஆனால் எதிர்த்துப் பேசாத, நல்ல அழகுள்ள ஆனால் கீழ்ப்படிதல் குணமுள்ள....." என்ற ரீதியில் தேடுவார்களாம். ( செய்தித்தாள்களைப் புரட்டினால் இன்றைக்கும் இதில் மாற்றம் இருக்கிறார்போல் இல்லையே?!!) இன்னொரு கதையில் பிரசவ வலி வரும் வரையில் வயலில் வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பையின் அவதானிப்புகளையும் அவருடைய எழுத்தில் இருக்கும் கூர்மையையும் ரசித்திருக்கிறேன். இந்த முன்னுரையும் அப்படியே. இந்தத் தொகுப்பில் சென்னைக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்த, வாழ்க்கையில் பிரகாசித்த பிரபலங்களைக் கோடிட்டுக் காண்பிக்கிறார் - உ.வே.சா முதல், பாரதியார், புதுமைப்பித்தன், மற்றும் மருத்துவம் படிக்க வந்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டி, சென்னைக்கு வந்து பல அரசியல் கலந்துரையாடல்கள் நடத்திய காந்திஜி, என்று பட்டியலும் இவர்கள் சென்னை வந்தக் கதையும் என்று விவரங்களைத் தூவியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களிலிருந்து சென்னைக்குப் புலம் பெயர்தலின் ஆரம்பக்காலங்களைப் பற்றி விவரிக்கையில் அந்தக் காலத்தில் சென்னைப் பற்றி பிற ஊர்க்காரர்களின் கவலைகளையும், சென்னைக்கு புதிதாகக் குடியேறியவர்களின் பயங்களையும் நகைச்சுவையாக சொல்கிறார். 1925ல் வெளி வந்த " சென்னை நாகரீக காளி விந்தை" என்ற புத்தகத்தில் சென்னைப் பெண்கள் எப்படி கலாசாரம் இல்லாமல் - " நெற்றியில் குங்குமமில்லாமல் சாந்துப்பொட்டு இட்டுக்கொண்டு, உரக்கப்பேசி சிரித்துக்கொண்டு, என்று நவீனப் பெண்களைக் கிண்டல் செய்யும் அந்தக் காலக் கவிதையைச் சுட்டிக்காட்டுகிறார். பத்திரிகைகளிலும் இந்த " நவீன" பெண்கள் பற்றிய கேலிச் சித்திரங்கள் வந்ததையும் எடுத்துக்காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்து சென்னையின் பூங்காக்களில் மாலையில் ரேடியோ பாடுமே அதைக்கூட குறிப்பிட்டுள்ளார். இசை மற்றும் கலாசார மையமாக சென்னை இருந்ததை விவரிக்கும்போது மியூஸிக் அகாடமி பற்றியின் ஆரம்பம் பற்றி எழுதுகிறார். 1928ல் ஆரம்பிக்கப்பட்டபோது இசைக் கச்சேரிகள் தவிர அங்கே இசை சம்பந்தமான பல சொற்பொழிவுகளுக்கும், கலந்துரையாடலுக்கும், பகிர்தலுக்கும் இடம் இருந்தது. ஆனால் இசையை இப்படி எந்தவிதமான "அமைப்புக்குள்ளும்" - institutionalization of music - கட்டுபடுத்தக்கூடாது என்ற கொள்கையில் இருந்த வீணை தனம்மாள் கிண்டலாகக் கேட்பாராம்: : " ஓ, அங்கே இசையைப் பற்றிப் " பேசுகிறார்கள்" என்று கேள்விப்பட்டேனே?" என்பாராம். இப்படி சுவாரசியமாகப் பல விஷயங்கள் ஆங்காங்கே தாளித்துக் கொட்டப்பட்டு அக்கறையாக எழுதப்பட்ட ஒரு முன்னுரை.&lt;br /&gt;&lt;br /&gt;நிறையக் கருப்பு வெள்ளைப் படங்கள் - பழைய சென்னையைக் காண்பிக்க. என் கவனத்தை ஈர்த்த ஒன்று: குண்டும் குழியுமான ஒரு சாலையின் குறுக்கேக் கொட்டை எழுத்தில் துணியில் எழுதிய ஒரு பெரிய அறிவிப்பு: " காணவில்லை; பெயர் - தார் ரோடு. நிறம் - கருப்பு; அளவு - 75 அடி அகலம், ஒரு கிலோமீட்டர் தூரம்; தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - சென்னை மாநகராட்சி."&lt;br /&gt;&lt;br /&gt;ஹ்ம்ம்.....இப்போதெல்லாம் இப்படிபட்ட நகைச்சுவையுணர்வுக்கே&lt;br /&gt;" காணவில்லை" அறிவிப்புப் போட வேண்டியதாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பைக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. என்னைப்போலவே இவரும் பளிச்சென்று சொல்கிறார். " நான் சென்னையைச் சேர்ந்தவள் அல்ல. ( I did not belong to Chennai.), நான் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்" என்று. சென்னைக்கு வெளியே வளர்ந்திருந்தாலும் சென்னை என் வாழ்க்கையில் ஊடுருவியிருந்தைப் போல இவருக்கும் இருந்திருக்கிறது. லஷ்மி சொல்கிறார்: " சென்னையில் வாழவில்லையே தவிர சென்னை வாழ்க்கையில் ஒரு அங்கம். காலையில் ஹிந்து பேப்பர்; காபி; ஆனந்தவிகடன், கல்கி.... அப்புறம் பண்டிகைகள் ; தீபாவளி பண்டிகை ரொம்ப முக்கியம். முதலில் விடிகாலையில் இருட்டில் எண்ணைக் குளியல் - பிறகு எங்கள் பங்கு பட்டாசுகள்; அதன் பிறகு சுடச்சுட இட்லி; பச்சைமிளகாயும் தேங்காயும் பொட்டுக்கடலையும் வைத்து அரைத்த சட்னியுடன் - கொஞ்சம் தாராளமாகவே - மொளகாப்பொடி எண்ணெய்; கமகமவென்று வறுத்த எள்ளு வாசனை ஆளைத்தூக்க. இதெல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டபின் எனக்கும் என் தம்பிக்கும் முக்கியமாக ஒரு வேலை காத்திருக்கும். எங்களுடைய உண்டியைக் குலுக்கி ஐந்தோ அல்லது ஆறு ரூபாயை எடுத்துக்கொண்டு மல்லேசுவரம் மார்க்கெட்டை நோக்கி நடைபோடுவோம் - பள பளவென்ற அட்டையுடன் வரும் ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வாங்க...."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போகிறது அவர் பெங்களூரில், சென்னைப் பெண்ணாக வளர்ந்த விவரங்கள். வெளி நாடுகளில் / மாநிலங்களில் இருக்கும் பல குடும்பங்களில் இதே கதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகன்களிடமும் இந்த " தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் வாழ்க்கை முறை" பழகிவிட்டது. இன்று அமெரிக்காவில் இருந்தாலும், இப்போதே " ஊர்" திரும்பும் கேள்விகள் அவர்களுக்கும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் "ஊர்" டில்லி. சென்னையல்ல. வீட்டில் தமிழ், வெளியில் ஹிந்தி என்ற வாழ்க்கை முறையில் ஊறியவர்கள். அவர்களுக்கு சென்னையில் பிடிமானம் இல்லை - எனக்கு என் தந்தையின் ஊரான தஞ்சாவூர் அந்நியமாகிப் போனது போல.&lt;br /&gt;நான் பல வருடங்களுக்கு முன்னமேயே "ஊர்" திரும்பியிருக்க வேண்டுமோ? ஒரு வேளை என் மகன்கள் அமெரிக்காவிலேயேத் தொடர்ந்து இருக்க நேரிட்டால் அடுத்தத் தலைமுறையினருக்கு இந்தியாவே அந்நியமாகிப் போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களிடம் தமிழர் வாழ்க்கை முறை இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறை வேறு. ஊர்ப்பாசம் வேறு. வாழ்க்கை முறை / கலாசாரம் என்பதெல்லாம் பூகோள எல்லைகளைக் கடந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்றால், ஊர்ப்பாசம் என்பது பூகோள எல்லைகளுக்குக் கட்டுப்பட்டதோ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் புரியவில்லை. ஊர்ப்பாசம் எப்படி வருகிறது? பிறந்ததாலா? வளர்ந்ததாலா? பழகிப்போனதாலா? நம் ரசனைக்கு ஏற்றதாக ஒரு ஊர் இருப்பதாலா? வளர்ந்தப் பாசமா?, பிறந்தப் பாசமா? அல்லது பிழைப்புப் பாசமா? எந்த ஈர்ப்பு அதிகம்?&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல், இந்தியப் பெற்றோர்களுக்கு வெளி நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தேச பக்தி எந்த இடத்தில் இருக்கும்? பெற்றோர்களின் தேசத்திலிருந்து அவர்கள் தேச பக்தி வித்தியாசமாக இருக்கும்போது அன்பினால் பிணைக்கப்பட்ட அவர்கள் உறவில் அரசியலால் விரிசல் வர வாய்ப்பு உள்ளதோ? இரு வேற்று நாட்டு மனிதர்களின் திருமண பந்தத்திலும் இதே கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால் பூகோள எல்லைகளைத் தாண்டி எழுந்த /வளர்ந்த உறவுகள், மனிதன் வகுத்த பூகோள / அரசியலின் எல்லைகளின் பாசத்தில் ( ஊர்ப்பாசம் / தேசப்பாசம்) கட்டுப்பட வேண்டுமா? இந்தக் கட்டுப்படலின் எல்லை எங்கே நிற்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் கேள்விகள்.......