Monday, May 31, 2004

சரியாக ஒரு வருடம் முன்பு, 31.5.2003 அன்று என் முதல் பதிவு :-)

அலைகள்

கொந்தளிக்கும் அலைகளும்
அலைபாயும் கடலும்
கடலெனப் படர்ந்த வானமும்
வானமே எல்லை என்ற மனமும்
மனதில் துளிர்த்த எண்ணங்களும்
எண்ணங்கள் அளாவிய
அணு ஒவ்வொன்றும்
இவையாவும் ஒன்றேதானோ?

அருணா

2 comments:

பரி (Pari) said...

உவமை, உருவகம், உண்மை எல்லாத்தையும் சேத்து ஒண்ணுதானான்னு கேக்கறீங்களே? :-)
எண்ண அலைகள் நம்ம கட்டுப்பாட்டுல இருக்கு(கணும்); மத்ததெல்லாம் இல்லை.

Aruna Srinivasan said...

ஏதோ, மெய் ஞானம் பெற்றவர்களெல்லாம் " நான்" " நமது" என்பதே கிடையாது என்று சொல்வார்களே...? இதன் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கிறேன் :-)