Saturday, May 28, 2005

செந்தில்குமார்... தொடர்ச்சி...

சென்றப் பதிவில் செந்தில்குமார் பற்றி எழுதிய விஷயம் ஒரு விதத்தில் இதமாக இருந்தது என்றால், விழுந்துள்ள பின்னூட்டங்களும் நட்சத்திரங்களும் அதேபோல் நம்மைப் பற்றி ஒரு நிறைவைக் கொடுக்கிறது. பிறருக்கு உதவ நினைக்கும் உள்ளங்கள் எங்கேயும் எப்போதும் உண்டு என்பதற்கு இங்கே இன்னொரு ஆதாரம். பின்னூட்டம் அளித்த, செல்வநாயகி, ஜோஸ்லின், கண்ணன், வீ.எம், மற்றும் நட்சத்திரத்தில் ஓட்டுப் போட்ட, மனதில் ஈரத்துடன் படித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் செய்தியை நான் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மாலன்தான் முக்கிய காரணம். செய்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இங்கே தமிழ் மணத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற யோசனையை முதலில் சொன்னது அவர்தான். இவ்வளவு பேரின் ஆக்கப்பூர்வமான என்ண அலைகளுக்கு "அலைகள்" ஒரு கருவியாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இப்போது செல்வா சொன்ன விஷயத்துக்கு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

செந்தில் குமாரின் நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் ஒரு மாணவர் குழுவாக இயங்குகிறார்கள். செந்தில்குமார் தவிர, ஏற்கனவே சில உடல் சவால் உள்ள மாணவர்களுக்கு இப்படி பணம் திரட்டி உதவி செய்துள்ளார்கள் - கல்லூரி வளாகத்துள் சென்று வர ஸ்கூட்டிகள் வாங்கிக்கொடுத்து. ஆனாலும் "மாணவர்களாக இருப்பதால் நாங்கள் பணத்தை நேரடியாக கையாளத் தயங்குகிறோம். Madras ENT Charity Trust போன்ற பொது அமைப்பின் மூலம் பணம் திரட்டினால் பின்னால் எங்களுக்கு ஏதும் வம்பு வராது என்று நினைக்கிறோம். ஆனாலும் செந்தில் குமார் பேருக்கு நேரடியாக அனுப்புவதில் ஏதும் பிரச்சனையில்லையென்று நினைக்கிறேன்" என்று சொல்லி, சற்று நேரத்தில் அந்த நண்பர் - அவர் பெயர், ராமசுப்பிரமணியன் - செந்தில்குமாரிடம் விசாரித்துவிட்டு அவர் முகவரியைக் கொடுத்தார். விவரம் கீழே:

Draft in Favour of C. Senthilkumar

Address:
S/O. R. Chandran
ChettickulamValavanthi Kombai (Via)
Kalappannaicken Paati (Post)
Namakkal -Pin: 637404
Phone: 04286 - 241322

No comments: