Tuesday, May 04, 2004

கடந்த சில நாட்களாக காசியின் பதிவில் ஒரு விவாதம நடந்து இருக்கு. நான் கவனிக்காமல் இருந்துவிட்டேன். பிகேஎஸ் கொடுத்திருந்த சுட்டியை இப்போதான் சாஆஆஆஆவகாசமாக (!!) பார்த்தேன்! திண்ணையில் என் பெயரைப் பார்த்ததும், தூக்கிவாரிப்போட்டது. மற்றபடி சர்ச்சைக்குரிய பகுதியெல்லாம் காணோம். ( எடுத்துவிட்டார்கள் ?) இருந்தாலும், திண்ணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற வலைப் பதிவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று செல்வராஜ் ஒரு கேள்வி கேட்டிருப்பதால் என் எண்ணங்களைப் பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

திண்ணைக் கட்டுரையில் நான் பார்த்தபோது மூன்று பதிவுகள்தாம் இருந்தன. அதனால் பாக்கி பதிவுகளை எப்படி வெளியிட்டு இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பொதுவாக - In Principle - காப்புரிமை போன்ற சங்கதிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு சிம்பிளாக ஒரு கோணத்தில் பார்த்தால், வலைப்பதிவு டைரி மாதிரி என்றாலும் பொது பார்வைக்காகதானே எழுதுகிறோம்? அதனால் மேற்கோள்கள் / links கொடுப்பதில் தவறில்லை. ஆனால் முன்பின் விளக்கங்களுடன் மேற்கோள்கள் - சரியான hyperlinks கொடுத்து கட்டுரையில் நாம் சொல்ல வந்தது தெளிவாக இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. பிற இடங்களில் நாம் படிப்பதை நம் வலைப்பதிவுகளில் links கொடுப்பதுபோல் நம் வலைப்பதிவுகளும் பிற இடங்களில் மேற்கோள்களாக காட்டப்படுவதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

Having said that, இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எங்கேயோ தவறு நேர்ந்து விட்டது என்பது புரிந்தவுடன், தடாலென்று சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டிருக்கக்கூடாது. எப்போது பொது பார்வைக்காக வந்துவிட்டதோ அது அப்படியேதான் இருந்திருக்க வேண்டும். காசி சொல்வதுபோல் "திருத்தப்பட்டது" என்று அறிவித்து இருக்கலாம். அல்லது சரியான விளக்கங்கள் கொடுத்து விட்டு இருக்கலாம் - பிரிண்ட் பத்திரிகைகளில் செய்வதுபோல். இணையத்தில் வெளியிட்டாலும் பிரசுரத்துக்குரிய நெறி முறைகள் பின்பற்றப் பட வேண்டும் இல்லையா?

பி.கு: யூனிகோட் பற்றி காசி எழுதியிருந்த பதிவில் பின்னூட்டம் எண்ணிக்கை 40 என்று பார்த்துவிட்டு, அட, 40 பேர் ( சரி; 40 பதில்கள்:-) இருக்கே; அப்படி என்னதான் யூனிகோட் பற்றி அலசுகிறார்கள் என்று நுழைந்தேன் :-) முதலும் கடைசியும் தவிர, நடுவில் பெரிய ரகளையே அல்லவா நடந்திருக்கு - அதுவும் யூனிக்கோடிற்கு சம்பந்தமேயில்லாமல் :-)

No comments: