Saturday, June 05, 2004

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில்....

....உலக வர்த்தக அமைப்பின் கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு இந்தியா ஏன் இறக்குமதி வரிகளைக் குறைக்கக்கூடாது, தடைகளை அகற்றக் கூடாது என்று வாதிக்கும் சுரேன், தன் பதிவில், Life & Debt என்ற விவரணப் படத்தைப் பற்றி மெய்யப்பன் பதிவில் இருந்ததைச் சுட்டியிருந்தார்.

ஜமைக்காவுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. We have our own checks and balances. We have a matured democracy with vibrant media to create public awareness. தவிர, நமது தொழில் துறை நன்கு காலூன்றி வளர்ந்து வருகிறது. ஜமைக்காவில் அப்படி அல்ல. அங்கே இன்னும் விவசாயத்தை அல்லது கனி வளங்களை அடிப்படையாக கொண்டதுதான் தொழில் துறை. உள்ளூர் உற்பத்தி அதிக வலுவில்லாத நிலையில் வெளி நாட்டு உற்பத்திகள் சந்தையை எளிதாக ஆக்கிரமித்துக்கொள்ள முடிகிறது. நம் ஊரிலோ ஏற்கனவே நல்ல உற்பத்திகள் சந்தையில் நிறைய உண்டு.

உலக வங்கி போன்றவை நம் மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க ஒரு வழி, கடன் வாங்கும் சூழ்நிலையைத் தவிர்ப்பதுதான். நமது மாநிலங்கள் அகலக் கால் வைக்கும் விதமாக சில சமயம் பெரிய திட்டங்கள் போட்டு கடன் வாங்க நேரும்போது இப்படிபட்ட கட்டுபாடுகளுக்கு ஆளாக நேருகிரது.

நமது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை அகற்றி, இருக்கும் வளங்களை ஓட்டையில்லாமல் சரியாக பயன்படுத்தும்போது, உலக வங்கி போன்றவற்றிடம் கடன் வாங்கும் அவசியத்தைக் குறைக்கலாம் - இன்று நமக்கு சுத்தமாக IMF கடன் இல்லை. RBIயின் Balance of Payment ஆவணத்தை எடுத்துப் பாருங்கள்; IMF என்ற குறியீட்டின் கீழே இருக்கும் 00 ( ஜீரோ) ஒரு மன நிறைவைத் தரும். நம் வரிகள் மீது IMF ஆதிக்கம் இன்று கிடையாது. வெளியே கடன் வாங்க வேண்டிய சூழலைத் தவிர்க்க முயல்வது ஒரு தொலை நோக்காக இருக்க வேண்டும். கடன் கொடுத்தவர்கள் போடும் ஆணைகளுக்கு தலை வணங்க வேண்டிய சூழலைத் தவிர்க்கலாம். அல்லது குறைக்கலாம். பணம் புரட்ட வேறு முறைகளை சிந்திக்கலாம். இங்கே உள்ள " பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு" பதிவையும் பாருங்கள்.

கடன் கொடுத்தவர்கள் கட்டுப்பாடுகள் போடுவது இயற்கை. ஆனால், கடன் கொடுத்தவர்கள் ஆணைகளுக்குக் கட்டுபப்டுவது வேறு. உலக வர்த்தக அமைப்புக்கு அதன் சம உரிமை உள்ள உறுப்பினராக கோட்பாடுகளுக்குக் கட்டுப்படுவது வேறு.

ஜமைக்காவில் நடப்பது முந்தையது. பின்னர் உள்ளது, நமக்கு மற்ற வளர்ந்த நாடுகளுக்கு சமமான உரிமை உள்ள ஒரு அமைப்பு. நம்மை ஏமாற்றுகிரார்கள் என்று உணர்வு பூர்வமாக முடிவெடுக்காமல், உண்மை நிலை என்ன, நம் தரப்பை எப்படி வலுப்படுத்தி எப்படி level playing field சூழ்நிலையை உருவாக்குவது என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். If the situation calls for a fight, let's do it; but not give up with out one.

ஆரோக்கியமான உலக வணிகத்திற்கு, சர்வதேச நாடுகள் ஒன்றுபோல் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்கும்படி செய்வதற்கு நமக்குத் தேவையானவை மூன்று முக்கிய அம்சங்கள்.

1. வளர்ந்த நாடுகளின் தொழில் முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு.

2. நம் கவலைகளை சரிவர உணர்ந்து, அவற்றை சர்வதேச அளவில் கவனம் பெறச் செய்ய நம்மிடம் வலுவான வாதிகள். காங்கூன் ஏன் தோல்வியடைந்தது என்று நினைக்கிறீர்கள்? வளரும் நாடுகளின் கூட்டணியின் ஒற்றுமைதான். வலுவாக தங்கள் பக்க வாதங்களை நிலை நாட்ட வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிகம் - as developed world increasingly turn protective against the heat built up by developing world. பேச்சு வார்த்தைத் தொடரப்பட வேண்டும். அழுகுணி ஆட்டம் ஆடும் நாடுகளைப் பற்றி முறையீடு செய்ய - Dispute Settlement அமைப்பு உள்ளது. இதைப் பற்றி சில ஆவணங்கள்:

2.

