Thursday, May 20, 2004

சிங்கப்பூர் வானொலி ஒலியில்...

...நான் கூறிய கருத்துக்களில் பரிக்கு இருக்கும் சந்தேகம் வேறு சிலருக்கும் இருப்பதால் இங்கே சற்று விரிவாக என் நிலையை தெளிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

சோனியாவுக்காக ஓட்டு போட்ட மக்கள் இப்போது அவரில்லாமல் வேறு ஒருவர் பிரதமராக வருவதனால் பெருத்த ஏமாற்றமடையமாட்டார்களா என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு என் பதில், " ஓரளவு ஏமாற்றம் இருக்கலாம். ஆனால் பெருவாரியாக என்று சொல்ல முடியாது. பிஜேபி செய்ததுபோல் காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் எந்த தனிமனிதரையும் துக்கி வைத்தோ அல்லது தாழ்த்தியோ பிரசாரம் செய்யவில்லை. பொதுவாக, நாட்டை - பொது மக்களை பாதிக்கும் பிரச்சனைகளைதாம் முன் வைத்தார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ¤ம் கூட்டணி கட்சிகளூம் முனையும் என்றுதான் மக்கள் ஓட்டு போட்டிருப்பார்கள். தவிர, இந்திய அரசியல் சாசனப்படி தேர்தல் முடிந்தபின், வெற்றி பெற்ற கட்சியின் எம் பிக்களால் பின்னர்தாம் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார்." என்ற ரீதியில் என் பதில் இருந்தது.

அரசியல் சாசன சம்பிரதாயம் தெரிந்துதான் மக்கள் வாக்களித்து இருக்க மாட்டார்கள். நிறைய பேருக்கு தெரிந்து இருக்காது. வாஸ்தவம்தான். ஆனாலும் ஓட்டுப் போடும்போது வாக்காளர்கள் மனதில் என்ன இருந்தது என்பதை யாரால் திட்டவட்டமாக கூறமுடியும் - அவரவர் மனதைத் தவிர ? :-) எல்லாமே ஒரு ஊகம்; மனக்கணக்கு; psephology என்று சொல்லப்படுகிற ஒரு கணிப்புதான். அந்த மட்டில் நான் சொல்லியது என் கருத்து. சோனியா பிரதமர் ஆகாததில் காங்கிரஸ் தொண்டர்கள் மனம் ஒடிந்து இருக்கலாம். ஆனால் டிவியில் நீங்கள் பார்க்கும் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே இந்திய மக்கள் அல்ல. சோனியா பிரதமர் இல்லை என்றவுடன் பெருத்த ஏமாற்றமடைவதற்கு. காங்கிரஸ¤க்கு ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு சோனியா பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கும் என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் வாக்கு அதை மட்டுமே மனதில் கொண்டதல்ல; காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்ற ரீதியில்தான் அவர்கள் ஓட்டளித்திருப்பார்கள் என்பது என் கருத்து. தேர்தலில் ஓட்டுபோடும் வாக்காளர்களில் இரண்டு வகை உண்டு - ஒரு வகையினர், ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரிடம் விசுவாசமாக வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை வைத்து ஓட்டளிப்பவர்கள். இந்த கட்சி அல்லது தலைவர் விசுவாசம் கட்சி அல்லது தலைவர் போகுமிடமெல்லாம் போகும். அதனால் இந்த ஓட்டு வங்கி எண்ணிக்கை சாதாரணமாக ஒரே மாதிர்யாகதான் இருக்கும்.

இன்னொரு ரகம் அவ்வப்போது அந்தந்த சமூக சூழலை, வட்டார மற்றும் தேசீய பிரச்சனைகள் தங்களை பாதிப்பதற்கு ஏற்றார்போல் மாறி மாறி வாக்களிக்கும். இதுதான் அவ்வப்போது தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. நான் குறிப்பிட்டது இந்த வகை வாக்காளர்களை. சோனியா பிரதமராக வருவார் என்று நன்றாக அறிவார்கள். வந்தால் சந்தோஷப் படுவார்கள்; ஆனால் அவர்தான் வர வேண்டும் என்று மட்டுமே எண்ணி வாக்களித்திருக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் / சோனியா விசுவாசிகள் வேறு; தங்கள் பிரச்சனைகள்தாம் முக்கியம் என்று கருதி வாக்களிக்கும் பொது மக்கள் / வாக்காளர்கள் வேறு.

1 comment:

Anonymous said...

Actually I did not Vote for Congress because I thought if Congress wins the election then Sonia would be the PM. Well they have not lost anything because I did not
vote for them. But I would have voted for them if the Congress declared earlier who would be the PM if they win.

The funny thing is, if they delcared who would be the PM if they win, probably they would not have own the election :-)