Thursday, June 24, 2004

தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது....

ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் வாயை மூடிக்கொண்டு பயணம் செய்பவர்கள் எவ்வளவு பேர்? எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிடுவேன். சமூகம், அரசியல், ஏமாற்றும் ஆட்டோக்காரர்கள் ( இவர் ஏமாற்றாத ஆள் என்பதை உறுதி செய்து கொண்டு !!) என்றுமே மாற்றியமைக்கப்படாத மீட்டர், மீட்டருக்கு சூடு வைக்கும் டிரைவர்கள் ( அப்படின்னா என்ன என்று தெரியாதவர்கள் சென்னையில் காரில்லாமல் சுற்றும்படி வேண்டுகிறேன் - அதிகமில்லை, இரண்டு நாள் போதும்) இப்படி பேச்சு சுழன்று வரும்.

அன்று அந்த ஆட்டோ டிரைவர் சுவாரசியமாகப் பேசினார். பேச்சில் தெரிந்த முக்கிய விஷயங்கள் - அவர் படித்தது ப்ள்ஸ் 2 வரையில். அரசாங்க வேலைக்கு மிக முயன்றார்.ஆனால் கிடைக்கவில்லை. காரணம் இவருக்கு சிபாரிசு செய்ய யாருமில்லை !!!
"ஏதோ பரிட்சை எல்லாம் எழுதினேங்க. நல்லாத்தான் எழுதினேன். ஆனாலும் வேலைக்கு மனுப்போடும்போது எனக்கு ஏதும் சிபாரிசு இல்லீங்க. சிபாரிசு இல்லாமல் அரசு வேலை கிடைக்காதுங்க." நான் மேலும் குடைந்தபோது வந்த பதில். " பள்ளிக்கூடம் படிக்கும்போதே நிறைய ஆசிர்யர்கள் கோச்சிங் கிளாஸ் படிக்க சொல்கிறார்கள். அப்புறம் கோச்சிங் கிளாஸில் படிக்கும் தன் மாணவர்களுக்கு அந்த கோச்சிங் "பள்ளி" எப்படியோ வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் அந்த கோச்சிங்க் பள்ளிகளில் / கிளாஸ்களில் படிக்க நிறைய பணம் வேணுமே? நாம உழைச்சுப் படிச்சு படிச்சோம்/ நல்ல மார்க்கோடு பாஸ் பண்ணினோம் என்றாலும் எங்கே வேலை கிடைக்கிறது? அதான், இப்படி ஒரு ஆட்டோவை வாங்கிப் போட்டு ஓட்டுகிறேன். இதில் சொந்தமாக வேலை. ஓரளவுக்கு வருமானம். என் குடும்பத்துக்கு போதும்."

இவர் மனைவி இளம் நிலை பட்டப் படிப்பு முடித்து முதுநிலையைத் தொலைத் தொடர்பு கல்வியாகப் படிக்கிறார். " அவருக்காவது ஏதாவது அரசு வேலைக் கிடைக்குமா" என்று பார்க்கிறேன்" - ஆட்டோகாரர்.

ஒரு உறவினர் பெண். கணவர் வெளி நாட்டில். இவருக்கு இங்கே அரசு உத்தியோகம். காடாறு மாசம். நாடாறுமாசம் கதை. அவ்வப்போது 6 மாதம் "லீவு" எடுத்துக்கொண்டு வெளி நாட்டில் கணவருடன் குடித்தனம் பண்ணப் போவார் - குழந்தைகளுடன். இந்த திரிசங்கு கதை ஏன்? ஒரு வழியாக வேலையை விட்டுவிட்டு கணவருடனேயே வெளி நாட்டில் இருக்கக்கூடாதோ? " அதெப்படி முடியும்? அரசு வேலைக் கிடைப்பதே குதிரைக் கொம்பு. இந்த "பாதுகாப்பான" வேலையை விட்டுவிடமுடியுமா?" அன்தப் பெண்ணின் பதில். இந்த அரசு வேலையைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் அவருக்கு கிடைத்த லாபம் - அவ்வப்போது கிடைக்கும் நீண்ட விடுப்பு - தனியார் துறையில் இப்படி முடியுமா?