&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தமிழோவியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113103626419551041?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113103626419551041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113103626419551041&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113103626419551041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113103626419551041'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/11/blog-post.html' title='தொடரும் கேள்விகள்.......'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113066271509165116</id><published>2005-10-30T15:24:00.000+05:30</published><updated>2005-10-30T14:43:05.166+05:30</updated><title type='text'>தீபாவெடி??</title><content type='html'>டில்லியில் யார் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று இதுவரை தெரியவில்லை.  &lt;a href="http://kurangu.blogspot.com/"&gt;ஸ்ரீகாந்த் &lt;/a&gt;தன் வலைப்பதிவில் பட்டியலிட்டுக் கூறியுள்ளதுபோல், காரணம் எதுவும் நிஜமாகவே தென்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் உறவு - பூமாதேவிக்கு நன்றி - இதைவிட சுமூகமாக இருக்க முடியாது. சொல்லப்போனால், பூகம்பத்தால் குலைந்து போன trenches ( போர் வீரர்கள் பதுங்கும் குழிகள்?) இவற்றை மீண்டும் கட்ட உதவி செய்யவும் இந்தியா முன்வந்தது. பாகிஸ்தானின் trenches உபயோகம், இந்தியாவுடன் போரிடுவதற்குதான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் !&lt;br /&gt;இப்படி இரு நாடுகளுக்குமிடையே ஒரு அமைதி நிலவும்போது பாகிஸ்தான் தூண்டிவிட்ட காஷ்மீர் தீவிரவாதிகள் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புயல், பூகம்பம் என்று இயற்கைதான் சீற்றமாக இருக்கிறாள். அரசியல் மந்தமாகதானே இருக்கிறது? - ஈராக் எண்ணை விற்ற சமாசாரத்தில் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கிற்குப் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்லும் &lt;a href="http://www.hindu.com/2005/10/29/stories/2005102923960100.htm"&gt;Volcker Report&lt;/a&gt; தவிர வேறு பெரிய அரசியல் நிகழ்வு எதுவும் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;டில்லியில் பல காரணங்கள் / ஊகங்கள் பேசிக்கொள்கிறார்கள். அவற்றில் ஓரளவு உண்மை இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால், மொத்தத்தில் யாருக்கு இவ்வளவு கோபம் என்று இன்னும் திட்டவட்டமாகப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கோரமான சம்பவத்திலும் ஒருவரைக் கட்டாயம் பாராட்டத் தோன்றியது. கோவிந்தபுரியில் இருந்த அந்த டெல்லி டிரான்ஸ்போர்ட் பஸ் டிரைவர். பயணிகள் உட்கார்ந்து பஸ் கிளம்பும் முன்பு ஆளில்லாமல் ஒரு பை பஸ்ஸில் கிடப்பதைக் கவனித்து எச்சரிக்கையடைந்து அவர் உடனே எல்லோரையும் கீழே இறங்க சொல்லிய அடுத்த சில வினாடிகளில் பஸ் வெடித்தது. டிவியில் பயணிகள் ஒவ்வொருவரும் நன்றியுடன் அந்தப் பஸ் டிரைவரைப் பற்றி பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் டில்லி முதலமைச்சர் சொல்லியதுபோல், இது மிகவும் ஜாக்கிரதையாக முன்கூட்டியே திட்டமிட்ட செயல் - பண்டிகைக் காலம் - எல்லோரும் மும்முரமாக கடைகளைச் சுற்றும் சமயம் - அதுவும் சரோஜினி நகர், பஹார்கஞ்ச் என்று மத்தியதர மக்கள் அதிகம் வலம் வரும் சந்தைகளைக் குறிபார்த்துத் தாக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்று விடுதலை ? - ஒன்றுமறியாத அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதத்திலிருந்து?