3.


பெரும்பாலான முறையீடுகள் வெற்றி பெறுகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தங்கள் தடைகளை அகற்றாமல் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தடைகளை அகற்றச் சொல்கின்றன வளர்ந்த நாடுகள் என்பது மிகைப் படுத்தப்பட்ட வாதம் என்றும், தடைகள் அகற்றிய ஆரோக்கியமான உலக வணிகத்தில் வளரும் நாடுகளுக்கும் பயன் உண்டு என்றும் பொருளாதார நிபுணர் ஜகதிஷ் பகவதி இங்கே கூறுகிறார். பகவதி, சற்று மிகையாகவே வளர்ந்த நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவதாகத் தோன்றினாலும், " அவங்க- கொஞ்சம்தான்- protection- வைத்திருக்காங்க, நீங்க, - நிறைய" என்ற விதமான வாதம் சால் ஜாப்பு என்று தோன்றினாலும், எதிர் தரப்பு வாதத்தையும் கவனிப்பது, சரியான நிலையை உணருவதற்கு அவசியம் என்று நினைக்கிறேன். வளர்ந்த நாடுகளுக்கு அவர் சொல்லும் அறிவுரை குறிப்பிடத்தக்கது. " உங்கள் வரிகள் வளரும் நாடுகளை விடக் குறைவுதான் என்றாலும் சரி, அலல்து அமெரிக்கா இப்போது steel tariff and farm bill ல் செய்ததுபோல் "பாதுகாப்பு" முறைகளை உயர்த்தினாலும் சரி, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். பணக்கார நாடுகளான நீங்களே இப்படி செய்யும்போது, இப்போதுதான் தங்கள் protection முறைகளைத் தளர்த்த ஆரம்பிதிருக்கும் வளரும் நாடுகள் இந்த முயற்சியைத் தொடர தயக்கம் காட்டுவார்கள்." பகவதி, வளர்ந்த நாடுகள் வைத்திருக்கும் "வேளாண்மைப் பாதுகாப்பை" தகர்ப்பதற்கு வழிகளும் சொல்கிறார்.

உணர்ச்சிகரமாக அணுகாமல் நியாய / அநியாயங்களை உணர்ந்து, தொடர்ந்த பேச்சு வார்த்தைகள் ( பேரம்??) - பேச்சு வார்த்தைகள் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான வணிக சூழ்நிலையை உருவாக்கும்.

3. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் பொருட்களின் / சேவைகளின் தரத்தை உயர்த்துவது. நம்ம பொருள் பிரமாதமாக கணிச விலையில் இருக்கும்போது நான் ஏன் வெளிநாட்டுப் பொருளை வாங்குவேன்? "பாதுகாப்புகள்" நாம் வைக்காமலேயே, இறக்குமதி பொருட்களுக்கு இங்கே தானாகவே மதிப்பில்லாமல் / சந்தையில்லாமல் போனால் தேவையில்லாத இறக்குமதிகள் தானாகவே குறைந்துவிடும். பொதுவாகவே இந்திய நுகர்வோர்கள் தங்கள் சுவைகளை அவ்வளவு சீக்கிரம் மாற்றிகொள்ள மாட்டார்கள். வெளி நாட்டு உற்பத்தியாளர்கள் இந்தியாவுக்கு என்றே தங்கள் டிசைன்களை / படைப்புகளின் சுவையை நமகேற்றவாறு மாற்ற முயற்சிப்பதன் காரணம் இதுதான். நமக்கேத்தவாறு இல்லையென்றால் போணி ஆகாது. இது அவர்களுக்கும் புரியும். இந்திய மார்கெட்டைப் பற்றி ஆசைப் பட்டு இங்கே ஓடி வந்து கடை விரித்து, பின்னர் நம்ம நுகர்வோர்களைப் புரிந்து கொள்ளாமல் நஷ்டம் கண்டு கடையை மூடிய வெளி நாட்டு உற்பத்தியாளர்களும் உண்டு. எனவே நமது உற்பத்தியாளர்கள் தங்கள் தரத்தின் மூலம் போட்டிகளை வெல்ல முயல வேண்டும். சென்ற வருடம் சீனப் பொருட்கள் இங்கே வந்து நம் தொழில்கள் நசிந்தன என்று செய்திகள் வந்தன இல்லையா? ஆனால் சென்ற வருடம், சீனாவிலிருந்து இங்கு இறக்குமதி ஆனதைவிடவும் இங்கிருந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆனது அதிகம். இந்தியப் பொருட்கள் வந்திறங்கி சீனத் தொழில்கள் நலிந்தன என்று செய்திகள் வரவில்லை. Survival of the fittest.- but it is our responsibility to ensure that the rules are observed in a level playing field.

2 comments:

Jayaprakash Sampath said...

a good article. informative too. pls continue

Aruna Srinivasan said...

நன்றி பிரகாஷ். பொதுவாக இரு தரப்பிலும் நிறைய தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிப்பது இன்றைய " செய்தி வெள்ளம்" ( Information overload?) நாட்களில் அவசியம் என்று தோன்றுகிறது.