இன்னொரு பக்கம். ஒரு குடும்ப நண்பர். ஏதோ வேலையாக அவரை அலுவலகத்தில் சந்திக்க வேண்டியிருந்ததால், அவர் எப்போ ஓய்வாக இருப்பார் என்று கேட்டேன். ஓய்வா? 10 மணியிலிருந்து 5 மணி வரை ஓய்வுதான் என்று சொல்லிவிட்டு "அரசு உத்தியோகம். என் விருப்பபடிதான் வேலை செய்வேன். என்ன யாரும் கேட்டுற முடியுமா என்று சொல்லி பெரிதாக சிரிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் அடிப்பது ஜோக்தான் என்றாலும் ஓரளவு அதில் உண்மையில்லாமல் இல்லையே? அதேபோல், டில்லியில் குளிர் காலம் வந்துவிட்டால், அரசு அலுவலகங்களில் பெரும்பாலான பெண் ஊழியர்கள் கையில் ஸ்வெட்டர் ஊசி/ நூல் இருக்கும். 10 மணி அலுவலக்ம் என்றாலும் 11 மணி வரை ( நடு நடுவே டீத் தண்ணி break லும் ) வெளியில் புல் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்தபடியே வேகமாக நிட்டிங் வேலை நடக்கும். ஆபீஸ் வேலையைப் பற்றி அவர்கள் முகத்தில் கவலையே இல்லை போலிருக்கும். தனியார் துறையில் இது முடியுமா?

இன்று மாறி வரும் தொழில் சூழ்நிலையில் போட்டி காரணமாக அரசு அலுவலகங்களிலும் வேலை ஏய்ப்பு குறைந்து உற்பத்தி திறன் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும், " ஸ்திர தன்மை" " வேலைப் பாதுகாப்பு" என்ற பெயரில் ineffeciency ஆதரிக்கப்படுகிற நிலை இன்னும் மாறவில்லை. இன்று தனியார் துறை மாற்றத்திற்கு யூனியன்களின் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைத் திறமை சுமாராக இருந்தாலும் ஒரு "பத்திரம்" இருக்கிறதே? தனியார் கையில் மாறினால் அது போய்விடுமே? வேலையைத் தக்க வைத்துக்கொள்ள தன் திறமையை நிரூபிக்கும் வண்ணம் உழைத்தாக வேண்டுமே? " நீ எப்படி வேலை செய்தாலும் அரசு உத்தியோகத்தில் உன்னை அசைக்க முடியாது" " வேலை செய்யாமல் கை நிறைய சம்பளம். எங்கே கிடைக்கும் இப்படி?" அவ்வப்போது காதில் விழும் வார்த்தைகள் இவை. நம் மக்களின் மனோபாவம் இப்படி இருக்கும் வரையில் அரசு உத்தியோகத்திற்கு தனி மதிப்பும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

ஒரு பக்கம் இப்படி "மதிப்பு". இன்னொரு பக்கம், அரசு வேலைகள் குறைந்து கொண்டு வருகின்றன என்ற நிதர்சனம். இந்த நிலையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், வேலைத்திறன் உயர்ந்து உற்பத்தி தரம் உயரவும் ஒரே வழி, தனியார் முதலீடுகள் பல் வேறு துறைகளில் பெருகி வேலை வாய்ப்புகள் உண்டாக்கப்டுவதும், தனி மனித தொழிலுணர்வு ( entrepreneurship) ஊக்குவிக்கப்படுவதும் மட்டுமே சிறந்த வழி. வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் ஆட்டோ வாங்கி தொழில் நடத்துகிறார். தையல் தெரிந்தவர் தையல் மிஷின் வாங்கி தொழில் நடத்தலாம். திறமையாக செய்தால் அவரே விரைவில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியாக உருவெடுக்கலாம்.

தவறு எங்கே என்று தெரியவில்லை என்று வெங்கடேஷ் தன் பதிவில் குறிப்பிடுகிறார். தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். In my opinion, the govt. need not be a provider of employment - but must be a facilitator of employment generation. மீன் கொடுக்க வேண்டுமா? அல்லது மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டுமா என்ற அடிபப்டை கேள்விதான் இங்கே. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்படியான சூழலை ஏற்படுத்த வேண்டும். தொழில் தொடங்குபவர்களுக்கு/ உற்பத்தியைப் பெருக்குபவர்களுக்கு / வேலை வாய்ப்பை அதிகரிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

1 comment:

Nat said...

Very nice write-up. I particularly agree with your conclusion the governments ought to be facilitators and not creators of employment. Governments are simply incompetent at that.

Over the past fifty years, people in India have relied excessively on government - for digging borewells in their backyard to provide for their children to themselves, to provide for their family etc., all in one way or another. ("geverment pannum" was the frequent resort of every villager and every urban). People assumed that government would serve like a mother/father and positioned themselves as hapless children. But that is a huge fallacy: family is quite a different entity in providing and serving from that of a government. Yet this fallacy seems to be continuing till date.

We need to nourish a healthy skepticism for the idea of governments. And that skepticism should spring from well-thought out philosophical and historical reasonings, most of which is already found in western countries. I hope some day we will achieve that state of mind. Governments are all about creating, concentrating, and exercising power over people, resulting in a loss of individual freedom, choice, and ultimately a wasted individual life.