&lt;br /&gt;&lt;br /&gt;இதன் நடுவே நாளை மறு நாள் தீபாவளி. பல இல்லங்கள் புயலாலும், பூகம்பத்தாலும், குண்டு வெடிப்பினாலும் கலங்கியிருக்கும் இந்த வேளையில் மகிழ்ச்சியான தீபாவளி என்று சொல்லத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எல்லாவற்றையும் மீறி ஒளிக் கீற்றுக்கள் நம் மனங்களில் ஒளிரட்டும். நம்பிக்கை வளரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113066271509165116?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113066271509165116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113066271509165116&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113066271509165116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113066271509165116'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/10/blog-post_30.html' title='தீபாவெடி??'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-113041116073014902</id><published>2005-10-27T16:27:00.000+05:30</published><updated>2005-10-27T16:36:00.743+05:30</updated><title type='text'>மழை, வெள்ளம்.......இணையம்....</title><content type='html'>பாலத்துக்குக் கீழே நிறைய தண்ணீர் சென்றுவிட்டது - தமிழ்மணம், தமிழ் நாடு இரண்டிலுமே - என்றுதான் ஒரு மாத இடைவேளைக்குப் பின் பதியும் என் இந்தப் பதிவை ஆரம்பிக்க வேண்டும். திருச்சி, தொட்டியம் அருகே கிராமத்துக்கு சென்றுவிட்டு சென்னைத் திரும்பிய மறு நாள் அங்கே எல்லாம் வெள்ளக்காடாக இருப்பதைப் பார்த்ததும் ஒரு நாள் தாமதமாக வந்திருந்தால் மாட்டிக் கொண்டிருப்போமே என்றுதான் தோன்றியது. நல்ல வேளைத் தப்பித்தோம் என்ற சுய நல உணர்வைத் தடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதம் முன்புதான் அங்கே அமெரிக்காவில் நியூ ஆர்லின்ஸ் புயலைப் பார்த்துவிட்டு இங்கே வந்தால் இங்கே பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வெள்ளம். படகுகளில் பெட்டிப் படுக்கைகளுடனும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடனும்  பயணம் செய்யும் மக்கள். ஊரிலிருந்து வந்தவுடன் வந்தவுடன் முதல் வேலையாக கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் வீட்டுக்குப் போன் போட்டு விசாரித்தபோது அவர்கள் குரலில் இருந்த கவலையும் பயமும் என்னையும் தொற்றிக்கொண்டது. நல்ல வேளையாக மறு நாள் தண்ணீர் சற்று வடிந்துவிட்டது என்று கேட்டதும் சற்று நிம்மதி. ஆனாலும் பாவம் அவர்களுடைய வாழைத்தோட்டங்களும் வயல்களும் நீரில் மூழ்கியிருக்கும். ஆனால் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் பலர் வெள்ளத்தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டதைப் பார்க்கும்போது அவர்கள் சுறுசுறுப்பைப் பாராட்டத் தோன்றியது. ஆனால் NDTV யின் செய்தியாளர்கள் செய்தியுடன் கூடிய சம்பாஷணைதான் கடுப்பை ஏற்றியது. நுபுர் பாசு, மாயா சர்மாவிடம், " சரி இனிமே அவர்கள் ( தமிழகமக்கள்) 'தண்ணீர் கொடுங்கள்' என்று கேட்கமாட்டாங்களே? " என்ற தொனியில் பேசியது அநாகரித்தின் எல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளம் எங்கோ திருச்சி போன்ற மாவட்டங்களில் மட்டுமல்ல. பயங்கர மழையினால் சென்னையிலும் இன்று இதே கதைதான். பல