Wednesday, February 09, 2005

நேபாளத்தில் மன்னர் ஆட்சியைப் பிரகடனப்படுத்திவிட்டு, பத்திரிகைகள் சுதந்திரத்தையும் ஒடுக்கியுள்ளார். அரசுக்கு எதிராக எதுவும் வெளியிட முடியாத நிலையில் பத்திரிகைகள் நூதன விதத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றன என்று இந்த செய்தி சொல்கிறது.

தங்கள் தலையங்கங்களில், பாலே நடனம், Archery, மரம் நடுதல், காலுறையை ( socks) சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம், போன்ற சமாசாரங்களைப் பற்றி எழுகின்றனவாம் ! :-) இது ஒரு விதமான Satire என்று சொல்லும் ராஜேந்திர தஹால் என்கிற ஒரு பத்த்ரிகையாசிரியர், "இதுவும் ஒரு வகையில் எங்கள் அதிருப்தையையும் எதிர்ப்பையும் காட்டும் வழி" என்கிறாராம் ! சுவாரசியமான வழிதான். சரியான நெத்தியடி நக்கல் !! ஆனால் இதெல்லாம் மன்னருக்கு உறைக்குமா என்ன? இன்று ஹிந்திவில் மன்னர் ஆட்சியைக் கைபற்றியது சரிதான் என்று சில வாசகர்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். வருத்தமாக இருந்தது. ஜனநாயக முறைகளில் ஒரு அரசைத் தண்டிக்க வழி இருக்கும்போது இப்படி இவர்கள் நம்பிக்கையிழக்கலாமா என்று தோன்றியது. இந்தியா ஏன் பூடான் அரசின் மன்னர் ஆட்சியைப் பற்றி விமரிசனம் ஒன்றும் சொல்லவில்லை என்று ஒருவர் கேட்டிருந்தார். ஒன்று மன்னர் ஆட்சி என்பது அங்கே பெயருக்குதானே தவிர உண்மையில் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரும்பான்மையான அதிகாரங்களை தன் மந்திரிசபையிடம்தான் கொடுத்துள்ளார். வம்சாவளியின் காரணமாக தான் மன்னராக பொறுபேற்றிருந்தாலும் தன் நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று விரும்பி 2001ல் இதற்கு ஒரு திட்டம் ஆரம்பித்துள்ளார். இதன் படி இன்னும் சில வருடங்களில் இவர் தன் மன்னர் பதவியை துறந்து நாட்டில் தேர்தல் வைத்து அரசை அமைக்க வேண்டும். 1981லிருந்தே இதற்கு அஸ்திவாரம் போட ஆரம்பித்துவிட்டார். 1998ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் ஒரு பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு, இரண்டுக்கு மூன்று என்கிற விதத்தில் வாக்களிக்கபட்டு மன்னரை அகற்றும் முழும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது வேறு சமாசாரம்.

மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான இந்த வரைபடம் இந்த வருடம் அறிவிக்கப்படும் என்று இங்கே நமது குடியரசு தின விழாவிற்கு வந்தபோது நமது பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

2003 முதல், கிராமங்களில் மக்களால், தேர்தல் முறையிலேயே தலைவர்கள் தேர்ந்தெடுகப்படுகின்றனர். தவிர, அரசுக்கு எதிராக மக்கள் பொது நல வழக்கு தொடரவும் சுதந்திரம் உண்டு.

இந்த நாட்டின் முக்கால்வாசி வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியாதான் கொடை வள்ளல். பதிலுக்கு தங்கள் வெளியுறவு விஷயங்களில் பூடான் இந்தியாவைக் கலந்தாலோசிக்க வேண்டும் - 1949ல் கொண்ட உடன்படிக்கையின்படி. இப்படி நகமும் சதையுமாக இருந்தாலும் மன்னர் எங்கே "அந்தப் பக்கம்" ( அதாங்க, அவங்க பக்கத்தில் இருக்கும் இன்னொரு giant சீனா) சாய்ந்துவிடுவாறோ என்று நமக்கு எப்பவும் உள்ளே ஒரு கலக்கம். நமது எல்லைப் பாதுகாப்புக்கு இவரது சுமூக உறவு மிக முக்கியம்.

பூடான் மன்னர் ஆட்சிக்கு பல விதங்களில் விமரிசனங்கள் இல்லாமலில்லை. அகதிகள் விஷ்யம் பெரும் தலைவலி. அருகில் இருக்கும் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் இவற்றிலிருந்து குடியேறியவர்கள் அதிகம். 1988ல் பூடான் அரசு குடியேறிகளைத் தவிர்க்க /தடுக்க ஒரு முடிவெடுத்தது. இதன்படி 1958க்கு பிறகு வந்தவர்களுக்கு பூடான் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதன் காரணமாக நிறைய நேபாளிகள் வெளியேறுபடி ஆயிற்று. ஆனால் நேபாளம் இவர்களை ஏற்க மறுத்தது - அவர்கள் பூடான் பிரஜைகள் என்று கூறி. இப்போது இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் யு. என் கட்டியுள்ள முகாம்களில் வாழ்பவர்கள் எண்ணிக்கை, சுமார், 100,000. இந்த விஷயத்தில் பூடான் அரசு இன்னும் சற்று கருணையோடு இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் வரைபடத்தில் ஒரு புள்ளி அளவுகூட இல்லாத நிலப்பரப்பைக் கொண்ட கடுகளவேயான நாடு, அண்டை நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளைத் தடுக்க முயற்சிப்பதில் என்ன தவறு? அமெரிக்கா, சிங்கப்பூர் என்று அவரவர் தன் நாட்டு நிலப்பரப்பில் குடியேறிகள் அதிகம் நுழைந்துவிடாமல் தற்காத்துக்கொள்ளவில்லையா? எல்லோருமே இந்தியா போல் இருந்துவிடுகிறார்களா? டில்லி, கல்கத்தா, சென்னை என்று ஆங்காங்கே அகதிகள் குடியிருப்புகளைப் (வெறும் முகாம்கள் இல்லை!) பராமரித்துக் கொண்டு? மன்னரின் காபினெட்டில் Drukpa என்ற அவரது மதப் பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதிலிருந்து Drukpa கலாசாரத்தை - பக்கூ என்ற உடை அணியச்செய்வது போன்றவை- மக்கள் மீது திணிக்கிறார் என்பது வரை நிறைய விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் கூட்டிக் கழித்து பார்த்தால், இவர் ஒரு ஜனநாயக மன்னர் என்பது என் அபிப்பிராயம் - இவர் உண்மையிலேயே மன்னர் ஆட்சிக்கு முடிவுரை கூறும் திட்டத்தை நிறைவேற்றி, தனக்குப் பின் தன் மகன்களில் ஒருவருக்கு பட்டம் சூட்டாமல் இருப்பாரானால், நிஜமாகவே சரித்திரத்தில் இடம் பெறுவார்.

பி.கு: பத்து குழந்தைகள் ( இதிலே அஞ்சு; அதிலே அஞ்சு) பிறந்தபிறகு இவரது திருமணம் நடந்தது. 1988ல் இவரது நான்கு (ஆமாம், நான்கு!!!) மனைவியருடன் நடைபெற்ற இந்த திருமண விருந்தாளிகளில் பட்டியலில் நாங்களும் இருந்தோம். அந்த நால்வரும் சகோதரிகள் என்று சொன்னார்கள். மன்னர் திருமணத்தின்போது இளவரசர்களும் இளவரசிகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் மூத்த இளவரசர் என் மகனின் கிளாஸ்மேட். - அட இதை இப்போ சொல்லியே ஆக வேண்டுமா? :-) ஹ்ம்ம்.... names drop செய்யும் ஆசை யாரை விட்டது? :-)

4 comments:

ரவியா said...

very informative. A good post !

ராஜா said...

பூடான் அரசு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி!

மாலன் said...

சுவாரஸ்யமாக இருந்தது. பூடான் பற்றி இன்னும் நிறையச் சொல்லுங்கள். அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம், மத நம்பிக்கைகள், இந்தியா பற்றி என்ன நினைக்கிறார்கள்? லாட்டரிச் சீட்டு வழக்கம் உண்டா போன்ற விபரங்களைச் சொல்லுங்களேன்

Aruna Srinivasan said...

ரவியா, ராஜா, மாலன், மிக்க நன்றி. இதை எழுதினப்புறம்தான் எனக்கே தோன்றிற்று. இன்னும் நிறைய இருக்கே.. எழுதலாமே என்று :-) எழுதுகிறேன்...