Thursday, December 18, 2003

மின்னஞ்சலில் வந்த கிண்டல் ஜோக்ஸ்களில் ஒன்று.

ஒரு இந்தியர் இறந்த பிறகு நரகத்திற்குப் போனாராம். அங்கே ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு விதமாக தண்டனைகள் இருந்தன. முதலில் ஜெர்மன் நாட்டு நரகத்தில் எட்டிப் பார்த்த நம்ம ஆள் அங்கே எப்படி தண்டனை என்று விசாரித்தாராம். " இங்கே முதலில் ஒரு மணி நேரம் உங்களை மின்சார நாற்காலியில் உட்கார வைப்பார்கள். பின்னர் ஆணிகள் படுக்கையில் அடுத்த ஒரு மணி நேரம் படுக்க வைப்பார்கள். அதன் பின்னர் ஜெர்மனிய சாத்தான் வந்து உங்களை சாட்டையால் நன்றாக விளாசுவான்." என்று பதில் வந்தது. நம்ம ஆள் இந்த ஜெர்மன் நரகம் வேண்டாம் என்று நகர்ந்து ரஷ்ய நரகத்துப் பக்கம் போய் விசாரித்தார். அங்கும் இதே ரீதியில் பதில் வந்தது. பின்னர் அமெரிக்க, இங்கிலாந்திய நரகங்களிலும் இதே வகைதான்.

கடைசியில் நம்ம நண்பர் இந்திய நரகத்தில் போய் நின்றார். அங்கே பெரிய வரிசை; மனிதர்கள் முண்டியடித்து நின்று கொண்டிருந்தனர். சரி. இங்கே எப்படி தண்டனையாம் என்று விசாரித்தவருக்கு பதில் மற்ற நரகங்களைப் போலவே வந்ததாம். இவருக்கு ஒரே வியப்பு. "பின்னே, எதற்காக இப்படி எல்லோரும் வரிசையாக இங்கேயே வருகிறார்கள் - மற்றவற்றை விட இதில் வித்தியாசம் எதுவும் இல்லையே?" என்று கேட்டார். பதில் வந்தது. "அதுவா? மின்சார நாற்காலி தண்டனை உண்டுதான். ஆனால் மின்சாரம் நின்று போய்விடும்; முள் படுக்கையில் இருந்த எல்லா ஆணிகளையும் யாரோ புண்ணியவான் திருடிக் கொண்டு போய்விட்டான். கடைசியில் உள்ளே வந்து சாட்டையடி கொடுக்க வேண்டிய சாத்தான், வந்து ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே டீ குடிக்க சென்று விடுவான்." !!!

": �: ��� ��� >�׸Ǣ� >���� ��� "���θ� ��ɡ ������ �!����. ���� ��� �!�� "�� ��� ����츢���.

No comments: