tag:blogger.com,1999:blog-5317770.post110916276329953319..comments2023-10-17T17:31:54.865+05:30Comments on அலைகள்: Aruna Srinivasanhttp://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5317770.post-1109444416473418052005-02-27T00:30:00.000+05:302005-02-27T00:30:00.000+05:30அருணா, வருமான வரியின் மூலம் இந்தியாவின் கஜானாவுக்க...அருணா, வருமான வரியின் மூலம் இந்தியாவின் கஜானாவுக்கு வந்து சேரும் தொகை மிக சொற்பம். என்னைப் பொறுத்தவரை மக்களின் செலவு செய்யும் திறனை உயர்த்துதல் மிக அவசியம். அதன் மூலம் சந்தையை விரிவாக்க, மேம்படுத்த இயலும். சந்தை விரிவடைந்தால், பொருட்களின் தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால், உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரித்தால், உற்பத்தி செலவு குறையும் [scale of produces leads to lower cost of production]உற்பத்தி செலவு குறைந்தால், தரமான பொருட்களை ஏற்றுமதி செய்ய இயலும், யூரோவிலோ, அமெரிக்க டாலரிலோ ஏற்றுமதி செய்யும்போது, அன்னிய கையிருப்பு அதிகரிக்கும். அதன் மூலம் நாம் நினைக்கும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை திறம்பட நடத்த இயலும். இதற்கெல்லாம் மிக அவசியமான விசயம், மக்கள் பொருட்கள் வாங்குதலில், சேவையை உபயோகித்தலில் பணம் செலவழிக்க வேண்டும். அதற்கு, கையிருப்பில் காசு இருக்க வேண்டும். அதனால் தான், வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இதைத் தாண்டி, ஒட்டு மொத்த இந்திய வரி வருமானத்தில் வருமான வரியின் பங்கு மிக குறைச்சல், சில வருடங்களில் வருமான வரியினை கொஞ்சம் கொஞ்சமாய் ஒழித்து கட்டிவிடலாம் அரபு நாடுகளைப் போல. கொஞ்சம் அதிரடியாக இருந்தாலும், நீண்ட நாள் செலவினங்களை கணக்கில்கொண்டு பார்க்கும்போது இது உதவும் என்றே தோன்றுகிறது. <br /><br />உதாரணத்திற்கு, 1,30,000 சம்பாதிப்பவரின் நிலையை யோசியுங்கள். அவரின் மாத வருமானம் 10,000+, இதில் அவர் வரியாக செலுத்த வேண்டியது 15,000 ரூபாய்கள். ஆக அவரின் நிகர வரவு வரி போக 1,15,000 ரூபாய்கள். இவ்வாறு இருக்கையில் எவர் தான் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள். அதைவிடுத்து இந்த வரி பணத்தினை விடுவித்தால், 15,000 ரூபாய்க்கு, ஒரு பிரிட்ஜோ, டிவிடி ப்ளேயரோ அல்லது தன் மகன்/மகளுக்கு இரு சக்கர வாகனமோ வாங்கி தரலாம். இவையனைத்துக்கும், தொடர்ந்து உபயோகிக்க செலவு செய்தல் அவசியம் [பெட்ரோல், டிவிடி...] இதன் மூலம் ஒரு சந்தையினையும் தேவையையும் அவரின் வீட்டில் உருவாக்கலாம். <br /><br />இருசக்கர வாகனத்தை எடுத்து கொள்வோம். பெட்ரோல் போட வேண்டும். [பெட்ரோலிய நிறுவனங்கள், பெட்ரோல் ஸ்டேஷன்கள், பெட்ரோலிய பொருட்கள், ரியல் எஸ்டேட், கருவிகள் உற்பத்தி, வேலைவாய்ப்பு]வண்டியை சர்வீஸ் விட வேண்டும் [ சேவை வேலை வாய்ப்புகள், வண்டியின் உதிரி பாகங்களின் உற்பத்தி, ப்ரான்செய்ஸி வாய்ப்புகள், வேலை வாய்ப்பு - தெருவோர மெக்கானிக்கிலிருந்து, படித்து சேவை மையங்களில் வேலை செய்வோர் வரை] பல இடங்களுக்கு இலகுவாக சென்று வர இயலும். இதன் மூலம் பார்வை விரிவாகிறது. சில பொருட்கள் இங்கே சல்லிசாக கிடைக்குமென்று தெரிந்தால், அங்கே போய் வாங்க இயலும். அதன்மூலம் வேறு பொருட்களின் விற்பனையும், சந்தையும் உயரும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1109436947296812792005-02-26T22:25:00.000+05:302005-02-26T22:25:00.000+05:30செய்கிறேன், நாராயண்; 28ந் தேதிக்குப் பிறகு :-)
அத...செய்கிறேன், நாராயண்; 28ந் தேதிக்குப் பிறகு :-)<br /><br />அதுசரி. இப்போவும் வருமான வரி ஸ்லேப் 10; 20; 30 என்று மூன்றுதானே இருக்கு? 50000 - 60000; @ 10%<br /><br />60001 - 1,50,000; @ 20%<br /><br />1,50,000 - மேலே @ 30% <br /><br />ஆனால் நீங்கள் சொல்வதுபோல் ஒரு லட்சம் -( ஒரு லட்சம் மட்டுமே, மேலே ஒரு பைசா கூடாது (!) - வருமானம் உள்ளவர்கள் பாடு தேவலை. கொஞ்சம் மேலே போச்சோ... ஸ்லேப் கணக்கு, ரிவர்ஸ் கியரில் போய் ரூ. 50001லிருந்து ஆரம்பித்துவிடுகிறது. 50000 - 60000; @ 10% plus அடுத்த ஸ்லேப் - 60001 - 1,50,000; @ 20% ; என்று சுளையாக தாளிக்க வேண்டும். மேலோட்டமாக பார்த்தால் அநியாயமாகதான் இருக்கு. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் ஒரேயடியாக 1 - 3 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 10% மட்டுமே....?!!! நடக்கிற காரியமா?! அப்புறம், குறைந்த பட்ச விலக்கும் 1,50,000 வரை உயர்த்த வேண்டும் என்று வேறு ஆசைப்படுகிறீர்கள். பிறகு சிதம்பரம் செலவுக்கு எங்கே போவார்? "100 நாள் வேலைவாய்ப்பு", கட்டுமான வேலைகளில் இன்னும் முனைப்பு, போன்ற ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், இந்த வருடம் அறிவிக்கப்போகிற திட்டங்கள், என்று வரிசையாக அவரை பயமுறுத்துமே? எனக்கென்னவோ இந்த முறை வருமான வரியில் அவர் ஏதும் கைவைப்பார் என்று தோன்றவில்லை. இருந்தாலும் ஒரு விஷயம் எனக்கு புரிவதேயில்லை. விவசாயத்தை வருமான வரியில் இழுக்க வேண்டாம். சரி. ஆனால் பணக்கார விவசாயிகளிடம் வரி வசூலிப்பதில் என்ன கஷ்டம்? தனவ்ந்தர்களான தொழிலதிபர்கள் போல விவசாய நிலச்சுவான்தாரர்களை ஏன் வரி வலைக்குள் கொண்டுவரக்கூடாது? விவசாயம் என்பது இன்னும் அரசியல் நோக்கிலேயே பார்க்கப்படுகிறது - யார் பதவியிலிருந்தாலும்.<br /><br />சேவைகள் சற்று பணம் வரக்கூடிய பகுதி. சென்ற வருடம் பந்தல் போடுபவர்கள், டிராவல் ஏஜண்ட்கள் என்று சில சேவைகள் புதிதாக வரிவலையில் சேர்க்கப்பட்டன. இந்த வருடம் இன்னும் புதிதாக ஏதாவது சேருமா என்று பார்க்க வேண்டும்.<br /><br />விதம் விதமாக மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும் விற்பனைவரிக்கு பதிலாக, சங்கிலித் தொடர் போல், உற்பத்தியாளர்கள் ஒரு பொருளுக்கு தாங்கள் வாங்கும்போது செலுத்தும் வரியின் கணக்கை தாங்கள் விற்கும் பொருளில் காட்டி சரிகட்டும் வசதி, மதிப்பு கூட்டு வரி முறையில் இருப்பதால் இது விற்பவர்கள், வாங்குபவர்கள் இருவருக்குமே நல்லது. கடைசி படிகட்டில் இருக்கும் நுகர்வோர் ( நாம்பதான், வேறு யார்? :-) ) இதனால் பயன்பெறுவார்கள்.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-1109355293408769352005-02-25T23:44:00.000+05:302005-02-25T23:44:00.000+05:301.சென்ற பட்ஜெட்டில் அறிவித்த இரும்பு எஃகு வரியினை ...1.சென்ற பட்ஜெட்டில் அறிவித்த இரும்பு எஃகு வரியினை குறைக்கலாம். உலகசந்தையில் தரமான இரும்பிற்கு சந்தை அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.<br /><br />2. வருமான வரி உச்சவரம்பை 1,50,000 என ஆக்குதல் நலம் என்று தோன்றுகிறது. இப்போது உள்ள பல்வேறுவிதமான் ஸ்லாபுகளை தூக்கி பழைய பேப்பர்காரனுக்கு போட்டுவிட்டு, பேசாமல் 10%,20%, 25% என உயர்த்தலாம். இதில் இன்னொரு கொடுமையையும் நீக்க வேண்டும். 100,000 வரை வரி கிடையாது ஆனால், 110,000 யாயிருந்தால், நீங்கள் கட்டவேண்டிய வரித்தொகை 9,000 ரூபாய் என்று நினைக்கிறேன். இது அநியாயம். அதைவிட 1 - 3 லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் வெறும் 10% மட்டுமே வரி கட்ட வேண்டுமென்று சொன்னால், நிறைய பேர் ஏமாற்றாமல் இருப்பார்கள். குறைந்த வரிப்பணம் என்பதால், அரசுக்கு நிரம்ப வருவாயும் கிடைக்கும்.<br /><br />3. மதிப்பு கூட்டு வரி ஒரே சீராக விதிக்கப்பட்டால்,ஏகப்பட்ட பிற வரிகளை சீரமைக்க முடியும். WTO-வின் கையெழுத்துப்படி, இந்தியா தமது இறக்குமதியின் மீதான வரிகளை 0% கொண்டு வருதல் அவசியமாகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், டிவி, பிரிட்ஜ், கணினி விலைகள் குறைய ஆரம்பிக்கும் வாய்ப்புள்ளது.<br /><br />இன்னமும் நிறைய மாற்றங்களை உள்ளடக்க வேண்டியதிருக்கிறது. <br /><br />நன்றாக பதிந்திருக்கீறிர்கள். இன்னமும், விரிவாய் அலசுங்கள்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.com