Monday, April 05, 2004

50 வருட சாதனையை 5 வருட சாதனையாக்குவது எப்படி ?

50 வருடங்களாக இல்லாத வளர்ச்சி ஐந்தே வருடங்களில் வந்துவிட்டதாக சொல்வது மகா பொய் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார் சாம் பிட்ரோடா ( நினைவிருக்கிறதா? இன்று மூலை முடுக்குகளில் கிராமங்களில் எல்லாம் இருக்கும் தொலைபெசி பூத்துகளின் "தந்தை" ) நம்முடைய தேசத்தின் ஆரம்ப காலத்தில் வளர்ச்சிக்கு அடிகோலிட்ட தலைவர்களையும், அவர்கள் நிர்மாணித்த - இன்று உலகுக்கு பல அறிவு ஜீவிகளை அளித்துக்கொண்டிருக்கும் - அருமையான உயர் தொழில்கல்விக்கூடங்களையும், கடந்த பல வருடங்களாக நிகழ்ந்துவரும் பசுமைப் புரட்சியையும், பால் வளமையையும் எப்படி மறக்க முடியும்? - என்று NDA அரசுக்கு முன்னால் ஏற்பட்ட பல சாதனைகளைப் பட்டியல் போடுகிறார். அன்று விதைத்த விதைகளின் விளைவுகளைத்தானே இன்று அறுவடை செய்கிறோம்? ஆனால் இன்று விதைக்கப்படும் விதைகளின் விளைவு பத்து ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்குமோ என்று இவர் கவலைப் படுகிறார்.

ஹிந்துவில் வந்துள்ள இந்த செய்தியில் இருந்த சாம் கார்ட்டூன் - தலைமேல் தொலைபேசி டயல் ஒளிவட்டம் போட்டுக்கொண்டு - சுவாரசியமாக இருந்தது. பேசாமல் எதிர்கட்சிகள் NDAவின் இந்தியா ஒளிர்கிறது பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க இவரைத் தங்கள் பிரசாரத்திற்கு அனுப்பலாம்.

No comments: