Tuesday, January 18, 2005

முரசு அஞ்சல் முத்து நெடுமாறனிடமிருந்து இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. அவரும் ஒரு வலைப் பதிவு தொடங்கிவிட்டார் !! கடந்த 15ந் தேதி அன்று அவரது நிறுவனத்தின் படைப்பான கைத் தொலைப்பேசியில் தமிழ் குறுந்செய்தி சேவை தொடங்கியது. சேவை தொடங்கிய செய்தி வெளி வந்த சற்று நேரத்திலேயே உலகின் பல பகுதிகளிலிருந்தும் அவருக்கு வேண்டுகள்கள் வர ஆரம்பித்துவிட்டனவாம் - தங்கள் செல்போன்களில் எப்படி இந்த சேவையை உபயோகிப்பது என்று.

எல்லோருக்கும் பொதுவாக விரைவில் சரியான விவரங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்ற என்ணத்தில் ஒரு வலைப் பதிவை தொடங்கிவிட்டார். ரொம்ப நாட்களுக்கு முன்னரே அவரையும் ஒரு வலைப் பதிவு ஆரம்பிக்க சொல்லிக் கொண்டு இருந்தேன். பரவாயில்லை. இப்படி தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் அவசியம் அவரையும் ஒரு பதிவு ஆரம்பிக்க வைத்துவிட்டதே :-)

செல்லினம் என்று பெயர் சூட்டப்பட்டு கவிஞர் வைரமுத்து அவர்களால் தொடங்கப் பெற்ற இந்த சேவையைப் பற்றி இந்த வலைப் பதிவில் படியுங்கள்.

2 comments:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

உங்கள் தகவலுக்கு நன்றி

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

உங்கள் தகவலுக்கு நன்றி