இடங்களில் மின்சாரம் இல்லை. ( ஏதோ அதிர்ஷ்டவசமாக என் வீட்டில் இன்னும் மின்சார பகவான் கருணை இருக்கிறது.) சாலைகள் நிலை சொல்லவே வேண்டாம். தன்ணீர் நிரம்பி, மரங்கள் விழுந்து ஒரே குழப்பம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை, வெள்ளம் இவற்றுக்கிடையே இந்த வாரம் &lt;a href="http://www.hindu.com/2005/10/26/stories/2005102602281000.htm"&gt;ஒரு விஷயம்&lt;/a&gt; என் கவனத்தை ஈர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இணையத்தின் வீச்சு, மற்றும் தாக்கம் இவைகளைப் பற்றியும், இணையத்தை சர்வதேச அளவில் ஏதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் பற்றியும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தகவல் சமூகத்தின் சர்வதேச உச்சி மாநாடு வரும் நவம்பர் மாதம் துனிசியா நாட்டின் ( வட ஆப்பிரிக்காவில் லிபியாவுக்கும் அல்ஜீரியாவுக்கும் மேலே இருப்பதாக இந்த &lt;a href="http://worldatlas.com/webimage/countrys/africa/tn.htm"&gt;வரைபடம் காண்பிக்கிறது ) &lt;/a&gt;  தலைநகரான துனிஸ்ஸில் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டின் முதல் கட்டம் ஸ்விட்சர்லாந்தின் &lt;a href="http://www.itu.int/wsis/"&gt;ஜெனிவாவில் 2003ல்&lt;/a&gt; நடந்தது. இந்த விஷயம் பற்றி மேலும் அறிய &lt;a href="http://www.panos.org.uk/iwitness/"&gt;இங்கே பாருங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தின் ஆரம்ப கால வளர்ச்சிகள் அமெரிக்காவில் நிகழ்ந்தது என்பதால் அதைக் கட்டுபடுத்தும் அஸ்திரங்கள் தன்னிடமே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதற்கு மற்ற உலக நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் உள்பட - ஆட்சேபம் தெரிவிக்கின்றன. இணையம் உலகெங்கும் பரவலாக படர்ந்து நிற்பதால் ஐ. நா சபையின் கண்காணிப்பிலோ அல்லது வேறு ஒரு சர்வதேச கண்காணிப்பாளரை ஏற்படுத்தியோ இணையம் ஒரு சர்வதேச கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் எதிர்பார்க்கின்றன. அப்படி சர்வதேச அமைப்பின் கைகளில் இணையத்தின் ஆதிக்கம் இருக்குமேயானால் வணிகம், பாதுகாப்பு என்று பல அம்சங்களிலும் பரவியிருக்கும் இணையத்தில் சுலபமாக ஓட்டைகள் ஏற்பட்டு இணையம் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும் என்று அமெரிக்கா சொல்லும் காரணத்தை மற்ற நாடுகள் நொண்டிச்சாக்காகதான் பார்க்கின்றன. அப்படி செய்தால் இணையத்தின் மீது தனக்கு இருக்கும் ஆதிக்கம் நீர்த்துப் போய்விடும் என்பதுதான் அமெரிக்காவின் முதல் கவலை ( - ICANN (Internet Corporation for Assigned Names and Numbers - என்ற இணைய விலாசங்கள் கொடுக்கும் முக்கிய அமைப்பு அமெரிக்காவில்தான் இருக்கிறது; தவிர பல இணையத் தொடர்புகளின் மூல சர்வர்களும் அங்கேதான் இருக்கின்றன  -) என்று இதர நாடுகள் நினைக்கின்றன. இணையத்துக்கு அமெரிக்கா மட்டுமே மூலஸ்தானமாக இருக்கும் நிலை மாறி அமெரிக்காவுக்கு பதிலாக மற்றொரு மாற்று இணைய நிர்வாக அமைப்பு வர வேண்டும் என்ற கோரிக்கை வேகமாக வலுப்பெற்று வருகிறது. ஆரம்பித்தது அமெரிக்காதான் என்றாலும் இன்று இணையம் உலகமெங்கும் இன்றியமையாத தகவல் மையமாகிவிட்டதால் அமெரிக்கா இணையத்தின் மேல் தான் வைத்திருக்கும் "உரிமையை" (???) தளர விட்டுவிட வேண்டும் என்பது உலக நாடுகளின் கருத்து. அப்படி அமெரிக்கா ஆட்சேபித்தால் மாற்று அமைப்பு உருவாக வேண்டும் என்பது அடுத்த கட்ட சிந்தனை. வரும் மாநாட்டில் எப்படிபட்ட தீர்மானம் உருவாகிறது என்று பார்க்க வேண்டும். இணையத்தில் எல்லாவற்றுக்கும் மாற்று அமைப்பு தேடும் காலம் போலிருக்கிறது இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5317770-113041116073014902?l=aruna52.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aruna52.blogspot.com/feeds/113041116073014902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5317770&amp;postID=113041116073014902&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113041116073014902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5317770/posts/default/113041116073014902'/><link rel='alternate' type='text/html' href='http://aruna52.blogspot.com/2005/10/blog-post.html' title='மழை, வெள்ளம்.......இணையம்....'/><author><name>Aruna Srinivasan</name><uri>http://www.blogger.com/profile/14251396992335602938</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5317770.post-112751932513346911</id><published>2005-09-24T05:15:00.000+05:30</published><updated>2005-09-24T05:22:58.966+05:30</updated><title type='text'>இடைவேளை</title><content type='html'>ஊருக்குத் திரும்புவதிலும் இன்னும் சில சொந்த வேலைகளிலும் மூழ்கி இருப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கிருந்து ஜூட்..... ஆனால் திரும்பி வரும்வரை இங்கே வருபவர்களுக்குக் கொஞ்சம் அசைபோட, ஆகஸ்ட் மாத இதழ் திசைகளுக்கு எழுதியதை இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதுலே கொஞ்சம்; அதுலே கொஞ்சம்..... அமெரிக்க கிராமீய நகர்ப்புறங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பஸ் டெர்மினஸ். புற நகர் ரயிலிலிருந்து இறங்கியவுடன் அருகிலேயே இருந்தது. ஒரு எட்டு நடைப் போட்டால் போய் விடலாம் என்று சாலையை இருபக்கமும் பார்த்துவிட்டு ( அப்படிப் பார்க்கவும் என்று போட்டிருந்ததே.) கடந்து இரண்டடி போயிருப்பேன் - நான் போக வேண்டிய பஸ், வந்து நின்றது. ஓடிப்போய் ஏற முயன்றபோது ஓட்டுனர் இறங்கினார். சிரித்துக்கொண்டே இன்னும் ஒரு பத்து நிமிஷம் பொறுங்கள். என் நேரம் இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டு நடந்தார். சரியாக பத்து நிமிஷம் கழித்து அவர் வந்தவுடன், பஸ்சில் ஏறி, நான் போக வேண்டிய நிறுத்தத்தை அவரிடம் குறிப்பிட்டு, இடம் வந்தவுடன் எனக்கு அறிவிக்க சொல்லி சீட்டில் போய் உட்கார்ந்தேன். வண்டியில் நான் மட்டும்தான். போகப்போக ஏதோ ஓரிரண்டு பேர். ஆனால் வெகு நேரம் ஆகியும் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் பற்றி ஓட்டுனரிடமிருந்து அறிவிப்பு வரவில்லை. கடைசி டெர்மினஸ்ஸ¤ம் வந்துவிட்டது. எல்லோரும் இறங்குவதைப் பார்த்து நானும் இறங்க வேண்டியதுதான் என்று முடிவுகட்டி இறங்கும்முன் ஓட்டுனரிடம் விசாரித்தேன் - என் பஸ் ஸ்டாப் வரவேயில்லையே என்று. அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது போலும். தலையில் லேசாக ஒரு தட்டுத் தட்டிக்கொண்டு "அடடா நீங்கள் இரண்டு ஸ்டாப் முன்னாலேயே இறங்கியிருக்க வேண்டும். ஒன்று செய்யுங்கள். இதோ இன்னும் இருபது நிமிடத்தில் என் அடுத்த டிரிப் ஆரம்பிப்பேன். நீங்கள் இதோ இந்தக் கடைவீதியில் ஒரு ரவுண்ட் போய் சரியாக 17 நிமிடங்களில் வந்து விடுங்கள். உங்களை அந்த பஸ் ஸ்டாப்பில் கொண்டு விடுகிறேன். ஆனால் சரியாக 17 நிமிடம். ரொம்பக் கடைகளில் உள்ளே போகாதீர்கள் - காணாமல் போய்விடுவீர்கள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன் ஜாக்கிரதை முத்தக்காவாக நான் 10 நிமிடத்திலேயே திரும்ப வந்து பஸ் அருகில் நின்று கொண்டேன். ஓட்டுனர் 
