Thursday, May 13, 2004

மனதில் உறுதி வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்

இந்திய ஜனநாயகத்தையும் முகம் தெரியாத அந்த இந்தியன் என்பவரையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போங்கள்; எத்தனை விதமாக வேண்டுமானாலும் தங்கள் பெருமையைப் பீற்றிக்கொள்ளுங்கள் - ஆனால் எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்பதை இன்னொரு முறை திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். அதுவும் தமிழ் நாட்டைப் பற்றி - எதிர்பார்த்ததுதான் என்றாலும், இப்படியா ! சுத்தமாக துடைத்துவிட்டமாதிரியா! என்று மூக்கில் விரல் வைக்கும் அளவு அதிமுக அரசின் மேல் இருக்கும் எதிர்ப்பைக் காண்பித்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலோர் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் வெற்றிபெற்றுள்ள்தைப் பார்க்கும்போது, Obviously, the mob was / is furious என்றுதான் தோன்றுகிறது.

அது சரி; ஒன்று கவனித்தீர்களா? நேற்றைய என் 3 ஊகங்களில் இரண்டு சரியாகிவிட்டது :-) Landslide victory - அதாவது, தமிழ் நாட்டில்; அடுத்தது, தேசிய அளவில் சமத்தாக மக்கள் ஒரு கூட்டணிக்குப் பெரும்பான்மை கொடுத்துவிட்டார்கள் - நம்ம ஜனாதிபதிக்கு சிரமம் இல்லாமல் போய்விட்டது.

முடிவுகள் வெளிவர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு சுவாரசியமான trend வெளிப்பட்டது. இடதுசாரிகளின் முன்ணணி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போயிற்று. இதைப் பார்க்கும்போது மனதில் ஒரு கேள்வி. மக்கள் reform processக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்று. ஆனால் அப்படியும் தோன்றவில்லை. ஏனென்றால் காங்கிரஸ்தான் economic reforms ன் காரணகர்த்தாவே - அதேபோல், இடதுசாரி கோட்டையான மேற்கு வங்கமே economic reforms தேவை என்ற ரீதியில்தான் செயல்படுகிறது. அதனால், ஒட்டுமொத்தமாக reformsக்கு எதிரான வாக்களிப்பாக இது தெரியவில்லை. reformsன் பயன்பாடுகள் அடித்தள மக்களை சரியாக அடையவில்லை என்பதுதான் மக்களின் தீர்ப்பு சொல்லும் பாடம். செல் போனைவிட, கல்வி, சுகாதாரமும், சாலைகளும், குடிநீரும்தான்தான் முக்கியம் என்று சொல்லுகிறார்கள். ( என் உள்ளே அசரீரி: மிஸ்டர். குடிமகன்: " அட கடவுளே, தேர்தல் மாத்தி தேர்தல், இதை எத்தனை தடவை அய்யா சொல்வது? இந்த தலைவர் ஜனங்களுக்குப் புரியமாட்டேங்குதே :-( !! )

reform என்று சொல்லும்போது மக்களுக்கு அடிப்படை வசதிகள்/ அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்ற ரீதியில் பொருளாதார புரட்சி அமையும்போதுதான் அரசு நமக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொன்னதுபோல் பொருளாதார கொள்கைக்கு ஒரு human face இருக்க வேண்டும்.

தவிர, மாலனிடம் ஹிந்து ராம் சொன்னதுபோல் இது ஒரு pro democracy and pro secular தீர்ப்பு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஹிந்துத்வா வாதங்கள் மக்களிடம் செல்லவில்லை. அதேபோல் அடிதட்ட மக்கள் மேம்பட வழி செய்யாத எந்தப் பொருளாதார கொள்கையயும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதும் உண்மை. நாடும் வளம் பெற வேண்டும்; வளர்ச்சி வேண்டும்; வேலை வாய்ப்புகள் கூட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும். இதற்கெல்லாம் வழி செய்யும் வகையில் ஒரு பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டும்.

மன்மோஹன் சிங் ( அட; வேறு யாராக இருக்கும்?) வேலை எளிதாக இருக்கப்போவதில்லை.

No comments: