Wednesday, May 12, 2004

ஒரு விக்கெட் அவுட்; சரி. அப்புறம் ?

சந்திரபாபு நாயுடு தோற்றதற்கு காரணங்கள் இப்போ அலசப்படுகின்றன. இதில் சாய்நாத் சொல்வது பளிச்சென்று இருக்கிறது. சந்திரபாபு, கணினி, கார்பொரேட் என்று இருந்த அளவு, அடிமட்ட அளவில் அக்கறை காட்டவில்லை என்பது மட்டும் அல்ல; அவர் அப்படி உண்மை நிலை உணராமல் போனதற்கு, CEO என்று ஜால்ரா போட்டு அவரை எங்கேயோ கொண்டுபோய் தூக்கிவைத்துவிட்ட ஊடகங்களும் காரணம் என்கிறார் சாய்நாத். சரி என்றுதான் தோன்றுகிறது. Emperor has no clothes என்று சொல்பவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் நாயுடுகாருக்கு.

இவற்றைப் படிக்கும்போது என்னுள் ஒரு கற்பனை. நாளை மதியம் போல் இதே போல் இன்னொரு அலசல் குவியல் நம்மைத் திக்கு முக்காட வைக்கும். ஏன் தோற்றார்கள் என்று. அது யார் என்று தெரிய இன்னும் 24 மணி நேரம் குறைந்தது காத்திருக்க வேண்டும். அதற்குள் என் ஊகங்களை முன் வைத்துவிடலாம்.

மூன்று சாய்ஸ்:

1. கணிப்புகள் சொல்படி தொங்கு நாடாளுமன்றம்; ஜனாதிபதியும் கணிப்புகளை நம்புகிறார் போல; ஏற்கனவே சட்ட நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

2. எல்லா கணிப்புகளுக்கும் "பெப்பே" என்று அழகு காட்டிவிட்டு காங்கிரஸ் கூட்டணியோ அல்லது பாஜக கூட்டணியோ Landslide Victory !!!! ???? - (அப்படி ஒன்று இருக்கிறதா :-)

3. சமத்தாக ஏதோ ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து அப்துல் கலாமுக்கு நிம்மதி பெருமூச்சு விட ஒரு சான்ஸ்.

ஹ்ம்ம்.. இதைவிட வெண்டைக்காயாக எழுத முடியுமா என்ன? :-)

3 comments:

பரி (Pari) said...
This comment has been removed by a blog administrator.
பரி (Pari) said...

புது வார்ப்புரு(Template) நல்லா இருக்கு :)

Aruna Srinivasan said...

Thank you Pari :-) Mathy's choice; and I was just thinking of changing it. Now on second thoughts, I better keep it :-)

aruna